Posts
Showing posts with the label Anushka
Mirchi
- Get link
- X
- Other Apps
பிரபாஸ் இத்தாலி படித்துக் கொண்டிருக்கிறார். அங்கே ரிச்சாவை ஒர் தெலுங்கு தெரிந்த பணக்கார ஒரு சீன் வில்லன் துரத்த, பிரபாஸ் காப்பாற்றுகிறார். இருவரும் நெருங்க பழகுகிறார்கள். நெருக்கம் காதலாகி விடுமோ என்கிற நேரத்தில் ரிச்சா தன் குடும்பத்தை பற்றி சொல்கிறார். அதனால் காதல் கத்திரிக்காயெல்லாம் வேலைக்காகாது என்ற நிலையில் பிரபாஸ் ஹைதைக்கு வந்துவிடுகிறார். ஹைதையில் ஒர் காலேஜில் சேருகிறார். அங்கே ரவுடித்தனமாய் சுற்றிக் கொண்டிருக்கும் சுப்புராஜை கொஞ்சம் கொஞ்சமாய் நல்லவனாய் மாற்றுகிறார். சுப்புராஜுடன் அவரது கிராமத்துக்கு செல்ல அங்கே வழக்கமான தெலுங்கு பட பீயூடல் குடும்பம் இருக்க, அவர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் பிரபாஸ். சுப்புராஜுன் தங்கைதான் ரிச்சா. பிரபாஸ் தன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டு தன் காதலை வெளிப்படுத்த நினைக்க, வீட்டில் உள்ளவர்களும் தங்கள் பெண்ணை திருமணம் செய்யச் சொல்லி கேட்கிறார்கள். அப்போது பிரபாஸ் தான் ஏன் இங்கே வந்தேன், சொல்லி ப்ளாஷ்பேக்குகிறார். பின்பு என்ன ஆனது என்பதை வழக்கமாய் தெலுங்கு படம் பார்க்கும் சின்னக் குழந்தை கூட சொல்லிவிடக்கூட...
Ragada
- Get link
- X
- Other Apps
நாகார்ஜுன், அனுஷ்கா, ப்ரியாமணி என்று நட்சத்திர பட்டாளம், அதிரடியான ஓப்பனிங், குத்து பாடல்கள், ஸ்கின் ஷோக்கள் என்று ஒரு பரபர மசாலாவை இயக்குனர் வீரு போட்லா கொடுத்திருக்கிறார். அது சுவையாக இருந்ததா இலலையா என்று சொல்ல வேண்டுமென்றால் அங்கு தான் பிரச்சனை. நாகார்ஜுன் கடப்பாவிலிருந்து வந்து ஒரு ரவுடி கேங்கில் ஜாயின் செய்கிறான். அவர்களுடன் சேர்ந்து அந்த ரவுடியின் எதிரிகளை தன்னுடய புத்திசாலித்தனமான ஆட்டத்தால் காய் நகர்த்துகிறான் (அப்படித்தான் இயக்குனர் ஃபீல் செய்திருக்கிறார்). அப்போது அங்கே கிட்டத்தட்ட பெண் டானாக இருக்கும் அனுஷ்காவின் காதலில் விழுகிறார். அப்போது திடீரென ப்ரியாமணி அவருடன் வந்து சேருகிறார். நாகார்ஜுனின் காதல் பார்வை அவர் மேல் விழ, ஒரு சுபயோக சுபதினத்தில் ப்ரியாமணி நாகார்ஜுனை வைத்து ஒரு பெரிய அமெளண்டை ஆட்டையை போட்டு விட்டு எஸ்ஸாகிவிட, அந்த பணம் ஊர் பெரிய தாதாவான பெத்தண்ணாவுடயது. ஏற்கனவே அப்பணத்தை டபுள் கிராஸ் செய்து கொள்ளையடித்த பணத்தைதான் கைப்பற்ற கடத்தியவனை பிடித்து வைத்திருக்க, ப்ரியாமணியின் தில்லாலங்கடியால் அவனை தப்பிக்க வைத்துவிட்டு, துமபை விட்டு வாலை பிடிக்...