கொத்து பரோட்டா- 04/03/13
சனியன்று இரவு சன் செய்திகள் விவாத மேடையில் 32 நாட்களாய் பூரண மது விலக்கை அமல் படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருக்கும் பெரியவர் சசி பெருமாளின் போராட்டத்தை முன் வைத்து பூரண மதுவிலக்கு வருமா? அமல் படுத்த முடியுமா? என்று விவாதித்தார்கள். அதில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, மற்றும் பமக சார்பில் ஒர் வக்கில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், கள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் எல்லோரும் பேசினார்கள். அதில் தல சாரு மட்டும்தான் நிஜத்தில் டாஸமாக்கில் நல்ல சரக்கு கொடுப்பதில்லை என்றும், நல்ல சரக்கை கொடுங்கள் என்றும் சொன்னார். நிச்சயம் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வாய்ப்பேயில்லை என்று ஆணித்தரமாய் சொன்னார். தமிழ்நாட்டில்தான் இப்படி கேடுகெட்ட தரமற்ற சரக்கை தருகிறார்கள் என்று புலம்பினார். பல சமயங்களில் அவர் எடுத்து வைத்த வாதம் சரியாகவேயிருந்தது. என்ன எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கும் வேலையில் தமிழ்நாட்டைத்தவிர, இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிலும் குடித்துவிட்டு வண்டி ஓட்ட முடியாது Arrest செய்துவிடுவார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க, அடுத்த ஸ்டேட்மெண்டில் ப்ரான்சில் ஜானிவாக்க...