அடுத்தநாள் ஜெய்யிடம் நான் எழுந்தபின் பேசிய நேரம் சுமார் 10 மணியிருக்கும், நான் இருக்கும் இடம் தான் சிங்கப்பூரின் நடு செண்டராம். அங்கிருந்து ஒரு ரவுண்ட் அடித்தால் முக்கிய இடங்களை பார்த்து விடலாம் என்று சொன்னார். எல்லாவற்றையும் நோட் செய்துவிட்டு, அவசர அவசரமாய் குளித்துவிட்டு, மெல்ல நடக்க ஆரம்பித்தேன். காலையிலேயே வெயில் உறுத்தியது. நம்மூரைவிட அதிகப்படியான ஹூமிடிட்டியினால் வழக்கத்தை விட அதிகமாய் வியர்த்தது. விஷ்..விஷ் என கிஞ்சித்தும் புகையில்லாத, ஹாரன் சத்தமில்லாத ஹைவேக்கள், நெஞ்சை பிடிக்கும் டி.சர்டுகளோடும், சர்வ நிச்சயமாய் ஒரு ஐ போனோ அல்லது ஐ பாடையோ, காதில் சொருக்கிக் கொண்டு போகாத இளைஞிகளோ, இளைஞர்களோ பார்க்க முடியாது. மாற்றி மாற்றி திடீர் திடீர்ரென நடு ரோட்டில் இறுக அணைத்து கொண்டு, காதல் வயப்படுவதும், கிட்டத்தட்ட ரொமான்ஸுக்கு அடுத்த கட்டத்தை நோக்கி பாயும் கைகள்,பாண்டீஸ் சைஸுக்கு ஒரு ட்ராயரையும், போட்டுக் கொண்டு ஆபீஸுக்கும், காலேஜிக்கும் போகும் அழகு சப்பை மூக்கு, இடுங்கிய கண்கள் கொண்ட பெண்கள்.எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லா நடைபாதையின் பளீர் தரைகள், பத்தடிக்கு ஒரு குப்பை தொட்டி, ர...