அய்யனார்
775வது பதிவு.. சொந்த தம்பியை கொலை செய்து புதைத்துவிட்டு மிகவும் கூலாக இருக்கும் ஆதியோடு ஆர்ம்பிக்கிறது படம். உயிரிலே கலந்தது படத்தில் அண்ணன் தம்பிக்கிடையே நடக்கும ப்ரச்சனையை வைத்து ஒரு மசாலா படத்தை அளித்திருக்கிறார்கள். ஆதி ஒரு வாலிபால் ப்ளேயர். தமிழ் சினிமாவின் அடிப்படை தகுதியான குடி, ரவுடி, குத்து பாட்டு, வெளியில் அலப்பறை என்று முன் சொன்ன விஷயத்துக்கு கொஞ்சம் கூட சம்மந்தமில்லாமல் இருப்பவர். அவருடய தம்பி சரவணனோ.. நன்றாக சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுபவன்.ஒரு டிவி சேனல் கேமராமேன். திக்குவாயன், தான் என்ற அகந்தையும், அவ்வப்போது அண்ணன் ஆதியை போட்டுக் கொடுத்து வீட்டில் நல்ல பெயர் வாங்குபவன். என்ன தான் ஆயிரம் சண்டைகள் அண்ணன் தம்பிக்குள் இருந்தாலும் பிரச்சனை என்று வரும் போது தம்பிக்காக அண்ணன் பழிவாங்குகிறான். ஆனால் கொலைப் பழி அவன் மேல் விழுகிறது. படம் மொத்தமும் மூன்று டிராக்குகளில் போகிறது. ஒரு பக்கம் தம்பியின் உடலை புதைத்துவிட்டு, சம்பந்தா சம்பந்தமில்லாமல் அடியாளாய் சேர்ந்து கொண்டு சுற்றுவது, ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அரசியல் வாதிகளின் அரசியல் குத்து வெட்டுகள...