இதுதாண்டா போலீஸ்
மாலை ஏழு மணி இருக்கும் சாலிக்கிராமம் பிரசாத் லேப் ரோடும், அருணாசலம் ரோடும், மற்றொரு ரோடும் சந்திக்கும் மும்முணை..ஓரே டிராபிக் ஜாம்.. எல்லா பக்கத்திலும் பெட்போர்டும், சுமோக்களும், குவாலிஸூகளும். டிவிஎஸ் 50களூம், பைக்குகளும் எல்லா பக்கத்திலும் வண்டிகள்.. ஆரன்கள்..யாருக்கும் பொறுமையில்லை. பொறுமையில்லாமல் எதிர்பக்கம் முன்னேற முயன்று எதிர் பக்கம் வரும் டிராபிக்கையும், நிறுத்தி, மேலும் இடத்தை போர்களமாய் மாற்றி கொண்டிருந்தார்கள். எனக்கு எரிச்சலாய் இருந்த்து.. தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டோமோ? வேறு ஏதாவது சந்தில் எஸ்கேப் ஆகலாம் என்றால், என்னை சுற்றி வண்டிக் கடல். பக்கத்தில் ஓரு டீக்கடையில் ஓரு டிராபிக் போலீஸ் கடையினுள் உட்கார்ந்து ரகசிய தம் அடித்தபடி ”நமக்கென்ன” என்ற ரேஞ்சில் உட்கார்திருக்க.. அப்போது ஓரு அம்பாசிடர் கார் ஓன்று சிறிது, சிறிதாக முந்திக் கொண்டு, என் பக்கத்தில் வந்து நின்றது..உள்ளே ஓரு போலீஸ் ஆபிஸர், அநேகமாய் இன்ஸ்பெக்டர் ரேங்க.. உள்ளேயிருந்தபடி அங்கும், இங்கும் பார்த்தபடி இருந்தார்..என்ன நினைத்தாரோ சட்டென்று மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த காரிலிருந்து இறங்கி, “டிரைவர் நாம ப்ரசாத் ...