Thottal Thodarum

Jul 29, 2013

கொத்து பரோட்டா - 29/07/13

மஞ்சுளா விஜயகுமாரின் இறுதி ஊர்வலத்தை தேசத் தலைவரின் இறுதி ஊர்வலம் போல லைவ் கவரேஜ் எல்லாம் தன் சேனல் மூலம் செய்தும், கடைசியில் “மஞ்சுளா விஜயகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு நன்றி” என்று உளறியதால் செய்தததெல்லாம் வீணாய் போயிற்று. நன்றின்னு முடிச்சிட்டு, இரங்கல்கள்னு போட்டுக்கங்க என்று சொல்லி தான் டங்க் சிலிப்பானதை ஒத்துக் கொண்ட பெருந்தன்மையை கூட உணராமல் அவர் விமர்சனத்துக்குள்ளாவதை நினைக்கும் போது ரொம்பப் பாவமாத்தான் இருக்கு. கேப்டன் வாழ்க
@@@@@@@@@@@@@@@@@@@@

Jul 27, 2013

சாப்பாட்டுக்கடை - பார்வதி பவன்

ஏற்கனவே சொல்லியிருந்தது போல சாலிகிராமம் ஏரியாவில் நல்ல டீசெண்டான உணவகம்  இல்லை என்பது மட்டுமில்லாமல் கருணாஸ், திருநெல்வேலி கடை போன்றவற்றைத் தவிர  நல்ல சைவ உணவகமும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.  கருணாஸில் மதியம் சாப்பாடு மட்டுமே. திருநெல்வேலி கடையில் காலையிலும், மாலையிலும் டிபன் மட்டுமே. எனவே  மதிய நேரத்தில் சாப்பாட்டிற்கு பதிலாய் டிபன் அயிட்டங்கள் கொடுக்கும் சைவ உணவகங்கள் மிகக் குறைவு.  அப்படி டிபன் வேண்டுமென்றால் அதுவும் வெறும் பரோட்டா, சப்பாத்தி அயிட்டங்கள் வேண்டுமென்றால் அருகில் உள்ள லோக்கல் ஆனந்த பவனுக்கோ, அல்லது நம்ம வீடு வசந்தபவனுக்கோத்தான் போக வேண்டும். முதலாவது அவ்வளவு சிலாக்கியமில்லை என்றால் இரண்டாவது செம காஸ்ட்லி. கிட்டத்தட்ட சரவணபவன் ரேட் வந்துவிடும். அதிக விலையும் இல்லாமல், நல்ல சுவையுடனான சைவ உணவகமாய் உருவெடுத்திருக்கிறது பார்வதி பவன்.

Jul 23, 2013

மரியான்

ஒரு கடலோர கிராமத்திலிருந்து தன் காதலியின் கடனை அடைப்பதற்காக சூடான் செல்லும் இளைஞன் ஒருவன். அவன் வேலை காண்ட்ராக்ட் முடிந்து தன் காதலியை சந்திக்க வரும் நேரத்தில் சூடான் நாட்டின் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறான். அவன் அங்கிருந்து தப்பித்தானா? காதலியை அடைந்தானா? இல்லையா? எனும் தக்குணூண்டு கதைதான் மரியான்.

Jul 22, 2013

கொத்து பரோட்டா

ஹைதராபாத் முன்பு போல இல்லை.ஹைதை வந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலிருக்குமென நினைக்கிறேன். வழவழவென இருக்கும் ரோடுகள் இல்லை. மெயின் ரோடுகளில் கூட மேடும் பள்ளமுமாய் இருக்கிறது. மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்காரர்கள் அனைவரும் ஒருமித்த குரலாய் மீட்டர் போடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். எல்லோரும் பொத்தாம் பொதுவாய் முப்பது, ஐம்பது, என்பது, நூறு ரூபாய், என பிக்ஸட் அமெளண்டாக கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். மீட்டர் போடக் கேட்டால்  ஊருக்கு புதுசா என்கிறார்கள். எலலாம் காங்கிரஸ் ஆட்சி செய்த கோலம். நம்மூரைப் போல மனசாட்சியில்லாத ஆட்டோக்காரர்களாய் மாறவில்லை. எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு பத்திலிருந்து பன்னிரெண்டு ரூபாய் கணக்கில் தான் கேட்கிறார்கள். கோயம்பேட்டிலிருந்து சாலிகிராமத்திற்கு கூசாமல் 120 ரூபாய் கேட்கிறான். நான் பார்த்த வரையில் உயிரை மயிராய் மதித்து வண்டி ஓட்டுமிடம் ஆந்திராவாகத் தான் இருக்கும். ரெண்டு லாரிக்கிடையே ஒரு ஆட்டோவும், டிவிஎஸ் 50யும் போகிறார்கள். டெரர் ரைட் என்றால் என்ன என்பதை இங்கே கண் கூடாக பார்க்க முடியும். நண்பர் ஒருவரை பார்க்க ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். மெட்ரோ ரயில் வேலைக்காக போட்டிருந்த மறைப்பிற்கு நடுவே வண்டி நின்றுவிட்டது. பின்னால் போய் ஏதோ நோண்டியவன் வண்டியின் ஸ்டார்டிங் லீவரை உட்கார்ந்த வாக்கில் ஸ்டைலாய் காலில் தூக்கி, இடது கையில் பிடித்திழுத்து ஸ்டார்ட் செய்தவன் வண்டியை பர்ஸ்ட் கியர் போட்டு தூக்கினான். பின் பக்க டயர் ஏதோ ஒரு பெரிய கல்லின் மேல் ஏறி அப்படியே குடை சாய, நான் அலறி அடித்துக் கொண்டி தூக்கிய பக்கம் என் வெயிட் முழுவதையும் போட்டு உட்கார, வண்டி சமநிலைக்கு வந்தது. “ஏண்டய்யா.. சூசி ஸ்டார்ட் செய்யகூடதா?’ என்று கேட்டவனை வண்டியோட்டியபடி “மீக்கு ஏம் காலேது காதா?” என்ற கேட்க நீ ரோட்ட பார்த்து ஓட்டுறா சாமி என்று நினைத்த போதே, ராங் ரூட்டில் ஒரு பஸ், மூணு லாரி ஒரு ஸ்கூட்டர் காரனுக்கு நடுவில் புகுந்து எதிர் ரோட்டிற்கு சென்றான். முடியலை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

Jul 21, 2013

Bhaag Milka Bhaag

படத்தின் ட்ரைலரும், பர்ஹான் அக்தரின் உழைப்பும், ராகேஷின் முந்திய படமான ரங்தே பசந்தி கொடுத்த இம்பாக்டும் வேறு சேர்ந்து கொள்ள,  எதிர்பார்ப்பு எகிறித்தான் போயிருந்தது. 

Jul 17, 2013

Shutter (Malayalam)

 
கத்தியின்றி, ரத்தமின்றி சீட்டு நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லரை சமீப காலத்தில் பார்த்ததாய் நினைவில்லை. இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. தேடிப் பிடித்து டவுன்லோடிட்டு உடனடியாய் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். சமீப கால மலையாள படங்கள் எல்லாம் கதை களங்களில் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படியாப்பட்ட ஒரு கதைதான் இந்த ஷட்டர்.

Jul 15, 2013

கொத்து பரோட்டா -15/07/13

  • ஃபேம் தியேட்டரில் படமே பார்க்கக் கூடாது என்று நினைத்தால் வேறு வழியேயில்லாமல் என் பட வேலைகள் முடித்துவிட்டு போக அது ஒன்றே ஆப்ஷனாக இருப்பதால் போய் தொலைக்க வேண்டியிருக்கிறது. எப்போது சென்றாலும் ஏதாவது ஒரு மோசமான அனுபவம் கிடைத்துக் கொண்டேயிருக்கும் திரையரங்கம் அது. சென்ற் வாரம் இம்சை. லூட்டேரே படம் பார்க்க டிக்கெட் வாங்க  கவுண்டரில் இருக்கும் ஆளிடம் லூட்டேரே மூன்று டிக்கெட் என்றேன். அவன் என்ன என்பது போல திரும்ப கேட்டான். நான் மீண்டும் இந்திப் படம் லூட்டேரே இரவுக் காட்சி என்று சொன்னேன். அவனும் அதையே திரும்பச் சொல்லி இந்திப் படம் லூட்டேரே மூன்று டிக்கெட் என்று கன்பர்ம் செய்து டிக்கெட் கொடுத்தார். ஸ்கீரின் நம்பர் 3க்கு போய் உட்கார்ந்தால், இங்கிலீஷ் படம் ஓடிக் கொண்டிருந்தது. டிக்கெட்டை பார்த்தால் அதில் லோன் உல்ஃப் என்று போட்டிருந்தது. தப்பு என் பேரில் தான் ஒழுங்காய் டிக்கெட்டை சரி பார்த்திருக்க வேண்டும். வெளியே வந்து ஹால் இன்சார்ஜிடம் சொன்னேன். நீங்க பார்த்திருக்கணும் என்றார். எனக்கு கோபம் வந்து கத்த ஆரம்பித்தேன். ஒண்ணுத்துக்கு பத்து வாட்டி ஹிந்தி படம் லூட்டரே என்று சொல்லி, கேட்டு வாங்கினேன் இப்ப என் சைட் குறையை மட்டும் சொல்லுறீங்களே..? என்றவுடன் வேறு ஒரு இன்சார்ஜ் மேனேஜரிடம் சென்று எங்களை லூட்டரே உள்ள அரங்கில் அனுமதித்து உட்கார சொல்லிவிட்டு “ இன்னைக்கு டிக்கெட் இருந்திச்சு கொடுத்துட்டோம் இல்லைன்னா என்ன பண்றது? எங்க சைட் தப்புத்தான் இருந்தாலும் நீங்களும் ஒரு வாட்டி செக் பண்ணிக்கங்க என்றார். அவனுங்க கொடுக்குற டிக்கெட்டை பூதக்கண்ணாடி வச்சில்ல படிக்கணும்?
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@ 

Jul 14, 2013

Sahasam

இந்தப் படத்தை மிக ஆர்வமாய் பார்க்கக் காரணம் இதன் இயக்குனர் சந்திரசேகர் ஏலெட்டிதான். இன்ஸ்பிரேஷனில் தான் படமெடுப்பார் என்றாலும், மிக சுவாரஸ்யமான லைன், வித்யாசமான கதைக் களன் என ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை படமெடுப்பவர். இவரின் முதல் படமான அய்தே சுமார் ஒன்னரை கோடியில் எடுக்கப்பட்டு, ஆறு கோடிக்கு மேல் வசூல் செய்த படம். இதை பிரகாஷ்ராஜ் நடிக்க தமிழில் கூட எடுத்தார்கள். ஓடவில்லை. அதே போல அனகோகுண்டா ஒக்க ரோஜு, ஒக்கடுன்னாடு, ப்ராயாணம், இதோ இப்போது இந்த சாகஸம். இதற்கு முந்தைய படங்கள் ஆந்திராவில் கிரிட்டிக்கலாகவும், வசூல் ரீதியாகவும் ஓகேயான படங்கள். எல்லா படங்களும் ஓரிரு நந்தி அவார்டுகளை தட்டிச் சென்றவை. நம்மூர் கலைமாமணி போல அல்ல நந்தி அவார்ட். இப்படியாப்பட்ட இயக்குனரிடமிருந்து ஒரு பேண்டஸி படமென்றால் ஆர்வம் வரத்தானே செய்யும்?. 

Jul 12, 2013

Lootera

 
காதல் என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான அனுபவம். அந்த அனுபவத்தை ஆராயக்கூடாது அனுபவிக்கணும் என்பது என் திடமான எண்ணம். ஆனால் காதல் கொடுக்கும் கிளர்ச்சியும், சோகமும், சந்தோஷமும் நிச்சயம் காதலை உணர்ந்த எல்லோருக்குமே பொதுவானது என்பதை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு காதல் கதைதான் இந்த லூட்டேரா. 

Jul 10, 2013

DJANGO UNCHAINED

அடிமைத் தளையிலிருந்து பவுண்டி ஹண்டரால் விடுவிக்கபட்ட ஜாங்கோ அவரின் உதவியுடன் வேறு ஊரில் மிக கொடூரமான மனம் கொண்ட டிகாப்ரியோவிடம் அடிமையாய் இருக்கும் அவனின் மனைவி ப்ரூமில்டாவை எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை. ஒரு பக்கா மசாலா கதை லைனுக்குள் இருக்கும் டீடெயிலிங். மேக்கிங், நடிப்பு என்று ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து பண்ணியிருக்கும் விதம் என வரும் போதுதான் தலைவன் குவாண்டின் நிற்கிறார்.

Jul 6, 2013

சிங்கம்-2

ஏகப்பட்ட எதிர்பார்பு. அதை விட ஏகப்பட்ட விளம்பரமென்று அமர்களத்தோடு வெளியாகியிருக்கிற படம். போன பார்ட்டில் வேலையை ரிசைன் பண்ணிவிட்டதாய் உட்டாலக்கடி செய்து, ஸ்பெஷல் டூட்டியில் ரகசியமாய் ஜாயின் செய்து என்.சி.சி ஆபீஸாராய் வலம் வரும்  இடத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது.  என்.சி.சி அதிகாரியாய் இருந்து கொண்டே தூத்துக்குடியில் நடக்கும் கள்ளக்கடத்தலை கண்காணித்து வருகிறார். ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு முக்கியமான நிலையை சமாளிக்க, மீண்டும் போலீசாய் வந்து எல்லாரையும் மூன்றடி எகிறி பாய்ந்தடித்து எப்படி வெற்றி கொள்கிறார் எனபது தான் கதை.

Jul 4, 2013

தமிழ் சினிமா அரையாண்டு ரிப்போர்ட் -2013

முதல் மூன்று மாதங்களில் பெரும் வெற்றி பெற்ற படங்கள் வரிசை படுத்தினால் கண்ணா லட்டு தின்ன ஆசையா?, விஸ்வரூபம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. அடுத்த மூன்று மாதங்களைப் பார்ப்போம்.

Jul 2, 2013

Mad Money

ஒரு கருப்பினப் பெண் கட்டுக்கட்டாய் பணத்தை குமுட்டி அடுப்பில் போட்டு எரித்துக் கொண்டிருக்கிறாள். இன்னொரு  தம்பதியினர் அவர்களது கக்கூஸ் கம்மோட்டில் பேப்பர் ஷெட்ட்ரை வைத்து பணத்தை தூள் தூளாக வெட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருத்தியோ, அவளின் காதல் கணவனின் உதவியோடு, மொபைல் கேரவன் வீட்டில் பணத்தை Rube goldberg machine ஐடியாவை வைத்து  வெடி வைத்து தகர்த்து எரிக்கிறாள். இவர்களின் வயதான தம்பதியினரில் பெண்ணைத் தவிர மற்றவர்களை போலீஸ் கைது செய்கிறது. ஏன்? எதற்கு? என்பது தான் கதை.

Jul 1, 2013

கொத்து பரோட்டா -01/07/13

சமீபத்தில் நண்பர் ஒருவருடய மகனுக்கு கவுன்சிலிங்கில் ராஜலஷ்மி இன்ஜினியரிங் காலேஜில் மெக்கானிக்கல் செலக்ட் செய்திருக்கிறார். ஸ்ரீபெரும்பதூரில் இருக்கும் அந்த காலேஜுக்கு , மெயின் ரோடிலிருந்து காலேஜ் உள்ளே போக காரெல்லாம் வைத்து பெற்றோர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். காலேஜுக்கு அழைத்து போனவர்கள். அவர்கள் காலேஜில் உள்ள அத்துனை வசதிகளையும் பெற்றோர்களை கூட்டிக் கொண்டு போய் காட்டியிருக்கிறார்கள். அங்கேயிருக்கும் காண்டீனில் மாணவர்களுக்கு சலுகை விலையில் சாப்பாடு போடுகிறோம். லேப் வசதி, மற்றும் பிற வசதிகளை தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். கடைசியாய் பீஸ் கட்டும் வைபவம் வந்த போது  83 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கவுன்சிலிங்கில் வெறும் 43 ஆயிரம் தானே பீஸ் என்று கேள்வி கேட்க, வெறும் 43 ஆயிரத்தில் எப்படி நாங்கள் இவ்வளவு வசதிகளை மாணவர்களுக்கு செய்ய முடியும்? அரசுக்கு இதைச் சொன்னால் புரியாது. அத்தோடு நீங்கள் கூட கவுன்சிலிங்கில் இதே ஸ்ரீ பெரும்பதூரில் வேறு காலேஜ் இருந்தும் அங்கே போகாமல் ஏன் எங்கள் காலேஜை செலக்ட் செய்திருக்கிறீர்கள். நல்ல ரிசல்ட், மற்றும் வசதிகள் இருக்கின்றது என்பதால் தானே? எனவே 83 ஆயிரம் கட்டித்தான் ஆக வேண்டும் என்று ப்ரெஷர் போட்டிருக்கிறார். நண்பரிடமோ வெறும் ஐம்பதாயிரம்தான் இருக்கிறது. முன்பே இது போல சொல்லியிருந்தால் நாங்கள் தயாராக வந்திருப்போம். அது மட்டுமில்லாமல் நீங்கள் கேட்ட தொகையை கொடுத்தால் பில் தருவீர்களா? என்று கேட்க, அதெல்லாம் தர மாட்டோம். வெறும் 43 ஆயிரத்துக்குத்தான் தருவோமென்று சொல்லியிருக்கிறார்கள்.கையில் காசில்லாமல், அதிக பணம் கட்ட மனசுமில்லாமல் நண்பர் மிச்ச பணத்தை கட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதே போல என் நண்பர் நடிகர் அவரின் பெண்ணிற்கு நல்ல பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்திருக்கிறது. அரசு நிர்ணையித்த தொகை தான் என்றாலும், அந்த பீசு, இந்த பீஸு என்று கிட்டத்தட்ட ஒன்னரை லட்ச ரூபாய் கட்ட வேண்டியிருகிறது என்று சொல்கிறார். அரசு நிர்ணையித்த தொகைவிட அதிகமாய் வாங்கக் கூடாது என்று அரசு ஒரு பக்கம் சொல்லிக் கொண்டேயிருந்தாலும் இன்னொரு பக்கம் கட்டிங்காய் பணம் வாங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களை எதிர்த்து புகார் கொடுங்களேன் என்று சொன்னால் அப்புறம் புள்ளை படிப்பையில்லை கெடுத்திருவாங்க என்று பயப்படுகிறார்கள்.
@@@@@@@@@@@@@@@