Posts

Showing posts with the label சில்லுனு ஒர் சந்திப்பு

சில்லுனு ஒர் சந்திப்பு

Image
 விமலுக்கும் ஓவியாவுக்கும் பள்ளியிலேயே காதல். வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள விழைகிறார்கள். பின்பு சில வருடங்களுக்கு பிறகு விமல் அமெரிக்காவிலிருந்து வருவதாய் காட்டுகிறார்கள். அங்கே ஓவியா என்றொரு ஜீவனைப் பற்றி ஏதும் சொல்லப்படவேயில்லை. என்னடா இது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே தீபாஷாவின் மேல் காதல் கொள்கிறார். இருவர் வீடும் இவர்களை சேர்த்து வைக்க பாடுபடுகிறது. அடக்கமான, கலாச்சார காவலராய் வளர்ந்திருக்கும் தீபாஷாவுக்கு விமலின் ஸ்கூல் காதல் பற்றி தெரிய வர, இருவரும் பிரிகிறார்கள். பிரிவுக்கு பிறகு ஒரு நாள் ஓவியாவை சந்திக்க, என்னவானது என்பதுதான் கதை.