Posts

Showing posts with the label குறுமபடம்

குறும்படம் - முண்டாசுப்பட்டி

Image
திருப்பூர் ராம் என்கிற இளைஞரை முதலில் பார்த்த போது எதுவும் பேசமலேயிருந்தார். பின்பு இரண்டே இரண்டு நடிகர்களை வைத்து பின்னணியெல்லாம் 2டியில் வரைந்து ஒரு குறும்படத்தை எடுத்திருந்தார். சின்ன நாட் தான் ஆனால் சுவாரஸ்யமான, நுணுக்கமான 2டி வரைகலையில் அசத்தியிருந்தார். அதன் பின்பு சில கதைகளை பற்றி போனில் பேசுவார். இவரின் கலைஞர் டிவி பயணம் மிக அருமையாய் ஒவ்வொரு கட்டத்திலும் மெருகேறிக் கொண்டே வந்தது. அதில் உச்சம் என இந்த குறும்படத்தை சொல்ல முடியும். 1980 நடக்கும் கதை. ஃபீரியட் குறும்படம். அதிலும் வழக்கமாய் நகைச்சுவை என டயலாக்கால் கொல்லாமல், சின்னச் சின்ன  பாடிலேங்குவேஜில், முக்கியமாய் நடிகர் ஒருவரை தங்களுடய பொணம் மாடலாய் மாற்ற, ஒரு சின்ன பிஜிஎம்மில் காட்டும் மாண்டேஜுகள் அட்டகாசம். இவர் எடுத்த படங்களிலே இந்த முண்டாசுப்பட்டி முதன்மையான படம். நல்ல எதிர்காலம் இருக்கிறது இவருக்கு. இப்படத்தின் ஒளிப்பதிவு முக்கியமாய் குறிப்பிடத்தக்கது.

குறும்படம் - பசி

Image
திருப்பூர் ரவிகுமாரின் குறும்படம். மிக சாதாரண லைன் தான். அதை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். நடுநடுவே வரும் அனிமேஷனை விட, ஷங்கரின் ஒளிப்பதிவு அருமை. எங்கோ என்னவோ லைட்டாக மிஸ்சாகியிருப்பதாய் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. சங் கர் நாராயண் @கேபிள் சங்கர்

குறும்படம் - Dark Game

Image
கார்த்திக் சுப்பாராஜின் குறும்படம். தனியாக ஒரு பெண் இருக்கும் வீட்டில் இரண்டு பேர் நுழைந்து விடுகிறார்கள். ஏன் எதற்கு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவரின் ஆரம்பக்கால படமாய் தெரிகிறது. வெளிநாட்டு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முடிவில் ஒரு சோஷியல் காஸ் மெசேஜ் இருக்கிறது. டெக்னிக்கலாய் சொல்லப் போனால் கொஞ்சம் அமெச்சூரிஷாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்

குறும்படம்- நெஞ்சுக்கு நீதி

Image
நாளைய இயக்குனர் ஃபைனலில் வெற்றிப் பெற்ற குறும்படம். எனக்கு மிகவும் பிடித்த நளனின் படம். நளனின் இயல்பான நகைச்சுவையும், சுவாரஸ்யமான திரைக்கதையும், ஒரு திடுக் கிருப்பமும்  நச். இதில் நடித்திருக்கும் கருணாவின் ரியாக்‌ஷன்களை ரசிக்காமல் இருக்க முடியாது. சுஜாதாவின் சிறுகதையை படித்த உணர்வு இப்படத்தை பார்க்கும் போது வரும். சங் கர் நாராயண் @கேபிள் சங்கர்

குறும்படம்- போஸ்டர்

Image
கலைஞர் டிவியில் நடக்கும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக நண்பர் ரவிக்குமார் இயக்கத்தில் என்னுடய கதை, திரைக்கதை, வசனத்தில் எடுக்கப்பட்ட இப்படம். அவ்வாரத்திய சிறந்த படமாய் அமைந்தது. அது மட்டுமில்லாமல் நான் பின்னணி குரல் கொடுத்த இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு சிறந்த நடிகர் விருதும் கொடுத்தார்கள். உங்களின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்