Thottal Thodarum

Jan 31, 2009

அக்னிபார்வையின் கேள்விகளும், என் பதில்களும்

200வது பதிவு.
இது என்னுடய 200வது பதிவு.. இதுவரை என் பதிவுகளை படித்து ஆதரவு அளித்தமைக்கு நன்றி.. மேலும் உங்கள் ஆதரவை நல்கி வேண்டுகிறேன். சக பதிவர் நண்பர் திரு. அக்னி பார்வை என்னையும் ஒரு கருத்தாய் கொண்டு பேட்டி எடுத்து பெருமைபடுத்தியமைக்கு நன்றிகள் பல.. அந்த பேட்டியின் cut&Past

அக்னியின் கேள்விகள்:பதிவர் கேபிள் சங்கரின் பதில்கள்

மீண்டும் ஒருமுறை ‘அக்னியின் கேள்விகள்’ பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி.இந்த முறை சினிமாவை பற்றி, நம் பார்வையில் சிக்கிக்கொண்டவர் கேபிள் சங்கர்.இவருக்கு அறிமுகம் தேவையில்லை, அந்தளவுக்கு பதிவுகளிள் பிரபலமானவர். சினிமா இயக்கும் முயற்ச்சியில் ஈடுபடுபவர், ஒரு நாள் வெற்றி பெறுவார், அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

1. கேபிள் சங்கர் பற்றி?
ஒரு சாதாரண பிஸினெஸ்மேன், நடிகன், திரைக்கதையாசிரியன், வசனகர்த்தா, குறும்பட இயக்குனர், திரைபட இயக்குனராகும் முயற்சியில் இருப்பவன் சமீபகாலமாய் ப்ளாக்குகளில் எழுதியே மற்றவர்களை நோகடிப்பவன்.

2. சினிமாவுக்கும் உங்களுக்குமான் தொடர்பு?
சினிமா எனக்கு ஒரு Passion. அதனால் சினிமாவில், தயாரிப்பு, நடிப்பு, உருவாக்குதல், தியேட்டர், விநியோகம் என்று பல பட்டறை அனுபவம்.

3. உங்கள் பதிவுகளிள் சினிமா விமரிசனத்தின் போது ஒரு சாஃப்ட் கார்னர் தெரிகிறதே?
நாளைக்கு நாமளும் படம் எடுப்போமே.. என்கிற அல்லில்தான்.

4. இத்தனை நாள் இந்திய மற்றும் தமிழ் சினிமாவை பற்றி?
அதுக்கென்ன நல்லாதானே இருந்திச்சு..

5. அண்மைகால இந்திய மற்றும் தமிழ் சினிமாவை பற்றி?
அதும் நல்லாத்தான் வரும்னு நம்பிக்கை.

6. உங்கள் பார்வையில் ஒரு படம் எப்படி இருக்க வேண்டும்.
மக்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும். வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபகரமாய் இருக்க வேண்டும்.. வழக்கமாய் இது ரெண்டும் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நடக்கும்

7. பொதுவாக சினிமாவின் ம்றுபக்கமான சினிமா தொழிளாலர்கள் பற்றிய ஏன் பேசபடுவதில்லை?
நாம் அவர்களை பற்றி ஆர்வம் காட்டாததால். பொதுவாய் மக்கள் திரையில் பார்க்கும், நடிகர், நடிகைகளையே விரும்புகிறார்கள். அதன் பின்னால் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு கிடைக்கும் விளம்பரமோ, முக்கியத்துவமோ, மீடியாக்கள் தருவதில்லை. ஆனால் தற்காலத்தில், பல இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று மீடியா திரும்பியிருக்கிறது. ஆனால் இதற்கு முன்னரே பாரதிராஜா, பாலசந்தர் போன்ற ஜாம்பவான்கள், நடிகர் நடிகைகளுக்கு இணையாய் பிரபலமாய் இருப்பவர்கள்தான்.

8. சினிமா நடிகர்களுக்கு இருக்கும் ஒரு வித ‘கடவுள்’ இமேஜ் பற்றி ?
அது ஒரு வித கலாசாரமாகவே ஆகிவிட்டது. அதற்கு பொதுவாய் மக்களுக்கு படிப்பறிவு இல்லாதது கூட ஒரு காரணம்.

9. உலக சினிமாக்கள் பற்றி?
என்னை பொறுத்தவரை.. நல்ல திரைப்படங்கள் எல்லாமே உலக சினிமா வகைகள்தான். இங்கே.. நாம் ஆகா.. ஓகோ வென்று கொண்டாடும் படங்கள் எல்லாம் வணிக ரீதியாக தோல்வி படங்களாய்தான் பெரும்பாலும் இருந்திருக்கிறது. உலக அளவில் அவர்களது நெட்வொர்க் இருப்பதால் அவர்களால் வணிக் தோல்வியிலிருந்து மீண்டு படங்களை எடுக்க முடிகிறது.
ஒரு சம்பவம் என் நண்பருக்கு ஏற்பட்டது. அவர் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் கதை சொல்ல, திரைக்கதையில் திருத்த சொல்லி அனுப்பினார்கள். நான் அவரிடம் கேட்டேன்.. ஏன் உலக சினிமாவை பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று சொன்னீர்களே..? irreversable படத்தையெல்லாம் பற்றி பேசினார்கள் என்கிறீர்களே.. அவர்களா.. திருத்த சொன்னார்கள் என்றேன்.
அதற்கு அவர் சொன்ன பதில்..

" நீங்க நல்ல டைரக்டர்ன்னு பெயர் வாங்க விரும்புகிறீர்களா..? அல்லது வெற்றி பட இயக்குனராக விரும்புகிறீர்களா..? "ன்னு கேட்கிறாங்க.. என்றார்.

இது தான் நம் நிலைமை.. வணிக ரீதியாய் வெற்றி பெறவில்லையென்றால் அதன் வலி மிக அதிகம்.



10. Perfume, Slum dog milliner, படங்களை பற்றி உங்கள் கருதென்ன?
Perfume ஒரு அருமையான படம். தமிழில் அந்த மாதிரி படங்கள் வருமா என்று தெரியவில்லை. ஆனால் இந்தியில் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. Slum dog மிக அருமையாய் திரைக்கதை அமைக்கப்பட்ட படம். சில பல ஓட்டைகள் இருந்தாலும் சூப்பர்.. ஞாயமாய் இந்தியர்கள் எடுத்திருக்க வேண்டிய படம்.

11. சசி, அமீர், பாலா தமிழில் மாற்று சினிமாவை தருவார்களா?
எனக்கு தெரிந்து மாற்று சினிமா என்று ஒன்று இருப்பதாய் தெரியவில்லை. ஒடுகிற படம், ஓடாத படம் இந்த இரண்டுதான் சினிமாவின் எதிர்காலத்தை நிர்ணையிக்கிறது.

12. திரைகதையாளருக்கும், திரை விமர்சகர்களுக்கும் தற்க்கால த்மிழ் சினிமாவில் உள்ள நிலை?
தமிழ் சினிமாவில் மட்டுமே இன்னமும், இயக்குனரே, கதை, திரைக்கதை, வசனம் எல்லாத்தையும் கட்டிக் கொண்டு அழுகிறார்கள். பாரதிராஜா ஒன்றோ, இரண்டு படங்களுக்கு மட்டுமே தன் சொந்த கதையை எடுத்திருக்கிறார்.. மற்ற படங்கள் எல்லாம் வேறொருவர் கதைகளே.. சமீபகாலமாய் வசனகர்த்தாக்களூக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. விமர்சகர்களை பற்றியெல்லாம் யாரும் கவலை படுவதாய் தெரியவில்லை. விகடன் நல்ல மார்க் கொடுத்தால் நல்ல படம் என்கிற நிலைப்பாடெல்லாம் எப்போதோ போயாச்சு.. பெரும்பலான விமர்சகர்கள் வில்லு, படிக்காதவனை பற்றி என்ன விமர்சனம் பண்ணினாலும், இரண்டு படங்களின் வசூல் நன்றாகதானே இருக்கிறது
.
13. வரும் நாட்களிள் சினிமா எப்படியிருக்கும் என் நினைக்கிறீர்கள்.
நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

14. பதிவுகள் எழுத எப்பொழுது நேரம் ஒதுக்குவீர்கள்.
இரவு 12 மணிக்கு மேல்.

15. அரசியல் பார்வையில் உங்கள் நிலை என்ன?
இந்த திமுக ஆட்சி வரை தீவிர திமுக அனுதாபியாகதான் இருந்தேன். இந்த முறை இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து கழண்டு கொண்டுவிட்டேன்.

அக்னிபார்வையின் கேள்விகளை படிக்க இங்கே அழுத்தவும்

அதே போல் தன்னுடய பதிவிலிருந்து என்னுடய நிதர்சன கதைகளுக்கு தொடுப்பு கொடுத்த நண்பர் நவநீதனுக்கும் நன்றிகள் பல.. அவரின் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்



Blogger Tips -வெண்ணிலா கபடி குழு திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jan 29, 2009

வெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்


சமீப காலமாய் தமிழ் சினிமா பார்த்து வெறுத்து போயிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சியாய் வந்திருக்கிறது இப்படம். கோடிகளை கொட்டி முட்டாள் தனமாய் படமெடுக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கு ஒரு பாடமாய் வந்திருகிறது இப்படம். பட்ஜெட் முக்கியமில்லை, ஆர்டிஸ்ட் முக்கியமில்லை, திரும்ப திரும்ப மூளை மழுங்கடிக்கப்படும் டிவி விளம்பரங்கள் தேவையில்லை, சுமாரான கதையும், அதை அழகாய் படமெடுத்தால் போதும் தலையில் வைத்து கொண்டாடுவார்கள் நம் தமிழ் மக்கள் என்பதை மீண்டும் நிருபிக்கும்,என் போன்ற எதிர்கால இயக்குனர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வந்திருக்கும் படம் வெண்ணிலா கபடி குழு.

தமிழில் விளையாட்டை வைத்து எனக்கு தெரிந்து வந்த படம் சென்னை 28, அதற்கு பிறகு இந்த படம் தான் வந்திருக்கிறது. இந்தியா முழுவதும் விளையாடப்படும், ஸ்பான்ஸர்கள் யாருமில்லாமல் சீந்துவாரற்ற நிலையில் உள்ள விளையாட்டான கபடிதான் அது. சிறு வயதிலிருந்தே கபடி மீது வெறி கொண்டு விளையாடும் கிராமத்து இளைஞர்கள், ஊருக்குள்ளேயே வெண்ணிலா கபடி குழு என்று ஒரு குழுவை ஆரம்பித்து, பக்கத்து ஊரில் விளையாடி தோற்பதுமாய் இருப்பவர்கள், தங்களது ஊர் திருவிழாவை முன்னிட்டு, பக்கத்து ஊர் டீமை தோற்கடிக்கும் நேரத்தில் சண்டையில் முடிகிறது. திருவிழாவுக்கு வரும் மதுரைக்கார பெண்ணிடம் காதல் கொள்கிறான் மாரி என்கிற் மாரிமுத்து, திருவிழா முடிந்ததும் ஊருக்கு செல்கிறாள் அவள். மீண்டும் அடுத்த திருவிழாவுக்கு வருவதாய் சொல்லிவிட்டு செல்கிறாள்.

அதற்குள் மதுரையில் ஒரு கபடி போட்டி நடப்பதாய் தெரிய அதில் கலந்து கொள்ள இவர்கள் கிளம்புகிறார்கள். கடைசி நேரத்தில் டீமில் ஒருவர் வர முடியாமல் போக, செண்ட் ஆப் பண்ண வந்த டீக்கடை அப்புகுட்டியை தூக்கி கொண்டு போகிறது டீம்.

கடைசி நிமிடத்தில் ஒரு டீம் கலந்து கொள்ள முடியாமல் போகிற நேரத்தில் ஏற்கனவே இவர்களின் விளையாட்டை ஊரில் பார்த்த கோச் கிஷோகுமார் இவர்களை சேர்த்து கொள்ள, எப்படி கப்பை ஜெயிக்கிறார்கள், என்ன என்ன தடைகள் வருகிறது, மாரியின் காதல் என்னவாயிற்று என்பதை சுவைபட சொல்லியிருக்கிறார்கள்.

இயக்குநர் சுசீந்தரனை பாராட்டியே ஆகவேண்டும், நீட்டான திரைக்கதை, இயல்பான வசனங்கள், வாய்ஸ் ஓவரிலேயே மண்ணின் வாசத்தை காட்டும் திருவிழா காட்சி உத்திகள், ஒவ்வொரு கேரக்டருக்கும் சரியான ஆட்களை தேடி பிடித்து நடிக்க வைத்துள்ளார். புது கல்யாண பார்டியாக வருபவர் மனதை கொள்ளை கொள்கிறார்.அதிலும் அவர் பரோட்டா கடை போட்டியில் அழுகுணி ஆட்டமாடும் கடைகாரனிடம் மீண்டும் போட்டியை ஆரம்பிக்க சொல்லுமிடம் சூப்பர்.

சரண்யா மோகன் அழகாயிருக்கிறார். அவ்வளவாக வசனமே பேசாமல் அழகழகான பாவாடை தாவணியில் நடக்கிறார், ஓடுகிறார்.. மற்றபடி பெரிதாய் சொல்லிக்கிற மாதிரி ஒண்ணுமில்லை.

கோச்சாக வரும் கிஷோருக்கு அருமையான கேரக்டர்.. திருநெல்வேலி ஸ்லாங்கில் பேசியபடி வரும் அவரின் பார்வை ஒன்றே பல விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது. ஊருக்கு போக வைத்திருக்கும் காசை பிடிங்கிக் கொண்டு நீங்க ஜெயிச்சாத்தான் ஊருக்கு போக முடியும் என்று சொல்லி அவர்களை ஏற்றி விட்டு ஆடவைக்கும் முறை ஷார்ப். வழக்கமாய் இமமாதிரியான நேரத்தில் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடம் உறையாற்றுவார்கள். அதை தவிர்த்திருப்பது நன்றாகவே உள்ளது.

சின்ன சின்ன கேரக்டரில வரும் ஊர்கார பெரியவர், அவரது மகள்,அப்புகுட்டியின் மாமியார், ப்து பெண், குண்டு பையனின் அப்பா, என்று பல கேரக்டர்களை நம் முன்னே வளைய வர விட்டிருக்கிறார்கள்.

லக்‌ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவு அருமை.. அதிலும் கபடி காட்சிகளில் கூடவே ஒடுகிறது கேமரா..

விக்கு வினாயக்ராமின் மகன் செல்வ கணேஷின் இசை ஒகே ரகம். பிண்ணனி இசை பரவாயில்லை ஆங்காங்கே கடம் கேட்கிறது. ஒரு பாடல் ஓகே.

படத்தில் குறையே இல்லையா என்று கேட்பவர்களுக்கு, இருக்கிறது மெதுவாய் செல்லும் காதல் காட்சிகள், சுப்ரம்ணியபுரம் பாதிப்பு காதல் காட்சி நெடுகிலும், அதே சுண்ணாம்பு அடித்த புது சுவர்கள், அவள் நடக்க, இவன் நடக்க, இவ்ள் சிரிக்க, அவனும் சிரிக்க, அ.. ஓட, இ..ஓட என்று படத்தை முதல் பாதியில் கொஞ்சம் ஓட்டத்தான் செய்கிறார்கள். க்ளைமாக்ஸ் பெரிதாய் ஒட்டவில்லை. கதையில் கபடி மேட்ச் முடிந்ததுமே படம் முடிந்து விட்டது அதற்கு அப்புறம் காட்டப்படும் க்ளைமாக்ஸை கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

படம் வருவதற்கு முன்பே ஓரளவுக்கு எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்தது, தியேட்டரில் முதல் காட்சியில் இயக்குனர்கள், பாலாஜி சக்திவேல், நா. முத்துக்குமார், அமீர், அவரது சீடர்கள், இசையமைபாளர் பூ குமரன், லிங்குசாமி மற்றும் பல பிரபல டெக்னீஷியன்கள் வந்திருந்ததே படத்தின் எதிர்பார்புக்கு ஒர் சாட்சி..

வெண்ணிலா கபடி குழு - வெற்றி கூட்டணி.


Blogger Tips -அக்னியின் கேள்விகள்:பதிவர் கேபிள் சங்கரின் பதில்கள்”ளை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jan 26, 2009

இஸ்ரேல், பாலிஸ்தீன பதிவர் சந்திப்பு 25/01/09


N.R.I கோவி கண்ணன்(ஸ்வீட் மேன்), விஜய் ஆனந்த்( :):))



முரளிகண்ணன் , அரையிருட்டில் பத்ரி கிழக்கு பதிப்பகம்.



கணேஷ் படித்துறை என்கிற பெயரில் எழுதுபவர். ராம் சுரேஷ் புதிய பதிவர் அவர்களே வருக..வருக..

லக்கிலுக், மீண்டும் முரளி, அதிஷா.. முரளிக்கு பின்னால் யாருங்க அது..?

அக்னிபார்வை, சின்னதிரை இயக்குனர், டாக்டர் புருனோ..
அக்னிபார்வையிடம் நான்

இந்த முறை புத்தக கண்காட்சியில பிரபாகரன் புக்கை தடை பண்ணிட்டாங்களாமே..?

அட நீ வேற அவங்க பட்டுக்கோட்டை பிரபாகர் புக்கையே எடுத்து வச்சுட்டாங்களாம்!!!
இது அக்னியின் பதில். ஆனாலும் நம்ம ஆட்களுக்கு நகைச்சுவை உணர்சி ரொம்பத்தான் அதிகம்.

இயக்குனர் ஷண்முகப்பிரியன்.. புதிய பதிவர்.. வருக.. வருக..

லக்கிலுக், சென்னை தமிழன்..புதிய பதிவர் வருக.. வருக என வரவேற்கிறோம்.

இவர்களை தவிர, பாலபாரதி, பெண் பதிவர் லஷ்மி, நர்சிம், கிழக்கு பதிப்பகம் பத்ரி, அருண் என்கிற வாசகர், வெண்பூ, கோவி கண்ணனின் நண்பர்,அகிலன், மற்றும் பலரும் வந்திருந்தார்கள், மற்ற பதிவர்களை படமெடுக்கும் முன் இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சனை உருவெடுத்து பெரும் போராய் மாறி ஏவுகணைகளை வீசியதால் படமெடுக்க முடியவில்லை. போரின் நடுவே படமெடுக்க நான் ஒன்றும் சி.என்.என் நிருபரில்லை ஆதலால் மற்றவர்கள் படஙக்ள் எடுக்க முடியவில்லை.

மொட்டை மாடியை கொடுத்த அன்பு பத்ரி சாருக்கு நன்றிகள் பல..

Jan 23, 2009

என்னை தெரியுமா- திரைவிமர்சனம்

குறுகிய காலத்தில் 75,000 ஹிட்ஸுகளை கொடுத்து, மேலும் ஆதரிக்கும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றிகள் பல கோடி..


தெலுங்கில் 'நேநு மீக்கு தெலுசா" என்கிற பெயரில் 2008 அக்டோபரில் வெளிவந்த படம். தெலுங்கில் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் நடிதது தமிழிலும், தெலுங்கிலும் ஒரு சேர எடுக்கப்பட்ட படம்.

கதை ஒன்றும் பெரிசாக இல்லை. வழ்க்கம போல கஜினி மெமரி லாஸ் கதைதான். என்ன கஜினியில் 15 நிமிடம் என்றால் இதில் ராத்திரி தூங்கி எழுந்தால் முதல் நாள் நடந்தது தெரியாது. தினமும் அன்றைய நிகழ்ச்சிகளை, அவனை பற்றிய விவரங்களை டேப் ரிக்கார்டரில் போட்டு கேட்டு வாழ்கையை நடத்துபவ்ன், மிகப் பெரிய கோடீஸ்வரன். அவனுடய காதலி ரியா சென். அவனுக்கு ஞாபக சக்தி வரும் வரை தன் கண் எதிரே வைத்து பார்த்து கொள்ள அவனுக்கு ஒரு மேனேஜர் வேலையில் அமர்த்தில் தன் கண்காணிப்பில் கவனித்து வருபவர் சித்தப்பா நாசர். அவர் ஒரு நாள் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைபழி மனோஜ் மீது விழுகிறது. சினேகா உல்லால்.. ஐ.பி.எஸ் ஆபீசராக வருகிறார்.

ப்ளாஷ் பேக்கில் மனோஜும், சினேகா உல்லாலும் காதலர்கள். மனோஜுக்கு ஞாபக சக்தி போனது எப்படி? மீண்டும் ஞாபகசக்தி திரும்பியதா..? கொலை பழியிலிருந்து தப்பித்தானா..? சித்தப்பா நாசரை கொன்றவர் யார்..? மனோஜ் எந்த காதலியுடன் சேர்ந்தான்..? என்ற பல கேள்விகளூக்கு போரடிக்காமல் விடை சொல்கிறார்கள்.

மிக ஸ்டைலிஷாக படமெடுத்திருக்கிறார்கள். மனோஜின் நடிப்பு ஒன்றும் குறை சொல்ல முடியாது. நன்றாக ஆடுகிறார், ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார், படம் நெடுகிலும் சல்மான்கான் போல தன் முறுக்கேறிய உடம்பை காட்டி கொண்டேயிருக்கிறார். படம் பூராவும் அவர் தன்னை பற்றியும், கூட நடிப்பவர்களை பற்றியும் அடிக்கும் கமெண்டுகள் இன்ட்ரஸ்டிங்.. ஆதி என்கிற அவரது கேரக்டருக்கு குரல் கொடுத்தவர் யாரோ.. நல்ல வாய்ஸ்

அருமையான ஒளிப்பதிவு.. அதிலும் மனோஜை ரவுடிகள் துரத்தி வரும் சேஸிங் காட்சியில் ஒளிப்பதிவு, எடிட்டிங், எல்லாமே சூப்பரோ சூப்பர். அந்த சேஸிங் காட்சியை ஏதோ ஒரு ப்ரஞ்சு படத்தில் அப்படியே பார்த்ததாய் ஞாபகம். பெயர்தான் நினைவுக்கு வரவில்லை. இருந்தாலும் சூப்பர்.. அதை அப்படியே எடுப்பதற்காக நிறைய உழைத்திருக்கிறார்கள்.

பிரமானந்தத்தின் காமெடியில் ஒரே தெலுங்கு வாடை. ஒன்றும் எடுபடவில்லை. பல இடங்களில் புரியவில்லை..

தரனின் இசையில் மூன்று பாடல்கள் நன்றாய் இருக்கிறது. தண்ணி கருத்துருக்கு ரீமிக்ஸ் பாடலில் உள்ள சரக்கு அளவிற்கு விஷூவலாய் சரக்கு இல்லை. சிநேகா உல்லால், மனோஜின் லவ் ட்ராக்கில் அவர்களது பிரிவுக்கு வலுவான சம்பவஙகள் இருந்திருந்தால் திரைக்கதையில் ஒரு உற்சாகம் ஏற்பட்டிருக்கும். மிகவும் அமெச்சூர் தனமான காரணங்கள். இயக்குனர் அனில் சாஸ்திரி ஸ்டைலாய் படமெடுக்க முனைந்த முனைப்பில் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் படத்துக்கு மெருகு கூடியிருக்கும்

என்னை தெரியுமா - அறிந்தவன்.


Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

பதிவுகளை விகடன் படிக்கிறது..?

குறுகிய காலத்தில் 75,000 ஹிட்ஸுகளை கொடுத்து, மேலும் ஆதரிக்கும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றிகள் பல கோடி..
விகடன் தமிழ் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறது என்பதை பதிவுலகத்திலிருந்து வாரம் ஒரு பதிவை அறிமுகபடுத்துவதிலிருந்தே எல்லோருக்கும் தெரியும். பதிவர்கள் எல்லோரும் விகடன் தங்களை கவனிக்கிறது என்பதை பற்றி பெருமிதபட்டு கொண்டு மகிழ்ந்தார்கள்.

அதிலும் விகடன் பெயரிட்டு வெளிவரும் பதிவுகளில் உண்மையிருந்தால் அதை வாசகர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உடனடியாய் தவறை களையவும் செய்திருக்கிறது என்பது நிதர்சன உண்மை.

அப்படி வாசகர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விகடன் ஏன் பெரும்பாலான வாசகர்களின் உணர்வை, எண்ணத்தை, மதித்து ஏன் விகடனை பழைய வடிவிலேயே கொடுக்க கூடாது..? நீங்கள் என்னவோ இளைஞர்களை டார்கெட் செய்து வடிவமைத்து இருப்பதாய் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். இளைஞர்களான எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதே உண்மை.

உங்களுடய புதிய வடிவமைப்பால் நெடுங்கால வாசகர்களை, விகடனை தங்கள் வாழ்கையின் ஒரு அங்கமாய் நினைக்கும் வாசகர்களை நீங்கள் இழந்து விட்டீர்கள். உதாரணமாய் என்னிடம் விகடனை கையில் கொடுத்து புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதே என்னுடய அம்மாதான். விகடன் பழைய வடிவில் வந்தவரை என்னுடய அம்மா வெள்ளிக்கிழமை விகடன் வந்தவுடன் முதலில் படிப்பது அவர்கள்தான். எப்போது விகடன் மாறியதோ அவர்கள் அதை தொடுவது கூட கிடையாது. அதே போல் என்னுடய உறவினர் ஒருவர் ஹைதராபாத்திலிருந்து எஸ்.டி.டி போட்டு புலம்பினார். இப்படி பல வாசகர்கள்.

நான் இதை ஒரு சர்வேயாக என்னுடய ப்ளாக்கில் போட்டேன். பெரும்பாலானவர்கள் பழைய விகடனையே விரும்பியிருந்தார்கள். நான் இதை செய்தது விகடன் கவனிக்கும் என் நம்பிக்கையில். இந்த பதிவை அப்படியே ஒரு முறை யூத்புல் விகடன்.காமில் பின்னூட்டமிட்டேன். அது போச்சா போகலையான்னு தெரியல..

அதிலும் பின்னுட்டமிட்டிருந்த வாசகர்கள் உங்களது பொக்கிஷத்தை பற்றி இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மணியனின் தொடர்கதையை நிறுத்தியதை பற்றி அவர் எழுதியவுடன் அடுத்த வாரத்திலிருந்து தொடர்வதே அதற்கு சாட்சி..

என்னுடய் ஏரியாவில் பேப்பர் ஏஜண்டிடம் கேட்டேன்.. புது விகடன்னால ஏதாவது எக்ஸ்ட்ரா புக் போகுதான்னு..? அதுக்கு அவர் ‘ அட அதையேன் சார் கேட்குறீங்க..? போட்டுகிட்டு இருந்ததில 5,10 குறைஞ்சதுதான் மிச்சம்..” என்றார். விகடன் மேலும் பல வாசகர்களை இழப்பதை என்னால் சகிக்க முடியவில்லை.

அதே போல் சமீப காலமாய் விகடன் விமர்சனங்கள் முன்பு போல் இல்லை. டுபாக்கூர் படத்துக்கெல்லாம் 38,39 என்று மார்க் அளிக்கிறது. ஒரு வேளை விகடனும் திரைப்பட தயாரிப்பில் இருப்பதினால் ஒரு சாப்ட் கார்னரோ..?

வெறும் படங்களாள் நிரப்பப்பட்ட ஒரு இதழாகவே தெரிகிறது.

ஏதோ சொல்லணுமின்னு தோணிச்சு.. சொல்லிட்டேன்.. சொல்லாமில்ல.. அது சரி.. நம்ம தாத்தாகிட்ட நாம சொல்லாம வேற யார் சொல்றது.


Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jan 22, 2009

பின்னூட்டம் வாங்குவது எப்படி..?

75,000 ஹிட்ஸ்களை தந்த சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோருக்கும் நன்றி..


பதிவெழுதி பின்னூட்டம் வாங்குறதுன்னு எப்படின்னு யோசிச்சி, யோச்சி நிறைய பேர் மண்டை காஞ்சி போய் அலையுறது தான் மிச்சம்.. ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷத்தை உங்களுக்கு சொல்லலாமேன்னு நான் ஓரு ஆராய்ச்சி போல செய்ய ஆரம்பிச்சேன் அப்பத்தான் ஓரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். தினமும் பதிவெழுதற பல பேர் பின்னுட்டமிடறவங்க எல்லோரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஆன்லைனில் வருவதில்லை. அது என்ன பதிவெழுதறத்துக்கு வீக் எண்ட் விடுமுறையா.?

ஏண்டான்னு யோசிச்ச போது பெரும்பாலும் பல பதிவர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்தே பதிவெழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் சம்மந்தபட்ட தொழிலில் இருப்பவர்கள் அத்னூடயே இருப்பதால் வேலைக்கு நடுவே (செஞ்சாத்தானே.. என்று கேட்கும் பதிவ்ர்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.) பின்னூட்டமிடுவது, பதிவு எழுதுவது என்று பிசியாய் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தேன்.

எப்போதாவது பதிவெழுதுபவர்க்ள் சொந்தமாய் கணினியும், இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்ப்வர்கள் என்றும் தெரிகிற்து.

பதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்னூட்டமானவர்களும் இருக்கிறாரிகள்.. சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை. மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை.

சரி அவங்க நாமளாவது பின்னூட்டமிடுவோம்னு அவங்க பதிவ படிச்சிட்டு ஏதோ நாம அப்ரண்டீஸாக இருப்பதினால்.. சூப்பர்.. நல்ல பதிவுன்னு போட்டா.. அதை பத்தி பதிவெழுதி நம்ம மானத்தை வாங்குறாங்க..

பதிவுகளில் பொதுவாக அதிகம் படிக்க படுவது சினிமா சம்மந்தபட்ட பதிவுகள் என்பதும் தெரிகிறது.

அதிலும் அதிஷா, லக்கிலுக், பரிசல் போன்றவர்களின் திரைவிமர்சனம் வெகுவாக மக்களை கவர்திருக்கிறது என்பதும், சமீப காலமாய் ஏதோ கேபிள்,வயர் என்ற பெயரில் கிறுக்கி வரும் அவரின் விமர்சனங்களுக்கும் ஹிட்ஸ் வர ஆரம்பித்திருப்பதே.. சாட்சி.

செக்ஸ் சம்மந்தமாய் எதாவது பதிவிட்டாலும் வெகுவாக மக்களிடம் போய் சேருகிறது.. ஆனால் பார்த்துவிட்டு பின்னூட்டம் தான் இடமாட்டார்கள். கிட்டத்தட்ட பிட் படம் பார்க்க போய்விட்டு உள்ளுக்குள் கிளுகிளுப்பதை போல், படித்துவிட்டு போய்விடுகிறார்கள்.. பின்னூட்டமிட்டால் வந்து படிச்சது தெரிஞ்சிருமோ..?

சரி எதையாவது எழுதி தொலைத்தோம்னு வச்சிக்க்கங்க.. அதுக்கு தலைப்பை பிடிக்கறதுக்குள்ளே அவனவன் படற அவஸ்தை இருக்கே.. ஸ்...அப்பா.. நினைச்சாலே கண்ணைகட்டும்.. பரங்கிமலை பத்தி எழுதணும்னா “ஜோதியாய் நிற்கும் பரங்கிமலைன்னு” தலைப்பை போட்டாதான் உள்ளேயே வராங்க..

இப்படி கஷ்டப்பட்டு , வேதனைப்பட்டு பதிவெழுதறவங்களை பத்தி நான் என்னனு சொல்ல.. அதெல்லாம் ஓரு தவம்ன்னு தெரிய வருது.. அதனால நான் சொல்ல வரது என்ன்னனா..? நீங்க பாட்டுக்கு எழுதுங்க.. நல்லாயிருந்தா கண்டிப்பா பின்னூட்டம் வரும்.

அப்புறம்.. அவ்வளவுதாங்க.. என்னத்தை எழுதறதுன்னு யோசிச்சி, யோசிச்சி பாத்தப்போ.. தான் புரிஞ்சுது தினம் எதையாவது எழுதறது எவ்வளவு கஷ்டம்னு.. எதோ என்னோட இன்னைய கடமை முடிஞ்சது. ஓரு மொக்கை பதிவை ரி எடிட் பண்ணி பப்ளிஷ் பண்ணிட்டேன். எவ்வளவு கஷ்டம்டா சாமி...

படிக்கிறவங்க எல்லோரும் தயவு செஞ்சு பின்னூட்டம் போட்டுறுங்க.. இல்லேன்னா தலைப்ப வச்சு உள்ளே வந்தவங்க நாக்க பிடிங்கிக்கிற மாதிரி பேசுவாங்க..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jan 20, 2009

பட வரிசை “பத்து”

10 திருவண்ணாமலை


சாமி கண்ணை குத்திருச்சுன்னு சொல்றாங்க..

9 பஞ்சாமிர்தம்


குழந்தைகள் படம்னு சொன்னாலும் தியேட்டர் பக்கம் குழந்தைங்க யாரையும் காணோம். வசூலும் ஒண்ணுமில்லைன்னு சொல்றாங்க..

8.பொம்மலாட்டம்



மல்டி ப்ளக்ஸுகல் மட்டும் சொல்லிக்கிற மாதிரி வசூல்.



7 திண்டுக்கல் சாரதி


பி அண்ட் சி செண்டர்களில் மட்டும் சொல்லிக் கொள்ளும்படியான வசூல். சன் டிவியில் மட்டுமே நெ.1ல் வரும் படம்.

6 சிலம்பாட்டம்


லிஸ்டுல இருக்கிறதுக்கு ஒரே காரணம் யுவன் சங்கர் ராஜா.

5.அ.ஆ..இ...ஈ..


அ.ஆ..இ...ஈ.. எலிமெண்டரி.. ஒண்ணும் சொல்லிக்கிறபடியா இல்ல..

4அபியும் நானும்

மல்டிப்ளக்ஸில் கூட ஒண்ணும் முடியலையாம்.



3.காதல்னா சும்மா இல்ல..



படமெடுக்கிறதுன்னா சும்மா இல்லைன்னு ராஜ் டிவிக்கு தெரியபடுத்தியிருக்கும் படம்.. என்ன தான் படம் சுமாரா இருந்தாலும்.. வசூல் ரொம்பவே மோசம்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

2.படிக்காதவன்

மற்றுமொரு சன் டிவி படம். போட்டியில்லாததால் சரியான ஓப்பனிங்.. இருக்கவே இருக்கு சன் டிவி.. ஆனால் ரொம்ப நாள் தாங்காது.

1.வில்லு



பொங்கலுக்கு ரெண்டு நாள் முன்னமே வந்து வசூலை அள்ளிட்டாங்க.. பொங்கலுக்கு அப்புறம் படங்கள் வந்தும் ஒன்ணும் சொல்றதுகில்ல.. வில்லு.. டார்கெட் இல்லாதது.



Blogger Tips - மஸ்கா தெலுங்கு திரைவிமர்சனத்தை படிக்க இங்கெ அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

MASKA - Telugu Film Review



ஒரு பக்கா மசாலாவான காதல் கதை. சிம்மாச்சலமும, ஷாயாஜி சிண்டேவுக்கும் மத்திய மந்திரி பதவி கிடைப்பதில் போட்டி. சிம்மாச்சலத்தை ஜெயிக்க முடியாத ஷிண்டே அவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் ஹனிஷ்காவை கடத்தி சிம்மாச்சலத்தின் பழைய வாழ்க்கையை வெளிப்படுத்தி, அவனது மந்திரி சான்ஸை கெடுத்துவிட துடிக்கிறான். சிம்மாச்சலமோ.. தன் சொந்த மகளையே கொலை செய்ய துடிக்கிறான்.

இது ஒரு பக்கம் இருக்க.. கிருஷ் என்கிற ராம் மஞ்சுவை காதலிக்க தன் நண்பனின் மூலம் அவளுடய விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொண்டு, அவளை மடக்க முயற்சிக்கிறான். அப்படியே தமிழ் வாலியில் அஜித் சொல்லும் எபிசோடை எடுத்து கொள்ளுங்கள்.. அப்படியே போகிறது. ஒரு கட்டத்தில் மஞ்சு கிருஷிடம் தன் காதலை சொல்ல முடிவெடுக்கும் போது.. ராமின் கற்பனை காதலி நேரில் வர.. அப்புறம் ஆரம்பிக்கிறது கூத்து.

ராம் சூப்பராக ஆடுகிறார், பவன் கல்யாணை போல துள்ளலாய் நடிக்கிறார். இயல்பாய் காமெடி வருகிறது. நன்றாக சண்டை போடுகிறார். குறித்து வைத்து கொள்ளுங்கள் இவரை.

மஞ்சுவாய் ஷீலா.. அழகாய் இருக்கிறார். ஹனிஷ்கா வரும் வரை.. ஹனிஷ்கா ஒரு குட்டி பூமிகா போல இருக்கிறார். அழகாய்,மிக அழகாய் இருக்கிறார் ஆனால் நடிக்கத்தான் வரவில்லை. ஷீலா அவருக்கு கொடுத்த பாத்திரத்தில் மின்னுகிறார். இந்த பெண்ணும் ஒரு அண்டர் எஸ்டிமேட்டட் ஆர்டிஸ்ட்.

சேகர் வி.ஜோசப்பின் ஒளிப்பதிவு அருமை. அதிலும் வெளிநாட்டு பாடல் காட்சிகளில் துல்லியம். சக்ரியின் இசை பரவாயில்லை ரகம் ஒன்றும் பழுதில்லை. வழக்கம் போல் இந்த படத்துக்கு எம்.எஸ்.ராஜுவின் திரைக்கதை.. க்ளைமாக்ஸ் வரைக்கும் பரபரவென எடுத்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.

இயக்குனர் பி.கோபால் அவர்களுக்கு இது ஒரு கம்பேக் படம்.. நிச்சயமாய் ஒரு கம்பேக் படம் தான்.

மஸ்கா - மஜா..


Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jan 18, 2009

அழுகை


அழுகை.. மனிதனின் உணர்வு பூர்வமான ஒரு வெளிப்பாடு. சந்தோஷமோ.. துக்கமோ.. உச்சக்கட்டம் அழுகை.. சந்தோஷத்தில் கூட ஆனந்த கண்ணீர் வரும்.. அதுவும் கண்ணீர்தான்.

செத்த வீட்டில் அழுகிறவர்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடய உறவின் நெருக்கத்தை, இழப்பின் சோகத்தை, எதிர்கால கவலைகளை அவர்கள் அழும் நிலையை முன்னிருத்தி தங்களுக்கும், இறந்த நபரிடம் உள்ள ஆழமான உறவை அவர்களின் அழுகை வெளிப்படுத்தும். இதற்கு பல போட்டிகள் வேறு நடக்கும்.

இறந்தவரின் மனைவியோ, கணவரோ.. உடலின் மீது விழுந்து அழுவது, ஒரு வகை. அப்படி அழுதவரை மிஞ்ச அந்த நபரின் தங்கையோ, தம்பியோ.. போட்டிக்கு இறந்தவரின் மீது விழுந்து அழுவதும் உண்டு, சமயத்தில் இறந்தவர் ஆணாயிருந்து அவர் எங்கேயாவது செட்டப் செய்திருந்தால், அந்த பெண்மணி சந்தடி சாக்கில் இது போல் செய்து தனக்கும், இறந்தவருக்கு உள்ள உரிமையை நிலைநிறுத்த முயற்சிப்பவர்களும் உண்டு.

பார்த்தவுடன் மடேர்..ம்டேரென்று மார்பிலடித்து எங்கே அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயத்தை ஏற்படுத்தும்படி அழுபவர்கள் உண்டு. இவர்களின் அழுகை முக்கியமாய் உள்ளே நுழைந்து ஒரு பத்து நிமிடங்களுக்கும், உடலை எடுக்க போகும் முன்பும் தான் வெளிப்படுத்துகிறார்கள். இது ஒரு விதமான டிராயிங் அட்டென்ஷன் விஷயம்.

சிலருக்கு வெளியே இருக்கும் வரை ஒன்றுமில்லாமல், உள்ளே நுழைந்தவுடன் அங்கிருக்கும் நிலைமையை பார்த்து துணுக்கென்று கண்களில் கண்ணீர் விடும் கேரக்டர்கள். இவர்கள் ஒரு நிமிடத்துக்கு மேல் அங்கிருக்க மாட்டார்கள் எஸ்கேப்பாகிவிடுவார்கள்.

நெருங்கிய் உறவுகள்,மகள், மகன், மனைவி, போன்றவர்கள் ரொம்பவும் ஆற்றாமையில் ‘ எழுந்திருங்க.. எழுந்திருங்க.. நான் உங்க் .. வந்திருக்கேன்.. எழுந்து பாருங்க..’ என்று அஞ்சலி பாப்பா ரேஞ்சுக்கு, அழுபவர்களூம் இருக்கிறார்கள். இவர்களை பார்த்து, இன்னும் சில நெருங்கியவர்கள், வெட்கத்தை விட்டு அம்மாதிரி கத்தி அழ தெரியாமல், பக்கத்தில் நின்றபடி சத்தமில்லாமல் முணுமுணுப்பவர்களும் உண்டு.

சில வயதான பாட்டிகள் எல்லோரும் பார்க்க வேண்டுமென்பதற்காகவே ஊரே ரெண்டு படும்படி அழுவார்கள். அதிலும் முக்கியமாய் நெருக்கமானவர்கள் வெளியே இருந்தால் உள்ளே அழைத்து வந்து ‘வாடா.. நான் அழப்போறேன் என்று சொல்லிவிட்டு அழுவார்கள்.
சிலர் ஒரு பாட்டம் அழுதுவிட்டு, வெளியே போய் நெடுநாள் கழித்து பார்த்த உறவினர்களிடம் பேசிவிட்டு, ஒரு வாய் காபியை உள்ளுக்குள் இறக்கி,சரியான் இண்டர்வெலில் திரும்பவும் உள்ளே போய், அழுபவர்களும் உண்டு.

இம்மாதிரியான சமயங்களில் ஒரு சிலர் மட்டும் ரொம்பவும் தீவிரமாய் காப்பி கொடுப்பதிலும், அவனைபார்.. இவனை பார்.. வண்டி வந்திடுச்சா என்று குரல் மட்டும் எழுப்பி கொண்டு தன்னை முன்னிலை படுத்தி கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏவலில் காரியம் நடப்பதாய் எண்ணம். இல்லாவிட்டால் உள்ளே இருப்பவர் எப்படி இறந்தார் என்று உரத்த குரலில் நேரிலிருந்து பார்த்த தினத்தந்தி நிருபர் போல் விவரித்து கொண்டிருப்பார்.

ஒரு சிலர் பாடி வரும் வரை காத்திருக்க முடியாமல் எதிர்பக்கம், உள்ள டிபன் கடைகளில் டீ, காபி,தம் என்று ஒதுங்கியபடி நின்றிருப்பார்கள். வந்தவர்களில் பல பேர் சுடுகாடுவரை வருவதில்லை.

துக்கத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்.. இந்த மாதிரி சமயங்களில் அழுவதே இல்லை.

இறந்தவரின் உடலுக்கு கொள்ளி வைக்கபடும்போது அடிவயிற்றிலிருந்து துக்கம் பீறிட, இந்நாள் வரை அவருடனான சந்தோஷம், சண்டை, துக்கம், பொறாமை, எல்லாம் நிமிட நேரத்தில் மனதில் ஓட, உள்ளிருந்து ஒரு பெரிய அலறல் வெடிக்க.. அழுகை..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jan 16, 2009

படிக்காதவன் - திரைவிமர்சனம்.


கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை ஜிங்கு.. ஜிங்குன்னு ஆடிச்சாம். அது போலத்தான் வில்லுக்கு போய் நொந்து போய் படிக்காதவனுக்கு போனா அங்கெ அத விட கொடுமை.

எங்கேயிருந்துதான் யோசிக்கிறாங்களோ..? எதை நம்பி இந்த நடிகர்கள் எல்லாம் இது எல்லாம் ஒரு கதைன்னு கேட்டு ஓகே பண்ணி.. அதுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்யுறாங்களோ..?

படத்தோட கதை என்னன்னா..? மெத்த படிச்ச குடும்பத்தில படிப்பே வராதா கடைக்குட்டி தனுஷ். படித்த பெண்ணை காதலித்தால் தான் படிக்காததை சரி செய்துவிடலாம்னு நண்பர்கள் சொன்னதை கேட்டு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்ல தமன்னாவை லவ் பண்ணுறார் தனுஷ். எல்லாம் கூடி வரப்ப தீடீர்னு அவங்க அப்பா.. ஹெலிகாப்டர்ல வந்து கூட்டிட்டு போயிடுறாரு. அதுக்கு அப்புறம் தமன்னாவை தேடி ஆந்திராவுக்கு விவேக்கோட போறாரு. அங்கே போனா ஓயிட் டிரஸ், ரெட் துப்பட்டா போட்ட சுமன் கும்பலுக்கும், அன்யூனிபார்ம்ல இருக்கிற சாயாஜி ஷிண்டே குருப்பும் ரெண்டு கேங்கு லீடரும் ஒருத்தரை ஒருத்தர் ‘வேசையிண்டிரா..” என்று சொல்லிவிட்டு பின்னால் போய்விடுகிறார்கள். இருவர் கும்பலும் குருஷேத்திர போர் போல கத்தி, கபடா, துப்பாக்கி என்று அடித்து கொள்கிறார்கள். சரி ஹீரோயின் அப்பா ஒத்து கொண்டுவிட்டார் என்று பார்த்தால், கதையில் திருப்பமாம்.. தனுஷ் எப்போதோ திருநெல்வேலிக்கு போன போது ஒருவனை அடித்துவிட, அவன் இறந்தது தெரியாமல் தனுஷ் இருக்க, இப்போது இறந்து போனவனின் அண்ணன் பழி வாங்க அலைவது தெரிந்து, தமன்னாவின் அப்பா அவனை ஜெயிச்சு என் பொண்ணை கட்டிக்க.. என்றவுடன், பொல்லாதவன் போல் தனுஷ் நேரே போய் மன்னிப்பு கேட்க, அந்த முட்டாக்..கூ வில்லன் ஆளை வைத்து தனுஷை போடாமல் ஒத்தைக்கு ஒத்தை சண்டை போட்டு தோற்கிறார்.

படத்தில் ஒகே என்று சொல்லக்கூடியது தனுஷின் நடிப்பு மட்டும்தான். மனுசன் எக்ஸ்பிரஷனில் பின்னுகிறார். தமன்னா அழகாய் இருக்கிறார்.. ஆட்டம் ஆடுகிறார், போகிறார்.

விவேக் தனியே கண்ணாடியை பார்த்து அழும் காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார். மற்ற காட்சிகளில் வடிவேலுவை மிமிக்ரி செய்கிறார். பாடல்கள் பரவாயில்லை. திரும்பவும் தெலுங்கில் ஹிட்டான சில பாடல்களை தமிழிட்டுருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, எடிட்டிங்கில் ஏதும் குறையில்லை. படத்தின் கதையில் தான் குறை. டைரக்டரை பற்றி சொல்ல எதுவுமில்லை.

படிக்காதவன்.. சன் டிவி வழங்கிய குப்பைகளில் பெரிய குப்பை வேற ஒண்ணும் சொல்றதுகில்ல..


Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jan 15, 2009

காதல்னா சும்மா இல்ல.. திரைவிமர்சனம்

சக பதிவர்கள்.. வாசக நண்பர்கள் அனைவருக்கும் பொங்கள் நல்வாழ்த்துக்கள்


தெலுங்கில் “கம்யம்’ என்ற பெயரில் வெளிவந்து கமர்சியலாகவும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒரு சேர அள்ளிய படம். படத்தின் பெயரை வைத்து காதல் கதை என்று நினைக்கிறவர்களுக்கு, காதலை விட மேலான வாழ்கையை நோக்கி செல்லும் படம்.

தன் காதலியை தேடி அலையும் அபிராம் என்கிற ஒரு கோடீஸ்வர இளைஞன் வழியில் சந்திக்கும் நிகழ்வுகள் மூலம் வாழ்கையை புரிந்து கொள்கிறான். வழக்கமான காதல் கதையாய் இல்லாமல் காதல் மூலமாய் வாழ்கையின் தேடல்களை தர முயற்சித்திருப்பதால் வித்யாசமான படமாய் அமைகிறது.

மோட்டார் சைக்கிள் டைரிஸ் என்கிற படத்தின் தாக்கம் படத்தில் இருந்தாலும், இயல்பான திரைக்கதையால் நம்மை ஒன்ற வைத்துவிடுகிறார்கள்.

அபிராம் ஒரு மிகப் பெரிய கோடீஸ்வரன். ஜானகி என்கிற டாக்டர் பெண்ணை துரத்தி, துரத்தி காதலிக்கிறான். ஜானகி ஒரு சோஷியல் கான்ஷியஸ் இருக்கிற மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே வாழ்கிற பெண். அபிராமோ.. அவனுடய வாழ்கையில் மற்றவர்களுக்கான இடமே இல்லாதவன். இவர்கள் இருவருக்கும் காதல் வர இருக்கும் தருணத்தில் ஒரு விபத்தினால் அவர்கள் பிரிகிறார்கள். அதற்கு பிறகு ஜானகியை காணாமல் அவளை தேடி போகிறான். வழியில் பைக் திருடனான வெட்டி வேலுவை, ஒரு ரவுடி, ஒரு விபச்சாரி, நக்ஸைலைட்டாய் இருந்து பொது சேவை செய்யும் இளைஞன், நக்ஸலைட் கும்பல் என்று வாழ்கையின் பல யதார்த்தங்களை உணர்கிறான். ஜானகியை கண்டுபிடிக்கிறான். அவர்கள் சேர்ந்தார்களா.. இல்லையா.. என்பது தான் க்ளைமாக்ஸ்.


இதில் வெட்டி வேலுவாய் வரும் ரவிகிருஷ்ணாவுக்கு ஒரு நல்ல கேரக்டர். முடிந்த வரை இயல்பாய் நடிக்க முயற்சித்திருக்கிறார். என்ன அவருடய குரலும், பாடி லேங்குவேஜூம், தான் ஒத்து வரமாட்டேன்கிறது. புது முகம் ஷரவனாந்த நல்ல அறிமுகம், கமலினி முகர்ஜியை பற்றி சொல்ல பெரிசாய் ஒன்றுமில்லை என்றாலும், அவரின் முகம் தான படத்தின் டிரைவிங் போர்ஸாய் இருப்பது மிகப் பெரிய ப்ளஸ்.

மூன்று இசையமைப்பாளர்கள், என்னமோ செய்தாய் நீ என்கிற பாடல் ஏற்கனவே ஹிட்.. தெலுங்கில் வேறு படத்தில் இருந்து பாடல்களை மட்டும் ரிப்பீட்டிருக்கிறார்கள். தெலுங்கு படத்தில்லிருந்து கொஞ்ச்ம் கூட மாறறாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். தெலுங்கு படத்தில் மிகப் பெரிய பலம் வசனங்கள். அதை அப்படியே தமிழில் மொழிமாற்றம் செய்திருப்பதால் அவ்வளவு எபக்டிவாக இல்லை. உதாரணமாய்.. ‘அபி.. நி வாழ்கையை கார்ல உட்காந்துகிட்டு டிவி பாக்கிறப்புல பாக்கிற.. கொஞ்சம் கீழே இறங்கி கூட வ்ந்து பாரு வாழ்கைன்னா என்ன்னு புரியும்” என்பது போன்ற வசனங்கள் தவிர்ந்து பெரிதாய் தமிழில் பாதிக்கவில்லை.

இயக்குனர் தனியாய் எதையும் பெரிசாய் செய்யாததால் பெரிசாய் பாராட்ட முடியவில்லை. இருந்தாலும் தமிழுக்காக மாற்றுகிறேன் பேர்விழி என்று எதையும் சொதப்பாமல் இருந்ததுக்கே.. பெரிய கப் கொடுக்க வேண்டும்.

தெலுங்கில் படம் பார்த்தவர்கள், தயவு செய்து தமிழில் பார்க்கும்போது ரவிகிருஷ்ணாவையும், அல்லரி நரேஷையும் கம்பேர் செய்யாதீர்கள்.. நரேஷ் ”காலி சீனுவாக்” வாழ்ந்திருப்பார்.

ராஜ்டிவிக்கு என்ன முடை.. நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால் மட்டும் போதாது அதை சரியான முறையில் தர தயாரிப்பு மிக முக்கியம். பணம் செலவ்ழிக்க முடியாவிட்டால் அந்த படத்தை வாங்கி டப்பிங் செய்து வெளியிட்டிருக்கலாமே.. கமலினி, ஷரவானந்த, சம்பந்தபட்ட காட்சிகள் எல்லாமே, தெலுங்கு படத்தின் காட்சிகளை டப்பிங் செய்திருக்கிறார்கள். ஓரு பாடல் காட்சி, ஒரு சில இன்சர்ட் காட்சிகளுக்கு மட்டும் கமலினியிடம் டேட் வாங்கி இணைத்திருக்கிறார்கள். ஷரவானந்த, ரவிகிருஷ்ணா காட்சிகளை மட்டுமே தமிழில் எடுத்திருக்கிறார்கள். படத்தில் பல இடங்களில் லிப் சிங்க் மிக அபத்தம். பொம்மலாட்டம் படத்திலும் இதே பிரச்சனைதான். இவர்கள் தமிழில் எடுப்பதாய் சீன் போட்டு, ஒட்டி, வெட்டி படமெடுக்கிறார்கள்.. எடுக்கணும்னு முடிவு செஞ்சப்புறம் அதுல தடம் மாறக்கூடாது..

படத்தின் தலைப்பு டப்பிங் பட டைட்டில் போல் தொனிப்பது படத்தின் ஒப்பனிங்கை மிக பெரிய அளவில் பாதித்திருக்கிறது என்பதை நேற்று மொத்தம் 40 பேருடன் இரவு காட்சி பார்த்தபோது தெரிந்தது.

காதல்னா சும்மா இல்ல.. சும்மா இல்லதான் என்னங்கிற..?

டிஸ்கி

இந்த விமர்சனத்துக்கு நான் உபயோகபடுத்தியிருக்கும் படங்கள் எல்லாமே.. தெலுங்கு படத்தின் ஸ்டில்களைத்தான். ரவிகிருஷ்ணா, ஷரவானந்த சம்பந்தபட்ட ஸ்டில் மட்டுமே தமிழிலிருந்து எடுத்தது..



Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..