Thottal Thodarum

Apr 30, 2018

கொத்து பரோட்டா 2.0-55

கொத்து பரோட்டா 2.0-56
ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் குழம்பிப் போயிருக்கின்றன தீயில் மீண்டும் தமிழக அரசு எண்ணெய் ஊற்றியிருக்கிறது. தமிழக கேளிக்கை வரி இருக்கிறதா? இல்லையா? என்ற குழப்பத்துடனே 18 முதல் 28 சதவிகித ஜி.எஸ்.டியை திரையரங்குகள் வசூலித்துக் கொண்டிருந்தாலும், விநியோகஸ்தர்களுக்கு கடந்த சில மாதமாய் தியேட்டர் அதிபர்கள் வசூலை செட்டில் செய்வதில் பல குழப்பங்கள். காரணம் மேற்ச் சொன்ன கேளிக்கை வரி இருக்கிறதா? இல்லையா? என்கிற குழப்பம் காரணம். திடீரென ஆறு மாதத்திற்கு முன் தேதியிலிருந்து பணத்தை கட்டுங்கள் என்ற சட்டம் போட்டுவிட்டால் விநியோகஸ்தர்களிடமிருந்து பணத்தை எப்படி வாங்குவது என்ற பயத்தில் பல தியேட்டர்கள் வசூலான தொகையை கொடுக்காமலேயே இருக்கிறது. இந்த லட்சணத்தில் இப்போது தடாலென தமிழ் சினிமாவிற்கு பத்து சதவிகிதம் வரி மற்ற மொழி படங்களுக்கு 20 சதவிகிதம் வரி என்று அறிவிப்பு மேலும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. காரணம் முன்பு கேளிக்கை வரி அரசின் நிர்ணையிக்கப்பட்ட 120 ரூபாய்க்குள் இருந்தது. அதாவது 120 ரூபாயில் முப்பது சதவிகித வரியும் சேர்ந்தது. ஆனால் ஜி.எஸ்.டிக்கு பிறகு 120 ரூபாய் அப்படியே திரையரங்குக்கும் விநியோகஸ்தர்களுக்கும் போய் சேர்ந்து கொண்டிருந்த நேரத்தில், இப்போது திடீரென பத்து சதவிகிதம் வரி கட்டு என்றால் மீண்டும் அது 120 ரூபாய்க்குளிலிருந்து கட்ட வேண்டுமா? அல்லது 120 ரூபாய்க்கு 10 சதவிகிதம் வரி போட்டு, பின்பு அதன் மேல் ஜி.எஸ்.டி போட்டு வரி வாங்க வேண்டுமா? என்பதுதான். ஏற்கனவே காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் மக்களிடம் 156.40 பைசாவுக்கு சில்லரை தருவதில்லை. வழக்கத்திலேயே இல்லாத 50 பைசா, 10 பைசா மட்டுமில்லாமல் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் சில்லரையைக் கூட தராமல்மொத்தமாய் 160 வாங்கிப் போட்டுக் கொள்ளும் திரையரங்குகள் ஏராளம். இப்படியிருக்க, இப்போது புது வரி. இது என்னன்ன குழப்பங்களை கொண்டு வரப் போகிறதோ என்று புரியவில்லை.

பைரஸியை ஒழிப்பேன் என்று சொல்லுங்கள். தமிழ் நாடு முழுவதும் ஆன்லைனில் டிக்கெட் கொண்டு வரும் முறையை அமல்படுத்த சொல்லுங்கள் நாங்கள் வரி கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று விஷால் அறிவித்துள்ளார். இது மல்ட்டிப்ளெக்ஸ் தவிர மற்ற ஊர் தியேட்டர்காரர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும் விஷயம் தான். ஆனால் இதை செய்தால்தான் அட்லீஸ்ட் நேர்மையாய் வரியை பிடித்தம் செய்து, விநியோகஸ்தர்கள் பங்கை கணக்கில் கொண்டு வர முடியும். பைரஸியை ஒழிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை என்றாலும் அரசின் துணையிருந்தால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். அதற்கு அரசை ஒத்துழைக்க வைக்க, விஷாலின் கோரிக்கை கொஞ்சம் நியாயமாய்த்தான் படுகிறது. எதையுமே எங்களுக்கு செய்யாமல் எதுக்கு வரி மட்டும் கேட்கிறாய்? என்கிறார். ஆனால் இப்படி ஒரேயடியாய் எல்லாவற்றிலும் விலையேற்றம் கொண்டு வந்தால் நிச்சயம் மக்கள் தியேட்டர் பக்கம் ஒதுங்குவது ரொம்பவும் கஷ்டமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Hindi Medium
ஒரு தூக்கம் வராத நடுராத்திரி வேளையில் பார்க்க ஆரம்பித்த படம். எப்படி இதை திரையில் பார்க்காமல் போனோம் என்று வருத்தப்பட வைத்த அட்டகாசமான படம். ராஜு, மித்தா தம்பதியருக்கு ஒரு குட்டி தேவதை பெண். மித்தாவுக்கு தன் பெண்ணை ஆங்கில மீடியம் ஸ்கூலில் தான் படிக்க வைக்க வேண்டுமென்று ஆசை. அதுவும் டெல்லியில் உள்ள பெரும் பணக்கார பள்ளியில் மட்டுமே என்பது முக்கியம். ராஜ் டெல்லியில் சாந்தினி சவுக் பஜாரில் பிரபல டிசைனர்களின் டிசைன்களை ஒரிஜினல் காப்பிஸ் என்று செம்ம வியாபாரம் செய்து கொண்டிருக்கிறவன். டிபிக்கல் ஹிந்திவாலா. மனைவியின் இம்சை தாங்காமல் அத்துனை பள்ளிகளின் அட்மீஷன் பாரத்தை விடிய விடிய நின்று வாங்குகிறான். ஆனால் அங்கேயெல்லாம் சீட் கிடைக்க, பெற்றோர்களுக்கு க்ளாஸ் எடுக்க, மித்தாவின் கல்லூரி தோழன் ஒருவன் சீட் கிடைக்க ஒரு கன்சல்டண்டை அறிமுகப்படுத்துகிறான். எல்.கே.ஜி. சீட்டுக்கு. அந்த கன்சல்டெண்ட் பெண் படுத்தும் பாடுகள், குழந்தைக்கு ஆங்கில ஹைஃபை சொசைட்டி பழக்கம் வேண்டுமென்று இம்சித்து, புராதான குடும்ப வீட்டை விட்டு, பக்கத்தில் இருக்கும் ஹைஃபை சொசைட்டியில் குடியேறுவது.சாதாரணம் உடைகளை விட்டு, வெகு பணக்கார உடைகளுக்கு மாறுவது என எல்லா வேலைகள் செய்தும், நான்கு ஸ்கூல்களில் ராஜ் – மித்தா தம்பதியரின் பெண்ணுக்கு சீட் கிடைக்காமல் போகிறது.

ஆர்.டி.ஈ எனும் படிப்பதற்கான உரிமை கோரலின் படி ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் சீட்டை வாங்க முடியும் என்று தெரிய வர, ராஜ் பணம் கொடுத்து அந்த கேட்டகிரியில் அப்ளை செய்கிறான். அப்போது பார்த்து பள்ளியின் மேல் ஏழைகளுக்கான சீட்டை பணக்காரர்களுக்குகொடுப்பதாய் பள்ளியில் வேலை பார்க்கும் ஒருவரே கம்ப்ளெயிண்ட் கொடுத்துவிட, நேரில் சென்று விசாரித்து பார்த்துதான் சீட் கொடுக்கப்படும் என்று சொல்லிவிடுகிறார்கள்.  வேறு வழியில்லாமல் ராஜ் – மித்தா தம்பதியினர் உடனடியாய் ஏழை வேஷம் போட வேண்டிய கட்டாயம். ஒரு லோயர் மிடில் க்ளாஸ் இடத்தில் வாடகைக்கு போய் இருக்க பழகுகிறார்கள். அங்கு பல விஷயங்கள் அவர்களுக்கு வாழ்க்கையை புரிய வைக்கிறது. அவர்களது பெண்ணிற்கு சீட்டும் கிடைக்கிறது. மீண்டும் தங்கள் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பினாலும், அநியாயமாய் ஒரு ஏழைக்கு கிடைக்க வேண்டிய சீட்டை பறித்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சியில் ஒரு கவர்மெண்ட் பள்ளியை தத்தெடுத்து அதை உயர்த்துகிறார்கள். ஆனால் பிரச்சனை ஏழையாய் வாழ்ந்த நாட்களில் நெருக்கமான நண்பனாய் வலம் வந்த ஷியாம் சுந்தரின் வடிவில் வருகிறது. பின்பு என்ன ஆனது என்பதை அமேசான் ப்ரைம் வீடியோவில் கண்டு கொள்க.

மிக சாதாரண கதை. படம் நெடுக பிரசாரமில்லா சர்காசம். காமெடி. அற்புதமான வசனங்கள். ராஜ் என் மகளுடய சீட்டை உன் மகனுக்கு வாங்கிக் கொடுக்கிறேன் என்று ஷியாமிடம் சொல்லும் போது, ஷியாம் கோபப்பட்டு, நீ கொடுப்பது பிச்சை.  ஆனால் என்னிடமிருந்த் பறித்தது எனக்கான உரிமையை. உரிமையை நான் ஏன் பிச்சையெடுத்து பெற வேண்டும்? என்று கேட்குமிடம் ஒர் உதாரணம். ராஜாக நடித்த இர்பானின் நடிப்பு மிக இயல்பு. எழுதி இயக்கிய சாகேத் சவுத்ரிக்கு வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Newton
அரசியல் படம் எடுக்க வேண்டுமென்றால் போலீஸ், எம்.எல்.ஏ, எம்.பி. அடியாள். பெய்ட் கில்லர் எல்லாம் தேவையில்லை. சாதாரண அரசு அதிகாரியின் வாழ்க்கையை கண் முன்னே காட்டினால் போதும். அதிலும் உலகிலேயே பெரிய ஜனநாயக கடமையான தேர்தலை சத்தீஷ்கரில், நக்சல்பாரிகளின் கண்ட்ரோலில் உள்ள ஒர் தொகுதியில் வெற்றிகரமாக நடந்துவதற்கு போகும் நியூடன் குமார் எனும் அரசு அதிகாரியின் கதை. நியூடன் குமார் நேர்மையான அரசு அதிகாரி. திருமணமாகாதவன். யாருமே தேர்தல் அதிகாரியாய் போகத் தயங்கும் இடத்திற்கு போகிறேன் என்கிறான். அங்கே போகும் போதுதான் தெரிகிறது  அங்கு இதுவரை நிஜத்தேர்தலே நடந்ததில்லை என்று. அதையும் மீறி போலிங் பூத்துக்கு போயே ஆகவேண்டும் என்று கிளம்புகிறான் நியூட்டன். உடன் ஒர் அதிகாரியும். ஆதிவாசிகளிடையே படித்து அரசு அதிகாரியாய் பணிபுரியும் மைக்கோ எனும் பெண்ணுடன். போலிங் பூத்துக்கு யாருமே வரவில்லை. மீறி அழைத்தால் யாருமே வருவதற்கு தயாராக இல்லை. ஆட்களே வராத காரணத்தால் தன்னுடன் வந்திருக்கும் போலீஸ்காரர்களை கொண்டு போலி ஓட்டு போடலாம் என்கிறார் போலீஸ் தலைவர். அதற்கு ஒத்துக் கொள்ளாத நியூட்டன் ஆட்களை தேடிப் போய் அழையுங்கள் என்கிறான். அந்நேரம் பார்த்து வெளிநாட்டிலிருந்து மீடியா ஆதி வாசிகளின் தேர்தல் பூத்தை படம்பிடிக்க வருவதாய் போலீஸுக்கு தகவல் வர, போலீஸார் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி அனைவரையும் வரவழைக்கின்றனர். இது எதையும் அறியாத நியூட்டன் வந்தவர்களை ஓட்டுப் போட அனுமதிக்க, எலக்ட்ரானிக் ஓட்டிங் மிஷினில் ஓட்டுப் போடுவதைப் பற்றி எதையும் தெரியாமல் முதல் ஓட்டரே விழிக்கிறார்.

வேறு வழியில்லாமல் அனைவருக்கு மீண்டும் அங்கேயே க்ளாஸ் எடுக்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு புரியவில்லை. போலீஸுக்கோ மீடியா உயர் அதிகாரியுடன் வரும் போது ஓட்டு போடப்பட வேண்டிய கட்டாயம். அது ஒரு விளையாட்டு உபகரணம் என்றும் விளக்கிற்கு பக்கத்தில் இருக்கும் படங்கள் உங்களுக்கு பரிசாய் வருமென்று சொல்கிறார். நியூட்டன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் வேறு வழியில்லாமல் ஓட்டு பதிவு நடைபெறுகிறது. மீடியா போன பின்பு திடீரென மவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த, அனைவரும் ஓட்டுப் பதிவு முடிவதற்கு முன்பே அங்கிருந்து கிளம்புகின்றனர். எப்படி வராத ஓட்டர்கள் பாரின் மீடியாவுக்கு முன் வந்தார்கள்? திடீரென எங்கிருந்து மாவோயிஸ்ட் தாக்குதல் என்று யோசித்த நியூட்டனுக்கு ஒரு விஷயம் ஸ்ட்ரைக் ஆகிறது. அப்போது பார்த்து நான்கு ஓட்டர்கள் வழியில் வர அங்கேயே அவர்களது ஓட்டை போட வைக்க விரும்புகிறான். போலீஸ் அவனை தடுக்கிறது.

மக்களுக்கான அரசாங்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்களைத் தீட்டும் அரசாங்கம் எப்படி இயங்குகிறது என்பதை அதே அரசாங்கத்துக்காக பணி செய்யும் ஒர் ஊழியனின் பார்வையில் சாட்டையால் அடித்திருக்கிறார் இயக்குனர் அமித் மசூர்கர். நியூட்டனாய் நடித்திருக்கும் ராஜ்குமார் ராவின் நடிப்ப ஆப்ஃட். க்ளைமேக்ஸை நோக்கிப் போகும் திரைக்கதையில் பரபரப்பாக நடக்கும் காட்சிகள் கொஞ்சம் நம்பக்தன்மையற்றதாய் அமைந்துவிட்டது நம்முடை ஆஸ்கர் கனவை தகர்க்க கூடியதாக அமைந்துவிட்டது வருத்தமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Apr 26, 2018

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 4

போன கட்டுரையில் நான் சந்தித்த தயாரிப்பாளரை கடனிலிருந்து காப்பாற்றியதைப் பற்றி எழுதியிருந்தேன். ஐ நல்லா கதை வுடுறே என்று ஒரு சாராரும், இன்னொரு சாரார்.. நீ தெய்வ லெவல் என்று பாராட்டியும் இருந்தார்கள். பாராட்டு எனக்கு தகுதியில்லாத ஒன்றுதான். ஏனென்றால் அந்த தயாரிப்பாளரை நான் வேண்டாம் என்று சொன்னதும், அவரை காப்பாற்ற மட்டுமல்ல. என்னை காப்பாற்றிக் கொள்ளவும் கூட. தவறான ப்ராஜெக்டில் மாட்டிக் கொண்டு வெளியே வரவும் முடியாமல், இருக்கவும் முடியாமல் போராடுவதற்கு பதில் எனக்குதேவையான பட்ஜெட்டில் படமெடுக்க ஆள் தேடுவதுதான் புத்திசாலித்தனம். சுயநலமும் கூட.. வட்டியிலிருந்து காப்பாற்றியது எல்லாம் சுயநலத்தில் ஒர் பொதுநலம் தான்.

ஆனால் பெரும்பாலான புது தயாரிப்பாளர்கள். இயக்குனர்கள் படம் கிடைத்தால் போதுமென்ற எண்ணத்தில் எல்லாவற்றிக்கும் தலையாட்டி விட்டு பின்பு அவஸ்தைபடுவது மிக சாதாரணமாய் நடக்கும் விஷயம்.  சமீபத்தில் ஒரு பட விழாவிற்கு போயிருந்தேன். படத்தின் தயாரிப்பாளர் சுய தொழில் செய்பவர். அவரது நண்பர் பல வருடங்களாய் பட வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருப்பவர். நண்பனின் போராட்டத்தைப் பார்த்து சரி நான் உனக்காக படம் தயாரிக்கிறேன். என்று களமிறங்கியிருக்கிறார். நண்பன் சந்தோஷத்தில் திக்குமுக்காடி “மச்சான் நாம சேர்ந்து கலக்குறோம்” என்று கட்டியணைத்து கொண்டாட்டமாய் பூஜை போட்டார்கள். தயாரிப்பு நண்பர் பெரும் பணக்காரர் எல்லாம் கிடையாது. நல்ல வியாபாரம். ஓரளவுக்கு சொத்து, கையில் காசாய் பெரிய தொகையெல்லாம் கிடையாது. ஆனால் அவரால் குறைந்தது ரெண்டு கோடி புரட்ட கூடியவர் தான்.
படம் ஆரம்பித்தாகிவிட்டது. இயக்குன நண்பருக்கு அடிப்படை வேலைகளில் ஏகப்பட்ட குழப்பம். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஏகப்பட்ட தடாலடி குழப்பங்கள். ஒளிப்பதிவாளரை வைத்து கொண்டு ஏதோ சமாளித்துக் கொண்டிருக்க, அதை உணர்ந்த ஒளிப்பதிவாளர், மெல்ல டாமினேட் செய்ய ஆரம்பித்து, கடைசியில் ஒளிப்பதிவாளர் இயக்கும் படமாய் மாறியது. இதற்குள் ஏகப்பட்ட குழப்பங்கள். அதனால் படப்பிடிப்பு நிறுத்தம் என பல பிரச்சனைகளை படத்திற்கு வந்து, பட்ஜெட் எகிறிக் கொண்டேயிருந்தது.

இதன் நடுவில் ஏன் பட்ஜெட் ஏகிறியது என்று கேட்டதால் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் மனவருத்தம். பணம் இருக்கு என்பதற்காக கலையை பற்றி ஒன்றும் தெரியாத நீ எப்படி என்னை கேள்வி கேட்கலாமென சண்டை?. நான் பணம் போடலைன்னா நீ எப்படி உன் கலையை காண்பிக்க முடியுமென்று நியாயமான கேள்வியை அவர் முன்வைக்க, சண்டை தீர்ந்த பாடில்லை. என்னைக்கு இருந்தாலும் பணத்தை போட்டாச்சு இனி பாதில விட்டுட்டு போகுற அளவுக்கு காசில்லாதவர் என்பதை நன்கு தெரிந்தவர் இயக்குனர். நாட்கள் கடந்தது. தயாரிப்பாளருக்கு வேறு வழியில்லை. கொஞ்சம் இறங்கி வந்தார். கடன் வாங்கினார். இருக்கும் வீட்டை அடகு வைத்தார். இரண்டு கோடிக்கு முடித்துக் கொடுப்ப்தாய் சொன்ன படத்தில் பட்ஜெட் படம் முழுவதும் காப்பி எடுப்பதற்கு முன்பே சுமார் மூணே முக்கால் கோடிக்கு ஆகியிருக்கிறது. கையிலிருந்த இரண்டுகோடியை தவிர மீதியெல்லாம் தயாரிப்பாளரின் கடன்.  அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டில்தான் அந்த தயாரிப்பாளரை சந்தித்தேன். இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆளுக்கொரு திசையில் பேட்டியெல்லாம் கொடுத்துவிட்டு, தனித்தனியே போனார்கள்.

ஆடியோ விழாவிற்கு மட்டுமே சுமார் மூன்று லட்சம் செலவு. விளம்பரம் எல்லாம் சேர்த்து. இன்னமும் டி.ஐ மற்றும் இன்ன பிறவுக்கு செட்டில் செய்ய வேண்டியிருக்கிற நிலையில், எனக்கு மட்டுமே பிரத்யோகமாய் படத்தை யாருக்கும் தெரியாமல் எடிட் சூட்டில் காட்டினார். வியாபார சாத்தியங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை பார்த்து சொல்லும் படி..

படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதியவர்கள். டெக்னீஷியன்கள் புதியவர்கள். படத்திற்கு செலவு செய்த தொகைக்கும் படத்தில் தெரியும் வறுமையான விஷுவல்களுக்கும் சம்பந்தமேயில்லை. அவ்வளவு வீண் செலவு. படம் நெடுக தொடர்பாய் காட்சிகள் இல்லை. ஒளிப்பதிவு மட்டுமே ஓரளவுக்கு சுமார். பாடல்கள் எல்லாம் திராபை. படம் முடிந்து வெளியே வந்தவுடன் தயாரிப்பாளர் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். என்ன சொல்லப் போகிறேன் என்று. நான் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாய் இருந்தேன்.

“சாட்டிலைட், ஆடியோ, டிஜிட்டல் ரைட்ஸ் ஏதாச்சும்  வித்து அட்வான்ஸ் வாங்க முடியுமா?”

“சான்சே இல்லைங்க. இன்னைக்கு எல்லாமே படம் வெளியான பின் மட்டுமே இந்த வியாபாரம் எல்லாம் நடக்குது. ஆடியோ தவிர. ஆடியோவுக்கு வியாபாரமெல்லாம் இல்லை. சும்மா கண்டெண்ட அவங்க கிட்ட கொடுத்துட்டு, ரெவின்யூ ஷேர் தான்.” என்றேன்.

“அய்யோ.. ஆடியோ ரைட்ஸ் மட்டுமே குறைஞ்ச பட்சம் 30 லட்சத்துக்கு போகும்னு சொன்னாங்களே… மீயூசிக்கு மட்டுமே இது வரைக்கும் நாப்பது லட்சம் செலவு செய்திருக்கிறேன்.” என்றார் அப்பாவியாய்.

“சார் சொல்றேனு தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த படத்தை பொறுத்த வரை. உங்களை நல்லா ஏமாத்தியிருக்காங்க. இதுலேர்ந்து தப்பிக்கணும்னா.. ஒண்ணு நீங்க எடுத்த வரைக்கும் போதும்னு ஏதோ ஒரு விளம்பரம் பண்ணி, கொஞ்சமா செலவு செய்து ஒரு நாளு தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிட்டு, ஹிந்தி, டப்பிங், ஆடியோ ஷேர்ல,னு வித்துட்டு கடனை அடைக்கிற வழியப் பார்த்துட்டு போகணும். அதுக்கே இன்னமும் ஒரு ஐம்பது லட்சம் வேணும். இல்லை. போனது எல்லாம் போகட்டும்னு அப்படியே ட்ராப் பண்ணிட்டு, பட்ட கடனை அடைக்க ஊருக்கு போயிருங்க. வியாபாரத்துல கவனம் செலுத்துங்க. இதையெல்லாம் மீறி  படம் காவியம். தமிழ் சினிமாவையே புரட்டி போட்டிரும்னு எல்லாம் சொன்னாங்கன்னா உங்க இஷ்டம்.” என்றேன்.


அவர் முகம் முழுவதும் யோசனையாய் இருந்தது.

Apr 22, 2018

நிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..?’


“என்னை பிடிக்கலையா?.. நான் அழகாயில்லையா..?” என்று மோடாவில் என்னை சாய்த்து, தன் ’மெத்’ மார்பினால் அழுத்தி, என்னை ஆக்கிரமித்து, முகத்தை முட்டுகிற மூச்சு காற்றில் அவளின் மிண்ட் வாசனையுடன் கேட்பவளை பார்த்து என்ன பதில் சொல்வது?

“இ...இ..இல்ல அப்படி ஓண்ணுமில்...” என்று முடிப்பதற்குள்,

“இல்லையில்லை..இல்லையில்ல..”என்றபடி அழுத்தமான முத்தங்களை உதட்டிலும், முகத்திலும் மாறி, மாறி கொடுத்தாள். ஓரு விதமான வெறியுடன் என்னை இன்னும் இறுக்கி அணைத்தாள், விலகுவதா? அணைப்பதா என்ற குழப்பத்திலிருந்து விடுபடுவதற்குள் அவளின் அணைப்பும், நெருக்கமும் என்னை மேலும் ஸ்டுமுலேட் செய்ய, அவளை அப்படியே திருப்பி அணைத்து, அவளின் மார்புகளின் இடையே முகத்தை வைத்து முத்த்மிட்டு, அவளை அலேக்காய் அவளுடய பெட்ரூமுக்குள் தூக்கி சென்றேன். அவள் கண்களில் ஓரு பளபளப்பு இருந்தது.

ஐந்து வயதில் ஓரு பையன் இருக்கிறான் என்றால் நம்புகிற மாதிரியா இருக்கிறாள் இவள்?. நல்ல உருவி விட்டாற்ப் போல் உடல்.. நல்ல உயரம்.. நிற்கும்போது அவளை பார்ததைவிட, படுத்திருக்கும் போது அவள்து நீளமான கால்களும், தொடைகளும், என்னுள் அனலை மேலும் தகிக்க வைக்க, அவள் கலைந்திருந்த தன்னுடய மேலாடையை விலக்கி, சினிமாவில் வருவது போல் கைகளை விரித்து, கிறக்கமாய் பார்த்து, ஹஸ்கியாய் ”வா” என்றாள், சென்றேன்..

அவள் பெயர்.. அது எதற்கு உங்களுக்கு. அவள் என் ஹவுஸ் ஓனரின் மனைவி. நான் அவர்கள் வீட்டின் மாடியில் குடியிருக்கிறேன். ஓரு முறை அவளை பார்த்தால் கண்டிப்பாய் திரும்பி பார்க்காமல் போக மாட்டீர்கள். அசத்துகிற அழகில்லையென்றாலும் கவனிக்க தக்க அழகு, மிக எளிமையான உடைகளிலேயே ஆடம்பரமாய் தெரிவாள். சிவப்பும் இல்லாமல், கருப்புமில்லாமல் ஓரு மாநிறம். அவளிடமும், அவளின் செயகளிலிலும் ஓரு இண்டுசுவாலிடியும், சிம்பிளான அழகும் இருக்கும். யாரை பார்த்தாலும் சிரித்தபடி கண்களை பார்த்து பேசும் அவளுடய பேச்சு என்று அவளை பார்த்தால் எல்லாருக்கும் பிடித்துவிடும்.

அவள் பாடி நீங்கள் கேட்க வேண்டும், அதிலிருந்து தான் ஆரம்பித்தது. ஓரு முறை நான் மாடியிலிருந்து கீழிறங்கும் போது அவள் ”வசீகரா” பாடி கொண்டிருப்பதை நின்று கேட்டுவிட்டு, மெதுவாய் வீட்டு காலிங்பெல்லை அழுத்தி, அவள் மாவரைக்கும் கையோடு யாரோ என்று வர, என்ன பார்த்ததும்

“என்ன ரமேஷ்” என்றாள் கண்கள் விரித்து,

“ஒண்ணுமில்லை பாட்டு சூப்பர். அதிலேயும் ”எங்கேயும் போகாமல் என் வீட்டிலேயே நீ வேண்டும்”ன்னு நீங்க பாடினீங்களே.. என்னா பீல்.. கேட்டா.. எவனுக்கும் வீட்டை விட்டு போக மனசு வராது. சூப்பர்” என்று பாராட்ட, அவள் முகத்தில் சட்டென்று ஓரு அலையாய் வெட்கம் படர்ந்ததை தவிர்க்க நினைத்தது போல தன் மாவு கையுடன் முகத்தில் கை கொண்டு போக, முகத்தில் ஆங்காங்கே மாவாகி, “சே.. சாரி.. தேங்கஸ்.. தேங்க் யூ வெரி மச்.. “ என்று சொல்லியவாறு முகம் துடைக்க போனது, இன்னமும் என் கண்களிலே இருக்கிறது.

அன்றைக்கு மதியமே.. என்னுடய் செல்லுக்கு போன் செய்தாள்..

”ஹலோ.. இஸ் திஸ் இஸ் ரமேஷ்?’

“எஸ். சொல்லுங்க மேடம்.. என்ன விஷயம் திடீருன்னு போன்ல.. எனிதிங் சீரியஸ்?”

“சே...ச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்லை... அது சரி எப்படி நான் தான்னு கரெக்டா கண்டுபிடிச்சீங்க..?”

“என்ன மேடம் .. உங்க குரல் எனக்கு தெரியாதா..? என்ன விஷயம் சொல்லுங்க? ”

“ஒண்ணுமில்ல.. ஜஸ்ட் லைக் தட்.. காலைல நீ.. சாரி.. நீன்னு சொல்லாமில்ல...? “

என்னுடய அனுமதிக்காக காத்திராமல்..

“ஓகே.. அதான் நீ காலையில என்ன ப்ரைஸ் பண்ணத்துக்கு, நின்னு ஒரு தேங்கஸ் கூட சொல்லல.. அதுக்குள்ள முகத்துல மாவு.., நீயும் கிளம்பிட்ட.. அதான்..?

“அதுக்காகவா போன் பண்ணீங்க.. எதுக்கு மே..”

“நோ மோர் மேடம்.. நிஜமாவேவா நான் நல்லா பாடினேன்.? சும்மா சொல்லு..”

” என்ன.. மேடம்.”

“ஏய்.. கட்தட்..மேடம்.. எனக்கு பேரில்லையா..? சும்மா. மேடம்.. ஆண்ட்டின்னுட்டு, டு யூ திங்க் ஐயம் ஓல்ட் இனப் டு பி கால்ட் லைக் தட்..?’ சொல்லு நிஜமாவே நான் நல்லாவா பாடினேன்?.”

நிஜமாகவே அவள் நன்றாகத்தான் பாடினாள்..

“டிவைன்.. கண்ண மூடிகிட்டு கேட்டா பாம்பே ஜெயஸ்ரீயே பாடினா மாதிரி இருக்கு..”

அதற்கு அப்புறம் பேசியது, எல்லாமே அவள் பாட்டு கற்றது, காலேஜ், கல்சுரஸில் பர்ஸ்ட் பிரைஸ், என்று அவ்ளை பற்றியே இருக்க.. முடிக்கும் போது “மீட் யூ இன் த ஈவினிங்” என்று போனை வைத்தாள்

கிட்டத்தட்ட 45 நிமிடம் பேசியிருக்கிறாள்.. எனக்கு தெரிந்து அவள் இவ்வளவு உற்சாகமாய் பேசி கேட்டதேயில்லை.

அதன் பிறகு அன்றைக்கு சாயந்தரமே.. என் வரவுக்காக, காந்திருந்தவள் போல் வாசலிலேயே நின்றிருந்தாள்.. எப்போதும் வழக்கமாய் நான் லெட்டர் பாக்ஸிலேயே எடுத்துக் கொள்ளும் என் கடிதங்களை அவள் கையிலே வைத்தபடி,

“ ஏய்.. ரமேஷ்.. இந்தா உன்னுடய் லெட்டர்ஸ்.. இப்போதான் வந்த்து.. வர டயமாச்சேன்னு கையிலேயே.. வச்சிருந்தேன்.’ கொடுத்தவள் “ வாயேன் உள்ள ஓரு கப் காபி சாப்ட்டு போலாம்..?”

இதற்கு அப்புறம், பல காப்பிகள், அவளுடனும், அவள் கணவனுடனும், அவளது வீட்டிலும், தனியாய் ரெஸ்டாரண்டுகளிலும், அவளுடய ஹஸ்பெண்ட் வேலை விஷயாமாய் திடீரென்று வெளியூர் போக வேண்டியிருந்ததால்.. அவருக்கும் சேர்த்து ரிசர்வ் செய்த படத்துக்கு அவளூடன் சென்றது. கணவனின் அனுமதியுடன்.

எனக்கும் அவளுக்கும் பிடித்த சுஜாதா, அயண் ராண்ட், மணிரத்னம், டாம்ஹாங்ஸ், கார்னாடக இசை.. உன்னி கிருஷ்ணன் என்று பல விஷயங்கள், எங்களுக்கு தினமும் பேச நிறைய இருந்த்து.. தினமும் ஓரு மணி நேரமாவது பேசவில்லையென்றால் எதையோ இழந்த மாதிரி இருப்பதாகவே சொன்னாள்.. தான் திரும்பவும் திருமணத்துக்கு முன்னே இருந்த் மாதிரியான ஓரு உணர்வு தனக்குள் வந்துவிட்டதாய் அடிக்கடி சொன்னாள்.. சில சமங்களின் ஓரு பதினெட்டு வயது பெண்ணைப் போல் என்னை பார்த்தும் ரொம்பவும் எக்ஸைட் ஆனாள்.. அப்படி ஆவது என்க்கு தெரிய வேண்டுமென்று மறைக்காமல் இருந்தது எனக்கு புரிந்த்து. இருவருக்கும் இடையில் அவ்வப்போது தொடுதல்களும், தலை தொட்டு பேசுவதும் இயல்பாய் நடப்பது போல பார்பவர்களூக்கு தெரியும். ஆனால் எனக்கும், அவளுக்கும் இடையே ஓரு நெருக்கம் உருவாவதை எனக்குள் உணர முடிந்தது..

அதை எப்படி தவிர்பது என்று யோசிக்கவே முடியாமல் அவளின் பேச்சு என்னை ராத்திரி அடித்த விஸ்கி போதையாய் ஆக்கிரமிக்க, மீண்டும் ’சே’ எதற்கு இந்த போதை என்று படுக்கும் போது நினைத்து காலையில் எழுந்தால் அவளின் ‘ஹாங் ஓவர்”. அவளால் ஏற்பட்ட ஹாங் ஒவரை சரி செய்ய அவளே வேண்டும்.

எவ்வள்வோ முயற்சிகள்.. அவளின் தனிமையை என்னுடன் கழிக்க, தெரிந்தே.. பல முறை தவிர்த்திருக்கிறேன். ஆனால் இன்று இவ்வளவு கிட்டத்தில், அந்த அனலான மூச்சில்,பஞ்சான மார்புகளின் அழுத்தத்தில், வியர்வையும் அவளும் சேர்ந்த வாசனையில், என்னால் முடியவில்லை.


‘எதுக்குகாக.. இத்தனை நாள் ரமேஷ்? என்னை பிடிக்கலையா.? நான் அழகாய் இல்லையா..?”

நான் அவளின் கன்னத்தை என் விரல்களால் வருடி,

‘உன்னை யாராவது பிடிக்கலைன்னு சொன்னா அவன் முட்டாள்.. இத தள்ளிப்போட எவ்வளவுநாள் ட்ரை பண்ணியிருக்கேன் தெரியுமா..?”

அவள் என்னை பார்த்து, ஓரு ஆச்சர்யத்துடன் “ ஸ்டுப்பிட்.. அப்போ தெரிஞ்சே.. என்னை அவாய்ட் பண்ணியா..? ஏன்..?” என்று என்னுள் மேலும் பரவ,

‘கேக்கிறேன்னு தப்பா நினைக்காதே.. அப்படி என்ன என்கிட்டே ஸ்பெஷல்..? உங்க ரெண்டு பேரையும் பார்த்தால் ‘மேட் பார் ஈச் அதர்’ன்னு தோணும். உனக்கும் உன் ஹஸ்பெண்டுக்கு எதாவத் பிரச்சனையா..?”

இந்த கேள்வியை கேட்டவுடன், சட்டென்று கோபத்துடன் எழுந்து உட்கார்ந்து..

”நீ ஏன் இந்த கேள்வியை என்கிட்ட படுக்கிறதுக்கு முன்னாடியே கேட்கல..?”

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

”செக்ஸுக்காகதான் உன்னோட படுத்தேன்னு சொன்னா நி நம்புவியா..? நம்ப மாட்டல்ல..?”

“உண்மையை சொல்லணும்னா.. வெறுமை ரமேஷ்.. Vaccum between us.. யெஸ்.. நானும் அவரும் காதலித்துதான் கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். என்னோட பாட்டுன்னா அவருக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா..? என் பாட்டை கேட்டே என் பின்னே சுற்றி வந்து எங்க கல்யாணம் நடந்தது.. நான் பார்த்து, பார்த்து செய்யும், எல்லாத்தையும் அவர் பாராட்டற அழகுக்காகவே. இன்னமும் ஆசையா செய்வேன். அந்த நாட்களில் எவ்வளவு பேசியிருபோம், எவ்வளவு சந்தோஷம், எவ்வளவு சண்டைகள்.. எவ்வளவு சினிமா.. எவ்வளவு ரெஸ்டாரண்டுகள், அவுட்டிங், எவ்வளவு திகட்ட,திகட்ட... செக்ஸ்...

’இந்த ரெட் சூரிதார்ல யூ ஆர் Fabulous’

‘வாவ்.. எப்படி இருந்த ரூமை.. தலைகீழா மாத்திட்டே.. உனக்கு கிரியேட்டிவிட்டி ரொம்ப.. குட்.’

‘உன்னை போல் சமைக்க இன்னொரு ஆள் வரணும்’

‘தயவு செஞ்சி.. ஆபீஸ் போகும் போது, என்னை அப்படி பாக்காதே..’

‘இதோட.. மூணு வாட்டி..’

‘நீ பாடிட்டேயிரு.. நான் உன்னை வாசனை பாத்துகிட்டே...’


இப்படி எல்லாமே ஓரு வ்ருஷம் வரைக்கும் தான்.. அதற்கப்புறம்..? என்னை பாடச்சொல்லி கேட்கும் என் கணவன், காதலன் எங்கேனு தெரியல..?

‘பாடட்டுமா’

“சம் அதர் டைம்’’

’உங்களிடம் பேச வேண்டும்..’

”ஆபீஸ் மீட்டிங்.. நாளை முக்கியமான ஒர்க் இருக்கிறது..”

‘அப்போ.. நான் முக்கியமில்லையா..?’

“சாரி..டியர்.. ஐ டோண்ட் ஹேவ் டைம் டு பைட் வித் யூ.. சம் அதர் டைம்”

இதற்கும் “சம் அதர் டைம்”

”குழந்தை, சொந்த வீடு, பேங்க் பேலன்ஸ், கார் எல்லாம் இருக்கிறது.. நாங்கள் இயல்பாய் ஓருவருக்கு ஓருவர் பேசி எவ்வளவு வருஷமாகிவிட்டது? எங்களுக்குள்ள இருந்த அந்த இண்டிமஸி எங்க..? செக்ஸுல என்மேல அவருக்கு இருந்த ஆர்வம் எங்கே..? எல்லாமே ஓரு பார்மலா.. கடமைக்குன்னு நடக்க் ஆரம்பிச்சு 4 வருஷம் ஆச்சு.. அவருக்கு கம்பெனி, டார்கெட்,ஷேர்ஸ், வீக் எண்ட் பார்டீ, டிவி, பேப்பர், மாசத்தில ஓரு நாள் ரெஸ்டாரெண்ட், ஓரு நாள் செக்ஸ், அதுகூட சில சமயம் மிஸ் ஆயிரும். பார்மலா தினமும், டியர், லவ் யூ, ஊரூக்கு போயிட்டு வந்தா ‘மிஸ் யூ” மட்டும் போதல.

ஓரே புழுக்கமா இருக்கு ரமேஷ்.. I am suffocated. மூச்சடைக்கிறது, தினம் எழுந்தா சமையல், குழந்தை, ஸ்கூல், டிபன், அவருக்கு சமையல், லஞ்ச் பேக், வழக்கமான குட்மார்னிங், லவ் யூ.. எல்லாமே மெஷின் மாதிரி மொனாடனி ஆயிருச்சு..எனக்கும் மனசு இருக்கு ரமேஷ்.. வாழ்கையில எல்லாருக்கும் தங்களுக்கு, தான் செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் ஓரு அங்கீகாரம் தேவைபடுது.. அந்த அங்கீகாரம் தனக்கு தானா கிடைக்கணும், கேட்டு வாங்ககூடாது. ஓரு காதலியா இருந்தப்ப கிடைச்ச இம்பார்டென்ஸ், மனைவியாகிவிட்ட பிறகு எதிர்பார்க்க கூடாதா..? அவருக்கு ஓரு சந்தோஷம்னா, சந்தோஷப்பட்டுகிட்டும், கஷ்டம்னா, ஆறுதலா இருக்கறதுக்கு மட்டுமே பொண்டாட்டின்னா.. அவளுக்கு உணர்வுகளே இல்லையா..? why they always take us granted?.

ஆனா கேக்காமலே உன் மூலமா என்னுடய பல விஷயங்களுக்கு அங்கீகாரம், கிடைச்சது.. நீ என் கூட இருக்கறப்ப என்னால என் ச்ந்தோஷத்தை. .. என்னோட எக்ஸைட்மெண்டை, என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.” நீ என் கிட்ட ரசிக்கிற விசயங்கள் அதை நீ என்னிடம் சொல்ற முறை.. எனக்கு கொடுக்கிற இன்பார்டென்ஸ்ன்னு இப்படி எவ்வளவோ சொல்லலாம்.. யு நோ ஓன் திங்.. இப்ப கூட உன்கூட படுத்தது பத்தி ஓரு மூலைல உறுத்தினாலும்... என்னை, என் மனசை, உணர்வை மதிக்கிற ஓருத்தனோட படுத்தது.. என்னயே ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குதான் I Felt like a girl. உனக்காவது புரியும்னு நினைக்கிறேன்.”

என்று போர்வையிலிருந்து நிர்வாணமாய் வெளியேறி, இயல்பாய் நைட்டியை மாட்டிக் கொண்டு, பாத்ரூமுக்குள் சென்றாள்.. அவள் உள்ளே சென்று மூடின கதவையே பார்த்து கொண்டிருந்தேன்.

ஓரு வேளை நான் அவளின் கணவனாய் இருந்திருந்தால், அவளின் அழகு, ஆசைகள், எல்லாவற்றையும் விட தன் குடும்பம், வேலை, பணம் என்று துறத்தி.. நானும் அவனை போல்தான் நடந்திருப்பேனோ..?


Apr 20, 2018

கந்து வட்டிதான் தமிழ் திரையுலகை இயக்குகிறதா? -3


சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ, ஏரியா வியாபாரங்கள் என எந்த விதமான வியாபாரத்துக்கு நிச்சயமில்லாத ஒர் சின்னப் பட தயாரிப்பாளர் எதை வைத்து கடன் வாங்க முடியும்?. ஆனால் இதெல்லாம் ஆகும் என்கிற நம்பிக்கையை ஏதோ ஒரு சின்னப்படம் கொடுத்த தைரியத்தில் தான் நம்ம படமும் அப்படி ஆகும் என்கிற நம்பிக்கையில் படமெடுக்க கிளம்புகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பைனான்ஸே கிடைக்காது என்கிற பட்சட்தில் எங்கிருந்து கந்து வட்டியெல்லாம். ஆனால் பெரும்பாலான சின்னப் பட தயாரிப்பாளர்கள் மாட்டிக் கொள்வது அனுபவமில்லாத இயக்குனர்கள், மற்றும் டெக்னீஷியன்களிடம் மாட்டி, ஒரு ஒன்னார்ரூவால படத்த முடிச்சிட்டா, பிஸினெஸ் பண்ணீரலாம் போன்ற அதீத பொய்களை எல்லாம் நம்பி அவருடய பெருங்கனவான திரைப்பட தயாரிப்பில் இறங்குவார். சொந்த பணத்தில்.

நண்பர் ஒருவர் சின்ன வயதில் இருந்து சினிமா ஆசை. வாழ்க்கை அவரை துரத்தியதில் ஆசையை விட சர்வைவல் தான் முக்கியம் என்று புரிந்து போராடி ஊர் மிராசுதார் லெவலுக்கு வளர்ந்து சில கோடிக்கு சொந்தக்காரர் ஆனாலும் விடாது கருப்பான சினிமா ஆசை விடவேயில்லை. என்னிடம் வந்தார். சார்.. உங்க படம் பார்த்தேன் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது. எனக்கு அது போல ஒரு படம் பண்ணனும். என ஒர் பெரும் தொகைக்கான செக்கை என் முன் வைத்தார்.  மொத்தம் எவ்வளவு வைத்திருக்கிறீர்கள்? ஏன் என்றால் என் படத்திற்கான பட்ஜெட் மட்டுமே சுமார் ஒன்னரை கோடி வரும் என்றேன்.  அதை ரெடி பண்ணிரலாம் என்றார். ஒரு கணம் அவரைப் பார்த்தேன். கண்கள் பூராவும் பளபளவென சந்தோஷமாய் என்னிடம் செக்கை கொடுக்க தயாராக இருந்தார். 

சார்.. நான் சொல்றேனு தப்பா நினைச்சிக்காதீங்க.. ஒன்னரை கோடி ரூபாய்க்கு படம் பண்ணா. பெரிய வியாபாரமெல்லாம் நிச்சயமில்லை. எல்லா வியாபார்த்தையும் நாமே விளம்பரப்படுத்தி வெளியிட்டாத்தான் வர வாய்ப்பு இருக்கு. அப்படின்னா அதுக்கு குறைந்தபட்சம் எழுபதிலிருந்து என்பது லட்சமாவது தேவை. ஸோ.. மொத்தமா ரெண்டரை கோடியில்லாமல் படம் பண்ண முடியாது. என்றேன். அவர் கண்களில் பளபளப்பு லேசாய் குறைந்தார்ப் போல தெரிந்தாலும், அதெல்லாம் பார்த்து பண்ணிரலாம்ங்க. என்றார். இந்த செக்கை வாங்கிக்கங்க.. என்று கையில் வைத்து அழுத்திவிட்டு போனார். ஊருக்கு போன மாத்திரத்தில் அவருடய குலதெய்வக் கோயிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார். அங்கே போன போதுதான் தெரிய வந்தது அவர் ஏற்கனவே யாரையோ நம்பி கிட்டத்தட்ட முப்பது லட்ச ரூபாய் இழந்திருப்பதும், அதற்காக நிலத்தை அடகு வைத்து வாங்கிய கடனை இப்போதுதான் அடைத்து மீட்டிருக்கிறார்கள். அதை வைத்துத்தான் மீண்டும் படம் ஆரம்பிக்கவே முடிவெடுத்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. நிச்சயம் படத்தின் பப்ளிசிட்டிக்காக வெளியிடுவதற்காகவும் அவரிடம் ப்ணம் இல்லை. என்பது தெளிவாகியது. அப்படி அதற்காக பணம் தேட முயன்றால் மீண்டும் பெரும் கடனில் மூழ்க அதிக வாய்ப்பு என்பது அவரின் மனைவியின் பேச்சில் தெரிந்தது. பூஜை முடிந்தது. கிளம்பும் போது சென்னைக்கு வாங்க கொஞ்சம் பேசணும் என்றேன்.

வந்தார். “சார்.. சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க.. நாம ரஜினி, கமலை வச்சி படம் பண்ணலை நிச்சயம் ஒரு நாற்பது சதவிகிதமாவது கையில் காசு வரும்னு. நிறைய ரிஸ்க் நிறைஞ்ச தொழில். உங்க ஊருக்கு வந்த போதுதான் தெரிஞ்சது உங்க நிலைமை.. இந்த நிலைமையில நீங்க ப்ரோடியூஸ் பண்றது எல்லாம் ரொம்பவும் ரிஸ்க். கொஞ்சம் அங்க இங்க போனாலும் மொத்தமா எல்லோருக்கும் கஷ்டம். இன்னும் கொஞ்ச வருசம் காத்திருப்போம். நீங்களும் உங்க கடனையெல்லாம் அடைச்சிட்டு கொஞம் நாள் நிம்மதியா இருங்க.. வியாபாரத்த பாருங்க.. சினிமா எங்கையும் போகாது. நானும் எங்கயும் போக மாட்டேன். எல்லாம் போக ஒரு படம் பண்ணுற அளவுக்கு உங்க கிட்ட எக்ஸ்ட்ராவா பணம் ரெடியாகவரைக்கும் காத்திருப்பதுதான் ஒரே வழி. வேற யாரும் இதை இப்படி உங்க கிட்ட சொல்லிட்டிருக்க மாட்டாங்க. எனக்கு மனசாட்சி இருக்கு. எனக்கு பணத்தோட ப்ரோடியூசர் வரலாம் வராம போகலாம். ஆனா என் மனசரிஞ்சு உங்கள இக்கட்டுல மாட்டி விடுறது நல்லதுக்கு இல்லை. என்று சொல்லி அவரின் செக்கை ரிட்டன் செய்தேன். கொஞ்ச நேரம் அவர் கவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.


“நீ சொல்றது புரியுது தம்பி.. என்ன ஒரு மூணு வருஷம் வேல மட்டும் பார்த்தேன்னா.. நிச்சயம் திரும்ப எழுந்து வந்துருவேன். கையில காசு கொடுத்து அதை நீ திரும்ப கொடுக்கும் போதே புரியுது இதுல இருக்குற ரிஸ்க் என்னான்னு. ஆனா நான் நிச்சயம் படம் பண்ணுவேன். நீதான் அப்ப எனக்கு பண்ணித்தரணும் எவ்வளவு பெரிய ஆளானாலும் என்று சொல்லிவிட்டு.. பாக்கெட்டில் கைவிட்டு சில அயிரம் ரூபாய் நோட்டுக்களை எடுத்து என் கையில் வைத்து இதை அட்வான்ஸா வச்சிக்கங்க.. என்று கிளம்பினார்.  அவர் இன்னமும் என்னிடம் தொடர்பில் இருக்கிறார். ஒவ்வொரு முறை பேசி முடிக்கும் போதும் அடுத்த வருஷம் ரெடியா இருங்க வந்திடறேன் என்று தான் முடிப்பார்.. அவர் எடுக்கிறாரோ இல்லையொ.. ஒரு நல்ல மனிதனை கடன் புதைகுழியிலிருந்து காப்பாற்றிய சந்தோசத்துடன் வைப்பேன்.

Apr 16, 2018

கொத்து பரோட்டா 2.0-55


ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் குழம்பிப் போயிருக்கின்றன தீயில் மீண்டும் தமிழக அரசு எண்ணெய் ஊற்றியிருக்கிறது. தமிழக கேளிக்கை வரி இருக்கிறதா? இல்லையா? என்ற குழப்பத்துடனே 18 முதல் 28 சதவிகித ஜி.எஸ்.டியை திரையரங்குகள் வசூலித்துக் கொண்டிருந்தாலும், விநியோகஸ்தர்களுக்கு கடந்த சில மாதமாய் தியேட்டர் அதிபர்கள் வசூலை செட்டில் செய்வதில் பல குழப்பங்கள். காரணம் மேற்ச் சொன்ன கேளிக்கை வரி இருக்கிறதா? இல்லையா? என்கிற குழப்பம் காரணம். திடீரென ஆறு மாதத்திற்கு முன் தேதியிலிருந்து பணத்தை கட்டுங்கள் என்ற சட்டம் போட்டுவிட்டால் விநியோகஸ்தர்களிடமிருந்து பணத்தை எப்படி வாங்குவது என்ற பயத்தில் பல தியேட்டர்கள் வசூலான தொகையை கொடுக்காமலேயே இருக்கிறது. இந்த லட்சணத்தில் இப்போது தடாலென தமிழ் சினிமாவிற்கு பத்து சதவிகிதம் வரி மற்ற மொழி படங்களுக்கு 20 சதவிகிதம் வரி என்று அறிவிப்பு மேலும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. காரணம் முன்பு கேளிக்கை வரி அரசின் நிர்ணையிக்கப்பட்ட 120 ரூபாய்க்குள் இருந்தது. அதாவது 120 ரூபாயில் முப்பது சதவிகித வரியும் சேர்ந்தது. ஆனால் ஜி.எஸ்.டிக்கு பிறகு 120 ரூபாய் அப்படியே திரையரங்குக்கும் விநியோகஸ்தர்களுக்கும் போய் சேர்ந்து கொண்டிருந்த நேரத்தில், இப்போது திடீரென பத்து சதவிகிதம் வரி கட்டு என்றால் மீண்டும் அது 120 ரூபாய்க்குளிலிருந்து கட்ட வேண்டுமா? அல்லது 120 ரூபாய்க்கு 10 சதவிகிதம் வரி போட்டு, பின்பு அதன் மேல் ஜி.எஸ்.டி போட்டு வரி வாங்க வேண்டுமா? என்பதுதான். ஏற்கனவே காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் மக்களிடம் 156.40 பைசாவுக்கு சில்லரை தருவதில்லை. வழக்கத்திலேயே இல்லாத 50 பைசா, 10 பைசா மட்டுமில்லாமல் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் சில்லரையைக் கூட தராமல்மொத்தமாய் 160 வாங்கிப் போட்டுக் கொள்ளும் திரையரங்குகள் ஏராளம். இப்படியிருக்க, இப்போது புது வரி. இது என்னன்ன குழப்பங்களை கொண்டு வரப் போகிறதோ என்று புரியவில்லை.

பைரஸியை ஒழிப்பேன் என்று சொல்லுங்கள். தமிழ் நாடு முழுவதும் ஆன்லைனில் டிக்கெட் கொண்டு வரும் முறையை அமல்படுத்த சொல்லுங்கள் நாங்கள் வரி கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று விஷால் அறிவித்துள்ளார். இது மல்ட்டிப்ளெக்ஸ் தவிர மற்ற ஊர் தியேட்டர்காரர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும் விஷயம் தான். ஆனால் இதை செய்தால்தான் அட்லீஸ்ட் நேர்மையாய் வரியை பிடித்தம் செய்து, விநியோகஸ்தர்கள் பங்கை கணக்கில் கொண்டு வர முடியும். பைரஸியை ஒழிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை என்றாலும் அரசின் துணையிருந்தால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். அதற்கு அரசை ஒத்துழைக்க வைக்க, விஷாலின் கோரிக்கை கொஞ்சம் நியாயமாய்த்தான் படுகிறது. எதையுமே எங்களுக்கு செய்யாமல் எதுக்கு வரி மட்டும் கேட்கிறாய்? என்கிறார். ஆனால் இப்படி ஒரேயடியாய் எல்லாவற்றிலும் விலையேற்றம் கொண்டு வந்தால் நிச்சயம் மக்கள் தியேட்டர் பக்கம் ஒதுங்குவது ரொம்பவும் கஷ்டமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Hindi Medium
ஒரு தூக்கம் வராத நடுராத்திரி வேளையில் பார்க்க ஆரம்பித்த படம். எப்படி இதை திரையில் பார்க்காமல் போனோம் என்று வருத்தப்பட வைத்த அட்டகாசமான படம். ராஜு, மித்தா தம்பதியருக்கு ஒரு குட்டி தேவதை பெண். மித்தாவுக்கு தன் பெண்ணை ஆங்கில மீடியம் ஸ்கூலில் தான் படிக்க வைக்க வேண்டுமென்று ஆசை. அதுவும் டெல்லியில் உள்ள பெரும் பணக்கார பள்ளியில் மட்டுமே என்பது முக்கியம். ராஜ் டெல்லியில் சாந்தினி சவுக் பஜாரில் பிரபல டிசைனர்களின் டிசைன்களை ஒரிஜினல் காப்பிஸ் என்று செம்ம வியாபாரம் செய்து கொண்டிருக்கிறவன். டிபிக்கல் ஹிந்திவாலா. மனைவியின் இம்சை தாங்காமல் அத்துனை பள்ளிகளின் அட்மீஷன் பாரத்தை விடிய விடிய நின்று வாங்குகிறான். ஆனால் அங்கேயெல்லாம் சீட் கிடைக்க, பெற்றோர்களுக்கு க்ளாஸ் எடுக்க, மித்தாவின் கல்லூரி தோழன் ஒருவன் சீட் கிடைக்க ஒரு கன்சல்டண்டை அறிமுகப்படுத்துகிறான். எல்.கே.ஜி. சீட்டுக்கு. அந்த கன்சல்டெண்ட் பெண் படுத்தும் பாடுகள், குழந்தைக்கு ஆங்கில ஹைஃபை சொசைட்டி பழக்கம் வேண்டுமென்று இம்சித்து, புராதான குடும்ப வீட்டை விட்டு, பக்கத்தில் இருக்கும் ஹைஃபை சொசைட்டியில் குடியேறுவது.சாதாரணம் உடைகளை விட்டு, வெகு பணக்கார உடைகளுக்கு மாறுவது என எல்லா வேலைகள் செய்தும், நான்கு ஸ்கூல்களில் ராஜ் – மித்தா தம்பதியரின் பெண்ணுக்கு சீட் கிடைக்காமல் போகிறது.

ஆர்.டி.ஈ எனும் படிப்பதற்கான உரிமை கோரலின் படி ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் சீட்டை வாங்க முடியும் என்று தெரிய வர, ராஜ் பணம் கொடுத்து அந்த கேட்டகிரியில் அப்ளை செய்கிறான். அப்போது பார்த்து பள்ளியின் மேல் ஏழைகளுக்கான சீட்டை பணக்காரர்களுக்குகொடுப்பதாய் பள்ளியில் வேலை பார்க்கும் ஒருவரே கம்ப்ளெயிண்ட் கொடுத்துவிட, நேரில் சென்று விசாரித்து பார்த்துதான் சீட் கொடுக்கப்படும் என்று சொல்லிவிடுகிறார்கள்.  வேறு வழியில்லாமல் ராஜ் – மித்தா தம்பதியினர் உடனடியாய் ஏழை வேஷம் போட வேண்டிய கட்டாயம். ஒரு லோயர் மிடில் க்ளாஸ் இடத்தில் வாடகைக்கு போய் இருக்க பழகுகிறார்கள். அங்கு பல விஷயங்கள் அவர்களுக்கு வாழ்க்கையை புரிய வைக்கிறது. அவர்களது பெண்ணிற்கு சீட்டும் கிடைக்கிறது. மீண்டும் தங்கள் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பினாலும், அநியாயமாய் ஒரு ஏழைக்கு கிடைக்க வேண்டிய சீட்டை பறித்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சியில் ஒரு கவர்மெண்ட் பள்ளியை தத்தெடுத்து அதை உயர்த்துகிறார்கள். ஆனால் பிரச்சனை ஏழையாய் வாழ்ந்த நாட்களில் நெருக்கமான நண்பனாய் வலம் வந்த ஷியாம் சுந்தரின் வடிவில் வருகிறது. பின்பு என்ன ஆனது என்பதை அமேசான் ப்ரைம் வீடியோவில் கண்டு கொள்க.

மிக சாதாரண கதை. படம் நெடுக பிரசாரமில்லா சர்காசம். காமெடி. அற்புதமான வசனங்கள். ராஜ் என் மகளுடய சீட்டை உன் மகனுக்கு வாங்கிக் கொடுக்கிறேன் என்று ஷியாமிடம் சொல்லும் போது, ஷியாம் கோபப்பட்டு, நீ கொடுப்பது பிச்சை.  ஆனால் என்னிடமிருந்த் பறித்தது எனக்கான உரிமையை. உரிமையை நான் ஏன் பிச்சையெடுத்து பெற வேண்டும்? என்று கேட்குமிடம் ஒர் உதாரணம். ராஜாக நடித்த இர்பானின் நடிப்பு மிக இயல்பு. எழுதி இயக்கிய சாகேத் சவுத்ரிக்கு வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Newton
அரசியல் படம் எடுக்க வேண்டுமென்றால் போலீஸ், எம்.எல்.ஏ, எம்.பி. அடியாள். பெய்ட் கில்லர் எல்லாம் தேவையில்லை. சாதாரண அரசு அதிகாரியின் வாழ்க்கையை கண் முன்னே காட்டினால் போதும். அதிலும் உலகிலேயே பெரிய ஜனநாயக கடமையான தேர்தலை சத்தீஷ்கரில், நக்சல்பாரிகளின் கண்ட்ரோலில் உள்ள ஒர் தொகுதியில் வெற்றிகரமாக நடந்துவதற்கு போகும் நியூடன் குமார் எனும் அரசு அதிகாரியின் கதை. நியூடன் குமார் நேர்மையான அரசு அதிகாரி. திருமணமாகாதவன். யாருமே தேர்தல் அதிகாரியாய் போகத் தயங்கும் இடத்திற்கு போகிறேன் என்கிறான். அங்கே போகும் போதுதான் தெரிகிறது  அங்கு இதுவரை நிஜத்தேர்தலே நடந்ததில்லை என்று. அதையும் மீறி போலிங் பூத்துக்கு போயே ஆகவேண்டும் என்று கிளம்புகிறான் நியூட்டன். உடன் ஒர் அதிகாரியும். ஆதிவாசிகளிடையே படித்து அரசு அதிகாரியாய் பணிபுரியும் மைக்கோ எனும் பெண்ணுடன். போலிங் பூத்துக்கு யாருமே வரவில்லை. மீறி அழைத்தால் யாருமே வருவதற்கு தயாராக இல்லை. ஆட்களே வராத காரணத்தால் தன்னுடன் வந்திருக்கும் போலீஸ்காரர்களை கொண்டு போலி ஓட்டு போடலாம் என்கிறார் போலீஸ் தலைவர். அதற்கு ஒத்துக் கொள்ளாத நியூட்டன் ஆட்களை தேடிப் போய் அழையுங்கள் என்கிறான். அந்நேரம் பார்த்து வெளிநாட்டிலிருந்து மீடியா ஆதி வாசிகளின் தேர்தல் பூத்தை படம்பிடிக்க வருவதாய் போலீஸுக்கு தகவல் வர, போலீஸார் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி அனைவரையும் வரவழைக்கின்றனர். இது எதையும் அறியாத நியூட்டன் வந்தவர்களை ஓட்டுப் போட அனுமதிக்க, எலக்ட்ரானிக் ஓட்டிங் மிஷினில் ஓட்டுப் போடுவதைப் பற்றி எதையும் தெரியாமல் முதல் ஓட்டரே விழிக்கிறார்.

வேறு வழியில்லாமல் அனைவருக்கு மீண்டும் அங்கேயே க்ளாஸ் எடுக்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு புரியவில்லை. போலீஸுக்கோ மீடியா உயர் அதிகாரியுடன் வரும் போது ஓட்டு போடப்பட வேண்டிய கட்டாயம். அது ஒரு விளையாட்டு உபகரணம் என்றும் விளக்கிற்கு பக்கத்தில் இருக்கும் படங்கள் உங்களுக்கு பரிசாய் வருமென்று சொல்கிறார். நியூட்டன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் வேறு வழியில்லாமல் ஓட்டு பதிவு நடைபெறுகிறது. மீடியா போன பின்பு திடீரென மவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த, அனைவரும் ஓட்டுப் பதிவு முடிவதற்கு முன்பே அங்கிருந்து கிளம்புகின்றனர். எப்படி வராத ஓட்டர்கள் பாரின் மீடியாவுக்கு முன் வந்தார்கள்? திடீரென எங்கிருந்து மாவோயிஸ்ட் தாக்குதல் என்று யோசித்த நியூட்டனுக்கு ஒரு விஷயம் ஸ்ட்ரைக் ஆகிறது. அப்போது பார்த்து நான்கு ஓட்டர்கள் வழியில் வர அங்கேயே அவர்களது ஓட்டை போட வைக்க விரும்புகிறான். போலீஸ் அவனை தடுக்கிறது.

மக்களுக்கான அரசாங்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்களைத் தீட்டும் அரசாங்கம் எப்படி இயங்குகிறது என்பதை அதே அரசாங்கத்துக்காக பணி செய்யும் ஒர் ஊழியனின் பார்வையில் சாட்டையால் அடித்திருக்கிறார் இயக்குனர் அமித் மசூர்கர். நியூட்டனாய் நடித்திருக்கும் ராஜ்குமார் ராவின் நடிப்ப ஆப்ஃட். க்ளைமேக்ஸை நோக்கிப் போகும் திரைக்கதையில் பரபரப்பாக நடக்கும் காட்சிகள் கொஞ்சம் நம்பக்தன்மையற்றதாய் அமைந்துவிட்டது நம்முடை ஆஸ்கர் கனவை தகர்க்க கூடியதாக அமைந்துவிட்டது வருத்தமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Apr 12, 2018

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -2

பைனான்ஸ் இல்லாமல் படமெடுக்கவே முடியாதா? என்று கேட்பீர்களானால் ஏன் முடியாது என்ற கேள்வியும் எழும். ஏனென்றால் புதுமுகங்களை வைத்து, அல்லது ஒரிரு தெரிந்த முகங்களை வைத்து 1-3 கோடிக்குள் தயாரிக்கப்படும் அத்துனை படங்களும் சொந்த பணத்தையோ, அல்லது நில புலன்களை அடமானம் வைத்தோதான் எடுக்கப்படுகிறது. உண்மையை சொல்லப்போனால் நிஜமாகவே தமிழ் சினிமாவை காப்பாற்றும் ஆபத்பாந்தவன் இந்த புது தயாரிப்பாளர்கள் தான்.

புது தயாரிப்பாளர்கள் தற்போதெல்லாம் மஞ்சள் பையை தூக்கிக் கொண்டு மட்டும் வருவதில்லை வெளிநாடுகளில் பொட்டித்தட்டி சம்பாரித்து வருகிறவர்கள். வீண் பெருமைக்காக வெளிநாடுகளில் தொழில் செய்யும் முனைவர்கள் கன்வர்ஷன் மணியில் இங்கே மீடியாவில் புகழ் பெற, மற்ற சிற்றின்பங்களைப் பெற படமெடுப்பவர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், மீடியேட்டர்கள், பிரபலங்களின் பினாமிக்கள் என பல விதங்களில் வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் நிச்சயமாய் கடன் வாங்கி படமெடுப்பவர்கள் இல்லை என்பதை உறுதியாய் சொல்ல முடியும்.

கதை திரைக்கதை வசனமெழுதி இயக்குவதற்கு எப்படி ஒருவர் திறமையானவராய் இருக்க வேண்டுமோ அதே அளவிற்கு தயாரிப்பாளருக்கும் தயாரிப்பு தெரிந்திருக்க வேண்டும். அதுவும் ஒரு கலை தான். முதல் படங்களில் ஏதும் தெரியாமல் இது தான் சினிமா போல என்று திக்கி திணறியவர்கள் கடவுள் புண்ணியத்தில் அந்த படம் வெற்றி பெற்றவுடன் தொடர்ந்து படமெடுத்து, கடைசி வரை தயாரிப்பு என்பது என்ன என்பதையே தெரியாதவராய் வெளியேறியது கூட நடந்திருக்கிறது. எனக்கு தெரிந்த தயாரிப்பாளர் ஒருவர் ஆறு படங்கள் தயாரித்திருக்கிறார். இது வரை ஒரு சினிமா எந்தெந்த நிலையில் என்னன்ன முறையில் உருவாக்கம் செய்யப்படுகிறது என்பதைப் பற்றியோ, யார் யார் என்னென்ன வேலைகள் செய்வார்கள் என்பது பற்றியோ கொஞ்சம் கூட தெரியாது. இப்படியானவர்கள் எத்தனை படமெடுத்தாலும் அது பஞ்சாயத்தில் போய்த்தான் முடியும்.

சரி அப்படியானால் பிரபல தயாரிப்பாளர் பலரும் பைனான்ஸ் வாங்கித்தான் படமெடுப்பதாய் சொல்கிறார்களே?. ஆம் பிரபல தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் பைனான்ஸ் வாங்கித்தான் படமெடுக்கிறார்கள். சமீபத்தில் சிம்புவை வைத்து ஏஏஏ எனும் படத்தை எடுத்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தான் வீடு வாசலை எல்லாம் இழந்துவிட்டதாக சொல்லி பேசிய பேச்சும் அறிக்கையையும் பார்த்திருப்பீர்கள் படித்திருப்பீர்கள். ஆரம்பத்தில் சின்னதாய் படமெடுத்தவர் தான் போகப் போக  கதை கேட்க போகும் போது கூட நடிகர்கள் கால்ஷீட் இருந்தால் மட்டுமே படமெடுக்கலாம் என்று முடிவுக்கு வந்தவர். இத்தனைக்கும் அரசியல் பின்புலம், வியாபார பின்புலமென பலமானவர்தான். எப்போது நடிகனை முன்னுக்கு வைத்து தயாரிப்பில் இறங்குகிறார்களோ அப்போதே படத்தின் மீதான அவருடய ஹோல்ட் போய்விடுகிறடு. படத்தின் பட்ஜெட்டையும் ரிலீசையும், வியாபாரத்தையும், படமெடுப்பதை பற்றியும் முடிவெடுப்பவன் நடிகனாகிப் போகிறான்.

ஒரு புதிய தயாரிப்பாளர் சிறு முதலீட்டு படமெடுத்து நல்ல மார்கெடிங் மூலமாய் வெற்றிப் படத்தை அளித்தவர். முதல் படத்தின் மூலம் கிடைத்த லாபம், நண்பர்களின் இன்வெஸ்ட்மெண்ட் என மீண்டும் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுத்தார். அதிலும் வெற்றி. தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து சரியான முறையில் மார்கெட் செய்து தொடர் வெற்றி பெற, பணபலமிக்கவர்கள் அவரை சூழ்ந்து கொண்டார்கள். ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும் போது தேவையான பணத்தை கொடுத்து பர்ஸ்ட் காப்பியில் தயாரித்து தரச் சொல்லும் அளவிற்கு பிரபலமானார்  அந்த தயாரிப்பாளர். தொடர் வெற்றி என்பது எப்போது சாத்தியமில்லாத ஒன்று. அது அவருக்கும் நடந்தது சின்ன பட்ஜெட் படங்களில் வெற்றி பெற்றவர். அவரின் கை மீறிய பெரிய பட்ஜெட் படங்களுக்கு போகும் போது சறுக்க ஆர்மபித்தார். உடனிருந்தவர்கள் பொறுத்தார்கள். தொடர் மிட் பட்ஜெட் படங்கள் கை கொடுக்காமல் போக, அடுத்தடுத்து வளர்த்த நடிகர், இயக்குனர்களை வைத்து எடுக்கப்பட்ட படம் பட்ஜெட் மீறி, வியாபாரம் ஆகியும் மொத்தமாய் கை கடிக்க, நெருங்கியவர்கள் கை தூக்கிவிட்டார்கள். தற்போது படம் தயாரித்தே ஆகவேண்டும். இத்தனை நாள் பணம் இன்வெஸ்ட் செய்ய ஆளிருந்தார்கள். மீண்டும் சொந்த பணத்தில் படமெடுக்க வேண்டிய நிலை. ஓ.பி.எம்மில் படமெடுத்து பழகிப் போயிருக்க, சரியான முறையில் தயாரிப்பு தொழில் தெரிந்த தைரியத்தில் பைனான்ஸ் வாங்கி படமெடுக்க ஆரம்பிக்கிறார். படம் வளர, அந்த படத்தை தாங்க இன்னொரு மீடியம் பட்ஜெட் படத்தை ஆரம்பிக்கிறார்கள்.  எல்லாம் சரியான படி நடந்திருந்தால் நிச்சயம் லாபம் வருகிறதோ இல்லையோ, நஷ்டம் வந்திருக்காது சினிமாவைப் பொறுத்த வரை எல்லா வியாபாரங்களும் நம்பிக்கையின் பேரில் தான் இயங்குகிறது. நேற்றைக்கு விற்பனை ஆன ஒர் நடிகரின் ப்ராஜக்ட் இன்றைக்கு ஆகாமல் நிற்கும். ஏன் என்று கேட்டால் அதற்கு பல காரணங்கள்.

எதிர்பார்த்த வியாபாரங்க்ள் நடக்காததினால், வருமானமில்லாமல்  வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்ட வேண்டிய நிலை உண்டாகி, கொஞ்சம் கொஞ்சமாய் டைட் ஆகிறார்கள். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், இருக்கும் பட்சத்தில் வட்டிக்கு வட்டி போட்டோ, அல்லது படம் நன்றாக வந்திருக்கும் பட்சத்தில், படத்தின் சாட்டிலைண்ட் உரிமை, ஏரியா உரிமை என எதையாவது வாங்கி வைத்துக் கொண்டும் வட்டியை கழிக்கும் வழக்கம் உண்டு. சமீப காலமாய் சாட்டிலைட் உரிமம் என்பது வெற்றி பெரும் படங்களுக்கு மட்டுமே என்றான பிறகு அதற்கு உறுதியில்லாததால் திரி சங்கு நிலைதான். இப்படியான நிலையில் எப்படி பைனான்ஸியர் தன் கடனை எடுப்பார்? தயாரிப்பாளர் வாங்கிய கடனை கொடுப்பார்?


Apr 9, 2018

கொத்து பரோட்டா 2.0-54

Saheb Bibi Golaam
பத்திரிக்கையாளர், எழுத்தாளர், விமர்சகர், இயக்குனர் என பன் முகம் கொண்ட ப்ரீதம் டி. குப்தாவின் இயக்கத்தில் 2016ல் வெளிவந்த வங்காள மொழிப் படம். இவருடய முந்தைய படமான ”பாஞ்ச் அத்யாய்” கமர்ஷியல் வெற்றியையும், விமர்சனகளிடையேவும் மிகுந்த வரவேற்பை பெற்ற ரொமாண்டிக் ஜெனர் படம். இது முற்றிலும் வேறான கதைக்களன். ஜிம்மி, ரிட்டையர்ட் போலீஸ். தற்போதைய தொழில் காண்ட்ரேக்ட் கில்லர். ஜெயா ஒர் குடும்பத்தலைவி. ஆனால் பார்ட் டைம் விபச்சாரி. ஜிகோ டாக்ஸி ட்ரைவர். அவனுக்கு கல்லூரி மாணவியான ரூமிக்கும் காதல். ஜிம்மிக்கு ஒரு  காண்ட்ரேக்ட் வருகிறது. அரசியல்வாதியின் பையனான அவனை பாலோ செய்கிறான். அவனது நடவடிக்கைகளை கண்காணித்து, அவன் தினமும் ஒரு ஃபேமிலி டைப் விபச்சார விடுதிக்கு செல்கிறதை கண்டுபிடிக்கிறான். ஒரு தினத்தை குறித்து அவனை கொல்ல தயாராகிறான். அந்த தினமும் வருகிறது. துப்பாக்கியை எடுத்து குறிபார்த்து தனக்கு முதுகு காட்டி நிற்கிறவனை சுடுகிறான். அவனை அணைத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் முகம் க்ளோஸப்பிற்கு போக, அவளின் கதை ஓப்பன் ஆகிறது.

ஜெயா ஒரு பெண் குழந்தைக்கு தாய். மொனாட்டனியான வாழ்க்கை, மாமியார். கண்டு கொள்ளாத கணவன் என விரக்தியின் எல்லையில் பயணித்துக் கொண்டிருக்கும் டிபிக்கல் மிடில் க்ளாஸ் பெண். மதியம் பெண்கள் குழுவில் பேசிக் கொண்டிருக்கும் போது தங்களது செக்ஸுவல் மற்றும் பணத்தேவைகளுக்காக புருஷனை நம்பாமல் சந்தோஷமாய் இருக்க பல வழிகள் இருப்பதாய் உடனிருப்பவர்கள் சொல்ல, எப்படி என்று ஆர்வம் அவளுள் கிளறப்பட, தினமும் ஆபீஸ் போவது போல, மேடம் வீடு இருப்பதாகவும், பேமிலி பெண்களை விரும்புகிறவர்கள் அங்கே வருவார்கள். அவர்களுடன் நாம் சந்தோஷமாகவும் இருந்து கொண்டு பணமும் சம்பாதிக்கலாம் என்று சொல்ல, சலனப்பட ஆரம்பிக்கிறாள். ஒரு கட்டத்தில் கணவனின் நடவடிக்கைக்கு காரணம் அவனின் கே உறவு என்பதை தெரிந்து கொண்டு, கிட்டத்தட்ட அவனை பழிவாங்கும் உணர்வுடன் அந்த விடுதியில் சேர்கிறான். தன்னுடய பேண்டஸிக்களை அடைய வாழ ஆரம்பிக்கிறாள். அவளை அணைத்தவன் தான் குண்டடிப்படுகிறான்.

தான் தப்பானவனை சுட்டுவிட்டோம் என்று தெரிகிறது ஜிம்மிக்கு. அவனை காப்பாற்ற தூக்கிக் கொண்டு ஓடுகிறான். ஜிக்கோ டாக்ஸி ட்ரைவர். இளைஞன். அந்த விடுதிக்கு வாடிக்கையாளரை கொண்டு வருகிறவன். அவனுக்கு ஜெயாவுக்குமிடையே ஏதுவுமில்லை என்றாலும் ஒர் சின்ன பாச பிணைப்பு இருக்கிறது. ஒர் நள்ளிரவில் மிகு போதையில் டாக்ஸியில் ஏறும் ரூமியை ட்ராப் செய்கிறான்.  அவர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாய் நெருக்கம் உண்டாகிறது. தாய் தந்தை விவாகரத்துக்கு பிறகு தாந்தொன்றியாய் சுற்றியலையும் அவளுக்கு இவனின் இணக்கமான அன்பு பிடித்து காதல் வயப்படுகிறாள். தன் தந்தையிடம் கூட சொல்கிறான். அவனை சந்திக்க அவளுடய அப்பா தேதி கொடுக்க,  ஜிக்கோவை வரச்சொல்லி காரை எடுக்கிறாள். அதற்கு பிறகு நடக்கும் சம்பவம் தான் இப்படத்தின் கோர் பாயிண்ட். அந்த துப்பாக்கி சூடு மீட்டிங் பாயிண்ட்.  விறுவிறு திரைக்கதை. நல்ல நடிப்பு. சிறப்பான டெக்னிக்கல் விஷயங்கள். என இண்ட்ரஸ்டிங் பொக்கே.  டோண்ட் மிஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Revelation
ஆங்கிலப் பெயர் என்றாலும் தமிழ் படம் தான். இண்டிபெண்டண்ட் திரைபடம். இம்மாதிரியான திரைப்படங்களுக்கு டிஜிட்டல் மீடியம் ஒர் வரப்பிரசாதம். திரையரங்குகளில் இம்மாதிரியான படங்களுக்கு நிச்சயம் கமர்ஷியல் வரவேற்பு கிடைக்காத நிலையில் அங்கே ரிலீஸ் செய்வதை விட, இம்மாதிரியான ப்ளாட்பார்மில் வெளியிட்டு வெற்றி பெருவது சந்தோஷமான விஷயம். பூஷன் பிலிம் பெஸ்டிவலில் திரையிட தெரிவு செய்யப்பட்ட படம்.

நடுத்தர வயது மனோகர் தன் பாரலைஸ்ட் தாயுடன் கொல்கத்தாவுக்கு குடி வரும் தமிழன். அதே வீட்டில் சேகர் – ஷோபா தம்பதியினர் வசிக்கிறார்கள். தமிழர்கள். சேகர் ஒர் ஆங்கில பத்திரிக்கையில் நிருபராய் வேலை செய்கிறான். மனோகரின் தாயை பார்த்துக் கொள்ள ஷோபாவிடம் உதவி கேட்க, அவள் தானே பார்த்துக் கொள்வதாய் சொல்கிறாள். மனோகர், ஷோபாவிற்குமான நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் வளர ஆர்மபிக்க, சேகரின் பத்திரிக்கை ஆசிரியர் திவ்யா எனும் புதிய இண்டர்னுடன் சேர்ந்து கொல்கத்தாவில் உள்ள பேண்ட் களைப் பற்றி ஆர்டிக்கள் எழுத சொல்ல, அவர்கள் இருவரும் சேர்ந்து பயணிக்கிறார்கள். அவர்களின் நெருக்கமும் கொஞ்சம் கொஞ்சமாய்  நெருக்கமாகிறது. அவளுக்கு 60 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவும் அளவிற்கு. இரண்டு ஜோடிகளின் நெருக்கமும் உடல் ரீதியாய் நெருக்கமாக முனைய, அங்கே சேகரும், இங்கே மனோகரும் தவிர்க்கிறார்கள்.  தவிர்ப்பதற்கான காரணம்? சேகர், ஷோபா தம்பதிகளிடையே இருக்கும் வெறுமைக்கான காரணம்?. மனோகர் ஷோபாவை இக்னோர் செய்வதற்கான காரணம் போன்ற எல்லாவற்றிக்கும் விடை க்ளைமேக்ஸில் வெளிப்படுகிறது.

சேத்தனை பல படங்களில் சீரியல்களில் நாம் பார்த்திருப்போம். நிஜமாகவே அவரின் திறமைக்கு சரியான தீனிப் போட்டிருக்கும் படம். லஷ்மிப்பிரியாவின் மிக இயல்பான நடிப்பு இதில் பெரிய ப்ளஸ்.

ஆரம்பக் காட்சிகளிலிருந்து இறுதி வரை இறுக்கமான, மெதுவான லெந்தி விஷுவல்கள், கமர்ஷியல் பட ஸ்டைல் எடிட்டிங் இல்லாமல், நிறுத்தி நிதானமாய் போவது. மிகக் குறைந்த வசனங்களில் காட்சிகளின் கனத்தை, அது கொடுக்க வேண்டிய  உணர்வை சின்னச் சின்ன ரியாக்‌ஷன்களில் சேத்தன், லஷ்மி ஆகியோரின் நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பது, மிக மெல்லிய ரீ ரிக்கார்டிங். மிக இயல்பான கொல்கத்தாவை விஷுவலாக்கியிருப்பது. படம் நெடுக மெதுவான போக்கை வேண்டுமென்றே வைத்திருப்பதும்,  யாருக்கு என்ன பிரச்சனை என்பது வெளிப்படும் போது அந்த மெதுத்தன்மை நியாயமாகப்படுகிற சாமர்த்தியம். துரோகம், குற்றவுணர்ச்சி, இந்திய திருமண உறவு, போன்றவற்றை மிக திறமையாய் கையாண்டிருப்பது என இயக்குனர் விஜய் ஜெயபால் அழுத்தமாய் முத்திரை பதித்துள்ளார். நிச்சயம் கமர்ஷியல் பட விரும்பிகளுக்கான பரிந்துரையில்லை. நல்ல படங்களை விரும்புகிறவர்களுக்கான பரிந்துரை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரேடியோபெட்டி
இந்தப்படமும் 2015ஆம் ஆண்டு பூஷன் பிலிம் பெஸ்டிவலிலும், இண்டியன் பனோரமாவிலும், மாட்ரிட்டிலும் தெரிவான இண்டிப்பெண்டண்ட் தமிழ்ப்படம். உலக சினிமாக்களில் மூத்தவர்களின் வாழ்க்கையை எவ்வளவு அழகாய் படமாக்குகிறார்கள். இதைபோல எல்லாம் எங்கே நம்மூரில் என்று பொலம்பிக் கொண்டிருக்காமல் 70 வயது முதியவரின் வாழ்க்கையைப் பற்றி படமெடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரி விஸ்வநாத்.

70 வயது முதியவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். அவர்களுடய ஒரே மகன் தனிக்குடித்தனமிருக்க, முதியவர் ஒரு கம்பெனியில் வேலைக்கு போய்விட்டு அதில் வரும் சம்பளத்தில் வாழ்ந்து கொண்டிருக்க, அவரின் ஒரே எண்டர்டெயின்மெண்ட் வால்வு ரேடியோவில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதுதான். அது அவரின் அப்பா அவருக்கு கொடுத்தது. அதில் அவர் தன் அப்பாவை பார்த்துக் கொண்டிருப்பதாய் சொல்கிறவர். தன் இயலாமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் வீட்டின் மின்சார செலவுக்கான காரணம் ரேடியோ பெட்டிதான் என்று வாக்குவாதம் செய்ய, ரேடியோ பெட்டியை தூக்கிப் போட்டு உடைக்கிறான் மகன். ரேடியோ பெட்டி போனதில் இருந்து வாழ்க்கையின் எல்லா சந்தோஷத்தையும் இழந்த்வராகிறார். ட்ரான்ஸிட்டர் எல்லாம் அவருக்கு செட்டாகமல் போக, மெல்ல அவரின் காதுக்குள் ரேடியோ ட்யூனாக ஆர்மபிக்கிறது. அவருக்குள் ரேடியோ கேட்க ஆரம்பிக்கிறது. அதனால் வரும் பிரச்சனைக்கு விடை என்ன என்பதுதான் கதை.

வயதான காலத்தில் பார்த்து பார்த்து வளர்த்த மகனே அவர்களை கைவிடுவது. ஒவ்வொரு பைசாவுக்கும் அவனை எதிர்பார்ப்பது. முதியவர்களின் உணர்வை புரிந்து கொள்ளாமல் ரியாக்ட் செய்யும் மகன்களின் நிலை. அதனால் அவர்கள் படும் அவதி என மிக அழகாய் சொல்லப்பட்டுள்ள படம். முதியவராய் நடித்த லஷ்மணனின் நடிப்பு மிக அருமை. கொஞ்சம் மெதுவாக செல்லும் படம் தான் என்றாலும் நிச்சயம் ரசிக்கத்தக்க படைப்பே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Apr 5, 2018

சாப்பாட்டுக்கடை - பாட்டி வீடு

போன மாதம் இந்த உணவகம் ஆரம்பிக்கப் போவதாய் ஏகப்பட்ட ஆன்லைன் ப்ரோமோஷன்கள். ஞாயிறு அன்று மதியம் லஞ்சுக்கு புக் செய்யலாம் என்று போன் போட்டால் காலை பதினோரு மணிக்கே லஞ்ச் புல் சார் என்றார்கள். நண்பர் சிவசங்கர் லஞ்சுக்கு போகலாமா? புதுசா எதாச்சும் இடம் இருந்தா சொல்லுங்க? என்றார். பாட்டி வீடு என்றேன். 

தி.நகர் பாகிரதி அம்மாள் தெருவில் முன்பு ஒரு நான் வெஜ் ரெஸ்ட்ராரண்ட் இருந்த இடத்தைத்தான் இவர்கள் புதியதான் பழைய வீடு போல் செட் போட்டு முற்றிலும் மாற்றியிருந்தார்கள். அட்டகாசமான இண்டீரியர். வெல்கம் சென்னவரின் ஃபீரிக் குடுமியும், போட்டிருந்த பேகியும் நிச்சயம் அமெரிக்காவில் சம்பாதித்து ஹோட்டல் நடத்த வந்திருப்பவர் என்பதை பறைச்சாற்றியது. 

நண்பர்கள் வந்த பின் உள்ளே அழைத்து செல்லப்பட்டோம். அட்டகாசமான இண்டீரியர். பாட்டி வீட்டு மித்தம் போல ஒர் இடத்தில் நான்கு டேபிள் போடப்பட்டிருந்தது. கண்களை உறுத்தாத ஆனால் அதே நேரத்தில் காண்ட்ராஸ்ட் பெயிண்டிங் அண்ட் கட்லெரிகள்.

மெனு கார்டை டேப்ளெட்டில் காட்டினார்கள். கூடவே ஒர் பிரிண்டட் பேப்பரிலும். 7 கோர்ஸ் மீல்ஸ் என்றதுமே திக்கென இருந்தது. அத்தனையும் எப்படி சாப்பிடுவது என்று. 

1. வெல்கம் ட்ரிங்காக லெமன் மிண்ட், தர்பூசணி - வெள்ளரி, நம்மூர் ஸ்ரீராம நவமி பானகத்துடன் ஸ்டார்ட் செய்தார்கள். சக்கரை போடாத தர்பூசணி ஆசம் என்றால் பானகம் தெய்வீகம். ஒன்ஸ் மோர் ப்ளீஸ் 

2. ஸ்டாட்டர்ஸ். வாழைப்பூ வடை, தேங்காய் போட்ட சுண்டல், கிரிஸ்பி உருளைக்கிழங்கு மினி கட்லெட். எல்லாமே சூடாய் இருந்தது. சுண்டல் அதிக காரமில்லாமல், வாழைப்பூவடைக்கு இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் இருந்தாலும், உருளைக்கிழங்கு கட்லெட் செம்ம டேஸ்டி அண்ட் கிரிஸ்பி. ஒன்ஸ்மேர் ப்ளீஸ்.

3. டிபன் அயிட்டங்கள்

சின்னதாய் நல்ல நெய்யில் போட்டு வாட்டிய கோதுமை பரோட்டாவோடு, வெள்ளைக் குருமா. உடன் தேங்காய் பாலில் தாளிக்கப்பட்ட இடியாப்பமும், உடன் தொட்டுக் கொள்ள குடமிளகாய் போட்ட பச்சடி. செம்ம நைஸ் பரோட்டா ஒருபக்கம் இழுக்கிறது என்றால் இன்னொரு பக்கம் அந்த இடியாப்பம். அத்தனை மெல்லீசாய், வித்யாசமான ருசியுடன், அந்த குடமிளகாய் பச்சடி ஆசம் என்றால் ஆசம். ஒன்ஸ் மோர் ப்ளீஸ்

4. ரசங்கள்

ஒரு டம்ளர் ரசமும், உடன் மோர் வெந்த சாதம் என்று ஒரு அயிட்டத்தை கொடுத்தார்கள். ரசம் ஓகே.  நன்றாக தாளிக்கப்பட்ட சூடான மோர் வித்யாசமான ருசியை கொடுத்தது. ஒன்ஸ் மோர் ப்ளீஸ்

5. கலந்த சாதம்

புளியோதரையோடு, பம்கின் பச்சடி கொடுத்தார்கள். டிபிக்கல் புளியோதரையாகவும் இல்லாமல், மிடில் ரேஞ்சில் இருந்தது. 

6. மெயின் கோர்ஸ்

சாதம், அரைச்சு விட்ட சாம்பார், போண்டா போட்ட மோர்குழம்பு, வத்தக்குழம்பு, பருப்பு உசிலி, பருப்பு தொகையல், பெப்பர் போட்ட கீரை, முக்கியமாய் சேனைக் கிழங்கு ப்ரை

மோர்குழம்பு காரம் குறைவாய், தயிராய் இருந்தது. அரைச்சுவிட்ட சாம்பார் ரொம்பவும் ப்ளெண்டாய், காரமில்லாமல், அரைத்துவிட்ட எபெக்ட் இல்லாமல் இருந்தது, வத்தக்குழம்பு ஆசம், பருப்பு உசிலி வேர்த்துவிட்டிருந்தபடியால் பெரிதாய் ருசிக்கவில்லை. பருப்பு தொகையலும், சேப்பங்கிழங்கு ப்ரையும்  டிவைனுக்கு மேல.  நல்ல காரத்துடன் சின்னச் சின்ன ஸ்லைஸாய் நன்று வதக்கப்பட்டு, கிரிஸ்பியாய், உப்பும், காரமும், அளவாய், வாவ்வ்.. வாவ்வ்.. வாவ்.. வாவ்.. அட்டகாசம். ஒன்ஸ் மோர் ப்ளீஸ்

தயிர் சாதத்தின் மேல் இஞ்சி புளி கிரேவியோடு தருகிறார்கள். ஆசமோ ஆசம். அதற்கு மேலும் சுவை கூட்ட வேண்டுமென்றால் இருக்கவே இருக்கு மாவடுவும், எலுமிச்சை ஊறுகாயும். செம்ம காம்பினேஷன்.

7 டெசர்ட்ஸ்

கருப்பட்டி மில்க் ஷேக், சேமியா பாயசம், இளநீர் ஹல்வா. சேமியா பாயசம் ஓகே. ஹல்வா ஜெல்லி போல் இருந்தாலும் சுவையில் இனிப்புகுறைவாய் இருந்ததால் பெரியதாய் வித்யாசம் தெரியவில்லை.  கருப்பட்டி மில்க் ஷேக் செம்ம. போன்வீட்டாவை கரைத்து சாப்பிட்டார் போல வித்யாசமான சுவை. ஒன்ஸ்மோர் ப்ளீஸ்.

இதனுடன் வேண்டுமானால் பில்டர் காபியும் கிடைக்கிறது. உள் நாக்கில் கசக்கும் அளவிற்கான அற்புதமான காப்பி. 

பில் மதிய உணவு ஒருவருக்கு 891 ரூபாய்.  பணமாய் பார்த்தால் ஒரு வெஜிட்டேரியன் உணவுக்கு இது கொஞ்சம் அதிகமாய் தெரியும். ஆனால் அவர்கள் அங்கே கொடுத்திருக்கும் ஆம்பியன்ஸ், சர்வீஸ், உணவின் சுவை மற்றும் தரத்திற்கு இது தகும் என்றே தோன்றினாலும், ரிப்பீட் ஆடியன்ஸுக்கு வாய்ப்பு குறைவே. எனவே பாட்டி வீடுக்கார அமெரிக்க ஓனர்கள் கன்சிடர் செய்ய வேண்டும். 

அட்டகாசமான ஒர் சாப்பட்டு அனுபவத்தை பெற வேண்டுமானால் நிச்சயம் ஐ ரெகமெண்ட். பாட்டி வீடு.