Posts

Showing posts with the label வில் அம்பு

கொத்து பரோட்டா - 15/02/16

திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. இணையமெங்கும் இனி தமிழீழம் கிடைக்காது. அது இது என்று ம.ந.கூ கூட்டம் ஒரு புறமும். முன்னாடி இப்படி பேசினியே இப்ப எங்க போய் மூஞ்சிய வச்சிப்ப? என்பது போன்ற ரீதியில் கேள்விகளாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னவோ இப்போது தான் தமிழ் அரசியலுக வரலாற்றில் முதல் முறையாய் போன கூட்டணியில் திட்டியவர்கள் ஒன்றாய் கூடி ஓட்டுக் கேட்க வருகிறார்ப் போல.. உதிர்ந்த ரோமம், என் அம்மாவுக்கு பொறக்கலை, துரோகத்தின் மொத்த வடிவம், என் குடும்பத்திலிருந்து யாராவது பதவிக்கு வந்தால் சாட்டைய எடுத்து அடியுங்கள் என்பது போன்ற வசனங்களையெல்லாம் கேட்டு, மறந்து ஓட்டுப் போட்டவர்கள் தான் நாம் என்பதையும் மறந்து கருத்து சொல்லிக் கொண்டேத்தானிருக்கிறோம். சமீபத்தில் ஒர் அதிமுக முக்கிய பிரமுகரிடமும், அவர்களின் பேரவை உறுப்பினருடனும் பேசிக் கொண்டிருந்தேன். அவர்களில் வெற்றி வாய்ப்பு எப்படியென? கூட்டணி தான் முடிவு செய்யும். ஏன்னா.. வெள்ளத்திற்கு முன்னாடி எங்களுக்கும் என்பது சதவிகிதம் என்றால் இப்போ ஐம்பதுக்கு ஐம்பது ஆகிவிட்டது என்று தோன்றுகிறது முக்கியமாய் திமுக+ காங்கிரஸ்+ தேமுதிக சேர்ந்தா...