Thottal Thodarum

Sep 28, 2012

தாண்டவம்


 படம் வெளியாவதற்கு முன்பே பரபரப்பை வேறு விதமாய் ஏற்படுத்தியிருந்த படம். இது என் கதை, என்று ஒரு உதவி இயக்குனரும், இல்லை என்று இயக்குனரும் தயாரிப்பாளர் ஆளாளுக்கு ஆட்டம் ஆட ரகசியமாய் நடந்தத விஷயங்கள் வெளியே வர, இயக்குனர் சங்க தலைவர் ராஜினாமா செய்யும் அளவிற்கு விறுவிறுப்பு கொடுத்த இந்தப்படம் திரையில் அதே பரபரப்பை, விறுவிறுப்பை கொடுத்ததா? என்று கேள்வியை எழுப்பினால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சாப்பாட்டுக்கடை - அருளானந்தா ஓட்டல்

சென்னையில் கிருஷ்ணவேணி தியேட்டருக்கு பின்னால் ஒரு மாடி வீட்டில் மெஸ்ஸாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த அருளானந்தா மெஸ். நண்பர் ஒருவர் இங்கு பரோட்டா நன்றாக இருக்கும் என்று சொல்லிக் கூட்டிப் போனார். பஞ்சு போன்ற பரோட்டாவும், கூடவே காரமில்லாத அருமையான கிரேவியும் நம்மை மீண்டும் மீண்டும் அழைத்தது. இதெல்லாம் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். பின்பு இவர்கள் தங்கள் உணவகத்தை ஹோட்டலாய் உருமாற்ற, உஸ்மான் ரோட்டில் இருக்கும் சரவணபவனுக்கு நேர் எதிரே உள்ள விவேகானந்தா காபி ஹவுஸுக்கு ஒரு இடத்தைப் பிடித்து ஹோட்டலாய் அமைத்தார்கள். 

Sep 25, 2012

Heroine

மதுர் பண்டார்கரின் படம் என்றால் கொஞ்சம் ராவாக இருக்கும் என்பது இவரது முந்தைய படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும். பேஜ் 3 பிரபலங்களின் பின்னணியை உரித்துக் காட்டியது என்றால், ட்ராபிக் ஜாம் ப்ளாட்பாரத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை சொன்னது, ஃபாஷன் மாடல் உலகின் அவலங்களை, போட்டிகளை, வெற்றி தோல்விகளை அப்பட்டமாக காட்டியது. அதே அளவிற்கு இவரது கார்பரேட், ஜெயில் ஆகிய படங்கள் இல்லை என்றாலும் பரபரப்பாக பேசப்பட்ட படமாகவே அமைந்தது. இந்த வரிசையில் சினிமா கதாநாயகியைப் பற்றி ஒரு படம் என்றதும் இயல்பாகவே கொஞ்சம் ஆர்வம் எகிறத்தான் செய்தது.

Sep 24, 2012

கொத்து பரோட்டா - 24/09/12

பேஸ்புக்கில் கார்டூனிஸ்ட் பாலாவின் தலையை ஆளாளுக்கு உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் பெரியாரின் நேரடி புத்திரர்கள் போல வரிந்து கட்டிக் கொண்டு திட்டி எழுதி வருகிறார்கள். அதற்கு காரணம் அவர் போட்ட கார்டூன். பார்பனர்களை மட்டும் பெரியார் எதிர்க்க சொல்லவில்லை. எல்லா ஜாதிகளுக்கான வெறியையும் தான் எதிர்க்கச் சொல்லியிருக்கிறார் என்றும், முற்போக்கு, மற்றும் இடைநிலை என்கிற பெயரில் உலாவரும் ஜாதி வெறியர்களை பற்றித்தான் அந்தக் கார்டூனில் கிண்டலடித்திருந்தார். அவர் ஏதும் தவறாய் சொல்லியிருப்பதாய்  எனக்கு  தெரியவில்லை. எல்லாவற்றையும் தப்பாகவே புரிந்து கொள்பவர்களுக்காக மீண்டும் அக்கார்ட்டூனை விளக்கமாக போட வேண்டிய நிர்பந்தம்  அவருக்கு வந்துவிட்டது. கார்டூனுக்கெல்லாம் விளக்கவுரை போட்டு சொல்லணும் போலருக்கே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 22, 2012

சாருலதா


தமிழ் சினிமாவில் சமீபத்திய சென்ஷேஷன் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றிய படமெடுப்பது. ஒரு சின்ன பட்ஜெட் படம், அடுத்து மீடியம் பட்ஜெட் படமான இந்த சாருலதா. மற்றொன்று பெரிய பட்ஜெட்டில் வரப் போகும் மாற்றான். சின்ன பட்ஜெட் படத்தை ரிலீஸானது போல ரிலீஸாக்கி காலியாக்கிவிட்டார்கள் என்று கேள்வி. ஆனால் அதே போல இப்படத்தை பண்ண முடியவில்லை. ஏனென்றால் சன்னிலிருந்து வெளியேறிய பிறகு சக்ஸேனா தனியா கம்பெனி ஆரம்பித்து வெளியிட்டிருக்கும் முதல் படம் அதனால் மீடியாவின் கவனம் பெற்றது ஒரு தனி விஷயம் என்றாலும், ஒட்டிப் பிறந்த ரெட்டையர்கள், அதுவும் பெண்கள் எனும் போது ஒரு சுவாரஸ்யத்தை அளிக்கத்தான் செய்தது.

Sep 21, 2012

சாட்டை

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்றும், அரசு தரப்பில் அதை மேன்மை படுத்த வேண்டும் என்று ப்ரெஷ்ர் கொடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில்,தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் நிலையை, அதன் ஆசிரியர்களின்   நிலையை, அதனால் ஏற்படும் பாதிப்புகளை இப்படத்தின் மூலமாய்  சாட்டைக் கொண்டு அடித்திருக்கிறார்கள் 

Sep 20, 2012

சாப்பாட்டுக்கடை - Siddique Kabab Centre

Kebab  என்று சொல்லப்படும் உணவு வகைகள் பெரும்பாலும் வட இந்தியாவில் புகழ் பெற்ற ஒன்றாகும். ஆனால் இதன் ஆர்ஜின் என்று பார்த்தால் அது அரேபிய, துருக்கிய மண்ணிலிருந்து என்று வரலாறு சொல்கிறது. மாமிச வகைகளை எண்ணையில் போட்டு பொரிக்காமல் மாமிசங்களின் மேல் மசாலாவை போட்டுப் பிரட்டி, அதை தணலில் வாட்டி காரம், மணம் குணத்தோடு, ரொட்டி போன்ற அயிட்டங்களை வைத்துக் கொண்டு மாமிசத்தை மெயின் டிஷ்ஷாக வைத்துக் கொண்டு சாப்பிடுவது ஒரு கலாச்சாரம். 

Sep 19, 2012

Barfi

ஃபர்பி. இதன் ட்ரெயிலரை பார்த்த எவரும் படம் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அவ்வளவு க்யூட்டான விஷுவல்களோடு நம்மை ஆகர்ஷித்தது அந்த சின்ன டீசர். அந்த டீசர் கொடுத்த உணர்வை படம் கொடுத்ததா? என்று கேட்டீர்கள் என்றால்  கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.

Sep 18, 2012

நெல்லை சந்திப்பு



ரத்தத்தை பார்த்தாலே மயங்கி விழும் ஒருவன் மூன்று பேரை கொல்லும் அளவிற்கு மாறுகிறான். அதற்கு காரணம் என்ன? யார் அவனை இந்த நிலைமைக்கு துரத்தியது. நட்ட நடு ரோட்டில் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஒருவனை என்கவுண்டர் செய்வதில் ஆரம்பிக்கிறது படம். இன்னொரு பக்கம் அம்மா, அப்பா, அக்கா, அக்காவுக்கு நிச்சயம் செய்யப் பட்டிருக்கும் மாமா, என்று அற்புதமான குடும்பம் கொண்ட ஹீரோ. அஸிஸ்டெண்ட் கமிஷனரின் கீப்புக்கு பிறந்த பெண் தான் ஹீரோவின் காதலி. இப்படியாக போகும் கதையில் என்கவுண்டரினால் ஒரு திடீர் திருப்பம் ஏற்படுகிறது. அதை இரண்டு மணி நேரப் படமாய் பரபரப்பாய் சொல்ல முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் நவீன். கே.பி.பி.

Sep 17, 2012

கொத்து பரோட்டா - 17/09/12

டீசல், பெட்ரோல், கேஸ் விலையேற்றம், கேஸ் கட்டுப்பாடு போன்றவைகளுக்கான காரணங்களை இன்றைய தினசரிகளில் இந்திய பெட்ரோலியத்துறை வரிசைப் படுத்தியிருக்கிறது.  அவர்கள் பக்க நியாயத்தை சொல்லிவிட்டு, இதற்கு மாற்றாக விலையேற்றத்தைப் பற்றி விமர்சிக்காமல், மாற்று ஐடியாக்களை கொடுத்தால் வரவேற்கிறார்களாம். நிச்சயம் இது ஒரு சவால்தான். அவர்களுடய சவாலை ஏற்று ஏன் நாம் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கக்கூடாது?. காந்திய மக்கள் இயக்கம் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல போராட்டங்களை செய்துவருகிறது. அவர்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அரசுக்கு மதுக்கடைகளால் கிடைக்கும் வருமானத்தை மதுக்கடையில்லாமல் வருமானத்தை எப்படி கொண்டு வர முடியும் என்று மாற்று ஐடியாக்களை கொடுத்திருந்தார்கள். அதைப் போல மக்களிடமே அரசு கேட்டிருக்கிறது. நாம் கொடுக்க முயற்சிக்கலாமே?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 15, 2012

சுந்தரபாண்டியன்

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் சசிகுமாரை பெரும்பாலான மக்களுக்கு பிடிக்கும். அதற்கு காரணம் அவரின் முந்தைய சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் என்ற மூன்று வெவ்வேறு விதமான ஜெனரில், நல்ல படங்களை தொடர்ந்து கொடுத்ததால் கிடைத்த மரியாதையான சாப்ட்கார்னர். அதற்கு அடுத்த படங்களான ஈசன், போராளி போன்ற படங்கள் சரியாக போகவில்லை. ஆனாலும் நல்ல ஓப்பனிங்கை மக்கள் கொடுத்தார்கள். சென்ற படங்களின் தோல்வியால் தானோ என்னவோ இந்தப்படத்திற்கு மிக லோஃப்ரோபைலான விளம்பரங்களை முன் வைத்து படம் பேசட்டும் என்று நினைத்து விட்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கு ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது.  சரி இப்போது படத்துக்கு வருவோம்.

Sep 14, 2012

Life Is Beautiful

சேகர் கம்மூலாவின் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது முதல் படமான டாலர் ட்ரீம்ஸில் ஆரம்பித்து, ஆனந்த், கோதாவரி, ஹாப்பிடேஸ், லீடர் என்று வரிசைக்கட்டி எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். இவரது படங்கள் எல்லாம் மிக மெல்லிதான நகைச்சுவையுடன், பெரும்பாலும் லைட்டான உணர்வுகளூடே பயணிக்கும் கதைகளாகத்தானிருக்கும். அதில் கொஞ்சம் விலகியது லீடர் திரைப்படம். இவரது ஹாப்பி டேஸை இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். ஆனால் அதே படத்தை வேறு ஒரு மொந்தையில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை.
அமலா கணவனை இழந்தவர். அவருடய மகன் சீனு, இரண்டு மகள்களை ஹைதராபாத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பி அங்கேயே படிக்க சொல்கிறார். மூவரில் சீனு இன்ஜினியரிங் பைனல், அடுத்த சத்யா டாக்டருக்கு படிக்கவிருப்பவள், கடைக்குட்டி சின்னி. இவர்கள் மூவரும் ஹைதையில் செட்டிலாகிறார்கள்.  இவர்கள் இருக்கும் காலனிக்கும் பக்கத்தில் இருக்கும் பணக்கார காலனிக்கும் எப்போதும் தகராறு. காலனியில் சீனுவின்  முறைப்பெண் பத்மா இருக்க, இருவருக்கும் காதல். சீனு வரும் அதே நாளில் புதியதாய் குடிவரும் லஷ்மி எனும் பெண்ணுக்கும் தெலுங்கான  நாகராஜுக்கும் காதல். கொஞ்சம் இண்டெலெக்‌ஷுவலான பையனான அபி தன்னை விட வயது அதிகமான பெண்ணான சிரேயாவுடனான  காதல் இவர்களின் காதல் எல்லாம் என்னவாயிற்று? அமலா ஏன் இவர்களை ஹைதைக்கு படிக்க அனுப்பினார்? என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
ஆஸ்யூஷுவல் வாய்ஸோவரில் கதை ஆரம்பிக்கிறது. கொஞ்சம் Feminine ஆனா சீனு, க்யூட்டான ஹீரோயின். அதிபுத்திசாலி அபி. படிக்காத ஆனால் மனதில் தங்கமான தெலுங்கானா டயலாக்டில் பேசும் நாகராஜ் என்று டெம்ப்ளேட்டான கேரக்டர்கள்தான் அதை வெளிப்படுத்தும் விதத்தில் சுவாரஸ்யமாய் தந்திருக்கிறார்கள். முக்கியமாய் நாகராஜ், வரலஷ்மி காதல். ஸ்ரேயாசரண், அஞ்சலி ஜாவேரி, மற்றும் ஓரிரு நடிகர்களைத் தவிர எல்லோருமே புதுமுகங்கள். அனைவரும் சிறந்த நடிப்பை கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். ஹீரோ சீனுவை விட, அபி, நாகராஜ், கேரக்டரில் வரும் பையன்கள் நன்றாக செய்திருக்கிறார்கள். பெண்களில் பத்மா, வரலஷ்மி இருவரும் சிறப்பு. அமலா வெகு நாட்களுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு சில நிமிடங்களும், க்ளைமாக்ஸில் ஒரிரு நிமிடங்கள் மட்டுமே வருகிறார். சொல்லிக் கொள்ளும்படியாக ஏதுமில்லை. அவர் மீண்டும் நடித்திருக்கிறார் என்பதைத் தவிர. ஸ்ரேயா வழக்கம் போல ஸ்மார்ட் அண்ட் க்யூட். அஞ்சலி ஜாவேரி வரும் காட்சிகள் சுவாரஸ்யமாய் இருந்தாலும் அவரது கேரக்டர் ஸ்கெட்சியாய் இருப்பதாய் ஒட்டவில்லை.
மிக்கி ஜே.மேயரின் இசையில் வழக்கம் போல் தனிப்பாடலாய் இல்லாமல் மாண்டேஜுகளில் வருவதால் மென்மையான இசை வருடுகிறது. பின்னணியிசையில் பெரும்பாலான நேரங்களில் ச..ரி..க..ம. ப..த..நி.ச.. சா..நீ.த..ப.. ம.. க..ரி..ச என்றே விதவிதமான ஒலிகளில் வாசிப்பதை தவிர்த்திருக்கலாம்.  விஜய்யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். கதையில் பெரும்பாலும் மழையும் ஒரு கேரக்டராய் வலம் வருவதால் அந்த மூட் சரியாய் நம்முடன் பயணிக்கும் படியாய் செய்திருக்கிறார். அதே போல் மாண்டேஜ் காட்சிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். தோட்டா தரணியின் காலனி செட் அழகு.
எழுதி இயக்கியவர் சேகர் கம்மூலா. வழக்கமாய் சின்னச் சின்ன உணர்வுகளின் வெளிப்பாடுகளை அதுவும் இளைஞர்களின் மன ஓட்டங்களை மிக அழகாய் வெளிப்படுத்தும் இயக்குனர்களில் ஒருவர். அதை மீண்டும் நாகராஜ், லஷ்மி இடையே ஆன காட்சிகளில் அழகாய்  வெளிப்படுத்தியுள்ளார். அபி, ஸ்ரேயா சரண் சம்பந்தப்பட்ட விமான காட்சியில் அவ்வளவு களேபரத்திலும் முத்தமிடும் இடம்.  ரெண்டு காலனிக்குமிடையே ஆன ப்ரச்சனைகளுக்கு நடுவே பணக்கார வீட்டு பெண் சீனுவின் மாமா பையன் லவ்வி கல்யாணம் செய்து கொண்டு விடும் இடம். தன் தங்கை அவளுடய பாய் ப்ரெண்டுக்காக தன்னை புறக்கணிக்கிறாள் எனும் போது சீனு அவஸ்தை படும் காட்சி. பாடல்களில் வரும் மாண்டேஜ் சீன்கள், பளிச், பளிச்சென வரும் வசனங்கள், என ஆங்காங்கே தன் முத்திரையை பதித்திருந்தாலும் முதல் பாதியில் எப்போது இடைவேளை வரும் என்று  நெளியும் அளவிற்கு மகா லெந்த். சரி இரண்டாவது பாதியில் சரி செய்துவிடுவார் என்று நினைத்தால் அது மிக ஸ்லோவாக செல்கிறது. எடுத்துக் கொண்ட விஷயங்களை எப்படி ஆரம்பித்தாரோ அதே ஃபேஸில் முடிக்க முடியாமல் தடுமாறியிருக்கிறார்.  பல காட்சிகள் ஹாப்பி டேஸில் பார்த்த காட்சிகளே இருப்பதால் கொஞ்சம் அலுப்பூட்டத்தான் செய்கிறது. பக்கத்து நிலத்தில் உள்ள மரத்தை வைத்து கட்டடம் கட்ட சட்டப்படி தடை வாங்கும் மாமா. அதை உடைக்க, வில்லன்கள் அம்மரத்தை ஆசிட் ஊற்றி சாகடிப்பது எதற்கு? அந்த கதை என்னவானது? இப்படி சில கதைகள் லூப்பில் விட்டிருக்கிறார். எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க போனால் ஒரு முறை பார்க்கலாம். என்னைப் போன்ற கம்மூலாவின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள் -23

அடர் மழை

மூடிய கார் கதவுகளுக்குள் 

ஏஸியின் குளிர்

நிர்வாணமாய் கால் அகட்டி

தொங்கும் தந்தூரி சிக்கன்

மழைக்கு ஒதுங்கிய 

முழுக்க நனைந்த வெண்ணுடை 

டைட் ஸ்லீவ் பெண்

யார் கண்ணுக்கும் 

தந்தூரி சிக்கன் தெரியவில்லை.

கேபிள் சங்கர்

Sep 13, 2012

Free Fall

மூன்று மணி இருக்கும் வெய்யில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. காலையிலிருந்து சரியான அலைச்சல். சமிபத்தில் படம் பிடித்ததை வெட்டி, ஒட்டும் வேலை ஓடிக் கொண்டிருந்தது. அவசரமாய் வேறொரு ஸ்கிரிப்டை என் லேப்டாப்பிலிருந்து மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று வீட்டிற்கு போய்க் கொண்டிருந்தேன். டிராபிக் கண் முழி பிதுங்கியது. ஒரு பெட்டிக் கடையில் வாட்டர் பாட்டில் வாங்கி மெதுவாய் குடிக்க ஆரம்பித்தேன். ரெண்டு வாய் அண்ணாந்து வேடிக்கைப் பார்த்தபடி குடித்துக் கொண்டிருந்த போது ஷீனமாய் ஒரு அலறலோடு, எதிரே இருந்த மூன்று மாடி ப்ளாட்டிலிருந்து ஒரு உருவம் கீழே வந்து கொண்டிருந்தது. படிகளிலிருந்து அல்ல அந்தரத்திலிருந்து.


Sep 12, 2012

Raaz -3

பொதுவாகவே இந்திய ஹாரர் படங்களை அவ்வளவு விரும்பி பார்த்தவனில்லை. பல சமயங்களில் ஹாலிவுட், அல்லது கொரிய ஹாரர் படங்களை அப்படியே சுட்டு நம்மை இம்சை படுத்துவார்கள். அதனால் Raaz படத்தின் முந்தைய இரண்டு பகுதிகளை நான் பார்த்ததில்லை. என்னவோ தெரியவில்லை பிபாபாஷாவினால் இந்த படத்தை பார்கக் வேண்டுமென்று தோன்றியது. எண்ணம் தோன்றியது வேஸ்டாகவில்லை என்றே சொல்ல வேண்டும்.


Sep 11, 2012

சாப்பாட்டுக்கடை -One MB


என்னடா சாப்பாட்டுக்கடைக்கு பெயர் ஒன் எம்.பியா? என்று யோசிக்கத்தான் செய்வீர்கள். அதே சந்தேகம் எனக்கு வந்து அவர்களிடம் கேட்டதற்கு இங்கு அளிக்கப்படும் உணவுகள் பெரும்பாலும் சேட் மற்றும் லைட் டிபன் வகைகள் மட்டுமே என்பதால் இந்த உணவகத்திற்கு இம்மாதிரியான பெயர் வைத்திருப்பதாய் சொன்னார்கள்.

Sep 10, 2012

கொத்து பரோட்டா 10/09/12

திரும்பவும் பெட்ரோல் விலை உயரப்போகிறது போலிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளை விட டீசல் விலை நம் நாட்டில்தான் குறைவாம். பெட்ரோல் விலை மிக அதிகம் என்பதை சொல்லக் காணோம். கேஸ் சிலிண்டர் விலை வேறு ஏற்றியாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குடும்பத்திற்கு நான்கிலிருந்து ஆறு சிலிண்டர்கள்தான் செலவாகிறதாய் கணக்கெடுப்பில் கண்டு பிடித்திருக்கிறார்களாம். எனவே ஆறுக்கு மேல் சப்ளை செய்யப்படும் சிலிண்டர்களுக்கு அரசின் சகாயவிலை இல்லாமல் மார்கெட் விலைக்குத்தான் தருவார்களாம். நம்ம வீட்டுல எத்தனை சிலிண்டர் ஆவுதும்மா ஒரு வருஷத்துக்கு என்று மனைவியிடம் கேட்டதற்கு பன்னெண்டு என்றார். ‘அட பரவாயில்லையே வீட்டுல எத்தனை சிலிண்டர் யூஸ் பண்றது எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டீங்க?” என்று ஆச்சர்யப்பட்டு ஒரு பார்வை பார்த்தார். விலை ஏறப் போவது என் பர்சை பதம் பார்க்கும் விஷயமாய் இருந்தாலும், அந்த ஒரு பார்வையில் இருந்த ஆச்சர்யத்திற்காகவும், லேசான காதலுக்காகவும், விலையேற்றத்திற்கு காரணமான அரசை திட்டுவதை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படியெல்லாம் நம்மளை சகஜமாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sep 9, 2012

மன்னாரு

பல பேருக்கு நல்ல ஆர்டிஸ்ட் கிடைப்பார்கள். ஆனால் நல்ல கதையோ, அல்லது திரைக்கதையோ அமையாது. சில பேருக்கு நல்ல கதை அமையும். நல்ல ஹீரோ அமைய மாட்டார்கள். இன்னும் சில பேருக்கு நல்ல கதை அமையும் ஓரளவுக்கு கதைக்கு ஓகேவான ஹீரோவும் கிடைப்பார்கள் ஆனால் திரைக்கதையில் சொதப்பிவிடுவார்கள். இதில் மூன்றாவது வகைதான் மன்னாரு.

ஹீரோ மன்னாரு லாரியில் லோடடிப்பவன். வழக்கமாய் ஷகீலா படம் பார்த்துவிட்டு நண்பன் ரூமில் படுத்துவிட்டு போகிறவன். அன்றைக்கும் அதே போல் படுக்க போக, அடுத்த நாள் நண்பன் தன் திருட்டுக் கல்யாணத்திற்கு சாட்சிக் கையெழுத்துப் போட கூட்டிப் போகிறான். திருமணமும் நடக்கிறது. அவர்களை வழியனுப்ப மன்னாரும் பஸ்ஸ்டாண்டுக்கு போக, மணப்பெண்ணின் தந்தையும், அவளை கட்ட தயாராய் இருந்த எம்.எல்.ஏ பையனும் ஆள் படையுடன் வர,  வேறு வழியில்லாமல் நண்பனுடன் காதல் மனைவியை அனுப்பி வைத்துவிட்டு, தான் பின்னால் வருவதாய் சொல்லி வில்லன் கும்பலிடமிருந்து தப்பிக்க நினைக்கிறான் காதலன். நண்பனின் காதலியை கூட்டிக் கொண்டு போய் தங்க ஹோட்டலில் ரூம் கேட்கப் போக, எசகுபிசகாய் மன்னாரு தன் அண்ணனிடம் மாட்டிக் கொள்ள, ஊரே இவன் அந்தப் பொண்ணை திருமணம் செய்து கொண்டு வந்துவிட்டிருக்கிறான் என்று நம்புகிறது. அந்தப் பெண்ணும் வாய்மூடி இருக்க, இதைக் கேட்டு மன்னாருவின் காதலி மல்லிகா மனமொடைகிறாள். பின்பு என்ன நடந்தது என்பது தான் கதை.
மன்னாருவாய் அப்புக்குட்டி. அவருக்கு ஏற்ற கேரக்டர். ஆனால் அவரின் கேரக்டர் மேல் பரிதாபம் வர வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கெட்டிருக்க, வேஸ்டாய் போய்விட்டது. ஓப்பனிங் காட்சியில் ரஜினியின் பாடலோடு இவருக்கு வரும் ஓப்பனிங் கொஞ்சம் ஓவர் தான். சரி காமெடியாய் எடுத்துக் கொள்வோம். பட்.மன்னாருவின் அப்பாவே அந்தாத்தண்டி உள்ள பிள்ளையை கட்டி வைத்து அடிப்பார் என்பதெல்லாம் படு ஓவர். நடிப்பென்று பார்த்தால் ஒன்றும் பெரிதாக சொல்ல முடியாது.

சுவாதிக்கு பொருத்தமான கேரக்டர்தான். அவருக்கு டப்பிங் கொடுத்தவர் தான் சொதப்பியிருக்கிறார். அவருக்கும் பெரிதாய் நடிக்க ஏதுமில்லாத கேரக்டர். மன்னாருவின் காதலியாய் வரும் மல்லிகாவின் நடிப்பு ஓகே. தம்பி ராமையா நடித்திருக்கிறார். வரும் காட்சிகளில் எல்லாம் பேசிக் கொண்டேயிருக்கிறார். அவர்தான் வசனகர்த்தா. இன்னும் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். அதில் மன்னாருவின் அப்பாவாக வருபவர் கொஞ்சம் கவனிக்கத்தக்கவராய் இருக்கிறார்.
கொடைக்கானலனில் தட்பவெப்பத்தை அழகாய் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அகு அஜ்மல். பாடல்களில் ரெண்டொரு பாடல்கள் ஓகேதான். என்றாலும் அதை படமாக்கிய விதத்தில் அரத பழசாய் இருப்பதால் இம்ப்ரசிவாக இல்லை.

எழுதி இயக்கியவர் ஜெய்சங்கர். நல்லதொரு கதையை வைத்துக் கொண்டு, அதை சிறப்பான திரைககதையாக்க தவறியிருக்கிறார். அதுவும் பல காட்சிகளில் லீனியராய் இல்லாமல் ஒவ்வொரு முறையும் ப்ளாஷ்பேக் போய் வருவது ஏதோ ஒரு முறை சுவாரஸ்யம் தட்டும். ஆனால் தொடர்ந்து அதே முறையை பயன்படுத்தியிருப்பது கொட்டாவியை வரவழைத்துவிடுகிறது. அதே போல மேக்கிங்கிலும் நிறைய நாடகத்தனம். நல்ல முடிச்சு.ஆங்காங்கே சில காட்சிகள் நன்றாக இருந்ததைத் தவிர பெரிதாய் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
கேபிள் சங்கர்

Sep 8, 2012

பாகன்.


 நண்பனுக்கு பிறகு ஹீரோவாய் ஸ்ரீகாந்த் வலம் வந்திருக்கும் படம்.  அமீரின் உதவியாளர் அஸ்லாமின் இயக்கத்தில், வேந்தர் மூவீஸின் அடுத்த வெளியீடு. போன வாரம் ஆடியோவை வெளியிட்டு, இந்த வாரம் படத்தை வெளியீடும் அளவிற்கு என்ன அவசரம் என்றே தெரியவில்லை. படங்களை வாங்கினால் மட்டுமே போதாது. அது மக்களிடம் ரீச்சாக வைக்க வேண்டியது ஒரு விநியோகஸ்தரின் கடமை. நல்ல படம் தானாய் ஓடும் என்பதெல்லாம் பழம் பேச்சு.சரி.. படத்துக்கு வருவோம்.

Sep 5, 2012

Run Baby Run

 தட்டத்தின் மறையத்து, 24 ஃபீமேல் கோட்டயம் போன்ற படங்கள் கொடுத்த நம்பிக்கையில் மீண்டும் தைரியமாய் மோகன்லால் படத்தை பார்க்க போய்விட்டேன். முன் சொன்ன படங்கள் எல்லாம் நவ கேரள இளைஞர்களின் படங்கள். ஆனால் இந்தப் படமோ, பழைய ஜோஷி, ரொம்ப பழைய மோகன்லால், ஆர்.டி.ராஜசேகர் என்று பழகிய டீம். ரிஸ்க் எடுப்பதுதான் நமக்கு ரஸ்க் சாப்பிடுவது போலத்தானே என்ற தைரியத்தில் பார்க்கப் போனவனை அழுந்தப் பிடித்து உட்கார வைத்துவிட்டது இந்த ரன் பேபி ரன்.

Sep 4, 2012

தமிழ் சினிமா ரிப்போர்ட் - ஜூலை 2012

சென்ற மாத அதிர்ச்சியான சகுனிக்கு பிறகு இந்த மாதம் பில்லா, நான் ஈ போன்ற பெரிய படங்கள் வெளியான மாதம். பில்லாவுக்காக அதற்கு முந்தைய வாரம் வெளியான நான் ஈயை தூக்கிவிட்டு பில்லாவை போட்டவர்களின் தியேட்டர்களில் ஈ ஓட்டப்பட்ட காரணத்தால் மீண்டும் நான் ஈ யை போட்டு கல்லா கட்டினார்கள்.

Sep 3, 2012

கொத்து பரோட்டா 03/09/12

என் ட்வீட்டிலிருந்து
அவளை உனக்கு பிடிக்கிறதென்றால் உடன் போய் சொல்லிவிடு வேறொருவன் போய் சொல்வதற்குள்.

உன்னை விரும்புகிறவனை புறக்கணிக்காதே. நீ தீவிரமாய் கற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் போதுதான் வைரத்தை இழந்தது புரியும்.

என் நம்பிக்கையை இழக்கும் போதே என்னையும் இழந்துவிடுகிறாய்.

உனக்கு பொறாமை 

என்று சொன்னவளுக்கு நான் அவளை இழக்க விரும்பவில்லை என்று இன்னொரு அர்த்தம் இருப்பது தெரியவில்லை

நாம் வளர்வதால் நண்பர்களை இழக்கிறோம் நிஜமானவர்கள் யார் என்று தெரிந்து விடுவதால்.

வாழ்க்கை இன்ஸ்ட்ரக்‌ஷன் மேனுவலோடு வருவதில்லை. அதனால் Trail And Error சகஜம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@