Thottal Thodarum

Sep 3, 2012

கொத்து பரோட்டா 03/09/12

என் ட்வீட்டிலிருந்து
அவளை உனக்கு பிடிக்கிறதென்றால் உடன் போய் சொல்லிவிடு வேறொருவன் போய் சொல்வதற்குள்.

உன்னை விரும்புகிறவனை புறக்கணிக்காதே. நீ தீவிரமாய் கற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் போதுதான் வைரத்தை இழந்தது புரியும்.

என் நம்பிக்கையை இழக்கும் போதே என்னையும் இழந்துவிடுகிறாய்.

உனக்கு பொறாமை 

என்று சொன்னவளுக்கு நான் அவளை இழக்க விரும்பவில்லை என்று இன்னொரு அர்த்தம் இருப்பது தெரியவில்லை

நாம் வளர்வதால் நண்பர்களை இழக்கிறோம் நிஜமானவர்கள் யார் என்று தெரிந்து விடுவதால்.

வாழ்க்கை இன்ஸ்ட்ரக்‌ஷன் மேனுவலோடு வருவதில்லை. அதனால் Trail And Error சகஜம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@



அட்டக்கத்தி
50 பேரை திருமணம் செய்ததாய் சொல்லப்படும் சஹானாவை பற்றி நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு பெண் மீதி நாற்பத்தொன்பது பேருக்கு தெரியாமல் உறவு வைத்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் இருக்கிறது. ஆனால் திருமணம் செய்து குடும்பம் நடத்தக்கூடிய சாத்தியம் எப்படி என்று எவ்வளவு யோசித்தாலும் சிங்க் ஆக மாட்டேனென்கிறது. இதில் உட்சபட்சமான விஷயம் என்னவென்றால் பக்கத்து பக்கத்து தெருவில் இருக்கும் இரண்டு பேரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்திருப்பதும், அவர்கள் அம்மாக்கள் இருவரும் மார்க்கெட்டில் இவள் தன் மருமகள் என்று ஆளாளுக்கு குடுமிப்பிடி சண்டை போட்டிருப்பதும் தான். வழக்கமாய் பெண்கள் தான் சில விஷயங்களை வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தைப்படுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இவளை கல்யாணம் செய்து பணம் கொடுத்து ஏமாந்த அத்தனை ஆண்களும் தாங்கள் ஏமாந்ததை வெளியே சொல்லவே வெட்கப்பட்டு அமைதியாய் இருந்திருக்கிறார்கள்.கிட்டத்தட்ட முக்கால் வாசிப் பேர் இந்தப் பெண் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று சொன்னதால் வீட்டிலிருந்தே படி என்று சொல்லாமல் ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள். வழக்கமாய் படிப்பு என்ன படிப்பு என்று ஆணாதிக்கமாய் சொல்லாமல் தன்னை திருமணம் செய்த பெண்ணின் எதிர்காலத்திற்காக உடன் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் இந்த ஆண்கள் எல்லோரும். நான்கு பேரை மட்டுமே திருமணம் செய்து ஏமாற்றினேன் என்று நேற்று பெங்களூரில் கைதான சஹானா சொல்லியிருக்கிறார். நான் போன வாரமே சொன்னேன் இல்லை இந்த ஆம்பளைங்க எல்லாருமே அட்டைக்கத்திங்கன்னு.. ம்ம்ஹும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கசாப்பை தூக்கிலுடுவதை பற்றி ஏகப்பட்ட விவாதங்கள் இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவனை தூக்கிலடக்கூடாது என்று ஒரு குழுவும், இன்னொரு குழு நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் பரிதாபமான சாவுக்கு காரணமானவனை உயிருடன் விட்டு வைக்கக் கூடாது என்றும் சொல்லி வருகிறார்கள். என்னைப் பொறுத்த வரை தண்டனை என்ற ஒன்று இருந்தால்தான் தவறு செய்ய பயப்படுவார்கள். அதுவும் இம்மாதிரியான தீவிரவாதிகளை தூக்கிலிடுவதால் ஒரு மயிரு மனிதநேயம் கெட்டுப் போகப் போவதில்லை. பாகிஸ்தான் தீவிரவாதிகளால் பாம் வைத்து கொல்லப்பட்ட எத்தனையோ பேர்களின் குடும்பங்களில் ஒருவரை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எதுவும் தெரியாத அப்பாவிகளான அவர்க்ளை கொல்ல யோசிக்காத மனித நேயத்தை இவர்கள் மீது காட்ட அவசியமே இல்லை. என்னைப் பொறுத்தவரை இவ்வளவு செலவு செய்து இது நாள் வரை உயிரோடு விட்டதே நம்ம வரிப்பணத்துக்கு வந்த கேடுன்னுதான் சொல்வேன்.
############################# 
”அட்ஜெஸ்ட் பண்ணிட்டு வாழுங்க” என்ற ஒரு வித்யாசமான தீர்ப்பை நீதிபதி ஒருவர் சமீபத்தில் கணவன் தன்னை தொடர்ந்து அடிக்கிறான் என்பதற்காக விவாகரத்துக் கேட்டிருந்த பெண்ணிடம் சொல்லியிருக்கிறார். “உங்க அம்மாவிடம் கேள். உன் அப்பாவிடம் அடிவாங்காமல் இருந்திருக்கிறாரா? என்றும், இதில் உட்சபட்சமாய் சமீபத்தில் மனைவியை அடித்த வழக்கில் ஜெயிலுக்குப் போன பிரபல நடிகர் தர்ஷனும் அவர் மனைவியும் மீண்டும் சேர்ந்து குடும்பம் நடத்தவில்லையா? என்று கேட்டிருப்பது படு கொடுமை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்ரீதேவியின் இங்கிலிஷ் விங்கிலீஷ் பட ப்ரொமோஷனுக்காக சென்னை வந்திருந்தார். தமிழ் சினிமாவின் இயக்குனர்கள்,டெக்னீஷியன் எல்லோரும் கடினமாய் உழைப்பதாகவும், கமல், ரஜினி ஆகியோர் இன்னமும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பதை பற்றி தான் பெருமை கொள்வதாகவும், தானும் அவர்களுடன் சேர்ந்து நடிக்க ஆவலாய் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். இவருக்கு ஆவல் இருக்கலாம் அவர்களுக்கு இருக்கா என்று கேட்டீங்களா ஸ்ரீதேவி?.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்களின் டீசர்களும், கவுதம் மேனன், இளையராஜா காம்பினேஷன் வேறு எதிர்பார்ப்பை ஏற்றி விட்டிருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த ஆல்பம் கொடுத்ததா? இல்லையா?என்று ஒரு சண்டை இணையத்தில் ஓட ஆரம்பித்ததிருக்கிறது. வழக்கமாய் ராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் அத்தனையும் கேட்டமாத்திரத்தில் ஹிட்டடித்துவிடக்கூடிய ட்யூன்களாய்த்தான் இருக்கும். இந்தப்படத்தில் யுவனின் குரலில் வரும் ‘சாய்ந்து..சாய்ந்து” “காற்றைக் கொஞ்சம்’ “என்னோடு வா..வா’ ஆகிய பாடல்கள் ஹிட் ரகம் என்பதை உறுதி செய்திருக்கிறது. முதல் முறை பார்த்த ஞாபகம் பாடலின் ஆர்கஸ்ட்ரெஷன், மற்றும் அரேஞ்மெண்ட்ஸ் நம்மை அப்படியே ஆக்கிரமிக்கிறது.மீதி பாடல்கள் கவுதமின் படமாக்கும் வித்தையில் மெருகு பெற்று பார்க்கும் போது கேட்கும் படியாகிவிடும் என்று தோன்றுகிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
நண்பர் பதிவர் ராஜராஜன் என்கிற ரோமியோ ஒர் பிரியாணி ரெடிமிக்ஸை வாங்கியிருக்கிறார். வாங்கி சமைத்த மாத்திரத்தில் அது படு கேவலமாய் இருக்க, உடனடியாய் அந்நிறுவனத்திற்கு மெயில் அனுப்பியிருக்கிறார். அதற்கு உடனடியாய் அந்நிறுவனத்திலிருந்து மன்னிப்பு கேட்டும், அந்த பாக்கெட்டின் கவரை கொடுத்தால் அவர் செலவு செய்து வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிடுவதாய் சொல்லியிருக்கிறார். ஆனால் இவரோ அந்த பாக்கெட்டை குப்பையில் போட்டு விட்டதாகவும். அட்லீஸ்ட் இனியாவது நல்ல தரமாக தயாரிக்கவும் என்று கூறிவிட்டு போனை வைத்திருக்கிறார்.  கேட்டால் கிடைக்கும் என்று நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு இந்த நிகழ்வு ஒர் உதாரணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பல இளம் இயக்குனர்களுக்கு என்னை நேரில் பார்க்காமலேயே பரிச்சயம் உண்டு. பெரும்பாலானோர் அவர்களது கதை விவாதங்களை சூட்டிங் போவதற்கு முன் என்னிடம் விவாதிப்பதுண்டு. சில பேர் என்னுடய சிறுகதைகளை குறும்படமெடுக்க அனுமதி கேட்டும் பேசுவார்கள். இம்முறை வென்ற நிதிலன் எப்போதாவது பேசுவார். திடீரென காணாமல் போய்விடுவார். அவரது புதிர் என்கிற குறும்படம் ஒன்றை நான் முன்னமே கொ.பரோட்டாவில் பகிர்ந்திருந்தேன். வித்யாசமான திரைக்கதையோடு சுவாரஸ்யமாய் அணுகியிருந்தார். போன மாதம் குற்றாலம் போயிருந்த போது சிக்னலே இல்லாத இடத்தில் இருந்து கீழே வந்ததும் வந்த முதல் கால் இவருடயதுதான். பைனல்ஸுக்கு இரண்டு கதை வைத்திருப்பதாய் சொனனார். இரண்டுமே சுவாரஸ்யமான முடிச்சுள்ள கதைகளன் தான். இரண்டாவதாகச் சொன்ன கதையைத்தான் நானும் தெரிவு செய்தேன்.  அவரும் அதையேத்தான் முடிவு செய்து எடுத்திருக்கிறார். மிக சுவாரஸ்யமான கலந்துரையாடலாய் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனது எங்களது கதை விவாதம். நல்ல நெகிழ்வான குறும்படம். இம்முறையும் அந்த போன் காலுக்கு பின் காணாமல் போய்விட்டார்.:) வாழ்த்துக்கள் நிதிலன். விரைவில் உங்களை பெரிய திரையில் பார்க்க ஆவலாயிருக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மீண்டும் சூப்பர் சிங்கர்
வழக்கம் போல மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சூடு பெற ஆரம்பித்துவிட்டது. இந்தப் பாடலை பாடிய கவுதமின் குரலில் இருந்த மெச்சூரிட்டியும், உணர்வும், பாடலை பாடிய விதமும் அட்டகாசம். இயல்பிலேயே நம்மை நெகிழ வைக்கக்கூடிய சிச்சுவேஷனும், ட்யூனும் அமைந்த பாடல். அதை மேலும் நெகிழ்வோடு அவன் பாடிய போது பல அழுததை நாடகம் என்று சொல்ல முடியாத வகையில் என் கண்களிலும் கண்ணீர். பாடிய பிறகு அச்சிறுவன் அப்பா தன் பிள்ளை பாடல் கற்றுக் கொள்ள பட்ட கஷ்டத்தைப் பற்றி சொன்னதை நாடகமாக்கியதை விஜய் டிவி தவிர்த்திருக்கலாம். கங்கிராட்ஸ் கவுதம். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
நிலக்கரி ஊழல் பிரச்சனையினால் பார்லிமெண்டே ஸ்தம்பித்துப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் நேற்று சோனியாவும், எதிர்கட்சி பிஜேபியின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச விழைந்திருக்கிறார். ஒரு விதத்தில் இந்த கெஸ்ட்சர் ஆரோக்கியமானதாகவே இருக்கிறது. எதிர்கட்சி ஆட்களுடன் சுமூகமாய் பழகும் இந்த பழக்கம் ஏன் நம்மூர் அரசியல்வாதிகளிடம் இருக்க மாட்டேன் என்கிறது?. பார்லிமெண்ட் நடக்காமல் முடக்குவதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று காங்கிரஸ் புலம்பியிருப்பது எல்லாம் படு காமெடி. 
@@@@@@@@@@@@@@@@@@@
ஜெயலலிதா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த இலங்கை வீரர்களின் நட்பு ரீதியான கால்பந்து போட்டியை எப்படி மத்திய அரசு அனுமதித்திருக்கலாம் என்றும், உடனடியாய் அவர்களை தமிழகத்தை விட்டே வெளியேற்ற வேண்டுமென்றும், இதை அனுமதித்ததன் மூலமாய் தமிழர்களின் மன உணர்வை காயப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இதற்கு அனுமதி கொடுத்த அரசாங்க அதிகாரியை சஸ்பெண்ட் செய்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். இது அவர்கள் இங்கே வரும் முன்னே தெரியாதா? என்ன?. எங்கே மற்றவர்கள் இதை வைத்து அரசியல் செய்துவிடுவார்களோ என்று பயந்து உடனடியாய் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பதாய் ஆடும் ஆட்டம் படு காமெடி.
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
What is the difference between a woman
in church and a woman in a bathtub. . . ?
Ans:
One has hope in her soul, the other has soap in her hole. . . .
கேபிள் சங்கர்

Post a Comment

25 comments:

கார்த்திக் சரவணன் said...

//அதுவும் இம்மாதிரியான தீவிரவாதிகளை தூக்கிலிடுவதால் ஒரு மயிரு மனிதநேயம் கெட்டுப் போகப் போவதில்லை//

correct....

unmaiyalan said...

கசாப்பை தூக்கில் போட கூடாது என்பர்களையும் தூக்கில் போடா வேண்டும் ...அதே மாதிரி 97 பேர்களை கொன்ற (34 குழந்தைகள் , 35 பெண்கள் ) அந்த கொலைவெறி நாய்களையும் , அதற்கு சப்போர்ட் பண்ணும் நாய்களையும் ,,,,ராஜிவை கொன்ற குற்றவாளிகளில் என்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர்களையும் தூக்கில் போட வேண்டும்...அவர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் .................அரசியல்வியாதிகளை என்ன செய்ய ?.......

தருமி said...

கசாப் = சொன்னது சரி.

குறும்படம் - menopause தாண்டி ... அதை, centre point-யை ஜீரணிக்க முடியலையே...
படத்தில் பாட்டு நல்லா இருந்தது.
கதா நாயகன் கமல் மாதிரி நடித்திருந்தார். அதாவது, கமலுக்கும் சிகரெட் பிடிக்கத் தெரியாது இவர் மாதிரியே!

Rajan said...

மிகவும் நெகிழ்ச்சியான குறும்படம்

Ponchandar said...

குறும்படம் - - அம்மாவும், பெண்ணும் ஒரே சமயத்தில் பிள்ளை பெற்றுக்கொண்ட சம்பவங்கள் கேட்டதுண்டு, எனது கிராமத்தில் நடந்ததும் உண்டு... அதை படமாக கொண்டு வந்த நிதிலனுக்கு பாராட்டுகள் !
அம்மா கேரக்டரை இன்னும் கொஞ்சம் இளமையாக காட்டியிருக்கலாம்.

Ravikumar Tirupur said...

நல்ல கொத்து!

CS. Mohan Kumar said...

Why late???

G.Ragavan said...

குறும்படம் மிக அருமை. பலப்பல சிந்தனையுணர்ச்சிகளைத் தூண்டிவிடும் கதையமைப்பு. அதற்கேற்ற நடிப்பு. ஒவ்வொரு நிகழ்வையும் ரசித்தேன். சமீபத்தில் நான் பார்த்த படங்களிலேயே சிறந்தது இதுதான்.

விட்டுட்டுப் போக வந்தியா.. கொல்ல வந்தியா.. போயிரு.. பாக்கச் சங்கட்டமாயிருக்கு... அந்தப் பாட்டியின் நடிப்பு மிக அருமை.

மற்ற எல்லாப் பாத்திரங்களும் இயல்பாக நடித்திருந்தார்கள்.

என்னைப் பொருத்தவரை அந்த மகனை மட்டும் குற்றவாளியல்ல. அந்த முழுக் குடும்பமும் குற்றவாளிக் குடும்பமே. திரைப்படத்தில் மகன் மொத்தக் குடும்பத்தின் குறியீடு என்பது எனக்குப் புரிகிறது.

விவரம் தெரிந்து வீட்டில்தான் வைத்திருந்தான் முதலில். மனைவி, மகன், மகள், தம்பி, தம்பியின் மனைவி என்று அனைவரும் கொடுக்கும் அழுத்தமே அவனை அந்த முடிவுக்குத் தூண்டுகிறது.

ஆனாலும் வசதியாக இருக்கும் அந்த மகன் கொஞ்சம் ஒழுங்காக சிந்தித்திருந்தால் சரியான முடிவை எடுத்திருக்கலாம். என்ன செய்வது! விதி வலியது.

சரி. ஒரேயொரு வருத்தம். ஒரு மேடைப் பேச்சாளருக்கு ள ழ வரவில்லை என்பது வருத்தமே. அது படத்திற்கு குறையல்ல.

'பரிவை' சே.குமார் said...

இந்த வார கொத்துப் பரோட்டா காரம் கலந்த அழகிய சுவை.

Romeoboy said...

தலைவரே அது ஆச்சி மசாலா கம்பெனிகாரங்க :)

rajasundararajan said...

குறும்படம் ரெம்ப நல்லா இருக்கு. "போயிருப்பா! என்னெ விட்டிட்டுப் போயிருப்பா!"ன்னு சொல்றாப்ல அமைச்சிருக்கார் பாருங்க, ஒரு தாய்க்கான லாஜிக் அதுதான்.

டைரக்டர் வாழ்க!

வவ்வால் said...

கேபிள்ஜி,

// இலங்கை வீரர்களின் நட்பு ரீதியான கால்பந்து போட்டியை எப்படி மத்திய அரசு அனுமதித்திருக்கலாம்//

ஹி..ஹி இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து ஆடுவதும், இலங்கை அணிவிரர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸில் ஆடியதும் ஏன் யார் கண்ணுக்கும் தெரியவில்லை, நீங்க கூட ஒன்றும் சொன்னதாக நினைவில்லை.


நீங்க ஃபுட்பால் வீரர்களை முன்னாடியே வரவிடாம செய்யாம அம்மையார் என்ன செய்தாங்களம் எனக்கேட்பதும் ஒரு காமெடித்தான்.

என்னய்யா நியாயம் கிரிக்கெட் ஆட வரும் போது ஒன்னும் சொல்லாம ஃபுட்பால் ஆடினா சொல்றது, ஃபுட்பால் என்ன பாவம் செய்தது.

சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப் பேஸ் ஃபவுண்டேஷனில் தான் எல்லா இலங்கை பந்துவீச்சாளர்களும் பயிற்சி எடுத்துக்கொண்டு உருவானார்கள்,இனியும் உருவாவார்கள், அதெல்லாம் ஏன்னு கேட்டிருந்தா இது ஓ.கே.

எல்லாமே தமாசு தான் :-))

விளையாட்டை விளையாட்டாகப்பார்க்கணும்.இல்லை புறக்கணிப்போம் என்றால் எல்லா விளையாட்டையும் செய்யணும், கிரிக்கெட் ஆடிப்போம்,ஃபுட்பாலை புறக்கணிப்போம் என்பது என்ன நியாயமோ?

Unknown said...

வணக்கம் கேபிள் சார்,
கசாபை தூக்கிலிடுவதால் ஒரு மயிரு மனிதநேயம் கெட்டுப் போகப் போவதில்லை என்ற உங்களின் கருத்தை நீங்கள் உண்மையாகவே உணர்ந்து தான் சொல்லுறிங்களா?
நீங்கள் உணர்ச்சி வேகத்தில் சொல்லுவதாகவே எடுத்துக் கொண்டாலும், தூக்கில் இடுவது தான் உங்களைப் பொறுத்தவரை தண்டனையா?
தான் செய்தது தவறு என்பதை உணர வைப்பது தானே அவனுக்கு அளிக்கும் உண்மையான தண்டனை ஆகும்.
உங்களைப் பொறுத்தவரை இம்மாதிரியான தீவிரவாதிகளை தூக்கிலிடுவதால் ஒரு மயிரு மனிதநேயம் கெட்டுப் போகப் போவதில்லை என்பதைப் போலத்தானே
ராஜீவின் குடும்பத்தினர், ராஜீவை கொன்ற குற்றவாளிகளை தூக்கிலிடுவதால் ஒரு மயிரு மனிதநேயம் கெட்டுப் போகப் போவதில்லை என்றும் அந்த இனமே அழிந்தாலும் தகும் என்றும் நினைத்திருப்பார்கள்.????
ராஜீவின் கொலைக்கு பழிவாங்கத்தானே இலங்கையில் போரே நடந்தது? உணர்ச்சி வேகத்தில் பேசுவதும் முடிவெடுப்பதும் எவ்வளவு ஆபத்து என்று 6 இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட தமிழர்களை நாம் காவு கொடுத்த பின்பும் உணரவில்லையே?
கசாப் முழுக்க முழுக்க மூளைச் சலவை செய்யப்பட்ட இயந்திரம் மட்டுமே அவனை கொல்லுவதால் எந்த பயனுமே இல்லை.
எய்தவனை விட்டு விட்டு அம்பை நொந்து ஒரு பயனும் இல்லை தானே...
சக மனிதனையோ, உயிரினத்தையோ, தாவரங்களையோ எக்காரணம் கொண்டும் அளிக்க சக மனதர்களுக்கு எந்த உரிமையும் யாருக்கும் கொடுக்கப்படவில்லை...
எனவே தயவு செய்து தூக்கு தண்டனைக்கோ மரண தண்டனைக்கோ ஆதரவாய் பேசாதீர்கள்..

vijayaragavan said...

If somebody comments / reviewing NeethaneEnPonvasantham songs, then either they all genres of music or nothing.
To my very little knowledge, it will take several days for a song to be understood completely in NEP.

vijayaragavan said...

If somebody comments / reviewing NeethaneEnPonvasantham songs, then either they *know* all genres of music or nothing.
To my very little knowledge, it will take several days for a song to be understood completely in NEP.

வவ்வால் said...

//If somebody comments / reviewing NeethaneEnPonvasantham songs, then either they *know* all genres of music or nothing.
To my very little knowledge, it will take several days for a song to be understood completely in NEP.
4:33 PM//

எப்படிய்யா இத்தனை அழுத்தமா ஒரு அறிக்கை விட முடியுது?

ஒரு வேளை அ, ஆ கத்துக்க 10 வருஷம் இவருக்கு ஆகி இருந்தால் ,எல்லாருக்கும் 10 வருஷம் ஆகணும் சொல்வாரோ?

பாட்டை கேட்டால் புடிக்கணும்... 100 வருஷம் கேட்டப்பிறகு பிடிக்கணும் என்றால் கல்லறையில் தான் பாட்டு ஒலிக்கும் ,அப்புறம் இது என்ன சிம்பொனியா ,சினிமாப்பாட்டு தான், படமோ,பாட்டோ நல்லா இல்லைனா உடனே தியேட்டர் விட்டு ஓடிவிடும் :-))

சினிமா பாட்டுக்கேட்க ந்ல்லா இருக்கான்னு பார்க்காம என்னமா தத்துவம் பேசுறாங்க :-))

ஒன்னும் தெரியாதவன் said...

Please Use Bamini Font

Nfgps; rhH>
frhig J}f;fpypl Ntz;Lk;> mjpy; vdf;Fk; vt;tpj khw;Wf; fUj;J ,y;iy> Mdhy; Mapuf;fzf;fhd mg;ghtp K];ypk;fisAk;> rpq;fs kf;fisAk;> khw;Wf;fUj;Jf; nfhz;l jkpoPo rNfhjuDf;Fk; JNuhfp gl;lk; nfhLj;J xopj;Jf; fl;baNjhL kl;Lky;yhJ ,iwahz;ikAs;s ehl;bd; ngUk;ghz;ik kf;fshy; Vw;Wf; nfhs;sg;gl;l gpujkiu me;ehl;bd; ghJfhg;G vy;yhtw;iwAk; Nfypf;$j;jhf;fp tpl;L gLnfhiy nra;j ghrpr GypfSf;F vLg;Gf;fshf nray; gl;l rhe;jd;> KUfd;> mwptofd; MfpNahiu vd;d nra;tJ?
,e;j tplaj;ij nrhy;tjhy; ,g;NghJ Gyp vDk; fz;zhb mzpe;J nfhz;L ghUq;fs; ehDk; JNuhfpahf njhpNtd;.

Muthukumara Rajan said...

ஜெயலலிதா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த இலங்கை வீரர்களின் நட்பு ரீதியான கால்பந்து போட்டியை எப்படி மத்திய அரசு அனுமதித்திருக்கலாம் என்றும், உடனடியாய் அவர்களை தமிழகத்தை விட்டே வெளியேற்ற வேண்டுமென்றும், இதை அனுமதித்ததன் மூலமாய் தமிழர்களின் மன உணர்வை காயப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இதற்கு அனுமதி கொடுத்த அரசாங்க அதிகாரியை சஸ்பெண்ட் செய்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். இது அவர்கள் இங்கே வரும் முன்னே தெரியாதா? என்ன?. எங்கே மற்றவர்கள் இதை வைத்து அரசியல் செய்துவிடுவார்களோ என்று பயந்து உடனடியாய் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பதாய் ஆடும் ஆட்டம் படு காமெடி.




I dont think CM should know all the permissions and requests given by their official. Only important items will come to CM picture. Approving the team for football match i dont think CM interficernce is needed.

(I Dont accept CM action on this. For me Sports is sports. How many years we need to fight It is friendly match. I feel that is good start for the smooth relation between this groups.)

vijayaragavan said...

Stupid Bat, read your comment again. Its symphony only. I think to you its only 'naaka mooka', 'kolaveri' are the great songs?! or something looted from somewhere. I am sure you didnt even know basics of music. try learn one music instrument then talk about the learning curve.

Blackpearl Logics said...

மூன்று நாலா கேட்டதுல "சாய்ந்து..சாய்ந்து” “காற்றைக் கொஞ்சம்’ “என்னோடு வா..வா","புடிக்கல மாமு","முதல் முறை" இந்த அஞ்சு பாட்டும்ரொம்ப நல்லா இருக்கு , , மீது இரண்டும் இப்போ எனக்கு பிடிக்கவில்லை ஒருவேளை படமா பார்க்கும் போது பிடிக்கலாம்

சுரேகா.. said...

கேட்டால் கிடைக்குமென்று காட்டிய ரோமியோவுக்கு நன்றி சொல்லிக்கலாம். ஆனால் கவரைத் தூக்கிப்போட்டதற்கு ..கண்டனங்கள் ! :))

பாவம்ங்க அந்தப் பொண்ணு சஹானா...50 பேரிலும் அன்பைத்தேடி, அது கிடைக்காம..பணத்தையாவது எடுத்துக்குவோம்னு நினைச்சிருக்கும்.

காப்பிகாரன் said...

குறும் படம் சூப்பர் சார்

Diya said...

Please be sure on what you are writing.. Dont use the noble word Church as simple as you think.. you are hurting us a lot...

தமிழ் பையன் said...

கொத்து பரோட்டா நல்லா இருக்கு. சூப்பர் சிங்கர் ரொம்ப டிராமா ஆயிடுச்சு. அண்ணே.. trial and error.. தப்பா வந்திருக்கு.

RAMG75 said...

Famous பேரீட்சைப் பழம் வாங்கி சாப்பிடும் போது அதில் மண் போன்ற எதோ இருந்தது. ஈ-மெயில் அனுப்பினேன். மன்னிப்பும் அடுத்த நாளே புதிய பாக்சும் அனுப்பினார்கள்.