Thottal Thodarum

Oct 31, 2008

நன்றி...நன்றி... நன்றி...


மீண்டும் ஓரு முறை ஓரே மாதத்தில் 12,775 ஹிட்ஸ்களும், இரண்டு மாதங்களில் 25,000 ஹிட்ஸ்களையும் கொடுத்த, என் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், என்னுடய் பதிவை தொடர்ந்து வாசிக்கும், உண்மை தமிழன், ராஜ்,ஜீவன், ஹரி,அருப்புகோட்டை பாஸ்கர், டமில் சினிமா, ராமன்,சிம்பா, ஆதிஷா, தமிழ்நெஞ்சம், ஆதிரை ஜமால், ஆகியோருக்கும், தவறாமல் பின்னுட்டமிடும், ஜூர்கேனுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்..

மேலும் என் பதிவு சிறக்க உங்கள் அன்பார்ந்த கருத்துக்க்ளை பின்னூட்டமிட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..

தயாநிதியும் - மாறனின் தெனாவெட்டும்...



திபாவளி திரைப்படங்கள் மழையில் நினைந்து போன புஸ்வாணங்களாகி போனதால்..ரசிகர்க்ள் அடுத்த பெரிய படங்களை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்..தீபாவளிக்கு ரிலீஸாகவிருந்த “வாரணம் ஆயிரம்” படத்தை சன் பிக்சர்ஸ்க்கு போட்டியாய் திரு தயாநிதி அழகிரி ஆரம்பித்திருக்கும் Cloud nine pictures தமிழகமெங்கும் விநியோக உரிமையை வாங்கியிருக்க.. அதே நேரத்தில் சன் பிக்சர்ஸ் ஜீவா நடிக்கும் ‘சிவா மனசுல சக்தி’ படத்துக்கு பதிலாய் ரொம்ப நாளாய் வெளியிடப்படாமல் காத்திருக்கும் ஜீவாவின் “தெனாவெட்டு” திரைபடத்தை அதே நவம்பர் 14ஆம் தேதி வெளியிட போகிறது..

வாரணம் ஆயிரம் திரைப்டத்தின் தொலைக்காட்சி உரிமை கலைஞர் டிவியிடம் இருக்க, அவர்களும் தினமும், தங்களது சேனல்களில் விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. சன் பிக்சர்சும், தெனாவெட்டின் பட பாடல்களை..ரீஷூட் செய்து தங்களது சேனல்களில் விளம்பர படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்

என்னதான் அவர்கள் விளம்பரபடுத்தினாலும்.. வாரணம் ஆயிரம் பாடல்கல் ஏற்கனவே மிகப் பெரிய ஹிட்.. தெனாவெட்டு படபாடல்கள் ஒன்றும் செல்ப் எடுக்கவில்லை.. இந்த நிலையில் சன் டிவியின் விளம்பரம் வெற்றி பெறுகிறதா? அல்லது.. கண்டண்ட் வெற்றி பெறுகிறதா என்று பார்ப்போம்..

கலைஞரும்.. காலில் விழுவதும்..



நேற்று ராஜ் டிவியின் செய்திகளை பார்த்து கொண்டிருந்தேன்..தமிழக் முதலமைச்சரிடம் இலங்கை தமிழர்களுக்கான நிதி காசோலைகளை பல பேர் கொடுப்பதை வரிசையாய் காட்டி கொண்டிருந்தார்கள்..

அதில் மனதை நெருடிய விஷயம் ஓன்று இருந்தது.. அது என்னவென்றால் காசோலையை கொடுத்த பின்பு வரிசையாய் வந்தவர்கள் எல்லோரும் அவ்ர் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர்..கலைஞர் அவர்களூம் அதை பற்றி எந்தவிதமான ரியாக்‌ஷனும் காட்டாமல் இருந்தது ஓரு உறுத்தலாகவே இருந்தது..

ஒரு காலகட்டத்தில் ஜெயலலிதாவின் காலில் விழும் கலாசாரத்தை பலமாய் எதிர்தவர் நம் தலைவர்..மற்றவர் காலில் விழுவது தனிமனித தன்மானத்துக்கு இழுக்கு என்று சொன்னவர்.. அவர்.. அப்படிபட்ட அவர் இதை தடுக்காதது ஏன்? ஓரு வேளை அவர் சொல்லியும், கேட்காமல் அன்பு மிகுதியில் பலர் அவரை முதல் முறையாகவோ.. பல நாட்களுக்கு பிறகாகவோ. சந்தித்த பரபரப்பில் அப்படி செய்திருக்கலாம்.. கலைஞரும் சொல்லி அலுத்திருக்கலாம்..


ஆனால் ராஜ்டிவி அதை ஓளிபரப்பாமல் தவிர்திருக்கலாம் இல்லையா? எல்லோரும் கலைஞரை கூட இருந்தே கவிழ்பதற்கே இருக்காங்க போலருக்கு..

கண்டேன் தமிழ்மணத்தை...

நான் பதிவு போட்டதன் விளைவாலே.. தமிழ்மணம் தன்னுடய பணியை மீண்டும் ஆரம்பித்துவிட்டது என்பதை மிக மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்..
அந்த மகிழ்ச்சியை கொண்டாட இதோ.. உங்களுக்காக

Oct 30, 2008

தமிழ்மணத்தை காணவில்லை..?

கடந்த இரண்டு நாட்களாய் கொஞ்சம் மெதுவாகவே டவுன்லோட் ஆன தமிழ் பதிவுகளின் திரட்டி தமிழ்மணத்தை மதியத்திலிருந்து காணவில்லை.. தமிழ் பதிவுலகில் பெரும் சேவையாற்றிய தமிழ்மணததை காணவில்லை என்பதை பார்க்கும் போது எனக்கு தேன்கூடு திரட்டிதான் நினைவுக்கு வருகிறது.

இதே போல்தான் கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்லோவாகி திடீரென்று காணாமல் போய்விட்டது..
அதை பற்றி எந்த தகவலும் இல்லை..எனக்கு மட்டும்தான் அப்படி வருகிறதா.. இல்லை எல்லோருக்கும் அப்படி இருக்கிறதா? என்று தயவு செய்து உங்கள் பதில்களை பதியுங்கள்..

தமிழ் மணம் திரும்பவும் வரும் வரை துக்கத்தை மற்பபதற்காக..மேலே உள்ள படம்
படித்ததில் பிடித்தது

ஏகனை பற்றி அஜித்தின் விமர்சனம்


தமிழ்மணம் வரும்வரை..பதிவர்கள் கீழ்கண்ட புதிய திரட்டிகளை உபயோகிக்கலாம்..
www.tamilish.com
www.tamilagam.net
www.thamilbest.com
www.in-tamil.com

”நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்?”


மதியம் சுமார் 2 மணியிருக்கும் ரொம்ப அர்ஜெண்டாய் என்னுடய குதிரையை (அதாங்க..நம்ம பைக்தான் அப்படி சொல்றேன்..மனசுக்குள்ள இளவரசன்னு நினைபபு) ஓட்டி சென்று கொண்டிருந்தேன்.. அதற்கு காரணம் என்னுடய இளவரசி சுலோசனா..பெயர்தான் சுலோவே தவிர பார்ட்டி செம பாஸ்டு..சாந்தம் தியேட்டரில் ஓரு முறை ட்புள் சீட்டில் நெருக்கமாய் உட்கார்ந்திருந்த ஓரு சூட்டு தருணத்தில்,அவளை தொட்டா சுடுமோன்னு நினைச்சுக்கிட்டு இருந்த நேரத்தில..படத்தில நைட் எபெக்ட்டுல சீன் வரும் போது கிஸ் அடிச்சவ, டார்கெட் முடிக்காததால் டீம் ஹெட் காய்ச்சும் காய்ச்சலிலிருந்து தப்பிக்கும் முடிவாய் “லேடீஸ் ப்ராப்ளம்”ன்னு அவன் எதுக்கு என்னனு கேட்க முடியாதபடி பீலாவிட்டுவிட்டு, எனக்கு மிஸ்ட் கால் கொடுத்திருந்தாள்.. (எப்ப கால் பண்ணியிருக்காங்கன்னு கேட்கிறீங்களா? அதுசரி அவங்க ரிசார்ஜ் பண்ற காசுக்கு எப்பதான் பேசுவாங்க..?)உடனடியாய் வந்தால் ரொம்ப நாளாய் கேட்ட மாயாஜால், ஈ.ஸி.ஆர் என்றாள்..

தேன் குடிக்கும் நரியின் ஆவலோடு அடுத்த செகண்ட் என்னுடய டார்கெட் முடிக்காவிட்டால் ஆப்பு அடிக்கும் டீம் லீடர், இந்த மாச இன்செண்டீவ் எதுவும் என் கண்ணுக்கு தெரியவில்லை..இருட்டு ஸீனில், திருட்டு முத்தம் என்னை விரட்டியது, இந்த முறை கொஞ்சம் தைரியமாய்.. எதாவது செய்யணும் அவ கேட்கறதுக்கு முன்னாலேயே..என்று நினைத்தபடி கிரீம்ஸ் ரோடுக்குள் நுழைந்தேன்.. அவளுக்கு ஆபீஸ் அங்கே தான் சங்கீதாவில் இருப்பதாய் சொல்லியிருந்தாள். என் கண்முன்னே ரோடு தெரியவில்லை.. சுலோவே தெரிந்தாள்.. உடனே வர சொன்னதன் பலனாய் நான் முக்கால் மணி நேரம் லேட்டாய் போகிறேன்..டைம் முக்கியம் இல்லாட்டா சுலோ கக்கிடும்..அனால் இந்த கதை நான் சுலோவை பார்க சென்றதை பற்றியல்ல.. அதற்கு முன்னால் நடந்த ஓரு விஷயத்தை பற்றித்தான்

படு வேகமாய் குதிரையை விரட்டி கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஓரு பைக்காரன் (நான் என்னை தவிர மற்றவர்களை இளவரசர்களாய் கருதுவதில்லை).. என்ன நினைத்தானோ தெரியவில்லை சடாரென்று வலது பக்கம் வண்டியை திருப்பினான்.. அதை எதிர்பார்காத நான் வந்த வேகத்தில் என்னுடய குதிரையின் ப்ரேக்கை எழுந்து நின்று போட்டு ஸ்கேட்டிங் பண்ணாத குறையாய் இங்கிலீஷ் பட ஸ்டைலில் தரையெல்லாம் டயர் மார்காய் தேய்த்து கொண்டு அவனுக்கும் எனக்கும் சில பல இன்ச்கள் இடைவெளியில் மிகப் பெரிய ஓரு விபத்து தவிர்க்கபட.. என்னுடய அவசரம், பதட்டம், சுலோ காத்திருக்கும் நினைப்பு, நான் சென்ற வேகம், விபத்தை தவிர்பதற்காக என்னுடய ரிஸ்க் எல்லாம் சேர்த்து பெருங்கோபமாய் வெகுண்டெழுந்து அந்த பைக்காரனை அவனையும், அவன் குடும்பத்தையும் தெரிந்தவர்கள் கூட அப்படி திட்ட மாட்டார்கள், நான் வாய்க்கு வந்தபடி திட்ட.. அவன் எந்தவித பதட்டமும் இல்லாமல்.. நேராய் என்ன பார்த்து

“நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்?” என்றான்.

Oct 29, 2008

TAMILAN என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா..



தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. இப்படி சோல்லி சொல்லியே நம்மள உசுப்பேத்தி விட்டுராங்க.. அப்படி உசுப்பேரிய நாம தமிழை தவிர எதையும் படிக்காம எத்தனை பேர் தமிழ்நாட்டு பார்டர் தாண்ட முடியாம இருக்கோம்? அது சரி அதைப்பத்தி நமக்கென்ன கவலை..அறிவுரை எல்லாம் மத்தவங்களூக்கு தானே..

தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று முதல்வர் அறிவித்தவுடன், தமிழில் பெயர் தேடி அலைய ஆரம்பித்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தமிழிலேயே அர்த்தம் சொன்னால்தான் புரியும்படியான் தலைப்புகளை வைத்து வரிவிலக்கு பெற்று வருகிறார்கள்.. (உ.த: வாரணம் ஆயிரம்(ஆயிரம் யானைகள்) ஏகன் (சிவன், எல்லாம் அறிந்தவ்ன்)). அதே போல் அந்த படங்களை தயாரிக்கும், விநியோக செய்கிற நிறுவனங்களின் பெயர்களும் தமிழில் இருந்தால்தான் வரிவிலக்கு என்று அறிவித்தால் நன்றாய் இருக்கும் போலருக்கு.


நம் முதல்வரின் வாரிசுகள் நடத்தும் அத்தனை நிறுவனங்களூக்கும் ஆங்கிலத்திலேயே பெயர் வைத்திருக்கிறார்கள்.

1. Suntv
2. Ktv
3. Sun Music
4. Sun news
மேற்படி பெயர்களை வைத்த பேரன்களுக்கும், ந்ம் தலைவருக்கும் இப்போது தொடர்பு இல்லாவிட்டாலும்,மாறன் சகோதரர்கள் வைத்த பெயர்.

1. Royal furnitures
2. Royal cable vision
3. Cloud Nine
மேற்படி பெயர்களை முறையே முதல்வரின் மனைவி நடத்திய ஓரு நிறுவன பெயர் ஆகும், மற்ற் இரு பெயர்கள் திரு. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி நடத்தும் கேபிள் டிவி நிறுவனத்துக்கும், சினிமா விநியோக நிறுவன பெயர்களாகும்..


1. Red Gaint Movies
இது நமது அமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதியின் சினிமா கம்பெனியின் பெயர்..

இதையெல்லாம் குறை சொல்வதற்காகவோ.. குத்தி காட்ட நினைப்பதாகவோ எழுதவில்லை.. முன் ஏறு எப்படியோ அப்படிதானே பின் ஏறு போகும், ஓரு அரசாங்கத்தின் மூத்த மகன் எப்படி தன்னையும் தன் குடும்பத்தையும் வழிநட்த்துகிறாறோ..அப்படித்தானே மக்களும் நடப்பார்கள்..

கலைஞர் அவர்களை மட்டும் குறிவைத்து எழுதவில்லை. இவரை போல் தமிழ், தமிழ் என்று பேசி, பேசியே மாய்ந்து போகிற எல்லோருக்கும் தான் பொருந்தும்,

எதோ இந்த மட்டும் கலைஞர், ராமதாஸ் பரவாயில்லை. அவருடய சேனல்களுக்கு பெயராவது தமிழிலேயே வைத்திருக்கிறார்.
1. கலைஞர்
2. இசையருவி
3. மக்கள் தொலைக்காட்சி
அவரின் தமிழ் பணி சிறக்க வேண்டுமென்ற ஆவலோடு.. ஓரு தலை குனிந்த தமிழன்.

Oct 28, 2008

சேவல் - விமர்சனம்


சேவல்ன்னு ஏன் பேர் வச்சீங்கன்னு ஹரிகிட்ட கேட்டபோது, சேவல் போல ஊரை சுத்திகிட்டு இருக்கறவந்தான் என் படத்தோட ஹீரோ.. அதனாலதான் படத்திக்கு இந்த பேரை வச்சேன்னு சொன்னாரு..அதுக்கு ஏத்தாப்ல பரத்தும் சும்மாவே ஊரையே சுத்திகிட்டு கிடக்காரூ..திடீர்ன்னு அக்ரஹாரத்து பொண்ணு பூனத்தை பாக்கிறார்.. லவ் பண்ண ஆரம்பிக்க.. அவருடய அக்கா சிம்ரன், அப்பா வழக்கம் போல கோவில் குருக்கள்.. ஏழை பிராமணன்.. பொறுப்பில்லாத வேற சாதி பையன்..அவனுக்கு சித்தப்பாவா.. வடிவேலு..எந்த ஊருக்கு பெரியவர்ன்னு சொல்ல முடியாம ஓரு பெரிய மனுஷன் சண்முகம்..

சண்முகத்திக்கு பூனத்தின் மேல ஓரு கண்ணு, பரத்துக்கு பூனத்தின் மேல லவ், சிம்ரனின் கொழுந்தனுக்கு பூனத்தின் மேல ஓரு கண்ணு..இப்படி ஆளாளுக்கு கண் வைக்கிற மாதிரிதான் பூனம் இருக்காரு..

ஹரிக்கு என்ன ஓரு இதுவோ தெரியல.. அவருடய எல்லா படங்கள்லேயும் ஹீரோயின் அக்ரஹாரத்து பொண்ணாதான் வர்றா..அனா ஓரு அரத பழசான ஓரு கதையை வச்சிக்கிட்டு அவர் பாவம் என்னதான் பண்ணுவாரூ.. சேவலா சுத்திகிட்டுருந்த பரத், பூனத்தை காதலிக்க ஆரம்பித்ததுமே திருந்த ஆரம்பிக்க, பூனம் பரத்தை காதலிக்கணூம்னா அவருடய தாத்தா நிலத்தை எடுத்து வித்து குடிச்ச நிலத்தை திரும்பவும் மீட்டு என்னைக்கு அவருடய அப்பா கையில கொடுக்கிறாறோ அன்னைக்குதான் ஓரு நல்ல பதில தருவேன்னு சொல்லிட்டு போக..


சிம்ரனனுக்கு ரத்த புற்றுநோய் வந்து குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியாமல் போக, அங்கே அக்காவை பார்த்து கொள்ள போன பூனம் அக்கா குழந்தையை தன் குழந்தையாய் பார்த்து கொள்ள, சிம்ரனின் உடல்நிலை காரணமாய் அவரின் கணவனுக்கு இன்னொரு கல்யாணம் செய்ய முடிவு செய்ய, சிம்ரன் தனக்கு பதிலாய் தன் குழந்தையை பார்த்து கொள்வதற்கு தன் தங்கையையே தன் கணவனுக்கு கட்டி வைக்கிறார். திருமணத்திற்கு அப்புறம் தான் பரத்தை காதலிப்பது தெரிகிறது சிம்ரனுக்கு, அது தெரிந்தவுடன் ராத்திரியோடு ராத்திரியாய் பூனத்தின் காலில் விழுந்த போஸோடு இறக்கிறார்.இங்கே தமிழ் பண்பாடுபடி பூனத்துக்கும்,சிம்ரனின் கணவருக்கும் எந்தவித கில்மா நடப்பதாய் காட்டபடவில்லை. தமிழ் சினிமா விதியின்படி ஹீரோயின் கன்னி கழியாத பெண்ணாகவே இருக்க, வில்லன் செய்யும் சூழ்ச்சியால் பூனத்தின் கணவரும் இறந்து போய்விட, அவருக்கு வில்லன் சொல்லி மொட்டை அடித்து அழகு பார்த்து இருக்கிறார்கள்..

அக்ரஹாரம் என்ற ஓன்றே தற்பொது இருக்கிறதா? என்கிற கேள்வி எழும்புகிற நேரத்தில், விதவைக்கு தலை மழித்தல், போன்ற சடங்குகளை அவர்களே மறந்தும், அழித்துவிட்ட நிலையில், மற்றவர்கள் அதை ஞாபகமாய் வைத்து கொண்டு அக்ரஹாரத்து ஐயர் குடும்பத்தில் சொல்வது.. ரொம்பவும் காமெடி..இதற்கு லீடாக வில்லன் அழகான பெண் தனக்கு கிடைக்கவில்லை என்றால் அவளுக்கு அவர்க்ளின் குடும்பத்தின் மூலமாகவே மொட்டை அடிக்க வைத்துவிடுவாராம்..என்ன கொடுமையடா சாமி,

பூனம் மொட்டை அடித்தபின் “ஏலியன் நேஷன் “ நாயகி போல் வருகிறார். அநேகமாய் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நல்ல ஓர்க்..மொட்டை அடித்தால் அழகை கெடுப்பதாய் நினைத்து மொட்டை அடிக்கிறார்கள் ஆனால்,மொட்டையிலும் பூனம் அழகாய் இருக்கிறார்.

பிரகாஷ்குமாரின் இசை ஓன்றும் சொல்லும்படியாய் இல்லை, வழக்கம் போல் ப்ரியனின் கேமரா ஹரிக்கு ஓத்துழைத்து இருக்கிறது. வடிவேலுவின் ஓன்றிரண்டு காட்சிகளை தவிர சிரிக்கும்படியாய் ஓன்றுமில்லை.. வழக்கம் போல் டப்பு, டிப்பு என்று எகிறும் பரபர எடிட்டிங் என்று எல்லாமே வழக்கம் போல்..

படம் முழுவதும் எதிலுமே ஓட்டாத விஷயமாய் துண்டு, துண்டாய், ஹைதர் காலத்து விதவை பெண்ணுக்கு திருமணம், தலை மழித்தல், போன்ற விஷயங்களை வைத்து காலத்தோடு ஓட்டாடத விஷயங்களை பெரிய செண்டிமெண்டுகளாய் நம்பி படமெடுத்திருப்பதால் சேவல்.. மியாவ்..

ஏகன் -விமர்சனம்


வழக்கமாய் ரீமேக் ராஜாவை எல்லோரும் கிண்டல் செய்வார்கள், இவரால் ரீமேக்கை தவிர புதுசாய் எடுக்க தெரியாதென்று.. ஆனால் ரிமேக் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று ஏகனை பார்த்தால் தெரியும்..

ஹிந்தியில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த “மே ஹூன் நா” என்ற படத்தைதான் தமிழில் கொடுக்க நினைத்து கெடுத்திருக்கிறார்கள்.. ஹிந்தியிலேயே ஷாருக்கின் கிரேஸினால் தப்பிய படம்..

வில்லன் சுமனிடமிருந்து விலகிய தேவன் அப்ரூவராக மாற முடிவெடுக்க, அவரை கொலை செய்ய முயற்சிக்க, போலீசிடமிருந்தும், வில்லன் சுமனிடமிருந்தும் தப்பியோடிக் கொண்டிருக்கிறார் தேவன்.. அவரை பிடிக்க சுமன் ஓரு புற்மும், போலீஸ் ஓரு புறமும் அலைய, அவருடய பெண் ஊட்டியில் ஓரு காலேஜில் படிப்பதாய் போலீஸுக்கு தெரிய, அந்த காலேஜில் ஸ்டூடண்டாய் நம்ம தலைய சேர்த்து, தேவனின் பெண் பியாவிடம் நெருக்கமாய் பழகி தேவனை பற்றி அறிந்து கொள்ள காலேஜில் நுழைகிறார் அஜித். இதற்கு நடுவில் தன்னுடய வளர்ப்பு அம்மா, தம்பி,அப்பா என்று செண்டிமெண்ட் குழப்பம், தம்பி நவ்தீப், பியாவின் காதல் என்று குழப்பியடித்து கும்மியடித்திருக்கிறார்கள்..

கல்லூரி முதல்வர் ஜெயராமும், சத்யனும் நடத்தும் அபத்தங்கள் எல்லாம் காமெடி என்று நினைத்து மனுஷனை கொல்லுகிறார்கள். தல ஸ்டூடண்டாய காலேஜில் நுழைந்து காமெடி பண்ண முயற்சி செய்திருக்கிறார்.. சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஜீன்ஸ் படத்தில் ராஜூ சுந்தரம் கத்தி, கத்தியே காமெடியாய் நடிப்பதாய் நினைத்து கொண்டு பேசுவாரே.. அதுபோலவே படத்தில எல்லோருடய வசன மாடுலேஷன்களும், ரியாக்‌ஷன்களும் இருக்கிறது..படத்தை அவர்தான் இயக்கினார் என்று காட்சிக்கு காட்சி ஃபூரூப் செய்திருக்கிறார்.

நயந்தாரா சூப்பர்.. அவருக்கு ஓரு கோடி சம்பளத்திற்கு அவரால் முடிந்த வரை ஆடைகளை குறைத்து நன்றாக நடித்திருக்கிறார்???..அவருக்கு தயாரிப்பாளர்கள் மேலும் சம்பளத்தை கூட்டி கொடுக்க என்னால் முடிந்த வரை ரெகமெண்டுகிறேன்.. (எல்லாம் ஓரு சுயநலம்தான்..)

இருப்பதிலேயே உச்ச பட்ச காமெடி வில்லன் சுமன்.. அவரை பார்த்தாலே ஓரு பயம் வரமாட்டேங்கிறது.. ராஜூசுந்த்ரம் சுமனுகுள் இருந்து அவரை போலவே கேனத்தனமாய் நடிக்கவைத்திருக்கிறார்.. அதிலும் அவரின் பாடி லேங்குவேஜும், டயலாக் டெலிவ்ரியும், விக்கும், தாடியும் சூப்பர் காமெடி..வில்லத்தனம் என்கிற பெயரில் அவ்வப்போது யாரையாவது மாடியிலிருந்து தள்ளிவிடுவதும், வந்திருக்கிற வெள்ளைகார வில்லனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், செமகாமெடி..

ரொம்ப நேரம் படம் எதுவுமில்லாமல் படம் ஓடி கொண்டிருப்பதை யோசித்து படத்தை முடிக்க வேண்டுமென்று சடாரென்று க்ளைமாக்ஸ் சண்டை வைத்து படத்திலிருந்து நம்மை விடுவிக்கிறார் இயக்குனர்..

நவ்தீப், பியா எல்லாம் சும்மானாச்சுக்கும் வந்து போகிறார்கள்.. பியாவுக்கு நடிக்க சந்தர்பம் இல்லை..

படத்தில் சொல்லிக் கொள்ளுகிற மாதிரி இருப்பவர்கள்..அஜித், நயந்தாரா, ஓளிப்பதிவாளர் அர்ஜூன்.

டிஸ்கி: அஜித்துக்கு தயவு செய்து கதை கேட்காமல் நடிக்காதீர்கள்..இயக்குனரை பார்த்து செலக்ட் செய்யுங்கள்.

டிஸ்கி: ராஜூசுந்தரத்திற்கு, எல்லோரையும் உங்களை போலவே பேசி நடிக்க வைக்க முயற்சிக்காதீர்கள்..ஹீரோவுக்கும், வில்லனுக்கும் நேரடியான ப்ரச்சனையில்லாமல் எந்த விதமாய் கதை சொன்னாலும் படம் ஜெயிக்காது என்று தயவு செய்து தெரிந்து கொள்ளூங்கள். உங்களுக்கென்ன.. டான்ஸ் ஆட போய்விடுவீர்கள்.. பாவம் எங்க தல்தான் அடுத்த கவுதம் மேனன் படம் வரும் வரைக்கும் காத்திருக்கணும்..

ஏ..க..ன்.. ஏகத்துக்கும் சொதப்பல்..

Oct 26, 2008

அமெரிக்கனாய் வாழ்ந்துபார்...

அமெரிக்கா..அமெரிக்கா..





படித்ததில் பிடித்தது

குரல்


"சிக்னல் வந்துருக்கு லேன்கோ", கத்திக்கொண்டு வருகின்றான் தூர்.

பல ஆண்டுகளுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ரேடியோ அலைகளுக்கு பதில் வந்திருக்கின்றது.

தூரும் லேன்கோவும் வளர்ந்துவரும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் அலுவலகத்தில் லேன்கோவின் உதவியாளனாக வேலை செய்கிறான் தூர்.

"என்னால நம்பவே முடியல தூர், பணத்த விரயம் பண்ணின ஆராய்ச்சிக்கு இப்போ பலன் கிடைச்சிருக்கா?"

"இருக்கலாம். ஆனா இதை decipher செய்ய இன்னும் எவ்வளவு காலம் ஆகும்னு தெரியலயே"

"ஏற்கனவே funds நிறுத்தப்போறதா சொல்லிருக்குற நேரத்துல இது கண்டிப்பா நல்ல செய்தி தான் தூர்"

"சரி இப்போ அடுத்த ஸ்டெப் என்ன?"

"நாமளே decipher பண்ணி பார்க்கலாம். நல்ல இன்ஃபர்மேஷன் கிடைச்சா வேலைய ரிஸைன் பண்ணிட்டு NASA ல போய் ஜாய்ன் பண்ணிடலாம்"

"இல்லைனா?"

"இல்லைனா, வெறும் ரேடியோ நாய்ஸா இருக்கும், ப்ரஸ்மீட்டுக்கு சொல்லிவிடுவோம். புகழ், சூப்பர் போதை"

திரு.கிஷோர் அவர்களின் பதிவிலிருந்து..படித்ததில் பிடித்தது.. மேலும் படிக்க

Oct 24, 2008

காதலில் விழுந்த மாறனும், வாரணம் ஆயிரம் அழகிரியும்....


மாறனின் சன் குழுமம் படத்தயாரிப்பில் இறங்கினால்.. கலைஞர் டிவியும் படத்தயாரிப்பில் இறங்குகிறது.ஆம் கலைஞர் டிவி சார்பில் அமிர்தத்தின் மகன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் "முரட்டுக்காளை" படத்தை சுந்தர்.சியை வைத்து தயாரிக்கிறது..

சன் குழுமம் காமெடி திரை என்று தன்னுடய் டி.டி.எச் நெட்வொர்குக்கென்றே பிரத்யோகமாய் ஓரு சேனலை ஆரம்பிக்க, கலைஞர் டிவியும், தன் பங்குக்கு சிரிப்பொலி என்று ஓரு சேனலையும், கலைஞர் செய்திகள் என்றொரு சேனலையும் ஆரம்பிக்க இருக்கிறது.. ஏற்கனவே காமெடிதிரை அவ்வளவாக ஓன்றும் வேலைக்காகவில்லை என்று கேள்வி.. அதுமட்டுமில்லாமல் அந்த சேனல் இப்போது இலவசமாய் தங்களுடய டி.டி.எச் சேவையில் வழங்கி வரும் சன் டைரக்ட்..மூன்று மாதங்கள் கழித்து விடியோ ஆன் டிமாண்ட் என்கிற வகையில் வழங்க இருக்கிறது.. அதற்குள் கலைஞரின் சிரிப்பொலி ஆரம்பிக்கபட்டால் அதுவும் காலி.. சன்னில் ஓன்றும் புதிதாய் ஓரு காமெடி நிகழ்ச்சிகள் எதுவும் தருவதாய் தெரியவில்லை.. ஏற்கனவே தினமும் பல சேனல்கள் நான் ப்ரைம் டைமில் போடும் காமெடி காட்சிகளைத்தான் அதுவும் காட்டுகிறது..இதெல்லாம் இப்படி இருக்க..கலைஞர் டிவிக்கு மிகவும் ஆதரவாய் இருக்கும் அழகிரியின் மகன் தயாநிதி அவர்கள்.. சன் பிக்சர்ஸுக்கு ஓரு செக் வைத்திருக்கிறார்.


ஆம் சன் பிக்சர்ஸ் போல படங்களை வாங்கி விநியோகம் செய்ய போகிறார்.. முதல் கட்டமாய் கெளதம்மேனனின், சூர்யா நடிக்கும் "வாரணம் ஆயிரம்" திரைப்படத்தை தமிழக விநியோக உரிமையை வாங்கியிருப்பதாய் செய்தி.. படத்தை அழகிரி அவர்கள் வாங்கியிருப்பதால்.. படத்தை திபாவளிக்கு வெளியிட போவதில்லை.. நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்போவதாய் தெரிகிறது..

சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்ட 'காதலில் விழுந்தேன்" திரைப்படத்தை தன்னுடய சேனல்களில் விளம்பரபடுத்தி மிகப் பெரிய ஓப்பனிங்கை ஓரு லோ பட்ஜெட் படத்துக்கு அளித்து, மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் சன் பிக்சர்ஸ், நவம்பரில் "சிவா மனசுல சக்தி" என்கிற ஜீவா நடிக்கும் படத்தை வெளியிட உள்ளதாய் தெரிகிற இந்நேரத்தில்.. சூர்யாவின் "வாரணம் ஆயிரம்" படத்தை நவம்பரில் வெளிவர ப்ளான் செய்திருப்பது பார்க்கும் போது சரியான போட்டியாய்தான் தெரிகிறது..

எது எப்படியோ.. தமிழ் சினிமா உலகத்துக்கு ஓரு கொண்டாட்டமான நேரம்தான் என்பதை மறுப்பதற்கில்லை..

Oct 23, 2008

தியேட்டர்களை வாங்கும் சூரிய கம்பெனி...

காதலில் விழுந்தேன் திரைபடத்தை சில பல பேரின் அச்சுறுத்தல், மற்றும் மிரட்டலினால் மதுரையில் வெளிய்டமுடியாமல் தவித்த சூரிய கம்பெனி, அதற்கு ஓரு வழியை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

வேறு ஓருவரின் தியேட்டரில் தானே படத்தை ஓட விடமாட்டார்கள்.. நாமே தியேட்டர்க்ளை லீஸ் எடுத்து வைத்துவிட்டால்..என்று யோசிக்க ஆரம்பித்திருப்பதாக நம்பதகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது...

ஏற்கனவே சில நூறு தியேட்டர்களை தன் வசம் லீஸில் வைத்துள்ள ஓரு ”எகிப்து” லோகோ கம்பெனியிடமிருந்து தியேட்டர்களை சப் லீஸ் எடுப்பதாக இருக்கிறதாம் சூரிய கம்பெனி..

”எகிப்து” கம்பெனியின் தற்போதைய நிலைமை சற்று கவலைக்கிடமாய் உள்ளதால்..அவர்களுக்கும் இது ஓரு வரபிரசாதமாகவே இருக்கும் என்று நினக்கிறது..

சூரிய கம்பெனி இப்படி பல தியேட்ட்ர்களை தன் வசம் வைத்துதிருந்தால் அவர்களின் டிஸ்ட்ரிபூஸ்ன் நெட்வொர்கின் பலம் மேலும் கூடும் என்றே எதிர்பார்க்கிறது.. எதிர்காலத்தில் அவர்களின் படத்தை அவர்களே தங்கள்து தியேட்டர்களில் வெளியிடப்படுவதால்.. அவர்களை அச்சுறுத்துபவர்கள் ஏதேனும் எதிர் நடவடிக்கை எடுத்தால் அதையும் தன்னுடய, தொலைக்காட்சியில் காட்டிவிட்டுவிடலாம்.. என்ற பயம் அச்சுறுத்துபவர்க்ளுக்கு இருக்கும் என்பதும் அவர்களின் எதிர்பார்பாய் இருக்குமோ..?

முதன் முதலாய் கிசுகிசு எழுதியிருக்கிறேன்.. ஹி..ஹி...(மூஞ்சியில என் பீச்சாங் கைய வைக்க.. இத்தெல்லாம் ஓரு கிசு..கிசு. பொறந்த கொளந்தைய கேட்டா கூட சொல்லிறும்.. இத்தபோய்.. )

அந்த ஆறு நாட்கள்...




சரியாக ஆறு நாட்கள் ஆகிவிட்டது.. நான் பதிவு எழுதி..அப்படி நான் பதிவெழுதாததால் பதிவுலகம் ஓன்றும் பாதித்ததாய் தெரியவில்லை.. பாலசந்தர், சுரேஷ், போன்ற பதிவர்கள் பின்னூட்டமிட்டும், ராஜ் தொலைபேசியிலும் விசாரித்தார்.. அவர்களுக்கு என் வந்தனம்..

கடைசியாய் பாபாவின் திருவிளையாடல் பதிவிட்டுவிட்டு என்னுடய இண்டர்நெட் இணைப்பை துண்டிக்க சொல்லிவிட்டேன்.. நான் என்னுடய் வீடு மாறியதால்.. அதற்கு பிறகு மிக பிஸியாய் இருக்க வேண்டிய நேரமாகிவிட்டது.. வீடு மாறியது ஓருபுறம், பேக்கிங் ஓருபுறம், இதற்கு நடுவில் ஓரு திரைப்படத்திற்க்கு திரைக்கதை விவாதம் வேறு ஓத்து கொண்டிருந்தேன்..ஓரு வழியாய் கலந்து கட்டி, ஞங்கே..மங்கே.. என்று குழப்பமாய் என் காரியங்களை செய்துவிட்டேன்..

அவ்வப்போது என் ப்திவுக்கு வந்த பின்னூட்டங்களை மட்டுறுத்தி வேலையை மட்டும் ப்ரவுசிங் செண்டரில் சென்று செய்துவந்தேன்.. ஓரு வழியாய் மூண்று நாட்களுக்கு பிறகு இண்டர்நெட் இணைப்பு புதிய வீட்டுக்கு கொடுக்கபட்டதும்.. எழுதலாம் என்று நினைத்து சிஸ்டத்தை பூட் செய்தபோது.. ஓரு மாதிரியான எண்ணை போடாத கீல் போல ஓரு சத்ததுடன் திரையில் வார்ட்ரோப் போட்டதுபோல் தோரணம் தோரணமாய் ஓரு மஞ்சள் கோடுகள்.. அதற்குள் மேட்ரிக்ஸ் படத்தில் எழுத்துக்கள் வருமே அது போல எழுத்துக்கள் எல்லாம் சல்பேட்டா அடித்ததுபோல் அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஸ்கிராம்பளர் போல வீசியெறியபட்டதுபோல் இருக்க.. “தலைவன் வச்சுட்டாண்டா ஆப்பு.. என்று கம்யூட்டரின் டிராயரை கழட்டி.. (அதாங்க. ஓப்பன் பண்ணி) பார்த்தா.. ஓரு 1ஜிபி ரேம் காலி..

இத்தனை நாளாய் ஆடாமல் அசங்காமல் தூளிலிலும், தூசியில் துடைக்காமல் பத்திரமாய் வைத்திருத்த அவனை, துடைத்து புதுசா வைத்தது தப்பாயிருச்சு.. இதுக்குதான் பெரிசுங்க சொல்லியிருக்காங்க போலிருக்கு, எல்லோரையும் வைக்கிற இடத்தில வைக்கணும்னு..

எல்லாத்தையும் சரி பண்ணி இதோ மீண்டும் ஆறு நாட்களுக்கு பிறகு என்னை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான வாசகர்களுக்காக.. எழுத ஆரம்பிக்க..யோசிச்சி யோசிச்சி பாத்ததுல எதுவுமே கிடைக்காததினாலே.. இந்த மொக்கை பதிவு.. நன்றி, வணக்கம், நம்ஸ்கார், தன்யவாத்..

அடுத்த பதிவு... தியேட்டர்களை வாங்குகிற சன் டிவி...காத்திருங்கள்..

Oct 18, 2008

பாபாவின் >>>>திருவிளையாடல்கள்....



இப்போது சமீப காலமாய் சென்னையில் ஓரு விஷயம் பரபரப்பாய் செய்யப்படுகிறது.. அதுவும் புட்டபர்த்தி சாய்பாபாவின் பெயரில்.. நீங்கள் நினைத்த காரியம் நடக்க வேண்டுமா? உடனடியாய் இந்த காரியத்தை செய்தால் நீங்கள் நினைத்த காரியம் ஈடேறும்.. என்று சொல்லபபட்டு தொடர் சங்கிலியாய் தொடர்கிறது..

ஓரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் இரண்டு டீஸ்ஸ்பூன் டீ தூளையும், இரண்டு டீஸ்பூன் சக்கரையையும் சேர்த்து கலக்கி, அதன் வாயை காற்று புகா வண்ணம்..துணியால் மூடி நம் மனதில் நினைக்கும் காரியத்தை பாபாவை நினைத்து வேண்டிக் கொண்டு, வியாழன் முதல் வியாழன் வரை பூஜை அறையில் வைத்து பூஜித்து விட்டு அடுத்த வியாழன் அன்று அதை பூஜை செய்து திறந்து பார்த்தால்.. அந்த தண்ணீரின் மேலே ஓரு ஏடு போல திக்காக ப்ரவுன் நிற ஓரு லேயர் பார்ம் ஆகியிருக்க, அப்படி அகியிருந்தால் அவர்கள் எதை நினைத்து வேண்டி கொண்டார்களோ.. அது நடந்துவிடும் என்கிறார்கள்..

அனால் இதற்கு அப்புறம் தான் இருக்கிறது விஷயம்.. அவர்களின் பாத்திரத்தில் பார்ம் ஆன லேயரில் நான்கில் ஓரு பகுதியை அந்த தண்ணீரிலேயே போட்டு அதே பாத்திரத்தில் மேலும், அதே டீ தூள் , அதே சக்கரை சேர்த்து.. மேலே துணி வைத்து மூடி சேம் பார்முலா.. வேறு ஓருவர் வேண்டுதல், வேறு பூஜை அறை,, என்று ரிலே ரேஸ் போல் தொடர்கிறது..

எனக்கு சொன்னவரிடம் நான் கேட்டேன்.. நீங்க நினைச்சது நடந்ததா? என்று..

“ஓரு 75% முடிஞ்சது.. “

“மிச்சம்..?”

“பாபா பாத்துப்பார்..”

“நீங்க நினைச்ச காரியத்துக்காக இதுக்கு முன்னாடி முயற்சி செஞ்சீங்களா?”

”கிட்டத்தட்ட ஒரு வருஷமா..?”

‘அந்த ஓரு வருச்த்தில கிடைக்காத பதிலா இப்ப கிடைச்சிருக்கு.?”

“ அப்படியில்ல.. அவர்கிட்ட போய் சார் நானும் இவ்வளவு நாளா ட்ரை பண்றேன்னே கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்ன்னு கேட்டேன்.. “

‘இதை ஏன் நீங்க இவ்வளவு நாளா செஞ்ச முயற்சிக்கு பதிலா எடுத்துக்க கூடாது?

“நானும் அதையே தான் கேட்கிறேன்.. நீங்க ஏன் இதை பாபாவின் அருளாய் எடுத்துக்க கூடாது?”என்று கேட்க, மேலும் விவாதத்தில் ஈடுபடாமல் சரி என்று சிரித்தபடி.. கிளம்பிவிட்டேன்..

பாபாவை பற்றி தவறான பிரசாரத்துக்காக நான் இதை பதியவில்ல..முயற்சியில்லாமல் எந்த விஷயமும் நடக்காது என்பது என் கருத்து.. அது மட்டுமில்லாமல்.. இந்த டீ, சக்கரை,தண்ணீர், மூடிய பாத்திரத்தில் ஏதோ கெமிக்கல் ரியாக்‌ஷன் இருக்கிறது.. அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வம்..

டிஸ்கி: லேட்டஸ்டாய் ஓரு தகவல் இதே போல் ஓரு பாத்திரத்தில் ஓரு சப்பாத்தியை வைத்து மூடிவைத்து ,ஓருவாரம், பூஜை, எண்ணம், எல்லாம் முடிந்தபின் திறந்தால்.....
இரண்டு சப்பாதியாம்..

Oct 17, 2008

ராஜூ.....


ராஜூவை பார்த்ததுமே எனககு ரொம்ப பிடித்துவிட்டது..அப்பா,தம்பி, தங்கை என்று எல்லோருக்கும் பிடித்துவிட்டது அம்மாவை தவிர.. அம்மாதான் வேண்டா வெறுப்பாய் சரி என்று சொன்னாற் போல் தெரிந்த்து.. மெஜாரிட்டி வின்ஸ்..

ராஜூ என்று எதற்காக பெயர் வைத்தோம் என்று எனக்கு தெரியவில்லை..ஆனால் எல்லோருக்கும் ரொம்பவே பிடித்துவிட்டதால் அதையே வைத்து கூப்பிட.. ஆரம்பிக்க..முதல் முறை கூப்பிடும்போது அது எனக்கென்ன என்று உட்கார்ந்திருக்க.. ச்சூ..சுசூ ராஜூ என்று பேர் சென்னதும்.. அவன் திரும்பியது.. சூசூவுக்கா..இல்லை பேரை தெரிந்தா என்று பட்டிமன்றம் நடந்த்து..

அவனுக்கு பால் கொடுப்பது, வாக்கிங் போகிறேன் பேர்விழி என்று இரண்டொருநாள் அவனுடய கழுத்தில் பட்டை அதில் ஓரு மணி என்று ஜோடித்து போய் விட்டு வெளியே பீத்தி கொண்டவுடன், வாக்கிங் நின்று போயிற்று..

அவனுடய் வளர்ச்சி ரொம்ப சீக்கிரமே வளர்ந்துவிட்டான்.. ரொம்ப கோபக்காரனாயிட்டான்.. யாரையும் உள்ளே விடமாட்டான்.. நானோ..அலலது என் அப்பாவோ போய் அவனிடம் போய் காட்டி “ராஜு.. இவரு நம்ம ப்ரண்ட் “என்று அறிமுகத்துக்கு அப்புறமே போனால் போகிறதென்று பக்கத்தில் வந்து உட்கார்ந்து,வாலாட்டிய பிற்கும் சந்தேகத்தோடு பார்த்து கொண்டிருப்பான்..அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் நம்பிக்கை வராது..

அப்படித்தான் ஓரு முறை என்னுடய் வீட்டில் கார்பெண்டர் வேலை நடந்து கொண்டிருந்த்து.. அப்பாவும், அம்மாவும், வேலைக்கு போய்விட்டார்கள்.. நாங்கள் எல்லோரும் ஸ்கூலுக்கு போய்விட்டோம்.. வீட்டின் முன்னால் இருந்த போர்டிகோவில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்..நான் சாயங்காலம் ஸ்கூல் முடிந்து வந்த போது. அந்த கார்பெண்டர்கள் என் ராஜூவின் முன்பு கைகட்டி போலீஸ் ஸ்டேசனில் உட்கார்ந்திருக்கும் கைதிகளை போல் உட்கார்ந்திருக்க,அவர்கள் முன்பு இரண்டு பப்பாளி பழங்கள் அழகாய் துண்டுகள் போடப்பட்டிருக்க.. என்னவென்று கேட்டால்.. அந்த கார்பெண்டர்கள் எங்களுடய பப்பாளி மரத்தில் ஏறி அதிலிருந்து நான்கு பப்பாளி பழத்தை எடுத்திருக்கிறார்கள்.. அவர்கள் ஏறி எடுத்ததை தடுக்காத ராஜூ.. அவர்கள் அதன் தோலை எல்லாம் அழகாய் சீவி துண்டங்கள் போட்டு சாப்பிட ஆரம்பிக்க, நம்ம ஆள் அவர்கள் முன்பு நின்று “உர்ர்ர்ர்ர்..” என்று உறுமியிருக்க.. அவர்களும் ஓரு ரெண்டு துண்டத்தை போட்டுவிட்டு சாப்பிட அரம்பிக்க, ராஜூ அந்த துண்டுகளை சாப்பிட்டு விட்டு மீண்டும் “உர்ர்ர்” என்று உரும.. இப்படி ஓரு துண்டு கூட சாப்பிடாமல் இரண்டு பழத்தை தானே சாப்பிட்டு.. மீதி பழத்தை பாதுகாத்து.. அவர்களையும் பிடித்து வைத்திருந்த்து.. நான் வந்தவுடன் தான் ராஜூ ரிலாக்ஸ் ஆனான்.

ராஜூவிக்கு பக்கத்து வீட்டு ஷீலா வென்றால் ரொம்பவும் ஜொள்ளு.. அந்த வயதில் வழக்கமாய் விடும் ஜொள்ளைவிட ரொம்ப அதிகமாய் ஏன் விடுகிறது என்று அப்போது புரியவில்லை..அனால் இப்போது புரிகிறது..அப்பாவிடம் கேட்டபோது..ஓரு மாதிரி மையமாய் சிரித்து.. வெயில் அதிகமாயிருக்கில்ல அதான்..என்றார். இதனால் எங்க வீட்டுக்கும், பக்கத்துவீட்டிக்கும் சின்ன சண்டை வந்துவிட்டது.. இதையெல்லாம் மீறீ அவர்களுக்கிடையில்” கில்மாக்கோ...கில்பாத்ரி” நடந்து விட்டது என்பதை.. என் அப்பாவிடம், பக்கத்துவீட்டு அங்கிள் முடிஞ்சிருசுன்னு சொன்னதுக்கான அர்த்தமும் இப்போதுதான் புரிந்த்து..

ஓரு முறை ராஜூவை அப்பா அடித்துவிட்டார்... அவருடய மாமாவை ஏன் என்றே தெரியவில்லை.. வீட்டினுள் விடவே இல்லை.. துரத்தி துரத்தி கடிச்சி வச்சிருச்சு.. அந்த கோபத்துல ராஜூவை போட்டு விளாசிட்டார்.. ஆனா ராஜூ ரொம்ப பெரிசா ரியாக்ட் பண்ணல ஓரு ஓரமா உட்கார்ந்துகிட்டே இருந்துச்சு..அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம் அவங்களுக்கு பிடிக்காத மாமாவை துறத்தினதுனாலே.. அவனுக்கு எக்ஸ்டராவா பால் எல்லாம் கொடுத்தாங்க.அப்பா மட்டும் ரெண்டு நாளைக்கு அப்புற்ம ராஜுகிட்ட சுத்தும் முத்தும் பார்த்து “சாரிடா” என்று கண்கலங்கினார்..அத நான் பாத்துட்டேன்.. ஏன் அழுதார்ன்னு தெரியல..அனா அவர் அழறத பார்த்த ராஜூ பதறின பதட்டம் இருக்கே.. சொன்னா நம்ப மாட்டீங்க.. அவர் கண்ணை துடச்சி விடாத குறைதான்..

ஓரு ஆறு மாசத்துக்கு அப்புறம் ராஜு திடீர்னு டல்லாயிட்டான்..அவ்வளவு சுறுசுறுப்பில்ல.. ராத்திரி 12 மணியிருக்கும் வீட்டின் வாசக் கதவை சுரண்டிகிட்டே இருந்தான்.. வழக்கமா அவனுக்கு எதாவ்து வேணும்னா மட்டும் அப்பிடி செய்வான்.. அவன் சுரண்டி, சுரண்டியே வாசக்கதவு கீழ்பக்கத்தில ஓரு மார்டன் ஆர்ட் ஓவியமே வரஞ்சிட்டான்.. அனா இப்ப அவன் சுரண்டினது அவ்வளவு சுறுசுறுப்பா இல்ல.. நான் தான் கதவ திறந்து போய் பார்த்தேன்.. ராஜுவை பார்த்தேன்.. கண் கலங்கலா இருந்துச்சு.. என்னையே பாத்துகிட்டேயிருந்தான்..

“என்னடா ராஜு.. தண்ணி வேணுமா..? “

ஓண்றும் சொல்லாமல் பார்த்து கொண்டேயிருந்தான்.. நான் போய் அப்பாவை எழுப்பி
“அப்பா.. ராஜுவை பாருப்பா.. ஓரு மாதிரி பாக்கறான்..” என்றவுடன் அப்பா பதறியடித்து எழுந்து வந்தார்.. “என்னடா ராஜூ.. என்ன வேணும்.. உடம்பு சரியில்லையா..? என்று கேட்டபடி அவனை தடவிக் கொடுக்க.. அவன் திடீரென்று அப்பவின் மேல் ஏறி நின்று முகத்தை நக்கி..க்கும்..க்கும் என்று முனகி என் காலையும் நக்கிவிட்டு.. மெல்ல அவன் படுக்கும் படுக்கையில் போய் நின்று கொண்டு மூன்று மூறை சுற்றிவிட்டு படுத்தான்.. எதுவும் புரியாமல் பார்த்து கொண்டிருக்கும்போதே.. அவன்.. ராஜூ.. இறந்துவிட்டான்..

நான் பார்த்த முதல் இறப்பு அது...நான் அழ ஆரம்பிக்க... என் சத்ததை கேட்டு, தம்பி, தங்கை, அம்மா எல்லோரும் எழுந்து வர.. அப்பா அம்மாவிடம்..ராஜூ ஏன் மாமாவை கடிச்சான் தெரியுமா?.. அன்னைக்கு வீட்டிக்குள்ளே வர போதே போர்டிகோவில இருந்த என் வாட்சை எடுத்துட்டான்.. அத பார்த்தினால தான் அவனை கடிச்சிருக்கான்.. என்றார்..