Thottal Thodarum

Oct 23, 2008

அந்த ஆறு நாட்கள்...




சரியாக ஆறு நாட்கள் ஆகிவிட்டது.. நான் பதிவு எழுதி..அப்படி நான் பதிவெழுதாததால் பதிவுலகம் ஓன்றும் பாதித்ததாய் தெரியவில்லை.. பாலசந்தர், சுரேஷ், போன்ற பதிவர்கள் பின்னூட்டமிட்டும், ராஜ் தொலைபேசியிலும் விசாரித்தார்.. அவர்களுக்கு என் வந்தனம்..

கடைசியாய் பாபாவின் திருவிளையாடல் பதிவிட்டுவிட்டு என்னுடய இண்டர்நெட் இணைப்பை துண்டிக்க சொல்லிவிட்டேன்.. நான் என்னுடய் வீடு மாறியதால்.. அதற்கு பிறகு மிக பிஸியாய் இருக்க வேண்டிய நேரமாகிவிட்டது.. வீடு மாறியது ஓருபுறம், பேக்கிங் ஓருபுறம், இதற்கு நடுவில் ஓரு திரைப்படத்திற்க்கு திரைக்கதை விவாதம் வேறு ஓத்து கொண்டிருந்தேன்..ஓரு வழியாய் கலந்து கட்டி, ஞங்கே..மங்கே.. என்று குழப்பமாய் என் காரியங்களை செய்துவிட்டேன்..

அவ்வப்போது என் ப்திவுக்கு வந்த பின்னூட்டங்களை மட்டுறுத்தி வேலையை மட்டும் ப்ரவுசிங் செண்டரில் சென்று செய்துவந்தேன்.. ஓரு வழியாய் மூண்று நாட்களுக்கு பிறகு இண்டர்நெட் இணைப்பு புதிய வீட்டுக்கு கொடுக்கபட்டதும்.. எழுதலாம் என்று நினைத்து சிஸ்டத்தை பூட் செய்தபோது.. ஓரு மாதிரியான எண்ணை போடாத கீல் போல ஓரு சத்ததுடன் திரையில் வார்ட்ரோப் போட்டதுபோல் தோரணம் தோரணமாய் ஓரு மஞ்சள் கோடுகள்.. அதற்குள் மேட்ரிக்ஸ் படத்தில் எழுத்துக்கள் வருமே அது போல எழுத்துக்கள் எல்லாம் சல்பேட்டா அடித்ததுபோல் அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஸ்கிராம்பளர் போல வீசியெறியபட்டதுபோல் இருக்க.. “தலைவன் வச்சுட்டாண்டா ஆப்பு.. என்று கம்யூட்டரின் டிராயரை கழட்டி.. (அதாங்க. ஓப்பன் பண்ணி) பார்த்தா.. ஓரு 1ஜிபி ரேம் காலி..

இத்தனை நாளாய் ஆடாமல் அசங்காமல் தூளிலிலும், தூசியில் துடைக்காமல் பத்திரமாய் வைத்திருத்த அவனை, துடைத்து புதுசா வைத்தது தப்பாயிருச்சு.. இதுக்குதான் பெரிசுங்க சொல்லியிருக்காங்க போலிருக்கு, எல்லோரையும் வைக்கிற இடத்தில வைக்கணும்னு..

எல்லாத்தையும் சரி பண்ணி இதோ மீண்டும் ஆறு நாட்களுக்கு பிறகு என்னை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான வாசகர்களுக்காக.. எழுத ஆரம்பிக்க..யோசிச்சி யோசிச்சி பாத்ததுல எதுவுமே கிடைக்காததினாலே.. இந்த மொக்கை பதிவு.. நன்றி, வணக்கம், நம்ஸ்கார், தன்யவாத்..

அடுத்த பதிவு... தியேட்டர்களை வாங்குகிற சன் டிவி...காத்திருங்கள்..


Post a Comment

3 comments:

Anonymous said...

:) :) :)-

Anonymous said...

wanka sir...!
welcome!

Cable சங்கர் said...

//wanka sir...!
welcome!/

வந்துட்டேன் பாலசந்தர்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், உங்கள் அன்பான விசாரிப்புக்கும்