Posts

Showing posts with the label கவிதை

எண்டர் கவிதைகள் -30

கைதட்டியாகிவிட்டது விளக்கேற்றியாகிவிட்டது தினமொரு சமையல் என சமையல் குழுவில் போஸ்ட் போட்டாகிவிட்டது வெறி கொண்டு அனைத்து சீரீஸுகளையும் படங்களையும் பார்த்தாகிவிட்டது தினம் பேசும் நண்பர்களிடையே உங்க ஏரியாவுல கொரானா வந்தாச்சா? கையில பணமேயில்லை என்ன பண்ணுறது? போன்ற பேச்சுக்களைத் தவிர பேச ஏதுவுமில்லாமல் போய்விட்டது இன்னுமொரு பதினைந்து நாளே என நான்கு மாசங்களை ஓட்டியாகிவிட்டது பேசினால் மூச்சு முட்டி இறந்துவிடுமோ? என்கிற அச்சம் வீட்டினுள் நுழைந்து மாதங்களாகிவிட்டது. யாரிடமும் எதையும் பேச தோணவேயில்லை புதியாய் முளைத்திருக்கும் வங்கிக் அழைப்பாளர்களைத் தவிர, ஏனென்றால் அவர்கள் தான் என் பாதுகாப்பை முக்கியமாய் நினைக்கிறார்கள். அட்லீஸ்ட் வரும் அக்டோபர் மாதம் வரைக்குமாவது. அதன் பிறகு அவனும் பேசுவானா என்று தெரியவில்லை ஜெய் கொரோனா.

எண்டர் கவிதைகள் -27

கார் முழுவதும் பரவிக்கிடக்கிறது  உன் வாசனை நீ இல்லாவிட்டாலும் என் மூளையிலிருந்து பெருகும் காமம் போல உன் வாசனையும்

விட்டுக்கொடுப்பதில்லை உன்னை -கவிதை?

விட்டுக்கொடுப்பதில்லை உன்னை நான் உன்னை எங்கேயும் யாரிடத்திலும் விட்டுக் கொடுப்பதில்லை நீயும் அது போல் தான் என உறுதியாய் நம்புகிறேன் நீ விட்டுக்கொடுத்ததாய் வரும் செய்தியை கேட்கும் போதும் நான் நம்புவதில்லை ஏனென்றால் நான் உன்னை எப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை

எண்டர் கவிதைகள் -26

வேண்டாமென்று  முடிவெடுத்திருந்தாலும் காத்திருத்தல் செய்யச் சொல்கிறது நாளையேனும் சீக்கிரம் வா கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள்-24

Image
படகுப் பயணமாய் முன்பனிக் காற்றாய் ஏகாந்தத்திலும் உன்னுடனாய் முத்தத் தீற்றலில் தகிப்பவனாய் ஒவ்வொரு நொடியும் உன் மடியில் இருக்க மாட்டேனா என்று ஆசைப்பட்ட காதல் வாழ்க்கையை எங்கு போய் தேடுவேன்? நமக்குள் கல்யாணம் ஆகியிருக்க கூடாதோ? கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள்-19

Image
திறந்து கிடந்த பாட்டில்கள் நசுங்கிப் போன சொம்பு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கும் எலும்புத்துண்டுகள் அரைநிலா எதிர்வீட்டு ட்யூப்லைட் நான்குஜோடிக் கால்கள் கலைந்து கிடக்கின்றன என் மனம் போல் சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள்-18

Image
இது வரை 

எண்டர் கவிதைகள் –7

Image
மீண்டும் குறுகிய நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை வழக்கி என்னை உற்சாகப்படுத்தி ஏழு லட்சம் ஹிட்ஸுகளாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் இதயம் கலந்த நன்றி.. நன்றி..நன்றி வழக்கம் போல் முயக்கம் முடிந்து நொடியில் குறட்டை ஒலியெழுப்புபவனுக்கு தெரியுமா? என்னுள் இன்னும் சுரந்து கொண்டிருக்கும் வலியை? வலி பொங்கி காமம் வழிந்தோடும் நேரம் புதிதாய் வந்து அணை கட்டி ஒத்தடம் கொடுத்தவனுக்கும் பழக்கம் ஆனதும் வழக்கம் போல் முயக்கம் முடித்து நொடியில் குறட்டை ஒலியெழுப்பினான் இன்னமும் என்னுள் சுரந்து கொண்டுதானிருக்கிறது. வேறொரு ஒத்தடம் தேட பிடிக்காமல் வலி தாங்க பழகிக் கொள்கிறேன் . Technorati Tags: எண்டர் கவிதைகள் தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

எண்டர் கவிதைகள்-6

Image
பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றி..நன்றி அன்ன நடை விசுக், விசுக்கென துரித நடை குதித்தோடும் அவசர நடை அலுங்காமல் நடக்கும் பதவிசு நடை முலை குலுங்கும் ஓட்ட நடை தடுக்கிவிழுவாளோ என பதறும் நடை செல்பேசி தனக்குள் சிரிக்கும் வெட்க நடை ஐபாட்டை காதில் சொருகி சத்தமாய் பாடும் நடை கொட்டாவி விடும் பேரிளம் நடை வாயால் மூச்சு விடும் பெருத்த நடை நிமிடத்துகொருமுறை முந்தானை சரி செய்யும் நடை பெண்கள் ஒரு மாபெரும் உந்து சக்திதான் இல்லாவிட்டால் நான் எங்கே காலையில் எழுந்து நடப்பது. Technorati Tags: எண்டர் கவிதைகள் , கவிதை தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான்.. குத்துங்க...

எண்டர் கவிதைகள் –5

Image
சேர்ந்து சுற்று ஒன்றாய் வாழ் அலுக்க, அலுக்க புணர்ந்து மகிழ் அவள் வலி உணர் பிணக்கு கொள் ஊடல் கொண்டாடு கூடல் செய் முரண்பட்டு நில் கோபம் கொள் நிஜ முகம் காட்டு இத்தனையும் மீறி இருவரிடமும் காதல் மிச்சம் இருந்தால் திருமணம் செய். Technorati Tags: எண்டர் கவிதைகள் , கவிதை தமிலிஷிலேயும், தமிழ்மணத்துலேயும் குத்துங்க எஜமான்.. குத்துங்க

எண்டர் கவிதைகள் -4

Image
வெண்ணையாய் உருகும் மைசூர்பா பிடிக்கும் நெருக்கக் கட்டிய ஜாதி மல்லி பிடிக்கும் மேகமாய் விரியும் வெண்பட்டு பிடிக்கும் சின்னச் சின்னதாய் மினுக்கும் தங்கம் பிடிக்கும் இப்படி தேடி அலைந்து கொடுத்தபின் ஏதுக்கு இதெல்லாம் என்ற சிணுங்கல் பிடிக்கும் சிணுங்கல் முனகலாய் மாறி முடியும் புணர்தல் பிடிக்கும் புணர்தலுக்கு பின் வெற்று மார்பில் படுத்தபடி நீ கேட்கும் என்னை நிஜமாவே அவ்வளவு பிடிக்குமா? என்ற கேள்வியில் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் காதலை எப்படி உன்னிடம் இறக்கி வைப்பேன் Technorati Tags: கவிதை , எண்டர் கவிதைகள் தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

எண்டர் கவிதைகள் -3

Image
ஆறு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி மேலும் என்னை ஆதரிக்கும் என் அன்பு பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும்.. நன்றி..நன்றி..நன்றி நிழற்குடையில்லா நிறுத்தத்தின் வெயில் உச்சத்தில் இறங்கி வியர்த்துவழிய பிய்ந்த செருப்பினுடே சூடேறுவதை கூட உணராமல் கடந்து போகும் மனைவியை பார்க்கிறான் வேறொருவன் காரில். Technorati Tags: கவிதை , எண்டர் கவிதைகள் டிஸ்கி: ஈரோடு பதிவர் சந்திப்பு சென்று திரும்புவதால் கொத்து பரோட்டா நாளை வெளியாகும்.. தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க

எண்டர் கவிதைகள் -2

Image
கவிதைக்கும் எனக்கும் தூரம் என்றேன். பழகினால் புரியும் என்றாள் பழகினேன் அவள் பேச்சே கவிதையாய் இருந்தது ஓ.. இது தான் கவிதையா என்றேன் இல்லை இன்னும் சொல்லி தருகிறேன் என்று முத்தமிட்டு இது வெண்பா என்றாள் அடுத்தாய நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் சீர், தளை, விருத்தம் என்றாள் கவிதையை முழுதாய் புரிந்தேன் இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது. Technorati Tags: எண்டர் கவிதைகள் , கவிதை தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க

எண்டர் கவிதைகள்

Image
மு த்தமிடப்படும் ஆரஞ்சு உதடுகளையும் உடையோடு கசக்கப்படும் செப்பு முலைகளையும் காமத்தின் உச்சத்தில் கிறங்கும் அகண்ட கண்களையும் நெகிழும் இடுப்பிலிருந்து உடைகள் நழுவுவதையும், நீண்ட பயணமாய் வருடிச் செல்லும் பாம்புத் தொடைகளையும், மார்பழுத்தி இறுக்கிடும் உன் அணைப்பையும் வேறொருவன் ஆளப்போவதை தாங்கமுடியாமல் சாகிறேனடி நான். கவிதை by கேபிள் சங்கர்( இப்படி நாமே சொல்லிட்டாத்தான் ஒத்துப்பாங்கனு) டிஸ்கி: இதுக்கு ஒரு நல்ல தலைப்பு கொடுங்கப்பா. . Technorati Tags: kavithai , கவிதை , எண்டர் கவிதை உயிரோடை கவிதை போட்டிக்கான கவிதையை படிக்க

சூத்திரங்கள் - உரையாடல் கவிதை போட்டிக்காக...

Image
ஐந்தரை லட்சம் ஹிட்ஸுகளையும், 500 பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி சூத்திரங்கள் அலையும் கூந்தல் முகத்தை மறைக்க ரகசிய உதடுகள் காது கடிக்க உஷ்ண மூச்சில் கழுத்து தகிக்க மார்பழுத்தி முதுகு பஞ்சாய் ஆக கால்கள் அகற்றி தொடைகள் உரச கைகள் இரண்டும் இடுப்பை அழுத்த இந்த இறுக்கம் காதலா? காமமா? நம்பிக்கையின்மையா? அறிந்து கொள்ள ஆசை மனம் பிறழ்ந்து போகும் முன் Technorati Tags: kavithai , கவிதை உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

கண்டுபிடியுங்களேன்….

Image
பதிவர்கள் எல்லாம் உரையாடல் கவிதை போட்டி வச்சாலும் வச்சாங்க ஆளாளுக்கு கவிதை எழுதறேன்னு எண்டர் பட்டனை தட்டி, தட்டி வீட்டுக்கு ரெண்டு கீ போர்டு ஆகி போச்சாம். சரி அதை விடுங்க.. கீழே இருக்கும் கவிதை ஒரு பிரபல பதிவர், கவிஞரும் கூட, அவருக்கென்று மொழி நடை உண்டென்று அவரின் வாசகர்கள் சொல்வதுண்டு, அதை சிலாகித்து பேசியதை கேட்டதுமுண்டு. அதனால் அவரின் கவிதை வரிகளை மட்டும் கொடுத்துள்ளேன். அவர் யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு.. சூத்திரங்கள் அலையும் கூந்தல் முகத்தை மறைக்க ரகசிய உதடுகள் காது கடிக்க உஷ்ண மூச்சில் கழுத்து தகிக்க மார்பழுத்தி முதுகு பஞ்சாய் ஆக கால்கள் அகற்றி தொடைகள் உரச கைகள் இரண்டும் இடுப்பை அழுத்த இந்த இறுக்கம் காதலா? காமமா? நம்பிக்கையின்மையா? அறிந்து கொள்ள ஆசை மனம் பிழற்ந்து போகும் முன் ஓகே வாசக பெருமக்களே.. கண்டுபிடித்து சொல்லுங்களேன்.. Technorati Tags: kavithai , கவிதை உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

இந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா..

Image
சமீப காலங்களில் எனக்குள் கவிதை எழுத வேண்டும் என்கிற ஆவேசம், உன்மத்தம் பிடித்து என்னை ஆட்டுகிறது.. சமூகத்தின் மேல் கோபம் உள்ளவனும், காதலிக்கிறவனும், காதலில் தோற்றவர்கள், தாடி வைத்தவர்கள், ஜோல்னா பை மாட்டியவர்கள் மட்டும்தான் கவிதை எழுதுவார்கள் என்று நினைத்திருந்தேன். கவிதை எழுத இதெல்லாம் தேவையில்லை பதிவிருந்தால் போதும் என்று.. இப்போது என்னை சுற்றி ஒரே கவிஞர்கள் மயம்தான். அதிலும் சரக்கடித்துவிட்டு பேச ஆரம்பித்தால் இந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா.., பேசுவதையே கவிதை மாதிரி ரண்டு, ரண்டு முறை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். சில சமயங்களில் இவர்கள் பேசும் கவிதைகளால், அடித்த சரக்கின் போதை இறங்கி போய்.. நான் மட்டும் தெளிவாய் வீட்டுக்கு போன கட்டாய தினங்கள் நிறைய.. சரி நாமும் கவிதை எழுத கத்துக்குவோம்னு நினைச்சு. சில பேர்கிட்ட கேட்டா, அது எல்லாம் சொல்லி கொடுத்து வராது, தானா வரும்.. ஆனா வராது..னாங்க.. என்ன எழவா போச்சுடான்னு குழம்பி போய், நம்ம உ.த. எழுதின கவிதைய படிச்சேன்.. ரொம்ப சின்னதா ஒரு கவிதை எழுதியிருந்தாரு.. யாரோ அவரோட நண்பர் ஒருத்தர் சரக்கடிச்சிட்டு வந்து படுத்த மேட்டர, உடனே நான் கவிஞர்கள் க...

காதல்..

Image
என்னை வச்சு உன்னையும், உன்னை வச்சு என்னையும் நாமே பின்னிக்கிற வலைதான் காதல்... எப்படி என் முதல் கரீகிட்டு செய்த கவிதை..

பழகுதல்....

Image
படித்ததில் பிடித்தது அனுதினமும் அடிகிற அம்மாவைக் காட்டிலும் ஆண்டுக்கொரு முறை அடிக்கிற அப்பாவின் முறைப்பில் நடுங்குகின்றன குழந்தைகள். நண்பர் திரு பொன்.சுதாவின் கவிதைகளிலிருந்து../.