Thottal Thodarum

Jun 19, 2020

எண்டர் கவிதைகள் -30

கைதட்டியாகிவிட்டது
விளக்கேற்றியாகிவிட்டது
தினமொரு சமையல் என சமையல்
குழுவில் போஸ்ட் போட்டாகிவிட்டது
வெறி கொண்டு அனைத்து சீரீஸுகளையும்
படங்களையும் பார்த்தாகிவிட்டது
தினம் பேசும் நண்பர்களிடையே
உங்க ஏரியாவுல கொரானா வந்தாச்சா?
கையில பணமேயில்லை
என்ன பண்ணுறது? போன்ற
பேச்சுக்களைத் தவிர பேச
ஏதுவுமில்லாமல் போய்விட்டது
இன்னுமொரு பதினைந்து நாளே என
நான்கு மாசங்களை ஓட்டியாகிவிட்டது
பேசினால் மூச்சு முட்டி இறந்துவிடுமோ?
என்கிற அச்சம் வீட்டினுள் நுழைந்து
மாதங்களாகிவிட்டது.
யாரிடமும் எதையும் பேச தோணவேயில்லை
புதியாய் முளைத்திருக்கும் வங்கிக்
அழைப்பாளர்களைத் தவிர, ஏனென்றால்
அவர்கள் தான் என் பாதுகாப்பை
முக்கியமாய் நினைக்கிறார்கள்.
அட்லீஸ்ட் வரும் அக்டோபர் மாதம்
வரைக்குமாவது. அதன் பிறகு
அவனும் பேசுவானா என்று தெரியவில்லை
ஜெய் கொரோனா.

Post a Comment

No comments: