Posts

Showing posts with the label மத்திய அரசு

கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள்.

Image
 பெட்ரோல், மளிகை, போன்ற பொருட்களைப் போல கண்ணுக்கே தெரியாமல் இன்னொரு விஷயமும் விலை ஏறிக் கொண்டே போகிறது. அது மருந்துகளின் விலை. ஒரு மருந்துக்கான விலையை எப்படி நிர்ணையிக்கிறார்கள்? எவ்வளவு முறை விலையேற்றலாம் என்ற சட்டங்கள் எல்லாம் இருக்கிறதா இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் அடிக்கும் கொள்ளை நிச்சயமாய் மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டியது அவசியமாகிக் கொண்டிருக்கிறது.