கருத்து சொல்லலாமா? வேண்டாமா?
நேற்று ஃபேஸ்புக்கில் மும்பை கடையடைப்புக்கான காரணம் மரியாதையில்லை பயத்தினால் என்று விமர்சித்த பெண்ணையும், அதற்கு லைக் போட்ட பெண்ணையும் மும்பை போலீஸ் கைது செய்திருக்கிறது. இருவரும் இருபது வயதுக்குட்பட்டவர்கள். இம்மாதிரியான கதவடைப்புகளினால் எரிச்சலானவர்கள். இந்தக் கடையடைப்பைப் பற்றி ஊரில் உள்ள யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள் இவர்கள் சொன்னதைத்தான் சொல்வார்கள். அது தான் உண்மையும் கூட.ஆனால் வெளியில் சொல்ல பயம். அந்த பயம் இன்றைய இளைஞர்களிடம் இல்லை.