Posts

Showing posts with the label புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி –7 ஆம் நாள்

மாலையில் கிளம்பலாம் என்றால் சரி மழை பெய்தது. விடாமல் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் அடித்த மழை சட்டென ஓய, உடன் கிளம்பினேன். மழையினால் வழியெங்கும் ட்ராபிக் ஜாம். ஒரு வழியாய் ஆறு மணிக்கு கிளம்பியவன் ஏழு மணிக்கு போய்ச் சேர்ந்தேன். பத்திரிக்கையாளர் பாலா போன் செய்தார். அவரை நான் 334 டிஸ்கவரியில் சந்திப்பதாய் சொல்லிவிட்டு, நேற்று ரவுண்ட் அடித்த எதிர்பக்கத்திலிருந்து ஆரம்பித்தேன். மழையின் காரணமாய் கூட்டம் மிகக் குறைவாகவேயிருந்தது. ஒவ்வொரு கடையாய் பார்த்து வரும் போது இந்திராபார்த்தசாரதியின் மூன்று குறுநாவலை வாங்கலாம் என்று யோசித்து பர்சை எடுத்தால் பணமேயில்லை. வெறும் நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. க்ரெடிட் கார்டும் அக்செப்டட் இல்லை என்பதால் திரும்பக் கொடுத்துவிட்டு, மெல்ல நடந்தேன். வழியில் இன்னொரு நண்பர் கந்தாவை சந்தித்தேன். உதவி கேமராமேன். நான் இணை இயக்குனராய் பணி செய்த படத்தில் அவரும் வேலை செய்தார். இனிமையானவர். சூட்டிங் ஏதுமில்லாததால் இங்கு நண்பருக்கு உதவி செய்வதற்காக வந்திருப்பதாய் சொன்னார். சிறிது நேரம் பேசி கொண்டிருந்தோம். அந்த ஸ்டால் முழுக்க, கம்யூனிசமாகவோ, அல்லது அணு உலை வேண்டாம் என்ற...

புத்தகக் கண்காட்சி –நாள் 6- தெர்மக்கோல் தேவதைகள் விமர்சனமும்.

Image

சென்னை பஸ், புகார், புத்தகக் கண்காட்சி

Image
சென்னை அரசு பஸ்சுகளில் பயணம்  செய்து வெளிவருவது ஒருவிதமான தவம் என்று என் நண்பர் அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் பல. முக்கியமாய் கண்டக்டர்களின் எரிச்சலூட்டும் நடவடிக்கைகள். அவர்களின் நடவடிக்கைகளுக்கு கோபப்படாமல் அமைதி காத்து வந்தால்தான் ப்ரெஷர் இல்லாமல் வாழ முடியும் என்பார். 

புத்தகக் கண்காட்சி - நாள் 3

காலையிலேயே வேடியப்பன் அழைத்தார். வேறொரு இயக்குனருடனான கதை விவாதம் இருந்ததாலும், அலுவலக வேலைக் காரணமாகவும், எங்கேயும் போக முடியவில்லை. கே.ஆர்.பியும் நானும், மாலை நான்கு மணிக்காய் கிளம்பினோம். நேற்று நான் சொன்ன கவிதை புத்தக வெளியீடு வேறு இருந்ததால் கட்டாயம் போக வேண்டியதாகிவிட்டது. ராஜகுமாரியில் புத்தக விற்பனை எப்படி போகிறது என்று பார்க்க ‘ழ” கே.ஆர்.பியுடன் நுழைந்தோம். நன்றாக போயிருப்பதாகவும், என் புத்தகங்கள் விற்றிருப்பதாய் சொன்னார்.  மணிஜி வேறு போன் செய்திருந்தார். அவருக்காக காத்திருந்த வேலையில் வாசகர் சுதர்சன் வந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, புத்தகங்களையும், என் கையெழுத்தையும் வாங்கிக் கொண்டு போனார். என் முந்தைய புத்தகங்களான லெமன் ட்ரீயும், ரெண்டு ஷாட் டக்கீலாவையும், சினிமா வியாபாரத்தையும் பாராட்டினார்.

புத்தகக் கண்காட்சி – நாள் 2

சீக்கிரமே போக வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் கிளம்புகையில் லேட்டாகிவிட்டது. ஐந்தரை மணிக்கு சைதையிலிருந்து கிளம்பியவன், கண்காட்சிக்கு போக ஏழானது. படு பயங்கர ட்ராபிக். நேற்று வந்த ரூட் ட்ராபிக் என்று இன்று வேறு வழியில் வந்தால் அது அதைவிட கொடுமை. டிஸ்கவரி புக் வேடியப்பன்  என்னை பார்ப்பதற்காக சில பேர் கடைக்கு வந்திருப்பதாகவும், உடன் வரவேண்டுமென்றும் சொல்லி போனை வைத்தார். என்னுடய நண்பர் வாசகர் தாமு வந்திருந்தார். நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு ஸ்டெல்லாப்ரூஸின் பல நாவல்களை அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு இவருக்கு உண்டு. ஒலக சினிமா, ஒலக சினிமா என்று ஆளாளுக்கு அதைப் பார்த்தேன், இதைப் பார்த்தேன் என்று சொல்கிறவர்கள், இவரும் இவரது நண்பரும் பார்த்த படங்களைப் பற்றி பேசினால் ஆச்சர்யத்தின் எல்லைக்கு போய்விடுவீர்கள். நாற்பதுகளில் வெளிவந்த ஹாலிவுட், ஒலக படமெல்லாம் பார்த்திருக்கிறார்கள்.