சாப்பாட்டுக்கடை-விஸ்வநாதன் மெஸ்
கவிஞர் நா.முத்துகுமாரும் நானும் ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சாப்பாட்டின் சுவை பற்றி பேச்சு வந்தது. அசைவ உணவுகளை பற்றி பேச்சு வந்த போது, தலைவரே விஸ்வநாதன் மெஸ்ல சாப்ட்டிருக்கீங்களா? என்றார்.. இல்லை தலைவரே.. நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால் இடம் தான் சரியாய் தெரிய மாட்டேன்குது என்றேன். வாங்க ஒரு நாள் நாம போவோம்.. என்று சொல்லிவிட்டு வழி சொன்னார்.