Posts

Showing posts with the label பிண்ணனி இசை

இசையெனும் “ராஜ” வெள்ளம் –4

Image
இளையராஜா – மணிரத்னம் தளபதி கமல், ராஜா, மணிக்கு எப்படி ஒரு நாயகனோ, அது போல ரஜினி, ராஜா, மணிக்கு இந்த படம. படம் முழுவதும் மணியும், ராஜாவும் ஒரு சாம்ராஜயத்தையே விரவியிருப்பார்கள். படத்தின் முதல் காட்சியிலேயே ராஜா வேலையை ஆரம்பித்திருப்பார். சில்ஹவுட்டிலிருந்து வெளியே வரும் ரயிலின் சத்தத்துடன், கூடவே அதற்கீடான புல்லாங்குழல் இசையை ரயில் கூவல் போல, ஆரம்பித்து ஒரு அழுத்தமான ஆரம்பத்தை, ஆரம்பித்து வைப்பார். சின்ன தாய் இவள் பாட்டு மூலமாய், அதே போல் ரஜினியின் அறிமுக காட்சியான சண்டை காட்சி, அந்த காட்சியில் ரஜினி போடும் சண்டையின் உக்கிரத்தைவிட, ராஜாவின் ஆக்ரோஷமான பிண்ணனி இசை ரஜினியின் கேரக்டரை உச்சத்துக்கு கொண்டு போய் விடும். ஆங்கில படத்துக்கு ஈடான இசை இந்த காட்சியில் இருக்கும். இன்னொரு காட்சி மம்மூட்டியும், ரஜினியும் ஒரு பாலத்தில் நேருக்கு நேர் பார்த்து கொள்வார்கள்,  அப்போது சண்டைக் காட்சியில் பயன்படுத்திய அதே பிண்ணனி இசையை பயன்படுத்தியிருப்பார். ரஜினியின் வீர்யத்தை காட்ட எப்படி சண்டைகாட்சியில் அந்த இசை பயன்பட்டதோ, மம்முட்டி ஒரு அமைதியான, ஆனால் ஆழுத்தமான ஆள், என்பதை அவர் ...

இசையெனும் “ராஜ” வெள்ளம்-2

Image
இளையராஜாவின் பிண்ணனி இசை பற்றிய ஒரு கட்டுரையை ஆரம்பித்ததும், அவரது இசையை போலவே வழக்கம் போலவே மிக அருமையாய் களை கட்டிவிட்டது பின்னூட்டங்கள். மேலும் தொடரச் சொல்லி உற்சாக ஊக்குவிப்பு. வேறு.. அந்த உற்சாகத்தில் மேலும் தொடர்கின்றேன். சென்ற கட்டுரையில் இளையராஜாவின் பிண்ணனி இசையில் பாரதிராஜா- ராஜாவின் கூட்டணியில் வெளிவந்த சில படஙக்ளை பற்றி சொன்னேன். இந்த முறை மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் வெளிவ்ந்த படங்களை பார்ப்போம். பல்லவி- அனுபல்லவி மணிரத்னத்தின் முதல் படம், கன்னட படம், லஷ்மி, அனில் கபூர், நடித்து வெளிவந்த படம். இந்த படத்தில் டைட்டில் கார்டுக்கு ஒரு பிண்ணனி இசை ராஜா போட்டிருப்பார் வய்லினை அடிப்டையாய் வைத்து, புல்லாங்குழல், கிடார் என்று எல்லாம் சங்கமிக்க  ஒரு மினி  இசை ராஜாஙகமே அமைத்திருப்பார். அந்த இசையை இன்று வரை மறுபடி, மறுபடி உபயோகபடுத்தி வருகிறார்கள்.  சிவா மனசுல சக்கி திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் யுவன் அதை உபயோகபடுத்தியிருப்பார். ஐடியா செல்லூலரின் விளம்பர பிண்ணனி இசைக்கு அதை உபயோகபடுத்தியிருப்பார்கள்.  அதே இசையை ராஜாவே “மெல்ல.. மெல்ல என...

இசையெனும் ”ராஜ” வெள்ளம்

Image
நேற்று ஒரு படம் பார்த்து கொண்டிருந்தேன். மிக முக்கியமான கட்டம் க்ளைமாக்ஸ், பிண்ணனி இசையினாலேயே நம்மை அள்ளி இழுத்து கொள்ள வேண்டிய இடம்,  அங்கே தன் ஆளுமையை காட்டவில்லை அந்த படத்தின்  இசையமைப்பாளர், அதே போல் காமராஜர் படத்தின் டபுள் பாஸிடிவ் பார்க்க சென்றிருந்தேன். அப்போது படத்தில் இயக்குனர் சில புட்டேஜுகளை விட்டிருந்தார்.  அவர் ஏன் விட்டிருந்தார் என்று எனக்கு புரிந்தது. அது பிண்ணனி இசை கோர்வைக்காக விடப்பட்டிருந்தது. இசை கோர்ப்பு முடிந்ததும் அது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும் ஏனென்றால் அந்த படத்தின் இசையமைப்பாளர் “இசைஞானி’ இளையராஜா. எத்தனையோ இசையமைப்பாள்ர்கள் கோலோச்சியுள்ள தமிழ் சினிமாவில், ஆர்.ஆர்னா அது ராஜா தான் என்று இன்றளவும் பேசப்படும் ஒரு மாபெரும் கலைஞன் இளையராஜா மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவரது பிண்ணனி இசை படத்தில் இயக்குனர் சொல்லாமல் விட்ட விஷயங்களை கூட சொல்லிவிடும், இவரது பிண்ணனி இசையால் சாதாரணமான க்ளைமாக்ஸ் காட்சிகள், படம் பார்க்கும் பார்வையாளனின் உணர்வுகளை தூண்டப்பட்டு மிக சிறந்த க்ளைமாக்ஸாக மாறிய படங்கள் எத்தனையோ. இன்றளவில் என்னுடய...