கத்திகப்பல் - விமர்சனம்
கத்திகப்பல் பேர் வித்யாசமாய் இருக்கிறது, மணிரத்னதின் அசிஸ்டெண்ட், பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியர் ஆர்.செல்வராஜின் புதல்வர் என்று இயக்குனர் தினேஷ் பற்றி எதிர்பார்போடு படத்துக்கு போனேன்.. இது போதாதென்று நாளிதழ்களில் வேறு படத்தின் நாயகன், நாயகி படத்துக்கு பதிலாய் மணிரத்னமும், பாரதிராஜாவும் பேசிக் கொள்வது போல் விளம்பரம் வேறு என்னை உசுப்பேற்றிவிட.. கத்திகப்பல் விமர்சனம் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வீரய்யன் என்கிற வீரப்பனை போல ஓருவன் ஒரு மாஜி அமைச்சரை கடத்தி கொண்டு போய் பல கோடி கேட்டு மிரட்டுகிறான். அவனை பிடிப்பதற்காக அமர்த்தியிருந்த ஐந்து போலீஸ் அதிகாரிகள், சந்திரபோஸ், தென்னவன்,ஜெயபிரகாஷ், சக்திவேல்,வினோத் குமார் என்கிர அதிகாரிகள் அவனை கொன்று வெற்றி வாகை சூடிக் வரும் வேளையில் நேர்மையான டாக்டர் பாரிவள்ளலையும் வீரய்யன் கொன்று விடுகிறான். அந்த கேஸ் க்ளோஸ் செய்யபடுகிறது. இருபது வருடங்களுக்கு பிறகு பாரிவள்ளலின் மனைவி சாரா தனிமையில் வீட்டில் விளக்கு கூட இல்லாமல் ஓரு திருதிரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருக்க, அவளை தேடி ஹீரோ அனுப்குமார் வருகிறார். வந்து அவர் தான் பாரிவள்ளல் எனவும் சாராவின் கணவன் மற...