டோண்டு ராகவன்.
முதன் முதலாய் இவரை நான் பீச் பதிவர் சந்திப்பில்தான் பார்த்தேன். கையில் ஒர் நோட்டுப் புத்தகம். சற்றே பெரிய உடல், கனீரெண்ற குரலில் ”நான் டோண்டு ராகவன்.. நீங்க தான் கேபிள் சங்கரா?.. ஆமா அதென்ன கேபிள் சங்கர்னு பேர் வச்சிருக்கேள்?” என்ற டிபிக்கலான பிராமண ஆக்செண்டோடு. நான் பெயர் காரணத்தை சொன்னதும் ‘ ஓ அதுவும் நல்லாத்தான் இருக்கு. உங்கள் மேல் ஒர் கவனிப்பை ஏற்படுத்துகிறது. என் பதிவெல்லாம் படிச்சிருக்கேளா?” என்றவரிடம் என்னால் சட்டென பொய் சொல்ல முடியவில்லை. “இல்லை சார்.. இனிமேதான்.. ” என்று இழுத்தேன்.