Posts

Showing posts with the label அதீதம்

பொறுப்பு

முன் பக்க பைக் டயர் அப்படியே பூமியில் அழுந்தியிருந்தது. பஞ்சர். நேத்து ராத்திரி வண்டியை வைக்கும் போது கூட நல்லாத்தானே இருந்திச்சு என்று யோசிக்கும் போது, நல்ல வேளை நடு வழியில நிக்காம காப்பாத்திச்சே என்றும் தோன்றியது. பொங்கல் தினமாதலால் சுத்துபட்டுப் மெக்கானிக்குகள் விடுமுறையிலிருக்க, மெயின் ரோடுக்குச் சென்றால் யாராவது இருப்பார்கள் என்று மெல்ல நடையை கட்டினேன். எதிர்பார்த்தபடியே மெயின் ரோட்டிலிருக்கும் ”பா”யின் பஞ்சர் கடை திறந்திருந்தது. என் கூடவே ஒரு சின்னப் பையனை அனுப்பி வைத்தார் பாய். மொத்தமே மூன்று அடியில் ஒரு அழுக்கு டி சர்ட்டையும், டைட்டான டவுசரையும் போட்டுக் கொண்டு, கையில் டூல்ஸுடன் சர சரவென வேகமாய் எனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தான். அவ்வப்போது நான் பின்னால் வருகிறேனா? என்று திரும்பி, திரும்பி பார்த்து கொண்டான். மேலும் படிக்க.. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

ரெண்டு இட்லி.. ஒரு வடை..!

" ரெ ண்டு இட்லி, ஒரு வடை.!" -இந்த சொற்றொடர் பொது மக்களிடையே சினிமா சார்ந்த ஒரு குறிப்பிட்ட குழுவினரை கிண்டல் செய்ய மிகப் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. இது யாரைக் குறிக்கும் என்றால், ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ் எனப்படும் துணை நடிகர்களை குறிக்கும். பொது மக்களிடையே புழங்கும் இந்த மாதிரியான கிண்டல் எப்படி வந்தது என்று பார்க்கும் போது அவர்கள் சொல்லும் காரணம், ஒரு பொருத்தமில்லாத விஷயமாக இருக்கிறது. காலையில் டிபனுக்கு ரெண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டு விட்டு கும்பலில் நின்றுவிட்டு போய்விடுபவர்கள் என்பதுதான் அது.. இது நான் அதீதம் இணைய இதழில் எழுதியிருக்கும் கட்டுரை.. இதை மேலும் படிக்க இங்கே க்ளிக்கவும்