Thottal Thodarum

Dec 29, 2007

புதிய குறும்படம் "ஆக்ஸிடெண்ட்"

நான் சமீபத்தில் இயக்கிய குறும்படம் "ஆக்ஸிடெண்ட்" என்கிற இந்த குறும் படத்தை என்னுடய இணைய தளத்தில் ஏற்கனவே.. வெளீயிட்டுள்ளேன்.
பெறுவாரியான இணையதள மக்களிடம் அதன் வரவேற்பை அறியவே.. அந்த குறும் படத்தை இங்கே வெளியிடுகிறேன்.

அதற்கான லிங்க் இதோ...

http://www.shortfilmindia.com/ShortAccident.html

Aug 15, 2007

என்ன எல்லாரூம் சிவாஜி பாத்தாச்சசா...?

சிவாஜி.. பார்த்தாச்சா..?
Friday June 22nd 2007, 9:58 am Filed under: Uncategorized
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகில் உள்ள 25 நாடுகளில் ஓரே சமயத்தில் சங்கரின் ‘சிவாஜி” படம் ரீலீஸ் ஆகியிருக்கிறது. கடந்த 14ஆம் தேதி முதலே.. தமிழ்நாட்டில் எல்லார் வாயிலும் “சிவாஜி டிக்கட் வாங்கிட்டியா?? வாங்க்கிட்டியா? என்ற கேள்வி தான். அப்படி ஓரு சிவாஜி ஜூரம். உலகமே எதிர்பார்க்க வைத்த ஏவிஎம். ரஜினி, சங்கர், ஏ.ஆர். ரகுமான். போன்ற ஜாம்பவான்கள் சேர்ந்திருக்கும் படம், என்வே எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும், எங்கே முதல் நாளே படத்தை பார்க்காவிட்டால் எதிர்படும் நண்பர்களிடம் அவமானப்பட வேண்டுமே என்று.. முதல் நாளே.. எனக்கு தெரிந்த தியேட்டர்களை காண்டேக்ட் செய்து, ஓரு வழியாக, 10 டிக்கெட்டை வாங்கிவிட்டேன்.. அந்த பத்து டிக்கெட்டுக்கு நான் நீ என்று போட்டி வேறு. நான் சிலருக்கு டிக்கெட் கொடுக்க முடியாமல் போக, அதனால் சில நண்பர்கள், விரோதியாக, பாவிக்க, ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் எதிர்பார்பெல்லாம், என்னுடய டிக்கெட்டை அவர்களீடம் கொடுத்தாவது, என் நட்பை நிருபிக்க, பிரயத்தனம் செய்தார்கள்.
இவ்வளவு, பரபரப்புக் கிடையே, ஓரு வழியாக, தியேட்டர் வாசலில் இருந்த நான்கு தியேட்டர் கும்பலை கடந்து, ஓரு வழியாக, நசுங்கி, பீழிந்து, உள்ளே, போனதும், படம் ஆரம்பித்துவிட்டார்கள். படம் ஆரம்பித்ததும், ரஜினியை, சிறையில் காட்டும் காட்சியில், ஓரு பத்து வருட குறைந்த இளைமையில், பார்த்ததும், நிமிர்ந்து உட்கார வைத்தார் ரஜினி, அதற்கு அப்புறம் தான் , படட்த்தில் காமெடி என்ற பெயரில், ஸ்ரேயாவின் வீட்டில் போய் ரஜினி, பழக, ஆரம்பிப்பதும், அவர்கள் தமிழ் கலாசரத்தின்படி, பழக, அனுமதிகாமல், வெளியே, அனுப்ப, எதிர்வீட்டு சாலமன் பாப்பையா.. தன் இரண்டு கரி குண்டு பெண்களை அழைத்து, அவர்களுடம் பழக, அழைக்க, ஓரே,, காமெடி என்ற பெயரில் கூத்து, அது மட்டுமில்லாம. ரஜினியோடு வரும் விவேக் ஓவர்.
அதன் பிறகு, வழக்கமான, கதை, கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்தது என்றே என்க்கு தெரியாது. ஏன் என்றால் என்னை மீறி நான் கண்யர்ந்து விட்டேன். அதற்கு அப்புறம் வரும் திருப்பம், ரஜினி, பாப்பர் ஆவது, சுமனை அவர்வீட்டில் ரெய்டு விட்டு எல்லா கருப்பு பணத்தையும் அபேஸ் செய்தவுடன் படம் முடிந்து விட்டது. அதற்கு அப்புறம் நடப்பதெல்லாம். ஓரே காமெடி. அதில் உட்சபட்சமான காமெடி, ரஜினி தனக்குத்தானே மின்சாரத்தை பாய்ச்சி கொள்வதும், சில மணி நேரங் கழித்து அவரை ரகுவரன் பிழைக்க வைப்பது,
அதற்கு அப்புறம் ரஜினி மொட்டை அடித்துவந்து, செய்யும் கூத்தெல்லாம். படு கொடுமை. படத்தில் ஓரே ஆறுதல். ரஜினி, ரஜினி, ரஜினி,
அதெல்லாம் சரி, கருப்பு பணத்தை பற்றி, பல கோடி செலவு செய்து, அந்த படத்தை வெளியிட விநியோகதர்களிடம், தினசரிகளில் மடித்து கொடுக்கப்பட்ட, கருப்பு பணத்தை எந்த சிவாஜி, பிடிங்கிக் கொள்வார்.
ஜம்பது ரூபாய்க்கு மேல் யாரும் டிக்கெட் விற்கக்கூடாது என்ற உத்தரவை, காற்றில் பறக்கவிட்டு, நூறு, இருநூறு, என்று விற்பனை செய்த தியேட்டர்காரர்கள், அவர்கள் கலைக்ட் செய்த கண்க்கில் வராத பணத்தை எந்த சிவாஜி பிடிங்கிக் க்கொள்வார்.
யாமறியேன் பராபரமே….

May 14, 2007

பார்த்த முதல் படம் எது?

எல்லாரும் படம் பார்க்கிறோம், ஆனால் முதல் முதலாக பார்த்த திரைப்ப்டம் எது என்று பலருக்கும் ஞாபகம் இருக்குமா?. எனக்கு நினவு தெரிந்து என் தாத்தா ஜெமினி லேபில் செக்கூரிட்டி ஆபிசாராக இருந்த போது, அங்கே இருக்கும் பிரிவியூ தியேட்டரில் சிவாஜி கணேசன் நினத்த "அந்தமான் காதலி" என்ற பட்த்தை பார்த்ததை அங்கிங்கே ப்ளாஷ் கட் போல, கலரிலும், ப்ளாக் & வொயிட்டிலும் அந்த படத்தை எப்போதாவது டிவியில் பார்க்கும்போது, வரும். திரும்ப திரும்ப யோசித்து பார்த்ததில், எம்.ஜி.ஆர். ந்டித்த, "பல்லாண்டு வாழ்க" என்ற திரைப்படமும் வ்ந்து, வந்து, போகிறது, ஆக இந்த இரண்டில் ஓன்றைத்தான் நான் பார்திருக்க வேண்டும், அப்போது எனக்கு இந்த் இரண்டில் பிடித்த படம்,, வழக்கம்போல் "பல்லாண்டு வாழ்க" தான்
இது போல் நீங்கள் பார்த்த், முதல் படத்தை பற்றி ஏதாவது சொல்லலாமே..

May 9, 2007

டாஸ்மாக்கும் DDயும்

அன்று நான் எழுதிய பிளாக்கையே இப்போது சட்டமாக இயற்றப் போகிறார்க்ள்
என்பதை நினைக்கும் போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
டாஸ்மாக் கடைகளீன் வாசலில் நிற்கும் வண்டிகளை பிடித்தாலே, குடித்துவிட்டு
வண்டி ஓட்டுபவர்களை, கட்டுப்படுத்த முடியும் என்ற என்னுடய ப்ளாக்
http://cablesankar.blogspot.com/2006/11/blog-post_23.html

நீங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

Mar 13, 2007

முனி அடிச்சிருச்சு....

ஆமா.. முனிதான் அடிச்சிரூச்சு, முனி படம் சாயங்காலம் ஆனா பேய்க்கு பயப்படும் ஓருவனின் கதை. அப்படி பேய்க்கு பயப்படும் ஓருவன் அவர்தம் குடுப்பத்தோடு பேய் வசிக்கும் வீட்டிற்கு குடியேறுகிறார்கள், அங்கிருந்து ஆரம்பிக்கிறது கதை. வழக்கமா ஹீரோவென்றால் எல்லாரையும் அடித்து உதைத்து, எதற்கும் பயப்படாதவனாய் இருப்பான் ஆனால் இதில் கதாநாயகன் ஆறு மணியானால் வெளியே போகப் பயப்படுகிறான்.ஆனால் லாஜிகில்லாமல் நேரே கதாநாயகியின் வீட்டிற்குப் போய் அவளின் பெற்றோர்களிடம் உங்கள் பெண்ணை காதலிப்பதாய் சொல்லி உடனே அவர்கள் எல்லாம் சம்மதிப்பதும், படு தமாஷ். பேயை காட்டும்முன் அதற்கான பில்டப்புகள் அமர்களம். பேயின் அட்டகாசங்களும், வீட்டிலேயே குடியிருக்கும் ஓரு குடும்பத்தில் பேய் பிடித்ததாக நடித்து கொண்டிருக்கும் பெண், குட்டி சாத்தான் போலிருக்கும் வாட்சுமேன், பின்பக்கத்தில் குடியிருக்கும் பெரிய பொட்டு கிழவி, என்று படத்தின் முதல் பாதி, படு சுவாரஸ்யம், பேயே வராமல் படு சுவாரஸ்யமாயிருந்த படம், பேய் வந்ததும், அத்தனை பில்டப்புகளூம் வடிந்து போய் வெறும் காத்தாய் போய்விட்டது தான் வருத்தம். அதிலும் பேயாய் வரும் ராஜ்கிரண் கேரக்டர் படு அமெச்சூர் தனமான கதாபாத்திரம். சினிமாக்கென வ்ரும் ஏழை நண்பர் பாத்திரம். வில்லனாய் வரும் தண்டபாணி, அதைவிட காமெடி. படத்தில் அதைவிட காமெடி அடிக்கடி வரும் பாடல்களூம், லாரன்ஸ் செய்யும் ரஜினி கனவு மேனரிசங்களூம், தெலுங்குபட ஸ்டைலில் வரும் காட்சியமைப்புகளூம் கண்டிப்பாக தெலுங்கில் இந்த முனி அடிக்க அதிக வாய்பிருக்கு. தமிழில் முனி முதல் பாதி கல.. கல.. முனி.. பின் பாதி.. சவ... சவ... சனி...

Feb 17, 2007

தரிசனம்



என் மனைவியின் தொந்தரவு தாங்காமல் அந்த இடத்திற்கு போக பயணப்பட்டேன். எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. எனக்கு நம்பிக்கையுமில்லை. ஆனால் அதை என் மனைவியிடம் திணிக்க எனக்கு மனமில்லை. அவள் சொன்ன இடம் ஓரு பிரபலமான சாமியாரின் ஆசிரமம். அங்கே போய் அவரை தரிசித்திவிட்டு வந்தால் எல்லா கவலைகளும், நோய்களும் போய்விடும், மன அமைதி கிடைக்குமென்றாள். அவளூக்கு என்ன அமைதி கெட்டு போய்விட்டதென்று கேட்க நினைத்து, கேட்காமல் சரி போகலாம் என்றேன்.பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணம். அங்கே போய் சேரும் போது இரவாகிவிட்டது. அதனால் அருகேயிருந்த ஓரு லாட்ஜில் அறையெடுத்து தங்கினோம். இரவு குளிர் அதிகமாக இருந்தது. போர்வையோடு சேர்த்து என் மனைவியை அணைத்து போர்த்திக் கொள்ள எத்தனித்தேன். அவள் சடாரென்று எழுந்து

"என்ன நீங்கள் .... உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க... நாம என்ன ஹனிமூன் டூருக்கா வந்திருக்கோம்.. தள்ளிப்படுங்க..."

என்று கட்டிலை விட்டு இறங்கி வெறும் தரையில் போய் படுத்தாள். நான் அவளை பார்த்து

"சரி நான் ஓண்ணும் செய்யமாட்டேன்... மேல வந்து படு..." என்ற குரலை சற்றும் சட்டை செய்யாமல் என் குரல் கேட்காதது போல முகம் திருப்பி கண்மூடிக் கிடந்தாள். அவள் பிடிவாதம் எனக்கு தெரியும்.அதிகாலை மூ்ன்று மணிக்கெல்லாம் என்னை எழுப்பி குளிக்க வைத்து, அந்த ஆசிரமத்தில் நுழைந்தவுடன் அங்கே இருந்த சீடர்கள், என்னையும், என் மனைவியையும், தனி, தனியே பிரித்து, அவளை பெண்கள் பக்கத்திலும், ஆண்கள் பக்கத்தில் என்னை நிற்கவைத்து, இனிமேல், திரும்ப வெளியே வரும் போதுதான் ஒன்றாய் பிரிந்த இடத்திலேயே பார்க்க முடிய்மென்று அந்த சீடர் கூற, என் மனைவி உள்ளே நுழைந்தது முதல் அந்த சாமியாரின் பேரைச் சொல்லியபடியே மெய் மறக்க ஆரம்பித்திருந்தாள்.

அவளுக்கு என் ஞாபகமிருக்குமா என்று சந்தேகமே..என் மனைவி சென்றவுடன் வேறு வழியில்லாமல் நானும் அங்கிருந்த ஆண்கள் ஜோதியில் கலக்க ஆரம்பித்தேன். எல்லோரும் கும்பலாய் கொஞ்சம் கூட சத்தமில்லாமல் அமைதியாய் வருவது எனக்கு அதிசயமாயிருந்தது. பொதுயிடத்தில் கூட உரத்து போன் பேசுபவர்களா? இவர்கள்? அவர்களின் ஓழுங்கு எனக்கு ஆச்சர்யபட வைத்தது. எல்லோரும் அங்கிருந்த கோயில் சந்நிதிக்கு போனவுடன் அங்கே கடவுளுக்கு ஆராதனை செய்து பூஜை முடிந்தவுடன். "டோலக்" :" ஜல் ...ஜல்..."ஜால்ரா போன்ற இசை கருவிகளை எடுத்துக் பஜனை பாடலை பாடி வாசிக்க ஆரம்பித்தார்கள். அப்படியே பஜனைகளை பாடியபடி நடக்க ஆரம்பிக்க.. அந்த அதிகாலை நேர அமைதியும், ஓரே ரிதத்தில் வரும் பஜனை பாடலும் என் மனதை அந்த பஜனை ரிதத்திக்கு தலை ஆட்டச் சொன்னது.

நாம் அந்த சுருதிக்கும், அந்த காலை நேர அமைதியும் செய்யும் அதிகாலை ரீங்காரம் தான் என்று என் அறிவுக்கு எட்டினாலும், எனக்கு அந்த மெல்லிய இசை தரும் போதையும், அந்த அதிகாலை குளீரும் தேவையாகத்தான் இருந்தது. நானும் அவர்களுடன் பாட ஆரம்பித்தேன்.மெல்ல பாடியபடி ஓரு ரவுண்ட் வந்து மீண்டும் ஓரு ஆரதனை முடிந்தபின், எல்லாரையும் ஓரு பரந்த மைதானத்தில் ஓரு ஆளுக்கும், மற்றோரு ஆளுக்கும் நம்முடய கையை நீட்டினால் கிடைக்கும் இடைவெளியமைத்து உட்கார வைத்தார்கள். அந்த இடத்தை பார்க்கும் போதே ஓருவித அமைதி ஏற்பட்டிருந்தது. மைதானத்தின் நடுவே ஓரு பரந்து விரிந்த ஓரு மாளிகை, ஓருவிதமான மயக்கும் ரோஜா கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. அதன் பின் பக்கத்தில் பனி படர்ந்த உயர்ந்த மலைகள், சுற்றிலும் உயர்தர புற்களால் அமைக்கப்பட்டிருந்த பச்சை ஜமுக்காளம் போலிருக்கும் பனிநீர் படிந்த புல்தரையும், எங்களுக்குள் இருந்த இடைவெளியும், அதனால் ஏற்பட்ட அமைதியும், மிக அற்புதம்.சுமார் ஓரு மணி நேரத்திற்கு அப்படி உட்கார்ந்திருந்தேன்.ஓரு மனிதன் எந்த விதமான செயல்களிலும் ஈடுபடாமல் சும்மா உட்கார்ந்திருப்பது மிக கடினமானது. முதல் பத்து நிமிடத்தில் யாரும் பார்க்காமல் மற்றவரிடம் பேசலாம் என்று பார்கும், ஆனால் அங்கே அவர்கள் கடைபிடிக்கும் ஓழுங்கு உங்களை கட்டுப்படுத்தும், பின்னர் உங்கள் மனதிற்குள் பல என்ன ஓட்டங்கள் ஓட ஆரம்பிக்கும், அங்கிங்கே அலைந்து சிறிது நேரத்திற்கு பிறகு எந்த வித எண்ணங்களூம் இல்லாமல் ஓரு வெறுமை உங்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும்.

நீங்கள் அந்த சாமியாரின் அதி தீவிர பக்தராக இருந்தால், அவர் நாமத்தை ஜபிப்பதையே கடமையாய் கொண்டிருந்தால் நிச்சயம் அவரால் தான் நமது மனத்திற்கு அமைதியேற்பட்டதாக தெரியும். அந்த சமயத்தில் ஓரு விதமான மெல்லிய இசை, மனதை வருடும் மெல்லிய இசை,சாரங்கி, வீணை, வயலின், போன்ற கம்பி வாத்தியங்களினால் வருடப்பட்ட இசை, அதனூடே "குமுக்கு,,,குமுக்கு..." என்று இடிக்காத தபலாவும் சேரும் போது.. அந்த மாளிகையின் முதல் மாடி பால்கனியில் அவர் தெரிந்தார்.

அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அந்த கணமே தங்கள் கவலைகள் போக்கும் கடவுளின் அவதாரமாய் தெரிய..அவர் பெயர் சொல்லி அழைத்தார்கள். அங்கே ஓரு பக்தி மின்சாரம் எந்த கனைக்டிவிட்டியும் இல்லாமல் காற்றில் இருந்தது. அதற்குள் அவர் மெல்ல மாடியிலிருந்து இறங்கிவந்து, தரையிரங்கி, அங்கே அருகேயிருந்த பெண்கள் பக்கத்தில் மெல்ல நடந்து வந்து, அங்கேயிருந்த பெண்களில் சிலருக்கு மலர்களும், தங்கசெயினும், குங்குமமும், ஆண்களுக்கு வீபூதியும், மோதரமும் கொடுத்துவிட்டு அங்கிருந்த எல்லோரையும் ஓரு பார்வை பார்த்துவிட்டு, வலது கையை உயர்த்தி, எல்லாரையும் ஆசிர்வதித்துவிட்டு, அந்த் இசை முடிவதற்குள் உள்ளே சென்றுவிட்டார்.

எல்லாம் முடிந்து நான் என் மனைவியை அந்த ஆசிரமத்தின் வாசலில்தான் பார்த்தேன். அவள் முகத்தில் ஏதோ ஓரு பிரகாசம் இருந்தது.

"என்ன .. எப்படியிருந்தது தரிசனம்? என்றாள்.

நான் அவளிடம் "என்ன தரிசனம்?' என்றேன்.

அவளுக்கு என்னைப் பற்றி தெரிந்திருந்தாலும், மனசு கேட்காமல்

"உங்களுக்குள்ளா ஏதுமே தோணலயா?"

"அவரை பார்த்தவுடனே நம்ம மனசுல ஓரு சின்ன நம்பிக்க வரல?" அவளை மாதிரியான பக்தர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட ஓரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியரின் நேர்த்தியோடு அமைககபட்ட ஓரு திரைக்கதைதான் இந்த தரிசனம் என்று சொன்னால், அவள் மனது புண்படும் என்று தோன்றியதால்.. நான் ஏதும் பேசாமல்.. சிரித்தபடி, தலையாட்டினேன்.

Jan 23, 2007

டி.ஆருக்கு பயந்த விஜய்

டி.ஆருக்கு பயந்த விஜய்
இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று விளம்பரபடுத்தப்பட்ட, டி.ஆரின் "வீராசாமி" பொங்கலுக்கு வரவில்லை .ஏன் என்று விசாரித்தபோது, வெளிப்பட்ட ரகசியம் இதுதான். அதாகப்பட்டது. டி.ஆரின் வீராசாமி... தன்னுடய போக்கிரி படத்துடன் வெளியானால் தன்னுடய படத்தின் வசூல் பாதிக்குமென்று கருதி தனிப்பட்ட முறையில் டி.ஆரிடம் கோரிக்கை வைத்து படத்தை தள்ளிப்போட வைத்துள்ளதாக தகவல்.
ஜோக்.. ஆப் த டவுன்

Jan 1, 2007

குறைந்த சினிமா கட்டணமும், கானல் நீரூம்...

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்
வருகிற ஜனவரி மாதம் முதல் சென்னையில் உள்ள தீயேட்டர்களில் எல்லாம் ஜம்பது ரூபாய்க்கு படம் பார்க்கலாம்ன்னு பார்தா.. வழக்கப்படி கருணாநிதி அவர்கள் குழப்படிச்சிட்டாரூ.. போனவாரம் ஓண்ணு , இந்த வாரம் ஓரு ரூல்ஸ்ன்னு மாத்திட்டாரு. அதனால இனிமே நாம வழக்கப்படி அதே நூறு ரூபாய் கிட்ட கொடுத்து தான் படம் பார்கணும். சத்யம், மாயாஜால் போன்ற நல்ல முறையில் பராமரிக்கபடும் தியேட்டர்களுக்கு இந்த விலை கொடுத்தாலும் தகும், ஆனால் இந்த மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தினால். டூபாக்கூர் தியேட்டரான... ரோகிணி போன்ற காம்ளெக்ஸ் ஏற்கனவே அநியாயமாய் படம் பார்க்கும், பார்வையாளரூக்கு எந்த வசதியையும் செய்யாமல், ஏன் எல்லா தியேட்டரும் டிடிஎஸ்ஸூக்கு மாறிக் கொண்டிருக்க, சென்னையின் முக்கிய கலெக்ஷன் செண்டரான அந்த தியேட்டரில் நல்ல ஓளி, ஓலி அமைப்பு கிடையாது, சீட் பற்றி கேட்டகவே வேண்டாம்.. கருணாநிதி அவர்க்ள் போட்டிருக்கும் புதிய சட்டத்தினால் நிறைய சம்பாதிக்க போகிறவர்க்ள அரசு அதிகாரிகள்தான் எப்படியும் இவர்கள் காம்ளெக்ஸ் தியேட்டர் என்று சொல்லி புதிய விலையை வைக்க போகிறார்கள் அனால் வச்தியை பெருக்காமல் அந்த விலையை வைக்க, கட்டிங் போகப் போவது உறுதி, தயவு செய்து சட்டங்களை போடும் போதே சரியாக போடுவது நல்லது. அல்லது போட்டபின் மாற்றியமைக்காமல் அதை அமுல்படுத்தி, அதில் மாற்றங்க்ள் வேண்டுமெனில் சரி செய்வதே சரி என்று என் எண்ணம். ம்ஹூம்... ஜம்பது ரூபாய்க்கு சத்யமில் சினிமா.. கானல் நீர்தான்...