Thottal Thodarum

Sep 25, 2015

குற்றம் கடிதல்

தேசிய விருதும் உலகபட விழாக்களிலும் அங்கீகாரமும், பரிசும் பெற்ற படம். ட்ரைலர், ஏற்கனவே பார்த்தவர்கள் சொன்னதை வைத்து பார்க்கும் ஆவல் அதிகமாகியிருக்க, சரியான தியேட்டர்களில் காட்சிகள் இல்லாமல் போரூர் கோபாலகிருஷ்ணாவில் பார்த்தேன். 

Sep 21, 2015

கொத்து பரோட்டா -21/09/15

வேளச்சேரி லூக்ஸ்
சத்யமிடமிருந்து வேளச்சேரி லூக்ஸ் ஜாஸ் சினிமாஸின் வசம் போய் விட்டது. ஆன்லைன் புக்கிங்கில் புக் செய்து  அரை மணி நேரம் கழித்து எஸ்.எம்.எஸ் வந்தது. எல்லாருக்கும் வயலட் கலரில் யூனிபார்ம் கொடுத்திருந்தார்கள். வழக்கமான சத்யம் சினிமாஸின் விளம்பரங்கள் இல்லை. அதே பட்டர் பாப்கார்னுடன், டாப் அப் செய்யும் பவுடர்கள் வைத்திருந்தது பல சத்யம் ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்தது. நிர்வாகம் கை மாறியிருப்பதை உணர முடியாத வகையில் சமாளிக்கிறார்கள். முன்பெல்லாம் சத்யமிடம் இருந்த வகையில் பத்து ரூபாய் டிக்கெட்டை கொடுக்க மாட்டார்கள் அல்லது காலையிலேயே கொடுப்பார்கள் என்று சொல்வார்கள். இவர்கள் அந்த வரிசையையும் 120 ரூபாய்க்கே ஆன்லைனிலேயே விற்கிறார்கள்.காரணம் எப்படி என்று சொல்லியா தெரிய வேண்டும். ஆல்ரெடி மாயாஜாலில் பத்து ருபாய் டிக்கெட்டை 120 ரூபாய்க்குத்தான் விற்கிறார்கள்.

Sep 14, 2015

கொத்து பரோட்டா - 14/09/15

சில்லு
2065ல் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு எல்லாம் உடலில் ஒரு சின்ன சிலிக்கன் சில்லை பொறுத்துகிறார்கள். அதில் ஒரு சில சில்லுகளில் ப்ரச்சனை. அப்பிரச்சனையுள்ள சில்லு கதை நாயகனின் உடலில். நாடெங்கும் உடலில் சில்லு பொறுத்தியதை எதிர்த்து கூட்டம் வருடங்களாய் போராட, நாயகனின் திருமணத்திற்கு முன்பு அவன் சாகப் போகிறானா? இல்லையா? என்பது தான் க்ளைமேக்ஸ். யின்ஸ் பிக்‌ஷன் நாடகம். கொஞ்சம் கஷ்டமான விஷயம். அதிலும் செட், காஸ்ட்யூம் என படுதா போட்ட நாடகங்களை விட அதிக மெனக்கெடல்கள் செய்தாக வேண்டிய கட்டாயம். பின்னணியாகட்டும், உடை அலங்காரம், மேக்கப் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். நாடகத்தை எழுதியவர் எழுத்தாளர் இரா. முருகன். கொஞ்சம் சுஜாதாவின் சொர்க்கத்தீவு, என் இனிய இயந்திராவெல்லாம் உட்டாலக்கடி ஆகியிருக்கிறது என்றாலும், நாடகம் நெடுக சர்காஸ்டிக்கான வசனங்கள், கிண்டல் நகைச்சுவை நிறைந்த வசனங்கள் என வாத்தியாரை நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். முக்கியமாய் புருஷனும் பொண்டாட்டியும் பேசிக் கொள்ளும் அல்லது ஆர்க்யூ செய்யும் போது, பேச்சு வாக்கில் உனக்கு ஹைட்ரோசில் ப்ராப்ளமா? என்று கணவன் கேட்க, எனக்கெப்படிடா ஹைட்ரோசில் வரும் என்று மனைவி கேட்குமிடத்தில் புரிந்தவர்கள் நன்றாய் சிரித்தார்கள். அதே போல, எதிர்கால அரசியல் வாதிகள் பேசிக் கொள்ளும் காட்சி, இளம் பெண்கள் போர்னோ பார்ப்பது போன்று வரும் காட்சிகள், காதலர்கள் அணைத்துக் கொள்வது, சர்காஸ்டிக்கான டபுள் மீனிங் பேச்சு எல்லாம் சபா மேடை நாடகங்களில் நாலு கால் பாய்ச்சல். ஹுமனாய்டாய் நடித்தவர் உட்பட எல்லாருமே நன்றாக நடித்தார்கள். புதியவர்கள் என்ற குறையே இல்லை. அந்த வகையில் இயக்குனர் தீபா ராமானுஜத்தை பாராட்ட வேண்டும். நாடகத்தில் லெட் டவுன் என்று சொன்னால் அது இசையாய்த்தான் தோன்றுகிறது. மொத்த நாடகமும் ஒர் ஆர்ப்பாட்டமும்மில்லாமல், அமைதியாய், மிக அமைதியாய் போகிறது. அது பல சமயங்கள் தொய்வை ஏற்படுத்துகிறது என்பது என் எண்ணம். தீபா ராமானுஜத்தின் இயக்கமும், ஷரத்தா, கிரியா தேனாண்டாள் பிலிம்ஸின் தயாரிப்பும் சிறப்பு. இம்மாதிரி மேடை நாடகங்களை ஊக்கப்படுத்த, இவர்கள் முன்னெடுத்திருப்பது வரவேற்கதக்கது.  வருகிற வாரம் கார்த்திக் ராஜா இசையில் பட்டணத்தில் பூதம் எனும் நாடகத்தையும், தேனாண்டாள் பிலிம்ஸ் தான் வழங்கவிருக்கிறதாம். வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 10, 2015

சாப்பாட்டுக்கடை - குமார் மெஸ் - சென்னை

வடபழனி லஷ்மண் ஸ்ருதி சிக்னலை க்ராஸ் செய்யும் போதெல்லாம் சென்னையில் வாழும் 80 சதவிகித மதுரைக்காரர்களும், சாப்பாட்டுப் பிரியர்களும், எப்படா கடை திறப்பீங்க?ன்னு எதிர்பார்த்த மதுரை புகழ் குமார் மெஸ் ஒரு வழியாய் ஆரம்பித்தே விட்டார்கள். ஆரம்பித்த நாளிலிருந்து கூட்டமான கூட்டம். க்யூ கட்டி நிற்கிறது என்றும். டோக்கன் போட்டெல்லாம் சினிமா பிரபலங்கள் காத்திருக்கிறார்கள் என்று பேச்சாய் இருந்தது.

Sep 4, 2015

சில்லு - ஒர் முன்னோட்டம்.


என்ன தான் நாம் சினிமாவை சிலாகித்தாலும், அது கொடுக்கும் பிரம்மாண்டத்தை வாய் பிளந்து பார்த்தாலும், எனக்கு நாடகம் என்பது அதை விட பாகாசூரத்தனமான பிரம்மாண்டம். ஏனென்றால் நாடகத்தில் ஒன்ஸ்மோரே கிடையாது. எதுவாக இருந்தாலும் ஸ்பாண்டினிட்டியோடு, வெளியாக வேண்டும். குட்டோ, பாராட்டோ அவ்வப்போதே கிடைக்குமிடம். என் தந்தையின் நாடக குழுவில் தொடர்ந்து நாடகங்கள் போடப்படும் போது அந்நாடகங்களில் ரிகர்சலை மிக ஆவலுடன் பார்ப்பேன். அதிலும் அரங்கேற்றத்திற்கு முதல் நாள் நாடகம் நடக்கும் மேடையிலேயே ஒரு காட்சி முழுக்க, முழுக்க ஒத்திகை பார்ப்பார்கள். அப்படி நாடகம் அரங்கம் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் முழு நாடகத்தையும், நடத்துவார்கள்.