Posts

Showing posts with the label Charunivedhitha

கொத்து பரோட்டா – 14/11/11

Image
kingfisher ஏர்லைன்ஸுக்கு கடன் கொடுக்க முடியாது என்று எண்ணைய் நிறுவனங்கள் சொல்லிவிட்டதால். அவர்கள் கடையை தற்காலிகமாய் முடி வைத்திருக்கிறார்கள். பேப்பரை திறந்தால் ஆளாளுக்கு ஏதோ தங்கள் கம்பெனிக்கு ப்ரச்சனை போல பக்கம் பக்கமாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏர் இந்தியாகாரர்கள் புதுசாய் இப்போது தான் தெரிந்தார் போல மன்மோகன் அரசு கார்பரேட்டுகளுக்காகத்தான் உழைக்கிறது. இதே போன்ற ஒரு சிட்ஷுவேசன் எங்களுக்கு வந்த போது உதவவில்லை என்று புலம்புகிறது. பாவம் மல்லையா தன்னுடய ப்ரைமரி ப்ராண்ட் ப்ரூவரியை அடமானம் வைத்து தொழில் செய்கிறாராம். பேங்க கடன் வேறு ஏழாயிரம் கோடியை நெருக்குகிறதாம். என்ன செய்வார் அவர். அவருக்கு உதவ வேண்டியது அரசின் கடமையல்லவா? இங்கே அவனவன் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டவனெல்லாம் அரை லிட்டர் போட்டுட்டு ஓட்டிட்டு இருக்கான் அவனுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்க மாட்டேங்கிறாய்ங்க.. அத கேக்குறதுக்கு ஒரு நாதியில்லை.இதுல பத்திரிக்கைகள் மட்டுமில்லை, மக்களும் தொடர்ந்து தெருவில் இறங்கி போராட வேண்டாமா? ஆவர்களும் கம்முனு இருக்காங்க.. இங்க இருக்கிற மாநில அரசும் சும்மாருக்கு.. என்னங்கடா நினைச்சிட்டு இருக்கீ...

பு.க-2

இன்றைக்கு பதிவர் நண்பர் நேசமித்ரனின் ”கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்” கவிதை தொகுப்பும், நண்பர் எழுத்தாளர், நடிகர், அஜயன் பாலாவின் புத்தகமும், மாலை ஆறு மணிக்கு உயிர்மையிலும், ஆழியிலும் முறையே வெளியானது. சரியாய் ஆறு மணிக்கு போக வேண்டிய நான் ஏழு மணிக்குத்தான் போனேன். அநியாய ட்ராபிக். “ழ”பதிப்பக கே.ஆர்.பி.செந்திலுக்கு போன் செய்தால் பெரும் இலக்கியவாதிகளோடு காண்டீனில் இருப்பதாக சொன்னார். நேற்றிருந்த கூட்டத்தில் கால் பங்குக்கூட இல்லை. காலார நடந்து ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி புத்தகம் வாங்க சரியான தருணம். காண்டீனுக்கு சென்றால் கே.ஆர்.பி. ஷோபாசக்தி, சாரு, நம் சக இலக்கியவாதி உண்மைத்தமிழன், விந்தைமனிதனுடன் உட்கார்ந்திருந்தார். வழியில் லக்கி, அதிஷா, காமிக்ஸ் உலகம் விஷ்வா ஆகியோர் பணியாரத்துக்காக க்யூவில் நின்றிருக்க, நானும் கூட சேர்ந்து ஆட்டையை போட்டேன்.  ஷோபா சக்தியிடம் உ.த.. என்னைப் பற்றி சொன்னவுடன் கொத்துபரோட்டா எழுதுவாரே அவரா? என்று கேட்டார். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இலக்கியவாதிகளுக்கும் பரோட்டா பிடிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கியது. நன்றி உ.த. பின்பு லக்க...

கொண்டாட்டங்களும்.. நண்பனின் துரோகமும்.

இதோ ஆரம்பித்துவிட்டது.. இனி தொடர்ந்து பல விழாக்கள் நடைபெற போகிறது. அதற்கு அச்சாரமாய் கொண்ட்டாட்டத்தோடு ஆரம்பித்தது சாருவின்  7 புத்தகங்களின் வெளியீடு. இம்முறை சற்றே பெரிய காமராஜ் அரங்கில். சாரு அரங்கை நிரப்ப அழைத்திருந்தார். ஆனால் ஒன்று சொல்ல வேண்டும் சாருவை பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று லிஸ்ட் எடுத்தால் பிடிக்காதவர்கள் தான் அதிக அளவில் எனக்கு தெரிந்து ஹாலில் இருந்தார்கள். முதலில் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் போகப் போக நிறைவாகவே இருந்தது. முக்கால் வாசி இடம் நிரம்பியதே அதற்கு சாட்சி. ஆனால் மனுஷ்யபுத்ரன் ஏகத்துக்கும் வருத்தப்பட்டார். குப்பையாய் பாடும் சினிமா பாடல்களுக்கு நிறைய கூட்டமிருப்பதாய் சொன்னார்.. குப்பை எது கோமேதகம் எது என்பது அவரவர் தனிப்பட்ட பர்ஷப்ஷன் என்பது என் எண்ணம் ஏகப்பட்ட விருந்தினர்கள். ஏ.நடராசன், மதன், கனிமொழி, எஸ்.ரா, மிஷ்கின், ரவிக்குமார், நல்லி செட்டியார், இவர்களுடன் தமிழ்ச்சி தங்க பாண்டியன். நல்லி செட்டியார் மிகவும் நல்லவர். சாருவுக்கெல்லாம் படியளந்த அன்னதாதாவானதினால் அவர் பேச்சை பற்றி பெரிதாக சொல்ல ஏதுமில்லை. இருந்தாலும் அவர் சொன்ன ஜோக் மிக பெரிய...

சாரு நிவேதிதாவின் “ராஸலீலா”

Image
சாருவின் பேரை சொன்னாலே பல பேருக்கு கோபம் வருகிறது.. வக்கிரம் பிடித்தவன், ஆபாசமாய் எழுதுபவன், திமிர் பிடித்தவன் என்று பல பேர் பல விதமாய் கூறுகிறார்கள்.. எனக்கு சாருவை கோணல் பக்கங்கள் மூலமாய்தான் அறிமுகம். பல முறை புத்தக கண்காட்சிகளில் அவரது 0 டிகிரி நாவலை வாங்க எடுத்து வைத்து பின்பு ஏனோ வைத்துவிட்டு வந்திருக்கிறேன். அதன் பிறகு அவரது இணைய பக்கத்தின் மூலம் தொடர்ந்தேன். சமீபத்தில்தான் அவரது ராஸ்லீலா புத்தகம் என்னுடய நண்பர் ராஜ் மூலமாய் கிடைத்தது. இதுவரை நாவல் என்ற ஓரு கட்டத்துக்குள் எழுதப்பட்ட பல விஷயங்களை கட்டுடைத்திருக்கிறார். சாரு.. கண்ணாயிரம் பெருமாள் என்கிற கேரக்டர் மூலமாய் ஓரு மனிதனின் வாழ்க்கையில் அவன் காணும், அனுபவிக்கும் பல விஷயங்களின் தொகுப்பை நீங்கள் நாவல் என்று எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்றால், கட்டுரை தொட்ராய் எடுத்து கொள்ளுங்கள்.. ஒரு முறை படிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டீர்கள்.. உலகத்தில் மிக போதையான விஷயம் எதுவென்று தெரியுமா..? குடி, சிகரெட், பெண், அபின், கஞ்சா, இன்னும் எத்தனையோ.. அதையெல்லாம் விட போதையானது சாருவின் “ராஸலீலா”. கட்ந்த ஓரு வாரமாய் 655 பக்க நாவலை, நானும் எனது...