கொத்து பரோட்டா – 14/11/11
kingfisher ஏர்லைன்ஸுக்கு கடன் கொடுக்க முடியாது என்று எண்ணைய் நிறுவனங்கள் சொல்லிவிட்டதால். அவர்கள் கடையை தற்காலிகமாய் முடி வைத்திருக்கிறார்கள். பேப்பரை திறந்தால் ஆளாளுக்கு ஏதோ தங்கள் கம்பெனிக்கு ப்ரச்சனை போல பக்கம் பக்கமாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏர் இந்தியாகாரர்கள் புதுசாய் இப்போது தான் தெரிந்தார் போல மன்மோகன் அரசு கார்பரேட்டுகளுக்காகத்தான் உழைக்கிறது. இதே போன்ற ஒரு சிட்ஷுவேசன் எங்களுக்கு வந்த போது உதவவில்லை என்று புலம்புகிறது. பாவம் மல்லையா தன்னுடய ப்ரைமரி ப்ராண்ட் ப்ரூவரியை அடமானம் வைத்து தொழில் செய்கிறாராம். பேங்க கடன் வேறு ஏழாயிரம் கோடியை நெருக்குகிறதாம். என்ன செய்வார் அவர். அவருக்கு உதவ வேண்டியது அரசின் கடமையல்லவா? இங்கே அவனவன் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டவனெல்லாம் அரை லிட்டர் போட்டுட்டு ஓட்டிட்டு இருக்கான் அவனுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்க மாட்டேங்கிறாய்ங்க.. அத கேக்குறதுக்கு ஒரு நாதியில்லை.இதுல பத்திரிக்கைகள் மட்டுமில்லை, மக்களும் தொடர்ந்து தெருவில் இறங்கி போராட வேண்டாமா? ஆவர்களும் கம்முனு இருக்காங்க.. இங்க இருக்கிற மாநில அரசும் சும்மாருக்கு.. என்னங்கடா நினைச்சிட்டு இருக்கீ...