Posts

Showing posts with the label லெமன் ட்ரீயும்

கொத்து பரோட்டா -05/09/11

Image
யூத்துகளின் சந்திப்பு நேற்று மாலை டிஸ்கவரியில் நடந்த யூத் பதிவர் சந்திப்பு கிண்டலும்,  கேலியுமாய் யூத்புல்லாய் நடைபெற்றது. ம.போ.சியின் பேத்தியும் வந்திருந்தார். புதிதாய் எழுத வந்திருக்கும் அத்துனை இளைஞர்களையும் ஒரு சேர சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. நிகழ்ச்சியில் பேசிய யுவகிருஷ்ணா, உருப்படாத நரேன், ஜாக்கி, ராஜ் சுந்தர்ராஜன், மெட்ராஸ் பவன் சிவகுமார், ஆகியோரின் பேச்சு சீரியஸாகவும் போயிற்று. கணிணியில் தமிழில் எழுத முடியும் என்று தெரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய முடியுமா? என்று கேட்டார்கள். நிச்சயம் முடியும். ஏன் நாம் ஒரு குழுவாய் இணைந்து, இதற்கான ஒரு பயிற்சி பட்டறையை செய்யக்கூடாது?. மற்றபடி வாசலில் இருந்து வரவேற்ற சிவகுமார், பிலாசபி பிரபாகரன் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது.:) ####################################################

வாசகர் விமர்சனம்- லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்.

ஓரு இலக்கிய விழா கூட்டத்தில் தான் அந்த புத்தகக் கடை அறிமுகம் கிடைத்தது. டிஸ்கவரி புக் பேலஸ். ஒரு புராதனமான மாடிப்படிகளுடன் இருந்தாலும் உள்ளே புத்தகக் கடை பெரிதாக, நான் தேடிய சில அரிய புத்தகங்களைக் கொண்டதாக இருந்த்து. அன்று விழா முடிந்து தேடின சில புத்தகங்களுக்கு நடுவே இந்த புத்தகத்தின் அட்டைப்படம் என்னை வசிகரித்ததால் (சில்க் ஸ்மிதாவின் படம் போல) எடுத்து பார்த்த புத்தகம் தான் ‘லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்” என்ற புத்தகம். எனக்கு குடிப்பழக்கம் கிடையாது என்பது எப்போதும் கிடையாது. என் நண்பர்களுக்கு உண்டென்பதால், பெயர் பார்த்ததும் புரிந்த்து ஏதோ இருக்கின்றது என. ஒரு முறை என் இலக்கிய நண்பர்களூடய வீட்டிலிருந்த புத்தகங்களூல் இருந்த, எனக்கு பிடித்த எழுத்தாளர் ‘சுதேசமித்ரனின் ‘காக்டெயில்’ புத்தகத்தை  எனக்கு படிக்க  தரமாட்டேன் என்று ஒளித்து வைத்து தராத வன்மம் வேறு.(ஆண்கள்?) இருந்தது. ஆனா இன்னிக்கு, அடடா நமக்குன்னு இங்க ஒரு ஆள் எழுதியிருக்கானே!. டாடி, மம்மி வீட்டில் இல்ல’ன்னு மனசுல பாட்டுச் சத்தம் கேட்டது. எடுத்திட்டேன். முதல்ல எழுதினவன் பெயரைப் பாத்தேன். ஆகா சங்கர் நாராயண்....