வேராய் பரவும் மனிதர்கள்.
ஆறேழு மாதமிருக்குமென்று நினைக்கிறேன். கோபியில் என் உறவினர் வீட்டு விஷேஷத்திற்கு போயிருந்த போது, ஈரோட்டுக் கதிர் ஞாபகம் வர, “தலைவரே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன் எப்போது சந்திக்கலாம்?” என்று போன் செய்தேன். இன்று மாலை எங்கள் லயன்ஸ் கிளப்பில் ஒரு முக்கிய நிகழ்வு நடக்கவிருக்கிறது. சத்யமங்கலத்திலிருந்து ஒரு கார் வருகிறது. அதில் வந்துவிடுங்கள் நிச்சயம் நீங்கள் கலந்து கொள்கிறீர்கள் என்ற அன்புக் கட்டளையிட்டு அழைத்தார்.