Annayum Rasoolum
காதல். அது என்ன மாதிரியான அவஸ்தைகளை கொடுக்கக் கூடியது என்று காதலித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய விஷயம். என்ன தான் காதலிப்பவர்களுடன் பயணித்த அனுபவம் இருந்தாலும், சமயங்களில் இவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் செய்யும் எதிர்ப்பார்க்கும் நிறைய விஷயங்கள் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? இதுக்குப் போய் இவ்வளவு அலட்டிக் கொள்கிறார்களே.. என்று தோன்றும். இப்படியான காதல் கதைகளை திரைப்படமாய் எடுக்கும் போது எனக்கு தெரிந்து ரெண்டு விதமாய்த்தான் படம் முடியும். ஒன்று சந்தோஷமான ஹேப்பி எண்டிங். இரண்டாவது சோகம். அன்னையும் ரசூலும் ரெண்டாவது வகை.