Thottal Thodarum

Dec 29, 2014

கொத்து பரோட்டா - 29/12/14

தொட்டால் தொடரும்
வழக்கமாய் நான் கடந்து சென்ற வருடங்களை ரீவைண்ட் செய்து பார்க்கும் பழக்கமில்லாதவன். நல்லதோ கெட்டதோ எல்லாத்தையும், அனுபவிச்சு, உணர்ந்து, புரிந்து, திகைத்துதானே கடந்து வந்திருக்கிறோமென்பதால் கூட இருக்கலாம். ஆனால் 2013 ஜூலையில் கமிட் ஆகி,  பற்பல தடைகளைத் தாண்டி, படப்பிடிப்பு முடிந்து, பர்ஸ்ட் காப்பி தயாராகி, சரியான வெளியிடும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது எங்களது ”தொட்டால் தொடரும்”. இது என் முதல் படமாதலால் இதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் ஒர் பாடமாய்த்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நல்லா எழுதுறவன், , அறிவா பேசுறவனெல்லாம் நமக்கு துணையாய் தோதா இருப்பாங்கன்னு  அவசியமில்லைங்கிறதை புரிஞ்சிக்க பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. சும்மா வருவாளா சுகுமாரி?. எப்ப ரிலீஸ்? என்று கேட்பவர்களுக்கு, வரிசையாய் பெரிய படங்களின் அணிவகுப்பு இருப்பதாலும் ரிலீஸ் செய்வதற்கான சரியான நேரத்தை கணக்கிட்டு கொண்டிருக்கிறோம். வரும் ஜனவரி 2015 தொட்டால் தொடரும் உங்கள் பார்வைக்கு
@@@@@@@@@@@@@@@@@@

Dec 25, 2014

கோணங்கள் -12

கோணங்கள் 12 - பவன் குமார் எப்படிச் சாதித்தார்?

தமிழில் கிரவுட் ஃபண்டிங் சாத்தியமா என்று கேட்டால் நிச்சயம் சாத்தியம்தான். ஸ்டூடியோ அமைப்பின் கீழ் இயக்கும் ஹாலிவுட்கூட ‘இண்டிபெண்டண்ட் சினிமா’ எனும் சின்னப் பட தயாரிப்பாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உலகளவில் கிரவுட் ஃபண்டிங் முறையில் படங்களைத் தயாரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சமரசங்களுக்கு இடம்கொடுக்காத இண்டிபெண்டெண்ட் இயக்குநர்களே.

Dec 22, 2014

கொத்து பரோட்டா - 22/12/14

நடு நிசிக்கதைகள்
சென்ற வாரம் ஏதோ ஒரு படத்திற்கு போய்விட்டு அசோக்நகர் ரவுண்டானா அருகில் வந்து கொண்டிருந்த போது அங்கே ஒரு செக் போஸ்டை உருவாக்கியிருந்தார்கள். வழக்கமாய் உதயத்திற்கு முன் தான் நிற்பார்கள் இப்போது திடீரென இடத்தை மாற்றி, நின்றிருக்க, எனக்கு அப்போதுதான் திடீரென ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும் என்ற நியாபகம் வர, எஸ்பிஐ ஏடி எம் ஒன்றிருக்க வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு, ஏடிஎம்மை நோக்கி நடந்தேன். பின்னாடியே போலீஸ் கான்ஸ்டபிள் மூச்சிரைக்க ஓடிவந்தார். “அலோ.. எங்க போறீங்க? வாங்க இங்க.. தண்ணியடிச்சிருக்கீங்களா?” என்று கேட்டார். ஒரு நிமிடம் அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு, ” இல்லை” என்றதும் அவர் முகம் வாடி வதங்கி விட,  ” நான் ஏடிஎம்முக்கு போறதுக்காக,  வண்டிய இங்க நிறுத்தினேன்.  ஸ்பாட்டுல நின்னு வண்டியை பிடிக்கிறத பாருங்க. அத்தோட தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னுதான் ரூல்ஸ்.. நான் வண்டிய நிறுத்திட்டு நிக்கிறேன். என்ன?.’ என்றதும் அவர் முகம் போன போக்க பார்க்கணுமே.. ஆயிரம் கண் வேண்டும். 
@@@@@@@@@@@@@@@@@

Dec 18, 2014

கோணங்கள் -11

கிரவுட் ஃபண்டிங் குட்டிக்கரணம்!

காவிரி நீர் பிரச்சினையை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை இயக்க முன்வந்தார் சேரனின் உதவியாளரான சரச் சூர்யா. ‘பச்சை மனிதன்’என்று தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற படக் குழு விரும்பியது.ஆகவே படத்தின் நுழைவுச்சீட்டையும் திரைக்கதைப் புத்தகங்களையும் பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோரிடம் விற்றுத் திரட்டப்படும் பணத்தில் படத்தைத் தயாரிக்கப் போகிறோம் என அறிவித்தது படக்குழு. ஆனால் 13 லட்சத்துக்குமேல் பணம் வசூலாகவில்லை. இதனால் இரண்டு கட்டப் படப்பிடிப்பு நடத்தப்பட்டதோடு அந்தப் படத் திட்டம் கைவிடப்பட்டது.

Dec 15, 2014

கொத்து பரோட்டா - 15/12/14

ஆவணப்படம்
சினிமா வியாபாரம் புத்தகத்தை அடிப்படையாய் வைத்து எடுக்கவிருக்கும் ஆவணப் பட வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். இதைக் குறித்து நிறைய வி.ஐ.பிக்களிடம் பேசிய போது மனம் திறந்து வரவேற்று, உடனடியாய் எனக்கு பேட்டியெடுக்க அனுமதியும் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. சினிமா வியாபாரம் ஆவணப்படமாய் சிறப்பாய் வெளிவருமென்ற நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@

Dec 13, 2014

எண்டர் கவிதைகள் -26

வேண்டாமென்று 
முடிவெடுத்திருந்தாலும்
காத்திருத்தல்
செய்யச் சொல்கிறது
நாளையேனும் சீக்கிரம் வா
கேபிள் சங்கர்

Dec 11, 2014

சாப்பாட்டுக்கடை - கண்ணப்பா - தட்டு இட்லி

பேலியோ டயட்டிலிருக்கும் என் வாயையும், வயிற்றையும் கிண்ட வைக்கும் ஒர் போட்டோவை தோழி சோனியா ட்வீட்டரில் போட்டிருந்தார். அட ஒரு நாள் ஒரே ஒரு நாள் சீட் செய்தால் தவறில்லை என்று பேலியோ சித்தாந்தத்தில் சொல்லியிருப்பதால் விட்றா வண்டிய என்று நேற்றிரவு விட்டோம் ஆர்ம்ஸ் ரோடுக்கு. 

Dec 9, 2014

கோணங்கள் -10

கோணங்கள் 10 - முகமறியா முதலீடு... தேவை உஷார்!

தமிழ் சினிமா உலகில் தற்போது அதிகம் அடிபடும் இரண்டு வார்த்தைகள் ‘கிரவுட் ஃபன்டிங்’. சினிமா என்பதே ரசிகர்கள் கூட்டமாகத் திரையரங்கிற்கு வந்து கொட்டிக் கொடுக்கும் விஷயம்தானே, இதில் என்ன ஸ்பெஷல் எனக் கேட்கும் வெள்ளந்திகளை விட்டு விடுங்கள். இது பற்றி அக்கறையுடன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான கட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம்.

Dec 8, 2014

கொத்து பரோட்டா -08/12/12

நடு நிசி (பகல்) கதைகள்
சென்ற வாரம் நண்பன் பெஸ்கியின் வீட்டு கிரகப்பிரவேசம். அதற்காக நானும் கே.ஆர்.பியும் சென்று கொண்டிருந்தோம். மீனம்பாக்கம் தாண்டியவுடன் சிக்னலைத் தாண்டி ஒர் இடத்தில் ரேபான் போட்ட ஓர் டிராபிக் கான்ஸ்டபிள் திடீரென புகுந்து வழி மறித்தார் அங்கே இருந்த மக்கள் கிராஸ் செய்வதற்காக,
நாங்களும் நிறுத்தினோம். கொஞ்சம் அவரின் அருகில். ரேபானுள் வழியாய் என்னைப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கேயிருந்த பெண் காவலரைப் பார்த்து “ உங்க டீடெயில் கொடுத்துட்டு போங்க’ என்றார். “ஏன்?” என்று கேட்டதற்கு சும்மாதான் என்றார். வழக்கம் போல வந்த பெண் போலீஸிடம் “என் போன் நம்பர் தவிர எல்லா டீடெயிலும் கொடுப்பேன்”. என்றதும் வாழக்கம் போல அவரும் ஏன் என்று கேட்க என் பர்சனல் டீடெயிலை கொடுக்க, அல்லது கொடுக்க கட்டாயப்படுத்த உங்களுக்கு ரைட்ஸ் இல்லை என்றேன். அதை புரிந்து கொள்ளாமல் “பாருங்க சார்.. நமக்கு ரைட்ஸ் இல்லையாம்” என்று பொத்தாம் பொதுவாய் அங்கிருந்த ட்ராபிக் சார்ஜெண்டிடம் முறையிட, “சார்.. நான் உங்களுக்கு என் வண்டி பேப்பர், டீடெயில்ஸ், இன்சூரன்ஸ், என் லைசென்ஸ் எல்லாமே கொடுக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் என் பார்சனல் தொடர்பு விஷயங்களை உங்களுக்கு தர தேவையில்லை” என்று விளக்கிக் கொண்டிருக்கும் போதே, ரேபான் கான்ஸ்டபிள் என் வண்டியிலிருந்து சாவியை எடுத்தார். சட்டென கோபம் வந்து “ அவர் கையிலிருந்து என் சாவியை புடுங்கினேன். அவர் என்னிடமிருந்து இந்த ரியாக்‌ஷனை எதிர்பார்க்கவில்லை. “என் வண்டியிலிருந்து என் அனுமதியில்லாமல் சாவியை எல்லாம் எடுக்க கூடாது” என்றேன். “நீ ஏன் வண்டியை நிறுத்தலை?” என்று மிரட்ட ஆரம்பிக்க “நான் நிறுத்தாமத்தான் நீ இவ்வளவு நேரம் பேசுறியா? மிரட்டிப் பாக்குறியா? மிரட்டு கேஸ் போடேன் நான் எங்க போய் என்ன பண்றதுன்னு தெரியும்” என்றவுடன் சார்ஜெண்ட் விடுங்க விடுங்க என்று அவரிடம் சைகை செய்ய, “நான் சாவியை எடுக்கவேயில்ல.. நீங்கதான் என் கிட்டேயிருந்த் புடுங்கினீங்க?” என்றார் முட்டாள் தனமாய். நான் சிரித்துக் கொண்டே.. கிளம்பினேன். கிளம்பும் போது அந்த கான்ஸ்டபிள் அம்மணியிடம் என் விலாசத்தை எழுதச் சொல்லி எழுதிய லட்சணத்தை பார்த்தால் “அய்யோடா.. என்ன கொடுமைடா சாமி” கோழி கிறுக்கல் பரவாயில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Dec 2, 2014

கோணங்கள் -9


கோணங்கள் - 9: கற்பனையை எதில் கலக்கலாம்?

திட்டமிட்ட பட்ஜெட்டைவிடத் தாறுமாறான செலவு எப்படி அதிகரித்தது என்று தயாரிப்பாளருக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு இயக்குநருக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது. இங்கே ஒரு இயக்குநர் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்துவிட்டால் அது தயாரிப்பாளருக்குப் பெரிய வரம். படத்தின் பட்ஜெட்டில், அது எடுத்து முடிக்கப்பட்ட பிறகு அதை மக்களிடம் கொண்டுசெல்லும் விளம்பர பட்ஜெட்டும் கண்டிப்பாகச் சேர்க்கப்பட வேண்டும். மொத்த பட்ஜெட்டுக்குமான முழுமையான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொண்ட பின்னரே, படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டும். ஆனால் திரைக்கதையில் கலக்கும் கற்பனையை ஒரு இயக்குநர் பட்ஜெட்டில் கலக்கும்போதுதான் தயாரிப்பாளர் நடுத்தெருவில் நிற்க வேண்டிவருகிறது.

Dec 1, 2014

கொத்து பரோட்டா -1/12/12

காவியத்தலைவன்
மின்சார வாரியத்தில் வேலை செய்து கொண்டே நாடகம், நடிப்பு, சினிமா என ஆர்வம் கொண்ட இரு இளைஞர்கள்.  இருவரில் ஒருவருக்கு எழுதுவதோடு, நடிப்பும், கொஞ்சம் வியாபாரமும் வரும். எனவே ஒரு அமெச்சூர் நாடக அமைப்பை உருவாக்கி, அதை மார்கெட் செய்ய ஒரு சபாவை நடத்த ஆரம்பித்து, அதில் தானும், நண்பரும் எழுதிய நாடகங்களை கதாநாயகனாய் நடித்து, அரகேற்றி தன்னையும், தன் நண்பனின் எழுத்தையும் மேடையேற்றி அழகு பார்த்தவர். நடிகராய் அவருக்கு அந்நாளில் கிடைத்த வெற்றியும், அதை சந்தைப் படுத்தியதால் அவர் நஷ்டம் அடைந்தாலும் கிடைத்த புகழ் வெறும் எழுத்தாளராய் இருந்த நண்பருக்கு கிடைக்கவில்லை என்று ஃபீல் செய்ய அரம்பித்தார். இதனால் பொறாமை ஏற ஆரம்பித்தது. கொஞ்ச நாட்களில் நடிக, இயக்குனர் சினிமா எடுக்கும் அளவிற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகர, எழுத்தாள நண்பருக்கு பொறாமை காரணமாய் பிரிவு ஏற்பட்டு பின்னடைவு. 

Nov 25, 2014

கோணங்கள் - 8

கோணங்கள் - 8: ஆஹா + ஓஹோ = ஸ்வாகா!அனுபவங்கள் மட்டுமே கசப்பான பாடங்களைக் கற்றுத் தருகின்றன. ஏற்கனவே அனுபவப்பட்டவர்கள் கண் முன்னால் இருக்கும்போது அவர்களது முன்மாதிரிகளை ஏற்றுக்கொள்ளத் திரையுலகில் தடையாக இருப்பது எனக்கு எல்லாம் தெரியும் என்ற ஈகோ. ஃபைனான்சியர்கள் எல்லோரும் தயாரிப்பாளர்கள் அல்ல என்று சொன்னதால் பலரின் கவனத்தையும் பெற்றேன். படம் தயாரித்துத் தோற்ற ஒரு ஃபைனான்சியர், “நான் தோற்றதற்கான காரணம் இப்போது புரிஞ்சிருச்சு, அதனால்தான் பைனான்ஸ் மட்டும் பண்றேன்” என்றார். சினிமாவுக்கு ஃபைனான்ஸ் பண்ணியவர்களின் நிலையே இப்படியென்றால் இன்று புதிது புதிதாய் வரும் சாப்ட்வேர், மற்றும் ரியல் எஸ்டேட் பின்னணி கொண்ட தயாரிப்பாளர்களின் கதை?

Nov 24, 2014

கொத்து பரோட்டா -24/11/14

என் ட்வீட்டிலிருந்து
Naa Bangaru thalli. receiving extrodinary reports in chennai iam happy

எங்களாலத்தான். அவங்க ஒண்ணியும் பண்ணலை.
‪#‎ஏனிந்தநாரப்பொழப்பு‬

எவ்வளவோ வாட்டி கேட்டுட்டேன். இன்னும் பிடிபடலை..


பசங்க மனசு பேரரசு படம் மாதிரி பொண்ணுங்க மனசு நோலன் படம் மாதிரி ‪#‎தொட்டால்தொடரும்‬ இம்பாக்ட்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Nov 18, 2014

கோணங்கள் -7

கோணங்கள் 7 - விடாது கருப்புகும்கி படப்பிடிப்பில் ஒத்துழைக்கும் யானை

பெரிய நடிகர்கள், இயக்குநர், டெக்னீஷியன்கள் உள்ளடங்கிய புராஜெக்டா என்று பார்த்துத்தான் ஒரு படத்துக்கு ஃபைனான்சியர் பணம் கொடுக்கிறார். அதற்குப் பிறகு அந்த புராஜெக்டை ஆரம்பித்திருக்கும் தயாரிப்பாளரின் சொத்து, அவர் தயாரித்த முந்தைய படங்களின் ட்ராக் ரெக்கார்ட் ஆகியவற்றையும் பார்க்கிறார்கள். கொடுத்த காசைத் திரும்ப வாங்க முடியவில்லையென்றால் படத்தின் விநியோக ஏரியாவையோ, அல்லது சாட்டிலைட் ரைட்ஸையோ ஹோல்டிங் வைத்திருப்பார்கள். இவர்களது நோக்கமே வட்டியும், முதலும்தான்.

Nov 17, 2014

கொத்து பரோட்டா -17/11/14

சென்ற வாரம் ரிலீஸான தமிழ் படங்கள் ஏழுக்கு மேல். சென்னை தேவி கருமாரியில் நான்கு புது திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. பகல் காட்சிக்கு வந்திருந்த ஆட்கள் மொத்தமே 6 பேர் இருந்தார்கள். எந்த படம் ஓடும்னே தெரியலை. பார்த்த நண்பர் சொல்லி புலம்பினார். பக்கத்து ஐநாக்ஸில் சற்றே தெரிந்த நடிகர் நடிகை நடித்த புதுப்படத்திற்கு டிக்கெட் எடுத்தேன் மொத்தமே அறுபது பேருக்கு மேல் தியேட்டரில் ஆள் இல்லை.  400 பேருக்கு மேல் அமரும் அரங்கமது. ஆனால் படம் பார்க்க உட்கார்ந்த அரை மணி நேரத்தில் பேஸ்புக்கில் எல்லா ஊர்களிலும் ஹவுஸ்புல் என்கிற ரேஞ்சுக்கு ஸ்டேடஸ் போட்டுக் கொண்டிருந்தார்கள். வெளியே வரும் போது ஏதோ ஒரு வெப்சைட்காரர்கள் மக்கள் ரிப்போர்ட்டுக்காக காத்திருந்தார்கள். என்னுடன் வந்த ஆட்கள் உட்பட முதல் இருபது பேர் எதுவுமே சொல்லாம போனார்கள்.  வந்த ஏழு படங்களில் மூன்று படங்களுக்கு நிறைய ஊர்களில் வாண்ட் ஆப் ஆடியன்ஸ். முதல் காட்சி கூட போடப்படாமல் தூக்கப்பட்டது. இப்படி ஒரு பக்கம் போகிறது என்றால் இன்னொரு பக்கம் புரிகிறதோ புரியலையோ நோலனின் இண்டர்ஸ்டெல்லர் வார நாட்களில் கூட ஹவுஸ்புல்லாக போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்சம் என்ன ரொம்பவே பயமாத்தான் இருக்கு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Nov 12, 2014

கோணங்கள் -6

கோடம்பாக்கத்தின் அப்பாவி ஆவிகள்!
ஒரு படத்தில் இருந்தது போல ஏழு காட்சிகள் காப்பியடித்த படத்தில் தொடர்ந்து இல்லையென்றால் அது காப்பிரைட்டில் வராது என்னும் நம்பிக்கை காலம் காலமாகப் பலரையும் கதை திருடும் சோம்போறிகளாக்கியிருக்கிறது.
கதைத் தாக்கம், கதை உருவல், கதைத் தழுவல் என்று கதைத் திருட்டுக்குப் பல்வேறு பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டாலும் சுட்டகதை வெட்டவெளிச்சமாகும்போது பாதிக்கப்பட்டவருக்குக் கடைசிவரை கடுக்காய் கொடுக்கப் போராடுவதற்கு முக்கியக் காரணம் இருக்கிறது. திருடப்பட்ட கதையில் உருவான படம் வெற்றிபெற்றுவிட்டால் மற்ற மொழிகளின் ‘ரீமேக் உரிமை’ பல லட்சங்கள், கோடி என்று விலைபோவதால், அதில் பலனடையப்போவது முழுக்கவும் கதையின் காப்பிரைட்டை வைத்திருப்பவர்தான்.

Nov 10, 2014

கொத்து பரோட்டா -10/11/14

தொட்டால் தொடரும்
தொட்டால் தொடரும் படத்தின் புதிய 30 செகண்ட் டீசர். விரைவில் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்படும். வரி விலக்கிற்காக காத்திருக்கிறோம்.உங்கள் கருத்துக்காக.. எங்களது புதிய டீசர்
####################################

Nov 5, 2014

கோணங்கள் -5

கூட்டத்தில் சிக்கிய குழந்தைகள்!

நிறைமாதத்தில் இருக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நிலைதான் இன்று கோலிவுட்டில் பரிதவிப்பவர்களின் நிலையும். “படம் எடுக்கிறதுன்னா என்ன விளையாட்டு வேலையா? அப்படியே படம் எடுத்துட்டாலும், ரிலீஸ் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பிரசவ வேதனை. அதனாலதான் லேப்லேர்ந்து பிரிண்டை எடுக்கிறதை டெலிவரின்னு வச்சிருக்கான்” என மறைந்த தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமார் சொல்வார். அவர் சொன்னது 200 சதவிகிதம் உண்மை. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் லேப், ப்ரிண்ட், டெலிவரி என்னும் முறை மாறியிருந்தாலும், ரிலீஸ் செய்ய முற்படும்போது கிடைக்கும் வலி முன்பைவிட மோசம். நார்மல் டெலிவரியே கிடையாது எல்லாமே சிசேரியன்தான்.

Nov 3, 2014

கொத்து பரோட்டா -03/11/14

அசோக்நகர் பஸ்ஸ்டாண்ட்
ஞாயிறு இரவு. அவ்வளவாக கூட்டமில்லை. கிட்டத்தட்ட எல்லா பஸ்களும் காலியாக்வே இருந்தது. கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்தார்கள். நண்பர் செந்தில் மன்னார்குடி பஸ்ஸுக்காக காத்திருந்தார். பஸ்ஸுக்கு காத்திருக்கையில் பணக்காரன் அவனுக்கான வசதி கிடைச்சா காசைப் பத்தி கவலைப்படமாட்டான். ஏழை அதிகமா காசு கேட்டா சண்டைக்கு வருவான். அதிகமான மிடில் க்ளாஸ்தான் ரெண்டுத்துக்கும் போக முடியாம அவஸ்தை படுவான் என்று சொல்லிக் கொண்டிருக்க, மதுரைக்கு போக பக்கா கிராமத்து குடும்பம் ஒன்று ஆட்டோவில் வந்திரங்கியது. மீட்டரைப் பார்த்து காசை சரியாய் கொடுத்தவர்கள் மதுரை பஸ்ஸுக்காக காத்திருக்க, ஒரு பஸ் ரொம்ப நேரமாய் ஆட்களுக்காக காத்திருக்க, இவர்களைப் பார்த்த பஸ்காரன் “அண்ணே மதுரைண்ணே.. வாங்க..” என்றதும் “எவ்வளவு?” என்று கேட்டார் பெருசு. உடன் நான்கு டிக்கெட்டுகள் என்று கண்ணாலயே கணக்குப் போட்டு, தோராயமாய் ஒர் அமெளண்டை சொல்ல, அது கட்டுப்படியாகாது என பெண்கள் கூட்டம் அமைதியாய் முகத்தை திருப்பியது. அவர்களது ரியாக்‌ஷனைப் பார்த்த பெருசு “வேணாம்பா.. நீ ஆள் ஏத்தி கிளம்பறதுக்கு லேட்டாவும்” என்று மறுத்தார். “அண்ணே.. அப்படியெல்லாம் இல்லைண்ணே.. இது மதுரை வேல்முருகன் பஸ்ஸு ஆள் ஏத்திட்டெல்லாம் போக வெயிட் பண்ண மாட்டோம். எல்லாம் ஆன்லைன்லேயே புக்காயிருச்சு” என்றான் அரை மணி நேரமாய் ஆள் ஏற்ற காத்திருக்கும் வண்டிக்காரன்.  லிஸ்டையெல்லாம் காட்டி “அண்ணே.. சொன்னா நம்புங்கண்ணே.. ஏசி வண்டிண்ணே.. ஏறி உள்ளார பாருங்க.” என்று கிட்டத்தட்ட கெஞ்சாத நிலையில் மாடுலேஷன் கேட்க, உடன் வந்த பெண்கள் “அய்ய.. ஏசியெல்லாம் நமக்கு ஒத்துக்காது. நீ வா” என்று பெருசை அழைத்தார்கள். வண்டிக்காரன் என்ன செய்வது என்று புரியாமல் திருதிருவென முழித்துவிட்டு நாலு டிக்கெட்டை விட மனசில்லாமல் “அண்ணே.. ஏசியெல்லாம் கொஞ்சம் நேரத்தில ஆஃப் பண்ணிருவாங்கண்ணே.. வாங்க வண்டிய ஒரு வாட்டி வந்து பாருங்கண்ணே..” என்று கெஞ்சியும் வேலைக்காகம் நொந்து போய் திரும்பியவனை இன்னொரு ஆள் தோள் மீது கை வைத்து நிறுத்தி “தம்பி ஏசி வண்டின்னு தானே சொல்லி காசு வாங்கின.. இப்ப என்னடான்னா.. கொஞ்சம் நேரத்தில ஆப் பண்ணிருவேங்குறே.. நீ என் காசைக் கொடு நான் வேற வண்டி பாத்துக்குறேன்” என்றார். வண்டிக்காரன் முகம் போன போக்கை பார்க்க பாவமாய் இருந்தது. அண்ணே வேல்முருகன்ணே.. பாவம்ணே.. புள்ள பாடா படுது கொஞ்சம் பாத்து போட்டுக் கொடுங்கண்ணே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Oct 31, 2014

கோணங்கள்-4

கண்ணீர் கலந்த பிளாக் காமெடி!

“இயக்குநரை விடுங்க… கேமராமேன், எடிட்டர், எல்லாரும் புதுசு. ஸ்டில் கேமராவுல போட்டோ எடுத்துட்டு இருந்தவரெல்லாம் ஒளிப்பதிவாளர். சொந்தமா செலவு பண்ணி ரெக்கார்டிங் ஸ்டூடியோ வச்சிருக்கிறவர் எல்லாம் இசையமைப்பாளர். இவங்களால எவ்வளவு பிரச்சினை தெரியுமா? ஒரு கோடிக்குள்ள நச்சுன்னு படமெடுத்துக் கொடுக்கிறேன்னு ஷார்ட் பிலிம் எடுக்கிற நினைப்பிலேயே தயாரிப்பாளர்கிட்ட சொல்றாங்க. அது எப்படிங்க எடுக்க முடியும்?. யார் கிட்டேயும் பர்மிஷன் வாங்காம, ஒரு 5டி கேமராவை வச்சிட்டு கூட இருக்கிறவங்கள வச்சி ஷார்ட் பிலிம் எடுக்குறது, முழுநீளப் படம் எடுக்குறது மாதிரி சாதாரண விஷயமா? லெஃப்ட் ரைட் பார்க்கத் தெரியுமா? ஷாட் வைக்கத் தெரியுமா..? (மூச்சு விட்டுக்கொள்கிறார்)

Oct 27, 2014

கொத்து பரோட்டா - 27/10/14

பற்பசை விளம்பரம் ஒன்றில் சாம்பல் கலந்திருப்பதாகவும், இன்னொரு பற்பசை விளம்பரத்தில் கிராம்பு இருப்பதாகவும், அது பற்களுக்கு நல்லது என்று கூறினார்கள். காலா காலமா சாம்பலை வச்சி தேச்சிட்டு இருந்தவனை அது தப்பு, அசிங்கம், ஆரோக்கியமில்லைன்னு சொல்லி மூளைய மழுங்கடிச்சிட்டு, இப்போ என்னடான்னா பேஸ்டுல உப்பு இருக்கா? சாம்பல் இருக்கான்னு புதுசா ஏதோ கண்டுபிடிச்சாப் போல விளம்பரப்படுத்துறாங்க.. ம்.. அன்னைக்கே என் தாத்தா சொன்னாரு.. பெல்பாட்டம் போடுறவனெல்லாம் பின்னாடி ஒரு நாள் ஜெய்சங்கர் டைட்ஸ் போட்டுத்தான் ஆகணும்னு.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Oct 20, 2014

கொத்து பரோட்டா - 20/10/14

HALF GIRLFRIEND
ஆயிரம் விமர்சனங்கள் சேத்தனின் எழுத்தின் மேல் இருந்தாலும், சுவாரஸ்ய,டெம்ப்ளேட் எழுத்துகள் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், புதிய புத்தகம் வெளியான உடனேயே பிலிப் கார்ட்டில் டிஸ்கவுண்ட் விலையில் வாங்கி படித்துவிட்டேன். நம்மூர் விண்ணைத்தாண்டி வருவாயா, 7ஜி ரெயின்போ, வாரணம் ஆயிரம், என்பதுகளின் இந்தியப்படங்களின் தாங்கத்தோடு, செம்ம சினிமாட்டிங் டிவிஸ்டுகளை வைத்து எழுதியிருக்கிறார் இந்நாவலை. முன்பெல்லாம் அவரது நாவல்கள் எல்லாம் எழுதிய பின் சினிமாவாக்கப்பட்டது. இது எழுதும் போதே சினிமாவாக்க எழுதப்பட்டதாய் தெரிகிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Oct 16, 2014

சாப்பாட்டுக்கடை - சார்மினார்- தாம்பரம்

ஏற்கனவே சார்மினாரின் ஹைதராபாத் பிரியாணியைப் பற்றி நம் சாப்பாட்டுக்கடையில் எழுதியிருக்கிறேன். அவர்களது புதிய கிளை தாம்பரம் சானிட்டோரியத்தில் மெப்ஸுக்கு எதிரே ஆரம்பித்திருப்பதாகவும், புதியதாய் டிபிக்கல் ஆந்திர சாப்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறோம், சாப்ட்டு பார்த்து உங்கள் கருத்த சொல்லுங்க என்றார் லஷ்மண்.  

Oct 15, 2014

கோணங்கள்-3- குறும்படம் எடுப்பவர்கள் குரங்குகளா?

“நேத்து வந்தவன் படமெடுக்குறான். ஆனா ஊரை விட்டு, உறவை விட்டு வந்து, சினிமால கால் ஊன்றதுக்குள்ள எத்தனை போராட்டம்? எவ்வளவு அவமானம்? கூடவே பசி, பட்டினி, குடும்பம், குழந்தை குட்டினு எவ்வளவு அவஸ்தை? இதையெல்லாம் தாண்டி சினிமாவுக்கு நாங்க நேர்மையா இருக்கோம்; அது நமக்குச் சோறு போடுங்கிற நம்பிக்கைய மட்டுமே சுமந்துகிட்டு அலைஞ்சிட்டிருக்கிறப்ப, எங்கயோ அமெரிக்காவுலேயும், சாஃப்ட்வேர்லேயும் வேலை செஞ்சு சம்பாதிச்சு, அந்தக் காசுல நேரா நாலஞ்சு குறும்படம் பண்ணிட்டு, டைரக்டர் ஆகிடுறாங்க. ஆகட்டும் வேணாங்கல.அதுக்காகப் பத்து வருஷ வாழ்க்கையை அடமானம் வச்சி, அதுவழியா கிடைச்ச அனுபவத்தை அவமானப்படுத்துற மாதிரி ‘நீயும் ஒரு குறும்படம் எடுத்துட்டு வா; அப்போதான் கதை கேப்பேன்கிறது என்ன நியாயம்?’ மூச்சுவிடாமல் சிங்கிள் டெலிவரியில் கொதித்துவிட்டார் ஒரு இணை இயக்குநர் நண்பர்.

Oct 13, 2014

கொத்து பரோட்டா - 13/10/14

வெண்ணிலா வீடு, குபீர், யாவும் வசப்படும், ஆலமரம், குறையொன்றுமில்லை, அப்படின்னு கிட்டத்தட்ட பத்து தமிழ் படங்கள் இந்த வாரம் ரிலீசாயிருக்கு. கேட்கவே பயமாயிருக்கு. மிச்ச படத்தோட பேர் கூட ஞாபகத்துக்கு வராத நிலையில் விளம்பரம், தியேட்டர் கிடைத்தல் என பல ப்ரச்சனைகளுக்கு பிறகு ரிலீஸாகிறது. குறைந்த பட்ச விளம்பரத்தோடு இந்த வாரம் வந்த படத்தில் ஓரளவுக்கு அடையாளம் தெரிகிற படமாய் அமைந்தது வெண்ணிலா வீடு மட்டுமே. அதற்கு காரணம் வைப்ரண்டான  ப்ரோமோஷன். ஆனாலும் வசூல் ரீதியாய் எந்த படமும் சரியாக பண்ணவில்லை என்பதுதான் ரிப்போர்ட். தமிழ் படங்களைத் தவிர மேலும் ஹிந்தியில் ரெண்டு, தெலுங்கில் ரெண்டு, மலையாளத்தில் ஒன்று என படங்கள் வெளியாகியிருக்கிறது. ஒரிரு படங்களுக்கு ரிலீசுக்கு முன் விளம்பரம் செய்தவர்கள் படம் வெளியாகி இரண்டாவது நாளிலிருந்து விளம்பரம் செய்யக்கூட இல்லை. படம் தயாரிக்க ஆசைப்படுகிறவர்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம். படம் தயாரிக்க ஆகும் செலவோடு, அதனை ப்ரோமோட் செய்து வெளியிட ஆகும் செலவையும் சேர்த்து படம் தயாரிக்க வருவது சால சிறந்த செயல். சமயங்களில் சரியாக ப்ரோமோட் செய்யப்படாத நல்ல படங்கள் மக்களின் கவனத்திற்கே வராமல் போய்விடக்கூடிய ஆபாயம் உள்ளது.
@@@@@@@@@@@@@@@@@@

Oct 10, 2014

குபீர்

கதையேயில்லாம படமெடுக்கிறேன் என்று பார்த்திபன் சார் சொன்னாரு. ஆனா அவரை எல்லாம் தூக்கி சாப்புடறாப்புல வந்திருக்கிறப் படம் குபீர். பேரே அல்லு குல்லா இருக்கில்ல. படம் பார்க்கலாமென்று நண்பர் அழைத்த போது இந்த வார பத்து படங்களில் ஒன்றாய்த்தான் நினைத்துப் போயிருந்தேன். முழுக்க முழுக்க புதுமுகங்கள். ரொம்பவும் சாதரணமான விளம்பரங்கள். இதில் ஏ சர்டிபிகேட் படம் வேறு. அசுவாரஸ்யமாய்தான் போய் உட்கார்ந்தேன்.

Oct 7, 2014

கோணங்கள் 2 - ஒளிப்பதிவு சூப்பர்! எடிட்டிங் சுமார்...

முதல் கட்டுரையைப் பாராட்டி வந்த விமர்சனங்களைப் பார்க்கும்போது “நிஜமாத்தான் சொல்றியா?” என்று கற்றது தமிழ் அஞ்சலி போல் கேட்க ஆரம்பித்துவிட்டேன். விமர்சனங்களைப் பற்றி எழுதிவிட்டு, அதற்கு பாராட்டுகள் கிடைப்பது கொஞ்சம் ஆச்சரியம்தான்.

Oct 6, 2014

கொத்து பரோட்டா -06/10/14

GOVINDUDU ANDHARIVADE
நான் அடிக்கடி நண்பர்களிடம் சொல்வேன். நடுத்தர வயதை எட்டும் சூப்பர் ஸ்டார்களை சின்னகவுண்டர் கதையில் மீண்டும் வேறு ஒரு கெட்டப்பில் நடிக்க வைத்தால் எப்போது ஓடுமென்று. அக்கதையில் காதல்,பாசம், வீரம், நட்பு, துரோகம், தியாகம் எல்லாமே இருக்கும். அது போல தெலுங்கு பட உலகிற்கு இது குடும்ப சீசன் படம். சீதம்மா வகுட்லோவில் வெங்கடேஷ்,மகேஷ்பாபுவிற்கு அடித்த லக்கி ப்ரைஸ். அப்படியே நாகார்ஜுன் குடும்பத்தின் மனம் படம் மூலமாய் சூறாவளிக் காற்றாய் அடிக்க, இப்போது அதை அறுவடை செய்ய ராம் சரண் களம் இறங்கியிருக்கிறார். நாகேஸ்வரராவ் காலத்திலிருந்து, வெங்கடேஷ், நாகார்ஜுன், மகேஷ்பாபு என சூப்பர் ஸ்டார் முதல் ஸ்டார்டிங் ஸ்டார் வரை அடித்து துவைத்த பார்முலா கதை தான். கிராமத்தில் பெரிய குடும்பம், குடும்பத்தில் ஹெட் ஒரு வயசான தாத்தா. அவருடய பையனோ, அல்லது பெண்ணோ, காதல் திருமணம் செய்து ஊரை விட்டு, போய்விடுவார். அவர் வெளிநாட்டில் பெரிய ஆளாய் இருக்க, அவருக்கு மகளும், மகனும் இருப்பார்கள்.வெளிநாட்டில் ஹீரோ இண்ட்ரோ சாங் முடிந்ததும், ஒர் சுபயோக சுப தினத்தில் அப்பாவுக்கு ஊர் நியாபகம் வந்து உனக்கு ஒரு தாத்தா இருக்காரு, பாட்டி இருக்காங்கன்னு பீல் செய்து தன் ப்ளாஷ்பேக்கை சொல்லுவார். உங்களையும் தாத்தா குடும்பத்தையும் சேர்க்குறதுதான் என் கடமைன்னு இந்தியா வந்து தாத்தா கிட்ட பேரன்னு சொல்லாமல் ஏதாவது ஒரு காரணம் சொல்லி குடும்பத்தோட ஒட்டிக்கிட்டு, வீட்டுல இருக்கிற பெரிசுங்க, முக்கியமா பெரியவங்க, சின்னப் பசங்க எல்லார்கிட்டேயும் க்ளோச் ஆகி, அதே வீட்டுல முறை பொண்ணை லவ் பண்ணி மாட்டிப்பாங்க.. அப்போ, அந்த குடும்பத்துக்கு ஒர் எதிரி குடும்பம் அதே ஊர்ல இருக்கும். அவங்களை எதிர்த்துத்தான் ஹீரோவே தாத்தாவுடய குடும்பத்தில் ஒட்டியிருப்பாரு. அப்பா வர்ற நேரத்தில ப்ரச்சனை பெரிசாகி, வில்லன் ஏதாவது ஆக்‌ஷன் பண்ண, கடைசியில ஹீரோ பைட் பண்ணி குடும்பத்த ஒண்ணு சேர்த்துருவாரு. இதான் அந்தரிவாடுகளோட கதை. 

புதுசா ஹீரோ ராம் சரண். தாத்தா பிரகாஷ்ராஜ். குளுகுளு குல்பி காஜல் குத்து பாட்டு, ஸ்டெப்புலு பாட்டு, பளிச் பளிச் ஒளிப்பதிவு. அழுகாச்சி செண்டிமெண்ட். ராம் சரணின் ஓப்பனிங் பாட்டு டான்சும், ரக்பி புட்பால் பைட்டும் சுவாரஸ்யம். கிருஷ்ண வம்சியின் இயக்கத்தில் பழைய முராரி வாடையை மறைக்க முடியவில்லை. எல்லாத்தையும் போட்டு ஒரு கலகல்க்கு அடிச்சி பழைய கள்ளை பழைய மொந்தையிலேயே கொடுத்திருக்காங்க. படம் அங்க ஹிட்டாம். ம்ஹும். ஒலகம் முழுக்கவும் இப்படித்தான் இருப்பாங்க போல..
@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 29, 2014

கொத்து பரோட்டா - 29/09/14

  • 85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர்
டெல்லி ஜூவில் புலிக்கு இறையான சிறுவனைப் பற்றிய செய்தியையும், வீடியோவையும் பார்த்த மாத்திரத்தில் அரை மணி நேரம் சே.. ஏண்டா பார்த்தோம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். அடுத்த சில மணி நேரங்களில், ஜு அதிகாரிகளைப் பற்றியும், இதை வீடியோ எடுத்தவர்கள் மனநிலை பற்றியும், கீழ இருக்கிற மண்ணை எடுத்து புலி கண்ணுல தூவியிருக்கலாம், புலியின் இரண்டுகண்கள் மிக அருகில் தான் இருந்திருக்க, கைகளால் அதை குறி பார்த்து குத்தியிருக்கலாம் என்றெல்லாம் ஆளாளுக்கு புலியிடமிருந்து தப்பிப்பதில் டாக்டரேட் வாங்கியவர்கள் போல படமெல்லாம் போட்டு விளக்க ஆரம்பித்துவிட்டார்கள். தொடர்ந்து ரெண்டு அடி ரோட்டுல நாய் துரத்துனா என்ன பண்றதுன்னு தெரியாம பின்னங்கால் பிடறி பட ஓடி வர்றவங்க. புலிகிட்டேயிருந்து தப்பிக்க என்ன பண்ணனுங்கிறது எனக்கு தெரியாது. ஆனால் நாய் கிட்டேயிருந்து தப்பிப்பது எப்படின்னு தெரியும். துரத்துற நாய் பார்த்து ஒரு செகண்ட் அப்படியே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாலும் சரி, நடந்து போனாலும் சரி திரும்பி நின்னா அது பாட்டுக்கு குலைச்சிட்டே ஓடிரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 24, 2014

கோணங்கள்: கஜினி சூர்யாக்களும் முகம் மாறிய விமர்சனமும்

Sep 22, 2014

கொத்து பரோட்டா -22/09/14

  • 85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர்
யூட்யூபுல இத்தனை லட்சம் ஹிட்ஸு.. அத்தனை லட்சம் ஹிட்ஸுன்னு ஆளாளுக்கு விளம்பரம் போட்டுக்கிற காலத்துல பிஃபா 15 எனும் புட்பால் கேமுக்கு போட்டிருக்கிற விளம்பரத்த பாருங்க..  அசத்துராய்ங்க.. என்னா ஒர் எக்ஸ்பீரியன்ஸ்... உடனே வாங்கணும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 17, 2014

Finding Fanny

  • 85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர்
டிவியில் வந்த ப்ரோமோ பாடலும், மொழு மொழு தீபிகாவும் என்னை வா.. வா என அழைத்தார்கள். நானும் என் இனிய நண்பர்,நடிகர் பாலாஜியும் ஐ நாக்ஸில் ஞாயிறு இரவுக் காட்சி பார்த்தோம். தியேட்டரில் எல்லா ஸ்கீரினும் காத்தாடியது. சத்யமில் மட்டுமே எல்லா படங்களும் புல்லாய் போகிறது. சரி கதைக்கு வருவோம்.

Sep 15, 2014

கொத்து பரோட்டா -15/09/14

  • 85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர்
வாரத்துக்கு நாலு படம், வாரம் தப்புனா பெரிசு, இரண்டாவது வாரம்னா பெரிய ஹிட், மூணாவது வாரம் சூப்பர் டூப்பர் ஹிட் என்கிற நிலையில் தமிழ் சினிமா போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் சென்னையில் மட்டும் ரெண்டாவது வாரம், மூன்றாவது வாரம் போகும் படங்கள் எல்லாம் செங்கல்பட்டு ஏரியா தாண்டி முதல் வாரமே தாண்டுவதில்லை என்பது சினிமாவில் உள்ளவர்களுக்கு தெரியும். அதுவும் தீபாவளி நேரம் வேறு நெருங்குவதால் எல்லா பெரிய படங்களும் வரிசைக் கட்டி நிற்கிறது. அதற்கு கிடைக்கிற கேப்புல படத்த ரிலீஸ் பண்ணிடலாம்னு முப்பது பேர் லைன் கட்டி நிக்கிறாங்கோ. ஒண்ணியும் புரியலை.
@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 12, 2014

தொட்டால் தொடரும் - தமன்

தொட்டால் தொடரும் படத்தின் கதாநாயகன் தேடல் நடந்து கொண்டிருந்த நேரம். பெரிய நடிகர்கள் முதல் ரெண்டொரு படங்கள் நடித்த நடிகர்கள் வரை பார்த்துக் கொண்டிருந்தோம். பெரிய ஹீரோக்களின் டேட்டும் சம்பளமும் பட்ஜெட்டுக்கு மேல் போக, அப் கம்மிங் ஹீரோக்களை பார்க்கலாம் என்று அலசிக் கொண்டிருந்த போது சட்டென என் மனதில் வந்தவர் இவர். மூன்று படங்களில் நடித்திருந்தார். இவரின் நடித்த முதல் படத்தில் இவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்த படம் பெரிய இயக்குனரின் படமாய் அமைந்தும் சரியாக போகவில்லை. மூன்றாவது படமும் அப்படியே. ஆனால் அவரிடம் ஒரு ஸ்பார்க் இருக்கிறது என்பது மட்டும் என் மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது. நண்பர் ஒருவர் மூலமாய் அவரைத் தொடர்பு கொண்டு அலுவலகத்திற்கு வர முடியுமா? என்றதும் நேரில் வந்து சந்தித்தார். மிகவும் ஹம்பிளாய், சாப்ட் ஸ்போக்கனாய் இருந்தார். 

Sep 8, 2014

கொத்து பரோட்டா - 08/09/14 -தொட்டால் தொடரும் - அமரகாவியம் - அடல்ட் கார்னர் - பட்டைய கிளப்பணும் பாண்டியா- Mary Kom

கல்யாண மாலை நிகழ்ச்சியை என் அம்மா வாரா வாரம் விடாமல் பார்ப்பார்கள். ஞாயிறு காலை என்பதால் பல சமயங்களில் பட்டிமன்றங்களுக்கு நடுவே கல்யாணத்திற்காக காட்டப்படும் வரன்களின் போட்டோக்களைப் பற்றிய கமெண்டுகளை உதிர்த்துக் கொண்டும் பேப்பர் படித்துக் கொண்டும் அசுவாரஸ்யமாய் பார்ப்பேன். இந்நிகழ்ச்சியை பார்த்தன் விளைவாய் எனக்கு புரிந்த ஒன்று நல்ல வேலையில், உயர்ந்த பதவியில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு கிட்டத்தட்ட முதிர் கன்னி வயது வந்தும் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட சொச்ச முடிகளை முன் பக்கம் வழித்தெடுத்த முதிர்கண்ணன்கள் நிலையில்தான் ஆண்களும் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெரிய வேலைகளில் இருப்பவர்கள் அல்ல. சாதாரன பி.பி.ஓ, அக்கவுண்ட்ஸ், மார்கெட்டிங் என இருப்பவர்கள் தான் அதிகம். இன்னமும் திருமணமாகாமல் இருக்கும் என்னுடய நண்பர்கள் சிலரிடம் கேட்ட போது, இப்பல்லாம் ஒண்ணு பொண்ணு நம்மளை விட அதிகமா சம்பாதிக்குது. இல்லை நிறைய சம்பாதிக்கிறவனா இருக்கிறவன் புருஷனா வரணும்னு ஆசை படுறாங்க. அதான் ப்ரச்சனை என்கிறார்கள். நீயேன் உன் மனசுக்கு புடிச்ச பொண்ணா பார்த்து லவ் பண்ணக்கூடாது? என்றேன். சினிமா, பிஸினெஸுன்னு சுத்துற உனக்கு பொண்ணு கொடுத்திட்டாங்கிற  மமதையில பேசுற என்கிறார்கள். ஒரு விஷயத்தோட தாத்பர்யத்தை புரிஞ்சிக்கலாம்னா விடமாட்டேன்குறாங்களே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sep 1, 2014

கொத்து பரோட்டா -01/09/14 -சலீம், அடல்ட் கார்னர், Peruchazhi, Munariyappu,கேட்டால் கிடைக்கும்

கேட்டால் கிடைக்கும்
ஃபேம் தியேட்டர் புட் கோர்ட்டில் குடிக்க ஓரமாய் வைத்திருந்த தண்ணீர் கேனை இப்போது கண்ணுக்கு தெரிவது போல வைத்திருந்தார்கள். புட் கோர்ட்டில் கார்டு வாங்கினால் தான் சாப்பிட முடியும் என்று சட்டம் வைத்திருந்தாலும், ஈ அடிக்கும் கூட்டமிருப்பதால் ஒவ்வொரு கடைக் காரரும், ஆளுக்கு ஒர் ஸ்வைப்பிங் கார்டு வைத்து அதைக் கொடுத்து உணவுகளுக்கு காசை கொடுக்க சொல்லி விடுகிறார்கள். கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இப்போது இவர்களுக்கு ஒர் ஆப்பு வருகிறது அந்த மாலில் ஜூனியர் குப்பண்ணா ஒரு புதிய கிளையை திறக்கிறது. அங்கே இருந்த சிக் கிங் கவுண்டரில் டயட் கோக் வாங்க விலை என்ன என்று கேட்ட போது 35 ரூபாய் என்றார். “அது முப்பது ரூபாதானே?” என்று கேட்ட போது ஆமா.. மால்ங்கிறதுனால 5 ரூபா எக்ஸ்ட்ரா என்றார். அதெப்படி வாங்குவீங்க..? என்று கேட்டதற்கு மாலுக்கு வர்றீங்க இல்லை காஸ்ட்லியாத்தான் இருக்கும் என்றார். அது எப்படிங்க வாங்குவீங்க? என்று கேட்டதற்கு புத்திசாலித்தனமாய் பேசுவதாய் நினைத்து, “சினிமா டிக்கெட் 120 கொடுத்து வாங்குறீங்க.. அங்கேயே 10 ரூபா டிக்கெட்டும் இருக்கு அதை வாங்க வேண்டியதுதானே?” என்றார். “சார்.. தேவைனா 10 ரூபா டிக்கெட் கூட வாங்கிப் பார்ப்பேன். ஆனா அவங்க கவுண்டர்ல 10 ரூபா டிக்கெட்டை 11ரூபாய்க்கு விக்குறது இல்லை  என்றேன். பதில் பேசவில்லை. நாட்டுல அவனவன் கொள்ளையடிக்கிறான் அதை விட்டுட்டு இதை கேக்குறீங்க? என்றார். நான் இங்க 5 ரூபாய்க்கு இவ்வளவு கேள்வி கேக்குறேன் இல்லை அதே போல கேளூங்க நிச்சயம் கிடைக்கும் என்றேன். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Aug 26, 2014

MARDAANI

ட்ரைலர் பார்த்ததிலிருந்து ஒரு நடை போய்ட்டு வந்திருவோம்னுதான் தோணிட்டே இருந்தது. சைல்ட் ட்ராபிக்கிங் தான் கதை.  ஏற்கனவே இக்கதை களனில் ஏகப்பட்ட படங்கள் உலகம் பூராவும் வந்திருக்கிறபடியால் இதில் என்ன புதுசாய் இருந்துவிட போகிறது என்ற எண்ணம் தலைப்பட்டாலும், எனக்கு பிடித்த ராணி முகர்ஜியும், அவரது கரகரகுரலும் என்னை தியேட்டருக்குள் அழைத்தது.

Aug 25, 2014

கொத்து பரோட்டா - 25/08/14

சேனல் எங்கும் யாராவது கோட்டு மாட்டிக் கொண்டோ, கொள்ளாமலோ பேசிக் கொண்டேத்தான் இருக்கிறார்கள். Donahue show தான் மெல்ல ஹிந்திக்கு போய் அரட்டை அரங்கம் ஆனது. பின்பு அதுவே நீயா நானா அது இது என ஏகப்பட்ட டாக்‌ஷோக்கள். இந்திய ஆங்கில சேனல்களில் அமீர்கான், சிமி, கரன் ஜோஹர் என பிரபலங்கள் எல்லாம் டாக் ஷோ நடத்தி வரும் வேளையில் சமீபத்தில் zcafe சேனலில் நிரஞ்சன் அய்யங்கார் என்பவரின் டாக் ஷோ பார்த்தேன். அந்த வாரம் அவர் காஜோலுடன் அளவளாவினார். அவர்கள் பேசியது மட்டுமில்லாமல். அதை படமாக்கிய விதமும் அட்டகாசமாய் இருந்தது. இரண்டு மூன்று கேமராக்கள், அதீத க்ளோசப்கள், வெவேறு லொக்கேஷன்கள் என விஷுவலாகவும் நன்றாக இருந்தது. மிக சுவாரஸ்யமான இரண்டு நண்பர்களிடையே நடைபெறும் பேச்சாய் அமைந்திருந்தது. நிரஞ்சன் அய்யங்கார் ஒர் “கே” வாம்.  கரன் ஜோகரின் நெருங்கிய நண்பர் என்ற சுவாரஸ்யமான பேச்சுக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் நிறைய சொல்கிறார்கள். எனக்கு பிடித்த அந்நிகழ்ச்சியின் ஒர் எபிசோட் இங்கே..
@@@@@@@@@@@@@@@@@@@@@

Aug 21, 2014

சாப்பாட்டுக்கடை - செட்டிநாடு சைவ பவன்

பெயரைப் பார்த்த மாத்திரத்தில் அட என்னடா இது செட்டிநாடு அசைவ உணவகம் பார்த்திருக்கிறோம். சைவ உணவகமா? என்ற ஆச்சர்யத்தோடு கடையின் உள் நுழைந்தேன். ஓரளவுக்கு நல்ல கூட்டமிருந்தது. உள்ளே போய் உட்கார்ந்த மாத்திரத்தில் நல்ல வரவேற்பும், ஒரே நேரத்தில் பல பேர் ஆர்டர் சொல்லிட்டீங்களா? என்று அதீத உபசரிப்பை பார்த்த மாத்திரத்தில் கடையை திறந்தே ரெண்டொரு நாட்கள் தான் இருக்குமென தோன்றியது. மெனு கார்ட் கேட்டேன். “ சார் இன்னைக்குத்தான் திறந்திருக்கோம். இப்போதைக்கு மீல்ஸ் மட்டுமே இருக்கு” என்றார். எனக்குள் சிரித்துக் கொண்டேன். ஓகே மீல்ஸ் என்று ஆர்டர் செய்த மாத்திரத்தில் தட்டில் சாப்பாடு வந்தது.  

Aug 19, 2014

இடுப்பில் ஒர் மடிப்பு - நீயா நானா ஸ்பெஷல்

”டாக்டர்.. இதோ வலது பக்க இடுப்பு கிட்ட கட்டியா இருக்கு. அழுத்தினா வலிக்குது” என்றேன்.

Aug 18, 2014

கொத்து பரோட்டா-17/08/14

பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர் என்ற டேக்குடன் அஞ்சான் வருவதால் உடன் எந்த படமும் வராது என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் பார்த்திபன் ராதாகிருஷ்ணனின் "கதை திரைக்கதை வசனம், இயக்கம்" படமும், பத்திரிக்கையாளர் முத்துராமலிங்கத்தின் சிநேகாவின் காதலர்கள்" படமும் உடன் வெளியாகி உள்ளது ஆச்சர்யமில்லை. ஏனென்றால் ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்திபன் சார்.. மற்றும் முத்து ராமலிங்கம் இருவரையும் சந்தித்த போது  இருவருமே உறுதியாய் இருந்தார்கள். 25 வருடங்களுக்கு முன் இதே போல புதிய பாதை படத்தை ரெண்டு மூன்று படங்களுக்கு இடையே வெளியிட்டு வெற்றி பெற்ற அனுபவத்தை சொன்னார். மீண்டும் அதே கான்செப்டோடு "அஞ்சானுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வாங்க என்று விளம்பரம் செய்து இன்று வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். இன்னும் நான் படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு படத்தை பற்றி சொல்லுகிறேன் வாழ்த்துகள் பார்த்திபன் சார்.  முத்துராமலிங்கம் சார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@

Aug 14, 2014

Aashiqui-2

எந்த பார்ட்டிக்கு சென்றாலும், எந்த ஒரு குழு நிகழ்வுக்கு சென்றாலும் இந்த “தும்பிஹோ” பாடலை கேட்காமல் இருந்ததில்லை. இப்பாடலில் பல டி.ஜே வர்ஷன்களை கேட்டுக் கொண்டேயிருந்தேன். ஒவ்வொரு முறை இப்பாடலை கேட்டதும் இப்படத்தை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தாலும், ஏனோ தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. பாடல் நன்றாக இருக்கிறது என்பதை விட, ஒவ்வொரு இடத்திலும் இப்பாடலை கேட்ட மாத்திரத்தில் படம் பார்த்தவர்களின் கண்களின் ஓரம் லேசாய் ஒர் ஈரம் படர்வதை தவறாமல கவனித்தேன். பாடலை பாடியவரின் குரலும், பாடல் வரிகளும், காதலை, அதன் வலியை சொல்வது புரிந்தும் ஏனோ எனக்கு கண்ணீர் வரவில்லை. காரணம் படத்தின் கதையைப் பற்றி கேட்டறிந்ததுதான். உலகில் உள்ள எல்லா மொழிகளிலும், பார்த்த கதைதானே A Star Is Born படத்தின் உல்டா, எத்துனை படங்களில் இம்மாதிரியான டெம்ப்ளேட் காதல், காட்சிகளை பார்ப்பது, அவனவன் இந்திய படங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய்க் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் இருபது வருஷத்துக்கு பின்னாடி ரீவைண்ட் பண்ற மாதிரியான கதை  என்பது போன்ற பல அலட்சியக் காரணங்கள்  என்று கூட சொல்லலாம். பட்.. படம் பார்த்து முடித்த மாத்திரத்தில் போங்கடா.. நான் கொஞ்சம் அழுதுக்குறேனு எனக்குள்ள இருக்குற பாமர சினிமாக்காரன் தான் முன்னாடி நின்னான்.  அடுத்த கட்டத்திற்கு போறோமோ இல்லையோ இன்னைக்கு பார்த்த மாத்திரத்தில் உருக வைக்குது பாருங்க.. அதான் சினிமா. அந்த மேஜிக் தான் சினிமான்னு மனசு சொல்லிட்டேயிருக்கு.

Aug 11, 2014

கொத்து பரோட்டா - 11/08/14

சென்ற வாரம் பதிவர்கள் இணைந்து உருவாக்கிய பரோட்டா கார்த்தி எனும் குறும்பட விழாவிற்கு சென்றிருந்தேன். நான் போய் சேர்வதற்குள் குறும்படம் ஒளிபரப்பப்பட்டு, வெளியிட்டு விட்டார்கள். பதிவர்கள் மின்னல் வரிகள் கணேஷ் பெற்றுக் கொண்டாராம். தொட்டால் தொடரும் ஆரம்பித்ததிலிருந்து பதிவர்கள் யாரையும் சந்திக்க முடியவில்லை. சுரேகா, அவரது உதவியாளர், கே.ஆர்.பி, சிவகுமார், கோவை ஆவி, சீனு, சேட்டைக்காரன், மூத்த பதிவர் சுப்பு தாத்தா வந்திருந்து வாழ்த்தினார் என நண்பர்கள் பல பேர் வந்திருந்தது சிறப்பாக இருந்த்து விழா. குறும்படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்வதாய் சொல்லியிருந்தேன். விழாவில் கலந்து கொண்ட பதிவர்களுக்காக தொட்டால் தொடரும் படத்தின் வெளிவராத ட்ரைலரையும், பெண்ணே.. பெண்ணே பாடல் காட்சியையும் போட்டுக் காட்டினேன். நன்றாக இருந்ததாய் சொன்னார்கள். வழக்கம் போல நிகழ்ச்சி முடிந்தும் வேடியப்பனின் கடையின் கீழ் கூட்டம் நடந்தது. நெடுநாள் கழித்து ஒர் சிறப்பான மாலையாய் அமைந்தது பரோட்டா கார்த்தி குறும்பட விழா.
@@@@@@@@@@@@@@@@@@@

Aug 9, 2014

சாப்பாட்டுக்கடை - முத்து மெஸ்


ரொம்ப நாளாகிவிட்டது சாப்பாட்டுக்கடை எழுதி. வழக்கமாய் காலை உணவு மட்டுமே என் வீட்டில் என்பது வழக்கம். மதியம் அலுவலகத்திலும், இரவும் வீட்டிற்கு சீக்கிரம் வருவதைப் பொறுத்தே என்பதால் காலை உணவை வீட்டில் ஸ்கிப் செய்ய மாட்டேன். அதே போல ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முடிந்த வரை குடும்பத்துடன் இருப்பது என் வழக்கம். சமயங்களில் ஏதேனும் ஒரு நாள் காலை வேளையில் கூட வீட்டில் இருப்பவர்கள் திருமணத்திற்கோ, அல்லது வேறு நிகழ்வுகளுக்கோ சொன்றுவிடும் சமயம், லோக்கல் ஓட்டல்களில் சாப்பிட்டுவிடுவது உண்டு. அப்படி ஒரு நாள் தேடும் போதுதான் தெரிந்தது இந்த மெஸ். சைதாப்பேட்டை கவரைத் தெருவில் ஒர் பழைய கல்யாண மண்டபம் இருந்தது. அது கால மாற்றத்தில் இண்டோர் கிரிக்கெட் செண்டராகக்கூட மாறி தற்போது முத்து மெஸ் என்றாகியிருப்பது தெரிந்தது.

Aug 4, 2014

கொத்து பரோட்டா -4/8/14

சதுரங்க வேட்டை திரைப்படத்தைப் பற்றி பனுவல் புத்தக நிலையத்தில் ஒர் கலந்துரையாடல் மற்றும் விமர்சனக் கூட்டம் திருவான்மியூரில் நடந்தது. அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். இயக்குனர் விநோத் எனக்கு ரொம்ப நாளாய் பழக்கம். தொலைபேசியிலும், இணையத்திலும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்போம். ஆனால் அன்று தான் நேரில் சந்தித்தோம். படம் பற்றி நிறைய பேர் நிறைய கருத்துக்களை சொன்னார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒர் அரவாணி தோழி படத்தில் ஒர் காட்சியில் பொட்டையா என்று வரும் வசனத்தை பற்றி கூறி சாடினார். இதே வசனம் நான்கைந்து முறை வேலையில்லா பட்டதாரி படத்தில் வருகிறது. அதை யாரும் கேட்டதாய் தெரியவில்லை. பொட்டை என்றால் அது அரவாணியைக் குறிக்கும் என்பது கூட அன்றைக்கு பல பேருக்கு செய்தியாய்த்தான் இருந்தது. ஏனென்றால் ஒர் பெரியவர் ஒருவர் அதை குறித்து பேச முயன்ற போது முகத்தில் அடித்தாற்ப் போல பதில் சொன்னார் அந்த அரவாணித் தோழி. ஆம்பளைகளை அவமானப் படுத்தும் விதமாய் திட்ட, நீ என்ன பொம்பளையா? என்று கேட்பது தான் பொட்டையா என்பதாய் மருவியிருக்கிறது என்பதுதான் என் கருத்தும். அரவாணிகளை அழைக்கும் சொல்லாய் எனக்கும் தெரியவில்லை. எனிவே இச்சொல் இவர்களையும் குறிக்குமென்பது அன்றைய நிகழ்வின் மூலம் அறிந்து கொண்ட உண்மை. இனி தவிர்ப்போம். ஆனால் ஒர் கோரிக்கை இம்மாதிரியான நிகழ்வுகளில் அதை பொறுமையாய் கோபத்தை தூண்டும் விதமாய் சொல்லாமல், உங்கள் மன உணர்வுகளை அழகாய் சொல்லாம் என்பது என் எண்ணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Jul 28, 2014

கொத்து பரோட்டா - 28/07/14

கேட்டால் கிடைக்கும்
எனக்கும் தலப்பாக்கட்டி ரெஸ்ட்டாரண்டுக்கும் ஏழரைப் பொருத்தம் ஏனென்றே தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் பிரியாணி நன்றாக இருந்தாலும், போகப் போக படு மோசமாய் போனது. அதுவும் 150 ரூபாய்க்கு  ரெண்டு கரண்டி பிரியாணியை கொடுத்துவிட்டு, பீசை தேடி கலைத்துப் போய் எங்கய்யா பீசு என்று கேட்டால் மட்டுமே நான்கைந்து பீஸை கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் வேறு வழியேயில்லாமல் நானும் எங்கள் ஹீரோவும் பெசண்ட் நகர் தலைப்பாக்கட்டியில் சாப்பிட போயிருந்தோம். இரவு நேரமாக இருந்தாலும் செம ஹூமிடிட்டி. வியர்த்துக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்ததும் ஏசியே இல்லை. ஏசி இல்லையா என்று கேட்டவுடன் மேல உக்காருங்க என்றார். அங்கிருந்தவர். மேலே ஏதோ ஒண்ணுத்துக்கில்லாத வகையில் குளூமை இருக்க, சாப்பிட வழக்கம் போல பிரியாணி ஆர்டர் பண்ணிவிட்டு காத்திருந்தோம். வியர்க்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் தொப்பலாய் நனைய ஆரம்பித்துவிட்டோம். பிரியாணி வேறு சகிக்கவில்லை. பில் வந்தது 180 மேனிக்கு ரெண்டு பேருக்கு பிரியாணி பில்லோடு, சர்வீஸ் டேக்ஸ், மற்றும் வாட் போட்டிருந்தார்கள். இதற்குள் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த குடும்பம் வியர்த்து கொட்டி, சர்வரிடம் கத்த ஆரம்பித்திருக்க, என் பில் கொண்டு வந்தவரிடம் இது எதுக்கு டேக்ஸ் என்றேன். இருங்க மேனேஜரை வரச் சொல்லுறேன் என்று சொல்லிவிட்டு, போனவர் ஐந்து நிமிடம் வரவேயில்லை. ஏற்கனவே வியர்த்துப் போய் தொப்பலாய் நினைந்து கொண்டிருக்க, இப்ப வரலைன்னா நான் கிளம்பிட்டேயிருப்பேன் என்றதும். ஒர் சிறு வயது பையன் வந்தார். நீங்கதான் மேனேஜரா? என்றதுக்கு தலையாட்டினார். இந்த டாக்ஸ் எதுக்கு? சார் இது கவர்மெண்ட் வாங்க சொல்லியிருக்காங்க சார்.. என்றார் புத்திசாலித்தனமாய். கவர்மெண்ட் ஏசி ரெஸ்ட்டாரண்டா இருந்தா வாங்க சொன்ன சர்வீஸ் மற்றும் வாட் இது. ஏசியேயில்லாத ஹோட்டலுக்கு நான் ஏன் கொடுக்கணும் என்றவுடன், சார்.. ஏசி ஃப்யூஸ் போயிருச்சு.  சரி பியூஸ் சரி பண்ண எவ்வளவு நேரம் ஆகும்? தெரியலை.. அப்ப ஏசி எப்ப ஒர்க் ஆகும்னும் தெரியாது அப்படித்தானே? என்றதும் விழித்தார். சரி.. ரெண்டு பிரியாணியும் படு கேவலம். வாய்ல வைக்க வழக்கலை. இருந்தாலும் சாப்பிட ஆர்டர் பண்ணினதுனால, காசு கொடுக்கிறேன். ஏசி யில்லாத ஹோட்டலுக்கு எல்லாம் நான் அதுக்கான டேக்ஸ் பே பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டு, பிரியாணிக்கு உண்டான காசை மட்டுமே வைத்தேன். அவன் பதிலே சொல்லவில்லை. அடுத்த நாள் முழுவதும் பிரியாணி தன் வேலையை காட்டியது. இதையெல்லாம் மீறி ரெண்டொரு நாள் முன்னால் நானும் எங்கள் படத்தில் நடித்த பாலாஜியும், தமனும் டி.நகர் தலைப்பாகட்டிக்கு போக நேர்ந்தது. வழக்கம் போல பிரியாணி மொக்கையாக மட்டுமல்ல. பிரியாணி பூராவும் பட்டை, லவங்கம் ஏலாக்காயாய் வாய் பூராவும் ஜிவு ஜிவுஎன இருந்தது. இந்த லட்சணத்துல 19வது கிளை வேற திறக்குறாங்களாம். ம்ஹும். சரத்குமார் இவங்க கடை பிரியாணிய சாப்பிட்டதில்ல போல..
@@@@@@@@@@@@@@@@@@@@@

Jul 25, 2014

இசையெனும் ராஜ வெள்ளம் -

இளையராஜா, மொட்டை, ராக தேவன், இசைஞானி என ஆயிரம் பேர்களின் அவரை அழைப்பதற்கான காரணம் அவரின் இசை. ராஜாவின் ஒவ்வொரு இசையையும் கேட்டுக் களித்தவர்கள் அனைவருக்கும் என்றாவது ஒரு முறை தூரத்திலிருந்தாவது அவரை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் இல்லாமல் இருக்காது. நண்பர் ஒருவருக்கு ராஜா என்றால் பைத்தியம். ஒவ்வொரு முறை என்னைப்பார்க்கும் போதெல்லாம், என்னைக்காவது ஒரு நாள் என்னை ராஜாவை பார்க்க வைக்கிறியா? என்று கேட்டுக் கொண்டேயிருப்பார். ஒரு நாள் காலையில் ஏதோ ஒரு படத் தயாரிப்பாளரை பார்க்க சென்றிருந்த போது நண்பர் போன் செய்ய, உடனே வாய்யா.. நான் ப்ரசாத்துலதான் இருக்கேன் என்றவுடன் அயனாவரத்திலிருந்து பத்து நிமிடத்தில் புயல் வேகத்தில் வந்தார். ராஜா ஏதோ ஒரு ரிக்கார்டிங்கிற்காக காரிலிருந்து வெண்ணுடையில் இறங்க, “வாங்க போய் பேசுவோம்” என்று நண்பரைக் கூப்பிட்டேன். அவரின் கண்கள் எல்லாம் மின்ன, “வேணாம் சார்.. ஏதோ வேலையாப் போவாரு அவரை ஏன் டிஸ்ட்ரப் பண்ணனும்” என்று பதில் மட்டுமே என்னிடம் வந்ததே தவிர பார்வை கேமரா பேனிங் போல அவர் போகும் திசையில் பயணித்துக் கொண்டேயிருந்தது. “அட வாய்யா. இவ்வளவு தூரம் வந்திட்டு ஒரு போட்டோ எடுத்துக்க என்றேன். இல்லை நண்பா இது போது என் ஜென்மத்துக்கு என்று கரகரவென அழ ஆரம்பித்தார்.  

Jul 23, 2014

Oohalu Gusa Gusalade

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டிக்கெட் விற்று சாதனை படைத்திருப்பதாய் வெற்றி விழா கொண்டாடினார்கள் என்று இணையதளங்களில் படித்த போது எனக்கு தெரிந்து இந்தியாவில் இத்தனை டிக்கெட் விற்று சாதனை என்று விழா கொண்டாடிய படம் இதுவாகத்தான் இருக்குமென்று தோன்றியது. படம் சில வாரங்களுக்கு முன்னமே ஆந்திராவில் வெளியாகி வெற்றிபடமாய் அறிவிக்கப்பட்டது என்று சொன்னார்கள். பெரிய நடிகர்கள், வாரிசு நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற படங்களை ஓட விடமாட்டேன் என்கிறார்கள் என்று தெலுங்கு திரையுலகமே புலம்பிக் கொண்டிருப்பதாய் ஒர் செய்தி வேறு உலா  வந்து கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தின் வெற்றி புருவம் உயர்த்தி கவனிக்க செய்தது. 

Jul 21, 2014

கொத்து பரோட்டா -21/07/14- தொட்டால் தொடரும், Mofa, வேலையில்லா பட்டதாரி, சதுரங்க வேட்டை,

சென்ற வாரம் வளசரவாக்கத்திலிருந்து நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு பிரிசம் அண்ட் பிக்சலுக்கு போய்க் கொண்டிருந்தேன். அது ஒரு குறுகலான தெரு. எதிரே வெகு வேகமாய் ஒர் வண்டி ஹாரனுடன், பாஸ்ட் அண்ட் பியூரியசில் வருவது  போல வந்து கொண்டிருந்தது. நமக்கெதுக்குடா வம்பு என இடது பக்கம் ஓரம் கட்ட, அதே நேரத்தில் என் பின் பக்கத்திலிருந்து ஒரு வண்டி எதிர் வண்டி போலவே வெகு வெகு வேகமாய் வர, இரண்டு பேரும் நேருக்கு நேர் மோதவிருக்கும் வேளையில் சட்டென எதிர்புறம் வந்தவனும், என் பக்கம் வந்தவனும் அவரவர் இடது புறம் திருப்ப, என் பக்கம் வந்தவனின் ஹேண்டில் பார் என் வண்டியின் ஹாண்டில் பாரைத் தட்டிவிட, ஷணத்தில் மண்டைக்குள் மின்னல். 5நிமிடம் யாருமில்லாமல் வண்டி என் மேல் விழுந்திருக்க, வலது கால் முழுவதும் வண்டிக்குள் மாட்டிக் கொண்டு எடுக்க முடியாமல் “ஆ”வென அலறினேன். தூரத்தில் ரெண்டு பேர் யோசித்து எதோ சம்பவம் நடந்திருக்கு போல என யோசித்து, சரி போனாப் போட்டும் என்று வந்து எழுப்பினார்கள். இடித்தவனும் சரி, எதிர்பக்கம் ஓட்டி வந்தவனும் சரி அங்கு இல்லவேயில்லை. “யாருக்கும் ஈவுமில்லை இரக்கமில்ல பாஸு பாஸு” பாட்டு சரிதான் என தோன்றியது.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Jul 16, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-8- பைரஸி, டிவிடி, C2H

திருட்டு டிவிடியினால் தான் இவ்வளவு பெரிய ப்ரச்சனை என்று சொல்வது ஒரளவுக்கு உண்மையென்றாலும், திருட்டு விசிடியிலோ, டிவிடியிலோ கூட வெளிவராத திரைப்படங்கள் இருக்கத்தான் செய்கிறது. நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கிறார்.  அவர் ஒர் சினிமா ப்ரியர். கையில் கிடைக்கிற படங்கள் எல்லாவற்றையும் பார்க்கக்கூடியவர். அவர் தான் மேல் வரிகளை சொன்னவர். சில வருடங்களுக்கு முன் மோசர்பியர் நிறுவனம் பழைய வீடியோ உரிமங்கள் வாங்கியவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து அவர்களது பழைய படங்களை எல்லாம் சேர்த்து முப்பது ரூபாய்க்கு மூன்று படம், ரெண்டு படம் என லீகல் ப்ரிண்டுகளை டிவிடிகளாய் வெளியிட்டார்கள். மொழி படத்தை படம் வெளியான சில மாதங்களில் 100 ரூபாய்க்கு கொண்டு வந்தார்கள். பெரியதாய் போகவில்லை என்றும் சில வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் கம்பெனியை க்ளோஸ் செய்துவிட்டு போய்விட்டார்கள். எனக்கு தெரிந்து அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் ஒன்று அவர்கள் சரியான நெட்வொர்க் அமைக்கவில்லை என்பதும் ஒன்று.  பின்பு நிறுவனத்தில் ப்ரச்சனை ஏற்பட்டதால் டிவிடி தயாரிப்பையும் நிறுத்திவிட்டதாகவும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை ஏற்கனவே டிவியிலும், பைரஸியிலும் விற்ற படங்களை மீண்டும் வாங்கி வைத்து பொக்கிஷப்படுத்தும் பழக்கமே நம்மிடம் இல்லாததாலும், புதிய படங்களை அவர்கள் தொடர்ந்து வெளியிடாததாலும், அவர்களது டிவிடி மார்கெட் வீழ்ந்தது என்பது என் கருத்து. 

Jul 15, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2- 7-பைரஸியும், சேரனின் C2H

சமீப காலமாய் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஆரம்பித்து, அடிப்படை வேலை செய்பவர்கள் வரை புலம்புவது சினிமா நிலைம ரொம்ப மோசமாயிருக்கு என்பதுதான். ஏற்கனவே சின்னப் படங்களின் வெற்றி, மற்றும் வியாபாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வேளையில், இயக்குனர் சேரன் அவர்களின் C2H எனும் விளம்பரம் வந்தது. அவ்விளம்பரம் பார்த்து  நேற்று காமராஜ் அரங்கில் கூடிய கூட்டத்தில் முக்கியமானவர்கள் எல்லோருமே சின்னப் படம் தயாரிப்பவர்கள், தயாரித்துவிட்டு வெளியிட முடியாமல் காத்திருப்பவர்கள். அட எவ்வளவு பெரிய இயக்குனர், தயாரிப்பாளர் ஏதோ ஒரு ஐடியாவோடத்தான் ஆரம்பிச்சிருப்பாரு.. என்ற நம்பிக்கையில் கூடியிருந்த கூட்டம்.  கூடியிருந்த கூட்டத்திற்கு பதில் கிடைத்ததா? என்று கட்டுரையின் முடிவில் பார்ப்போம். கமல்ஹாசன் ஆரம்பித்து வைத்து அப்போதைக்கு கைவிடப்பட்ட இந்த தமிழ் சினிமா எனும் யானைக்கு மீண்டும் மணிக்கு கட்ட விழைந்த தைரியத்திற்காக சேரனுக்கு பாராட்டும் ஆதரவும்.

Jul 14, 2014

கொத்து பரோட்டா -14/07/14- தொட்டால் தொடரும், நளனும் நந்தினியும், Dawn of the Planet of the Apes, C2H,

தொட்டால் தொடரும் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீடு கடந்த 4ஆம் தேதி சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. திரைப்பட தயாரிப்பாளர் கே.ஆர். வெளியிட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பெற்றுக் கொண்டார். திரையுலக பிரபலங்கள், பதிவுலக நண்பர்கள் என கல்யாண களை கட்டியது காலை முதலே. இதற்கு முன்னர் படத்தின் டிசைனையும், ப்ரோமோ சாங்க் டீசரை வெளியிட்டிருந்தோம். அதற்கு கிடைத்த நல் ஆதரவு கொடுத்த தைரியத்தோடு ஒன்றுக்கு ரெண்டாய் ட்ரைலர்கலையும், பாஸு பாஸு பாட்டையும் சேர்த்து மூன்று பாடல்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு போட்டுக் காட்டி, பாடல் சிடி வெளியிடப்பட்டது.  ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு கிடைத்த பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியையும், படத்தின் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தியுள்ளது. SS Media  என்கிற விநியோக நிறுவனம் படத்தை வெளியிட ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.  பர்ஸ்ட் காப்பி எடுக்கப்படாமல் இருக்கும் நிலையில், ரஷ்களையும், டப்பிங்கிலும் பார்த்த படத்தை வைத்து அவர்கள் ஒப்பந்தம் போட்டிருப்பது எனக்கும்,  தயாரிப்பாளருக்கு மிக்க மகிழ்ச்சியை தந்திருக்கிறது.  பாடல் மற்றும் ட்ரைலர்களுக்கு ஆன்லைனின் கிடைத்த விமர்சனங்கள், மற்றும் பாராட்டுக்கள் மேலும் தொட்டால் தொடரும் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டுமென்ற உத்வேகத்தை கொடுக்கிறது. விரைவில்  தொட்டால் தொடரும் வெள்ளித்திரையில்.. அதுவரை உங்களுக்காக.. ட்ரைலரும் பாடல்களும். காத்திருக்கிறேன் உங்கள் கருத்துக்காகவும், ஆதரவிற்காகவும் நன்றி.
@@@@@@@@@@@@@@@@@

Jul 7, 2014

கொத்து பரோட்டா -8/7/2014

தொட்டால் தொடரும்
படத்தின் ஆடியோ, ட்ரைலர் வெளியீடு மிகச் சிறப்பாய் நடைபெற்றது. இரண்டு நாட்களாய் நகம் கடித்து மழுங்கிப் போன விரல் நுனிகளுடனேயே அலைந்து கொண்டிருந்தேன். விழா அழைப்பு, ட்ரைலர், பாடல்கள் விஷுவல்களின் டி.ஐ. செக்கிங், குவாலிட்டி, சிங்க்,என பல டென்ஷன்கள். பாடல்களையும், விஷுவலையும் வெளீயிட்டு கைதட்டல் கிடைக்கும் வரை பதட்டம் இருந்து கொண்டுதானிருந்தது. கமலின் வசனம் போல பயமில்லாமல் நடித்துக் கொண்டிருந்தேன். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் எல்லோருக்கும் முன்னால் வந்திருந்து விழா ஆரம்பிப்பதற்காக காத்திருந்தார்.  அவரை காக்க வைத்து விழா ஆரம்பித்தமைக்கு என் மன்னிப்பை இப்பதிவின் மூலமாகவும் கேட்டுக் கொள்கிறேன். பாடல்களும் ட்ரைலர்களும் வந்திருந்தவர்கள் அத்துனை பேருக்கும் பிடித்திருந்தது சந்தோஷத்தை தந்தது. பாஸு பாஸு பாடலுக்கு கிடைத்த வரவேற்பு தொட்டால் தொடரும் படத்தை மேலும் பல வெற்றிகளை நோக்கி இட்டுச் செல்லும் என்பது பார்வையாளர்களின் கரகோஷ வரவேற்பின் மூலமாய் தெரிந்தது. உங்கள் ஆதரவை எங்களது ட்ரைலர், மற்றும் வெளியிடப்பட்டிருக்கும் பாடல்களுக்கு கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்காக.. சத்யப்ரகாஷ், வந்தனா ஸ்ரீனிவாஸ், குரலில், சக்தி செல்லமின் வரிகளில், பி.சி.சிவனின் இசையில்.. தொட்டால் தொடருமின் “யாருடா மச்சான்”.  இன்னும் இரண்டொரு நாளில் ட்ரைலர் ஆன்லைனில்.. வரும்
@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாக் எழுத வந்து கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்கள் ஆகி விட்டது. என்ன தான் கதை, கட்டுரை, பத்தி எழுத்து என எழுதி புத்தகங்கள் எல்லாம் போட்டாலும், சினிமா விமர்சனங்கள் தான் என்னை வெளியுலகிற்கு காட்டியது என்பதை மறுக்க முடியாது. என் விமர்சனங்களுக்கு கிடைத்த வரவேற்பும், அங்கீகாரமும், எதிர்ப்புகளும், எதிர்ப்பார்புகளையும் பூர்த்தி செய்ய முடியுமா? என்ற பயம் லேசாக இருந்து கொண்டிருந்தாலும், படத்தின் பைனல் ப்ராடெக்ட் திருப்தியாய் வந்திருப்பது சந்தோஷமாய் இருக்கிறது. வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே என் விமர்சனத்தை, எழுத்தை படித்து நட்பானவர்கள். அவர்களின் படங்களைப் பற்றிய விமர்சனங்களையும் மீறி.. என் மீது அன்பை பொழிந்தவர்கள். குறிப்பாய் இயக்குனர் பத்ரி அவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஒரு நடிகனாய் அவருக்கு நான் அறிமுகமாயிருந்தாலும், பின் வரும் நாட்களில் அவருடனான என் பயணத்தை கலகலப்பு, தில்லு முல்லு, என கமர்ஷியல் வெற்றிப் பயணமாய் அமைத்துக் கொடுத்தவர் இதோ அவரது புதிய படமான ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் கூட ஒர் சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறேன். வலைப்பூ நண்பர்களான குடந்தை ஆர்.வி சரவணன், பாலகணேஷ், சிவா, கே.ஆர்.பி, மற்றும் பல நண்பர்கள் வந்திருந்து வாழ்த்தியது நெகிழ்வை தந்தது. விழாவில் வந்து பேசியவர்கள் அனைவருமே ஏதோ ஒர் விதத்தில் என்னிடம் அன்பு கொண்டவர்களாய் அமைந்தது நான் செய்த அதிர்ஷ்டமே.. பெயர் விட்டுப் போனவர்கள் மன்னிச்சூஊஊ
@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் சினிமாவிற்கு இருக்கும் பிரச்சனைகள் நிறைய. அத்தோடு ஒர் புதிய ப்ரச்சனை சேர்ந்திருக்கிறது. அதாவது படங்களை சென்சார் செய்யும் ப்ரச்சனை. வழக்கமாய் இரண்டு ஆண்டுகளூக்கு ஒர் முறை சென்சார் அதிகாரியில்லாமல் மேலும் பெண்கள், ஆண்கள் என குழு அமைக்கப்படும் தற்போது அக்குழுவில் 2 பெண்கள் மட்டுமே இருப்பதாலும், மேலும் புதிய குழு அமைக்கப்படாததாலும், படங்கள் சென்சார் ஆகாமல் சுமார் 18க்கும் மேற்பட்ட படங்கள் காத்திருக்கின்றது. அதில் சமீபத்தில் ரிலீஸாக வேண்டிய சரபம், மெட்ராசும் அடங்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த ட்வீட்டர், பேஸ்புக்கினால் பல நன்மைகள் இருந்தாலும், சில விஷயங்களில் மோசமாய்த்தான் இருக்கிறது. நேற்றிரவு பத்தரை மணி இருக்கும் பத்திரிக்கையாளர் நண்பர் ஒருவர் போன் செய்து “சார்.. எம்.எஸ்.பாஸ்கர் இறந்துட்டாரா?” நான் அப்படியா என்றேன். பேஸ்புக்குல போட்டிருந்தது என்றவுடன் அதிரடியாய் அவரது நண்பர்களுக்கு போன் செய்து, அவர் திடகாத்திரமாய் இருப்பதாய் அவரே தகவல் சொன்னதாக சொன்னவுடன் தான் நிம்மதியானது. எவனுக்கு என்ன ஆயிருச்சோ? ஒரு வேளை அரிமா நம்பி படத்துல எம்.எஸ்.பாஸ்கர் செத்து போனத, நிஜம்னு நம்பிட்டாங்களோ.. எது எப்படியோ அவருக்கு ஆயுசு நூறாகட்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
ஐநாக்ஸ் விருகம்பாக்கத்தில் ஆன்லைனில் புக் செய்ய கிட்டத்தட்ட டிக்கெட் விலையில்லாமல் 35 வரை டேக்ஸோடு ஆகிறது. நாம் ரிஜிஸ்டர் செய்திருக்கும் மொபைல் நம்பருக்குத்தான் டிக்கெட் பற்றிய விபரங்கள் வருகிறது. இந்த சர்வீஸுக்குத்தான் காசு. தியேட்டரினுள் விடுவதற்கு இனிமேல் கீழே இருக்கு ஒரே ஒரு கிஸ்ஸோகில் போய் டிக்கெட் எடுத்தால் தான் அனுமதிப்பேன் என்கிறார்கள். கேட்டால் மேனேஜ்மெண்ட் சொல்லியிருக்கு என்று சொல்ல் அப்ப என்ன டேஷுக்கு ஆன்லைன் டிக்கெட்? என்று கேட்டதற்கு பதிலில்லை. மேலே சென்று இன்சார்ஜிடம் கேட்டதும், நீங்க் கேக்குறது சரிதான்சார்.. நான் மேனேஜ்மெண்டுக்கு சொல்லுறேன் என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார். முப்பது ரூபாய் வரை ஆன்லைனில் டிக்கெட் வாங்க செலவு செய்கிறவனை எதற்காக மீண்டும் கிசோக்கில் டிக்கெட் எடுக்க சொல்கிறார்கள்?. அதுவும் ஒரே ஒரு டிக்கெட் கிஸோக்கை வைத்துக் கொண்டு இத்தனை அலைப்பறை. இதற்காக முன்பே ஒரு முறை சண்டையிட்டு வாடிக்கையாளர்கள் ப்ரஷர் செய்வதை நிறுத்தினார்கள். இப்போது மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறார்கள். உள்ளே செல்லும் முன் பேக் எல்லாம் வாங்கி சோதிக்கிறார்கள். பேருக்கு மெட்டல் டிடெக்டர்.. உள்ளே பாமிருக்கா என்று செக் செய்யவா? சாப்பிடுவதற்கு ஏதேனும் எடுத்து செல்கிறோமா என்பதை பார்ப்பதற்காகவே தவிர வேறெதுக்கும் இல்லை. கேமரா இருக்கு சார். வேற வழியில்லை செக் செய்யணும் என்றான். முந்தாநாள் நான் பார்க்க போன அரிமா நம்பி படத்தின் இண்டெர்நெட் டிக்கெட்டிற்கு அரசு முத்திரை பதித்த டிக்கெட் கிழித்து தரவேயில்லை. எனக்கு மட்டுமல்ல உடன் உள்ளே வந்த யாருக்கும் இல்லை.என்ன கணக்கு போவுதோ? இதையெல்லாம் கேமரா பார்க்காதா? ம்ஹும்..
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
விஜய் அவார்ட்ஸ் பெற்ற நலன் குமரசாமி, சந்தோஷுக்கு என் வாழ்த்துகள்
நேற்று தான் தெரிந்தது எத்தனை மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்கிறேனென்று. பீயிங் மூவ்ட் மெளமெண்ட்
@@@@@@@@@@@@@@@@@@@
பார்த்ததில் பிடித்தது
சில ட்ரைலர்கள் பார்த்த மாத்திரத்தில் பிடிக்கும். பின் நாளில் நினைவில் நிற்காது. சில படங்களின் ட்ரைலர் பார்த்த நாளிலிருந்து படம் வந்தா பார்த்தே ஆகணும்னு தோணும். அப்படியான ட்ரைலர் இந்த படத்தோட ட்ரைலர். வாழ்த்துக்கள் வினோத்.
@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
“A little girl and boy are fighting about the differences between the sexes, and which gender is better. Finally, the boy drops his pants and says, "Here's something I have that you'll never have!" The little girl is pretty upset by this, since it is clearly true, and runs home crying. A while later, she comes running back with a smile on her face. She lifts her dress, drops her knickers, and yells, "My mommy says that with one of these, I can have as many of those as I want!” 
கேபிள் சங்கர்

Jun 30, 2014

கொத்து பரோட்டா -30/06/14

தொட்டால் தொடரும்- பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீடு
படம் ஆரம்பித்த போது கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கணும் என்று மனதினுள் பதட்டமிருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் கமல் சொன்ன வீரத்தை காட்டிக் கொண்டிருந்தேன். படத்தின் டிசைன் வெளியான போது கிடைத்த ஆதரவு லேசான தைரியத்தை கொடுத்தது. அந்த தைரியம் பாஸு பாஸு பாடலை சிங்கிளாய் முதலிலேயே வெளியிடுவோம் என்று முடிவெடுக்க செய்தது. அதற்கான முஸ்தீப்பு வேலைகளில் இறங்கினோம். பாடல் நக்கல் நையாண்டியோடு ஜாலியாக எழுதப்பட்ட பாடல் ஆதலால் மக்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்குமென தெரிந்து கொள்ள ஆசையாய் இருந்தது. பாடல் ரிக்கார்ட் ஆனவுடன் மொபைலில் அதை எடுத்துக் கொண்டு, சினி சிட்டி கரோக்கே பாரில் கரோக்கேவுக்கு நடுவே அப்பாடலை ப்ளே செய்தேன். சரக்கே அடிக்காமல் ஏசியிலும் வியர்த்தது. பாடல் கேட்க ஆரம்பித்த சில நொடிகளில் மக்கள் சலசலப்பு குறைந்து பாடல் வரிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். அப்புறம் சிரிப்பும், கும்மாளமும் சேர்ந்து கொள்ள, கைதட்டல் தொடர்ந்தது பாடல் முடிந்தும்.  அப்பாடா.. பாட்டு நல்லாத்தான் வந்திருக்கு போல என நினைத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து “இந்த படத்தோட பாட்டு ரிலீஸாயிருச்சா?” என்று கேட்டார். “இல்லை”. என் கையில் ஒர் விசிட்டிங் கார்டை கொடுத்து பாட்டெல்லாம் ரெடியானதும் சொல்லுங்க. நாங்க யாஷ்ராஜ் கம்பெனியோட சவுத் டிவிஷன் ஹெட். பேசுவோம் என்றார். பாட்டை ஒரு முறை கேட்ட மாத்திரத்தில் கிடைத்த அங்கீகாரம். இப்பாடலை நல்ல முறையில் மக்களிடம் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டுமென்ற உறுதியை தந்தது.

Jun 17, 2014

தொட்டால் தொடரும் -பாஸு..பாஸு

தொட்டால் தொடரும் பட வேலைகள் ஆல்மோஸ்ட் முடிந்துவிட்டது. இன்னும் சிஜியிலும், டிஐயிலும் சில சின்னச் சின்ன வேலைகள் தான் பாக்கி. டைகர் ஆடியோ நிறுவனம் எங்களது பட பாடல்களை வாங்கி வெளியிட இருக்கிறார்கள். எங்கள் படத்தின் முதல் டீசராய் பாடலுக்கான டீசரை நேற்று இணையத்தில் வெளியிட்டோம். பாடலை நாளை புதன்கிழமை ரேடியோவிலும், இணையத்தில் யூடியூபிலும் ஒரே சமயத்தில் வெளியிடுகிறோம். பாஸு .. பாஸு என்கிற இப்பாடலை ஆண்டனிதாசன் பாடியுள்ளார். பாடலை கார்க்கிபவாவும், நானும் இணைந்து எழுதியிருக்கிறோம். உங்கள் பார்வைக்காக

கேபிள் சங்கர்

Jun 15, 2014

அப்பா

Father_by_tomK07”இன்னைக்கு என்ன ப்ரோக்ராம்? எங்கயோ விழான்னியே..?”

“ஆமாம்பா.. பதிவர் சந்திப்பு ஆர்கனைஸ் பண்ணியிருக்கோம். இன்னைக்கு சாயந்திரம் முத மொதலா.. ஒரு மீட்டிங் ஹால்ல.. அதுக்கான ஏற்பாடு பார்கத்தான் போறேன். சரி நான் கிளம்பட்டா?” படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்து  இரு.. ஒரு விஷயம் உன் கிட்ட பேசணும்.” என்றார்.

நான் கிளம்பும் அவசரத்தில் இருந்தேன். அதே சமயம் ஒரு போன் அழைப்பு வந்தது. “சொல்லுங்கண்ணே… சரி.. ஏர்போர்ட்ல இருக்கீங்களா? ஓகே அப்ப போயிட்டு கூப்பிடுங்க” என்று போனை வைத்துவிட்டு நிமிர்ந்து ”அப்துல்லா” என்றேன் அப்பாவிடம்.

“நானும் அதைத்தான் கேட்கணுமின்னு இருந்தேன். என்ன ஆச்சு உன் ப்ராஜெக்ட்? ஏதாவது ப்ரோடியூசர் மீட் கிடைச்சுதா..? அவரு ப்ரெண்ட் மூலமா ஒருத்தரை பேசிட்டிருந்தியே..? என்ன சொல்றாங்க?”

“பேசிட்டிருக்கேன்பா.. ஒரு மாசத்துல சொல்றேன்னு இருக்காங்க.. சரி.. நான் கிளம்பவா..?” நிமிர்ந்து என்னை பார்த்தவர்.. “ரொம்ப டயமாயிருச்சோ..?” ஆழமாய் பார்த்தார். அவர் பார்வை அவ்வளவு சரியாக இல்லை. ஒரு மாதிரி கண்கள் டயலூட் ஆகியிருந்தது.

“என்ன காலையிலிருந்து படுத்திட்டேயிருக்கே. உடம்பு சரியில்லையா?”

“ஒரு மாதிரி அன் ஈஸியா இருக்குடா.. அவ்வளவுதான்..” என்றார். அதற்குள் எனக்கு மேலும் சில போன்கால்கள் வர, பேசிக் கொண்டேயிருந்தேன். அவர் என்னை ஒரு ஈஸி சேரில் அமர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தார். நான் அவரை அவ்வளவு தளர்வாய் பார்த்ததில்லை. போன் கட் செய்துவிட்டு அருகே போய் “என்னப்பா.. என்ன பண்றது? “

“டாக்டர் கிட்ட போயிடலாமா? ஒரு அரை மணி நேரம். சாரி.. “ என்றார். அவருக்கு ஏதாவது ரொம்ப பிரச்சனையென்றால் தான் டாக்டரிடம் போக வேண்டும் என்று சொல்வார். ஊசி போட பயம். “ஒண்ணும் பிரச்சனையில்லை.. எதுக்கு சாரியெல்லாம். நீ தேவையில்லாமல் என் ப்ராஜெக்ட் பத்தி, என்னை பத்தி கவலை பட்டுட்டுருக்கே.. எல்லாம் வர நேரத்தில வரும். கவலை படாதே. சாதாரணமா கவலை படற ஆளா நீ.? சரி இரு நான் போய் கார் எடுத்துட்டு வர்றேன்.” என்று கிளம்பினேன்.

சமீப நாட்களாகவே என்னை பற்றிய கவலை அவருக்கு அதிகமாகத்தான் இருந்தது. அவர் ஜெயிக்க நினைத்த சினிமாவில் நான் காலூன்றியதே தன்னுடய வெற்றியாய் கொண்டாடியவர். நடிக்க ஆரம்பித்த நாட்களில் டிவியில் ஒளிபரப்பானதும் உடன் பார்த்துவிட்டு,  வந்து ஒருசில நிமிடங்கள் தோன்றியதிலிருந்து ஆயிரம் ப்ளஸ் மைனஸ் சொல்லுவார்.  மெல்ல குறுகிய காலத்தில் பெரிய கேரக்டர்கள் நான் நடிக்க ஆரம்பித்தும் திருப்தியடைந்ததேயில்லை. என் கவனமெல்லாம் இயக்கத்தில் இருக்க, ஒரு கட்டத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டு டிஸ்கஷன்கள், கதை திரைக்கதை பற்றி பேசுவது என்றிருக்க, அவர் எழுதிய கதைகளையெல்லாம் தூசி தட்டி எனக்காக உட்கார்ந்து பேச ஆரம்பிப்பார். பழுப்படைந்த பல ஸ்கிரிப்டுகள், நாடகங்கள் எனக்காக திறக்கப்பட்டது. முதல் இரண்டு குறும்படங்கள் இயக்கியதை பார்த்து.. பெரியதாய் சந்தோஷப்படவில்லை.. நல்ல ஸ்கிரிப்ட் மட்டும் ஒருத்தனுக்கு போதாது. ஒரு டைரக்டரா.. நல்ல பர்பாமென்ஸ் வாங்கணும் அதுதான் ஒரு டைரக்டர் ஸ்கிரிப்டுக்கு செய்யிற தர்மம். குறும்படம் தயாரித்தவரே படம் தயாரிக்க அட்வான்ஸ் கொடுக்கும் போது

“டேய். படம் கிடைச்சிருச்சுன்னு தலையில தூக்கி வச்சிக்காதே.. சினிமா.. எதுவும் ஆகலாம்.. அதனால உன் வேலை மட்டும் பாரு. என் படம் ட்ராப் ஆன போது நான் கத்துகிட்டது”  என்று தன் அனுபவத்தை சொல்லும் போது எரிச்சலடைதாலும்.. அப்படம் ட்ராப்பாகி நிற்கும் போது அவர் வார்த்தையை தலையில் ஏறறியதனால் டென்ஷனில்லாமல் இருந்தது.

சினிமா மட்டுமல்ல.. எனககு பல விஷயங்களில் அவர் நண்பர். “அதோ போறா பாருங்க.. அந்த பிங்க் சூடிதார் அவ தான் உன் மருமகள். ஓகேவா..” எதுவும் சொல்லாமல் சிரிப்பார்.

”நான் பிசினெஸ் ஆரம்பிச்சபோது அய்யாயிரம் ரூபா மட்டும் தானே தந்தே..? ஒவ்வொரு விட்டிலேயும் எவ்வளவு சப்போர்ட் செய்யுறாங்க தெரியுமா? நானே அம்பதாயிரம் ஏற்பாடு செஞ்சிட்டேன்.” என்றேன் திமிருடன். அதற்கும் பதில் சொல்லாமல் சிரித்தார். அப்போது புரியவில்லை. பின்பொரு நாளில் அர்ஜெண்டாக பணம் தேவைப்பட்டபோது.. என்னால் உடனடியாய் பணம் ஏற்பாடு செய்ய முடிந்த போது.. சொன்னார்..” இதோ.. இதுக்காகத்தான் அன்னைக்கு நான் உனக்கு காசு ஹெல்ப் பண்ணல.. நீயா கடன் வாங்கி அதை அடைச்சி, மேலும் கடன் வாங்கி இவ்வளவு தூரம் பிஸினெஸ் இம்ப்ரூவ் பண்ணியிருக்கேயில்ல.. அதான் நீ போன் பண்ணா காசு தர ரெடியாயிருக்கான். உனக்கொன்னுன்னா நான் விட்ருவேனா.? நீ வளரணும்.. அதும் தயவில்லாம்..” என்றதும் புரிந்தது. பின்பு வேறொரு கடுமையான பணப் பிரச்சனையின் போது என் நெருங்கிய உறவே பத்து பைசா வட்டிக்கு வேணுமின்னா கடன் வாங்கி தரவா? என்றதை கேட்டு உடைந்த  போது அவர் முனைப்பில் ஒரு துளி உதவி பெருங்கடல்.

கேபிள் டிவி தொழிலில் ஒரு அரசியல்/ரவுடி ப்ரச்சனை.. கல்யாணமான புதிது.. போனால் உயிர் என்ற நிலைமையில் எல்லாருக்கும் முன்னே நின்று சென்னையில் இருந்த ஒரு முக்கிய புள்ளியை எதிர்த்து கேஸ் கொடுக்க என்னை தயார்படுத்தி எதிர்த்து  நிற்க வைத்தவர். பின்பு அதனால் அவன் தோற்று பாதிப்படைந்ததும், வெளியே அதை பற்றி பேசி புளகாங்கிதம் அடையாமல் அமைதியாய் இருக்கச் சொல்லிக் கொடுத்தவர்.

ஜெயா டிவியில் பேட்டி கொடுத்துவிட்டு போனை ஆன் செய்தபோது அப்பா மெஸெஜ் அனுப்பியிருந்தார். கால்மீ என்று.. கூப்பிட போவதற்குள் அவரே கூப்பிட்டார். “எக்ஸலெண்ட்.. சூப்ப்ர்டா.. என்ன கான்பிடெண்ட்.. என்ன க்ளாரிட்டி.. ஐம் ப்ரவுட் ஆப் யூ” என்ற போது அவர் குரல் கம்மியதாக தெரிந்தது. சிறிது மூச்செடுத்து “வீட்டுக்கு கொஞ்சம் வந்திட்டு போறியா.. இல்லை வேலையிருக்கா?” என்ற்வர் குரலிலிருந்த செய்தியை புரிந்து கொண்டு வர்றேன் என்றேன். என்னை குழந்தையாக இருந்த போது என்னை அவர் முத்தமிட்டிருக்கலாம் ஆனால் வளர்ந்து எனக்கே இரண்டு குழந்தைகள் இருக்கும் நேரத்தில் என் கை பிடித்தபடியே என் நெற்றியில் முத்தமிட்டார்.. ரொம்பவும் எக்சைட் ஆகியிருந்தார்.  உறவினர்கள் பலர் தொடர்ந்து போன் செய்திருந்து கொண்டேயிருந்தார்கள். “உன் ஆசையை உன் பிள்ளை நிறைவேத்துறான்” என்று எல்லோரும் பேசினார்கள். அன்று அவர் மிகவும் சந்தோஷமாய் இருந்தார்.

ஏன் என்றே தெரியவில்லை காரை என் பக்கத்து ஷெட்டிலிருந்து எடுத்து வருவதற்குள் இவ்வளவு விஷயஙகள் ஓடியதென்று.. காரை கிளப்பி கீழிருந்து ஆரன் எழுப்பிய போது பால்கனியிலிருந்து என் மனைவி உடனே மேல வாங்க என்றாள். என்னவென்று யோசிக்காமல் பரப்ரவென மாடியேறி சோபாவில் தலை குனிந்து உட்கார்ந்திருந்த அப்பாவை பார்த்து “வாங்க போகலாம்” என்று அருகில் வர, என் மனைவி என் கை பிடித்தாள். நிமிர்ந்து பார்த்தேன் அவள் கண்களில் செய்தியிருந்தது. பாத்ரூமிலிருந்து அம்மா வெளியே வந்து என்ன டாக்டர்கிட்ட போலாமா? என்ற்வள் எனனை பார்த்து அதிர்ந்து என்னடா..? என்று அருகே வர, அப்பா.. என்று அழ ஆரம்பித்தேன்.

“பேண்ட் போட்டுண்டு வந்து உட்கார்ந்தார். வாங்க கீழ போகலாம்னு கூப்பிட்டேன் இரும்மா கொஞ்சம் உக்காந்துக்குறேனு சொன்னவர் சட்டுன்னு ஒரு மாதிரி பாத்துட்டு இடது தோள்பட்ட இழுத்துட்டு, இழுத்து மூச்சிழுத்து, சட்டுனு ரிலாக்சானார் அவ்வளவுதான்.” என்று நடந்ததை பதட்டத்தோடு விளக்கிய மனைவியை பார்த்தேன். அப்பாவை பார்த்தேன்.

“அப்பா.. அடுத்தது என்ன செய்யணும்?” தன் கனவையெல்லாம் நினைவாக்குவான் என்ற நம்பிக்கையை என் மேல் ஏற்றி வைத்துவிட்ட சந்தோஷத்தோடு நொடியில் விட்டு பிரிந்து போனவரை பார்த்து கேட்டேன். பதிலில்லை.

”அப்பா.. பெரியாளாயிட்டே.. டிவியில.. பேப்பர்ல எல்லாம் பேட்டிக் கொடுக்கிற.. கதை புக்கு எழுதற.. என் ப்ரெண்ட் உன் இண்டர்வியூ பார்த்துட்டு உங்கப்பா பெரிய ஆளாடா?னு கேட்டான். ஆமாடா… சொல்லிட்டு வந்திட்டேன். அடுத்தது உன் படம் ரிலீஸ்தான் அப்புறம் உன்னை பிடிக்கவே முடியாது” என்ற என் பையனை பார்த்தேன். கண்ணெல்லாம் சந்தோஷத்துடன் என்னை கட்டி அணைத்து என் கன்னத்தில்  அழுத்தமாய் முத்தமிட்டான். அப்பா……..


அப்பாக்கள் தினமாம் இன்னைக்கு. ”தொட்டால் தொடரும்” படத்துக்கு அட்வான்ஸ் வாங்கின நாள்லேர்ந்து இன்னைய வரைக்கும் நீ என் கூட இல்லேன்னே தோணலை. பக்கத்துல உக்காந்திட்டு ஒழுங்கா வேலை செய்யிறேனான்னு பார்த்துட்டு இருக்கிற மாதிரித்தான் தெரியுது என் மனசுக்கு. 

”அப்பா நாளைக்கு என் படத்தோட ஆடியோ டீசர் ரிலீஸ்.. உனக்கு தெரியும்னு நினைக்கிறேன். பார்த்துட்டு சொல்லு.”

கேபிள் சங்கர்

Jun 9, 2014

கொத்து பரோட்டா - 09/06/14- Filimistaan- உன் சமையல் அறையில் - ஈடிவி- தமிழ் சினிமா நிலவரம்.

மேற் காணும் வீடியோவில் நம் சமுதாயத்தில் உள்ளவர்களில் எத்தனை பேர் மற்றவர்களின் ப்ரச்சனைகளுக்கு செவி சாய்க்கிறார்கள் என்பதை ஒர் காண்டிட் நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்த நினைத்து எடுத்த வீடியோ. நிஜமாகவே பெரும்பாலானவர்கள் நமக்கெதுக்கு வம்பு என்கிற நினைப்புடன் தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாமே நமக்கு நடக்கும் வரை செய்தியாகவே இருக்கும். அட்லீஸ்ட் இந்த வீடியோ பார்த்தாவது இனிவரும் காலங்களில் நாம் ஹீரோயிசமாய் செயல்படாவிட்டாலும் அட்லீஸ்ட் போலீஸுக்காகவாவது தெரிவிப்பது நல்ல குடிமகனுக்கு அழகு
@@@@@@@@@@@@@@@@@@@@@

Jun 2, 2014

கொத்து பரோட்டா -02/06/14 -ப்ளாஷ்பேக்- திருமணம் எனும் நிக்காஹ்- கேட்டால் கிடைக்கும்- தொட்டால் தொடரும் - CityLIghts

செல்ஃபி போட்டோக்கள்
இது ஒரு விதமான மனவியாதி என்று ஆராய்சிகள் சொன்னாலும், மோடியிலிருந்து தெருக்கோடி ஆள் வரை இந்த செல்பி போட்டோக்கள் பரவித்தான் இருக்கிறது. சமீபத்தில் ஒர் இணைய தளத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாய் செக்ஸுக்கு பிறகு அவர்களாகவே எடுத்த செல்ஃபி புகைப்படங்களை like.com டாப் 10 ஆக தொகுத்திருக்கிறது. செம சுவாரஸ்யம்.. அதிலும் சில முகங்களில் தெரியும் எக்ஸ்ப்ரெஷன்களை வர்ணிக்க முடியாது. வாவ்.. இங்கே க்ளிக் செய்யவும்
@@@@@@@@@@@@@@@@@@@@@

May 31, 2014

சாப்பாட்டுக்கடை - சீனா பாய் இட்லிக்கடை

இட்லி சாப்பிடறதுக்காக சவுக்கார்பேட்டை போகலாமா? என்று கேட்ட போது தமன் ஆச்சர்யமாய் பார்த்தார். எனக்கு அவரின் பார்வை போலவே நிறைய நண்பர்களின் ஆச்சர்ய பார்வையை சந்தித்திருப்பதால் சாதாரணமாய் எடுத்துக் கொண்டு ‘வாங்க.. ஒரு வாட்டி வந்து சாப்பிட்டு பார்த்துட்டீங்கண்ணா ஏன் இவ்வளவு தூரம் வந்தோம்னு கேட்க மாட்டீங்க” என்றேன். என்னைப் போலவே கொஞ்சம் அட்வென்சரஸ் ஆனவர் என்பதால் விட்டோம் போர்ட் பிகோவை சவுக்கார்பேட்டை என்.எஸ்.சி போஸ் ரோட்டுக்கு.

May 26, 2014

கொத்து பரோட்டா -26/05/14 - திரை விமர்சனம், தொட்டால் தொடரும், நடுநிசிக்கதைகள்,

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
தொட்டால் தொடரும் ஆரம்பித்த சமயம். இயக்குனர் பார்த்திபன் அவர்களை சந்திக்க நண்பர் குலசேகரன் கூப்பிட்டிருந்தார். பார்த்த மாத்திரத்தில் மிகவும் பழகியவர் போல பேசினார். நிறைய சினிமா பற்றி பேசினோம். சமீபத்திய படங்கள், அவரின் மலையாள ப்ராஜெக்ட், அவர் எடுக்க போகும் படம் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். போகும் போது அவரின் எண்ணைக் கொடுத்து எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க என்று நம்பர் சொன்னார். நான் என்னுடயதை கொடுத்த போது “அட ஏற்கனவே உங்க நம்பர் என்கிட்ட இருக்கே.. சங்கர் நாராயணன்னு வச்சிருக்கேன். எதுக்கோ உங்களை முன்னாடியே மீட் பண்ணனும்னு நினைச்சிருக்கேன் என்றார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவரை என் பட பாடல் டீசருக்காகத்தான் அழைத்தேன். படப்பிடிப்பில் இருந்தார். அதனால் ஒரு தேதி சொல்லி, அவரது உதவியாளர் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, அவரது வேலைகளுக்கு நடுவே எங்கள் டீசர் படப்பிடிப்புக்கும் ஒத்துழைத்தார். ஆனால் அதற்காக அவர் எடுத்த மெனக்கெடல்கள் அபாரம். பெரிதும் நெருக்கமில்லாத எனக்கே இவ்வளவு மெனக்கெடல்கள் என்றால் அவரின் படத்திற்கு எவ்வளவு இருக்கும்?. காலை 9 மணிக்கு ஆரம்பித்த அவரது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தின் ஆடியோ வெளியீடு மதியம் 12 மணிக்குத்தான் முடிந்தது. ஒவ்வொரு நிகழ்விலும் அவரது பங்களிப்பு இல்லாமல் ஏதுவும் நடக்கவில்லை. சுவாரஸ்யமாய் நடந்தது விழா. நான்கு இசையமைப்பாளர்கள், ஒரு பாடலும், ட்ரெயிலரும் வெளியிட்டார்கள். நச்.இவரின் இவ்வளவு மெனக்கெடல்களும் இவருக்கு  மாலையாய் விழ என் நெஞ்சார்ந்த வேண்டுதல்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@

May 19, 2014

கொத்து பரோட்டா -19/05/14 - மினி

கேட்டால் கிடைக்கும்
பீனிக்ஸ் மாலில் பைக் பார்க்கிங் செய்பவர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் வாங்கி கொள்ளையடிக்கிறார்கள் என்று சொல்லி, அதை குறித்து எழுதி வந்தேன். இப்போது அதற்கு அந்த மாலில் தியேட்டர் நடத்தும் சத்யம் சினிமாஸ்காரர்கள்  டிஸ்கவுண்ட் கொடுக்க வழி செய்துள்ளனர். இது குறித்து லூக்ஸ் புக்கிங் கவுண்டரில் விசாரிக்கும் படி ட்விட்டரில் சொல்லியிருக்கிறார்கள். நன்றி சத்யம் சினிமாஸ். கேட்டால் கிடைக்கும் என்பது நிருபணமாகிக் கொண்டிருக்கிறது. கேளுங்க.. கேளுங்க. கேட்டுக்கிட்டே இருங்க உங்க உரிமைகளை..
Visitors of Luxe can avail discount on two wheeler parking! Approach the counter at the Luxe lobby for more details!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@