Posts

Showing posts with the label கோவை..

சாப்பாட்டுக்கடை - கிருஷ்ணா டிபன் சென்டர் கோவை.

ஒரு முறை திருப்பூருக்கு சென்று வர வேண்டிய வேலை வந்தது. வழக்கம் போல பரிசலை சந்தித்துவிட்டு, அடுத்த நாள் மதியம் கோவைக்கு வ்ந்து விட்டேன். நைட் டிரெயின் என்பதால். சஞ்செய்காந்திக்கு போன் செய்ததும், பத்தாவது நிமிஷத்தில் பஸ்ஸ்டாண்டுக்கு வ்ந்துவிட்டார். செல்வேந்திரன் அவரது அலுவலகத்துக்கு வ்ந்திருப்பதாகவும், வரும் போது சாப்பிட வாங்கி வர சொல்ல, போகிற வழியில் ஆளுக்கு நாலு, பருப்பு வடை, பழ பஜ்ஜி, உருளை போண்டாவும், தேங்காய் பாலும் வாங்கி கொடுத்தார். தேங்காய் பால் சூப்பர். மனுஷன் நல்லா தேடிப் பிடிச்சு வாங்கி கொடுக்கிறார்பா..

கோவை பதிவர் சந்திப்பு

Image
திடீர்னு ஒரு டூர் ப்ரோக்ராம் போடலாமுன்னு தோணிச்சு. எங்க போகலாம்னு யோசிக்க ஆரம்பிச்ச போது, மூணாறு, டாப்ஸ்லிப்ன்னு ஒரே குழப்படியா இருந்துச்சு. சரி எதுக்கும் கோவைக்கு டிக்கெட் புக் பண்ணுவோம். அங்கேர்ந்து எங்க வேணும்னாலும் போய்கலாம்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன். சம்மர் ஸ்பெஷ்லா ஒரு ரயிலை விட்டிருந்தார்கள். காலை ஒன்பது மணிக்கு கிளம்பி நாலு மணிக்கு கோவையிலிருக்கும்னு சொன்னாங்க. அந்த பாடாவதி ட்ரையின் அரை கிலோமீட்டர் தூரத்தில ஒரு காக்கா கிராஸ் பண்ணாகூட வெயிட்டிங்கில போட்டு சுமார் ஏழு மணிக்கு கொண்டு போய் சேர்த்தான். சாயங்காலம் சீக்கிரம் போனவுடன் வெளியே சில பேரை சந்திக்கலாம்னு வச்சிருந்த ப்ரோக்ராம் கட்.   கோவைக்கு போய் ரூமை போட்டதும் பரிசலுக்கு ஒரு போனை போட்டேன். கோவை பதிவர்கள் யாரையாச்சும் சந்திக்கணுமேன்னே..? கவலையே படாதீங்க ஒவ்வொருத்தரா உங்களுக்கு கால் பண்ண வைக்கிறேன்னு சொல்லிட்டு தான் ஞாயித்து கிழமை திருப்பூரிலிருந்து வந்து சந்திப்பதாய் சொன்னார். நான் கொஞ்சம் ரிப்ரஷாகி வெளியே போய் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவதற்குள் ஒரு கால் வந்தது. “ஹலோ.. கேபிள்சங்கரா.. நான் வடகரை வேலன் பேசறே...