சூடான இடுகை - லக்கிலுக்கின் தொடர்ச்சி....
அந்த சகோதர கடை ஓனர்கள், நடத்திய விஷயங்கள் ஒன்றும் புதுசில்லை. ஏனென்றால் இதுக்கு முன்னாலே இவர்கள் கடை நடைத்திய போது அவர்களின் பல ஏரியாக்களில் கடை ஆரம்பிக்கும் போது அதை இப்போது எதிர் கடையில் நிர்வாகம் பார்த்து கொண்டிருக்கும், அவரை வைத்துதான் சகோதரர்கள் ஆரம்பிப்பார்கள். அவரும் அங்கு திறமையாய் கடை நடத்தி அந்த கடையை நெ.1 என்று கொண்டு வந்தவுடன் அவரை மீண்டும் வேறு ஊரில் கடை நடத்த அனுப்பி வைப்பார்கள். பின்பு அவர்களுக்கு என்ன பிரச்சனையோ.. அவரிடம் எந்த காரணத்தை கொண்டும் திரும்பவும் அவர்களின் கடை நடத்தும் தொழிலுக்கு வரக் கூடாது என்று மிரட்டி எழுதி வாங்கி கொண்டு அவரை விரட்டி விட்டதாகவும் ஒரு விஷயம் உண்டு. இதற்கு அப்போது அந்த குடும்பத்தின் பெரியவரின் ஆசியுடன் தான் நடத்த பட்டது. அதை வைத்துதான் பெரியவர் தனியாய் கடை ஆரம்பித்ததும், சரியாய் அந்த நிர்வாகியை கூட்டி கொண்டு வந்தது, சகோதர கடைகாரர்களூக்கு பீதீயை கிளப்பிவிட்டது. நிர்வாகிக்கும் சரியான ஆதரவு பெரியவர் தந்ததால் ஒரே வருடத்தில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் புதுக் கடையை கொண்டுவந்துவிட்டார். புதுசாய் எல்லா பெரிய கம்பெனி சரக்கும் பெரியவர் நடத்தும் கடைக்...