Posts

Showing posts with the label ilayaraja

ராஜா என்கிற ரசிகன்

Image
இளையராஜா வழக்கமாய் இப்படி பேசிப் பார்த்திருக்க மாட்டீர்கள். அதுவும் சமீப காலமாய் அவர் குமுதத்தில் எழுதும் கேள்வி பதில்களில் இருக்கும் கோபமும், எரிச்சலுமான பதில்களை படிப்பவர்கள் என்ன தான் ரசிகராய் இருந்தாலும் கொஞ்சம் நெளியத்தான் செய்வார்கள். ஆனால் அப்பேர்ப்பட்ட ராஜாவின் அகம் இல்லாத ஒர் பேச்சு. அழகு   கேபிள் சங்கர்

நீ தானே என் பொன்வசந்தம்.

Image
  விண்ணைத்தாண்டி வருவாயாவிற்கு பிறகு கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அதற்கு முக்கிய காரணம், இளையராஜாவின் இசை. பாடல்கள் வெளியாகி கிட்டத்தட்ட ரெண்டு மாதங்களுக்கு மேல் இருந்தாலும் இன்றும் இசை ரசிகர்களிடையே இப்பட பாடல்களைப் பற்றி சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கொத்து பரோட்டா - 17/09/12

Image
டீசல், பெட்ரோல், கேஸ் விலையேற்றம், கேஸ் கட்டுப்பாடு போன்றவைகளுக்கான காரணங்களை இன்றைய தினசரிகளில் இந்திய பெட்ரோலியத்துறை வரிசைப் படுத்தியிருக்கிறது.  அவர்கள் பக்க நியாயத்தை சொல்லிவிட்டு, இதற்கு மாற்றாக விலையேற்றத்தைப் பற்றி விமர்சிக்காமல், மாற்று ஐடியாக்களை கொடுத்தால் வரவேற்கிறார்களாம். நிச்சயம் இது ஒரு சவால்தான். அவர்களுடய சவாலை ஏற்று ஏன் நாம் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கக்கூடாது?. காந்திய மக்கள் இயக்கம் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல போராட்டங்களை செய்துவருகிறது. அவர்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அரசுக்கு மதுக்கடைகளால் கிடைக்கும் வருமானத்தை மதுக்கடையில்லாமல் வருமானத்தை எப்படி கொண்டு வர முடியும் என்று மாற்று ஐடியாக்களை கொடுத்திருந்தார்கள். அதைப் போல மக்களிடமே அரசு கேட்டிருக்கிறது. நாம் கொடுக்க முயற்சிக்கலாமே? @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

செங்காத்து பூமியிலே..

Image
மண்ணுக்குள் வைரம், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, தமிழ்செல்வன் முலமாய் கதை வசனகர்தாவாக அறியப்பட்ட  ரத்னகுமாரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். நடுவில் எஸ்.ஜே.சூர்யா, மீரா ஜாஸ்மீன் போன்ற பல ஹீரோயின்களை வைத்து தாணுவிற்கு ஒரு படம் இயக்கியதாய் ஞாபகம். இளையராஜா இந்தப்படத்தை பார்த்துவிட்டு பெரிதாய் பாராட்டியதாகவும், அவரே வெளியிட முயற்சி செய்ததாகவும் சொல்லப்பட்ட படம். அதுவே ஒரு டெரரை கொடுத்தது. ஏனென்றால் ராஜா சிலாகித்து பாராட்டினால் அப்படங்கள் பெரிதாய் வெளங்கியதில்லை என்பது ட்ராக் ரெக்கார்ட்.

Sri Ramarajyam

Image
இளையராஜாவின் இசையில் பாடல்கள் வெளிவந்தவுடன் ஹாட்கேக் போல விற்று தீர்த்து ஆந்திர பட உலகத்தினரையே ஆச்சர்யப்பட வைத்த படம். நம் தமிழ் பட உலகம் போல் இல்லாமல் காமெடிப்படம், ஆக்‌ஷன் படம், காதல் கதை, என்று வகை தொகையில்லாமல் எல்லா படங்களுமே ஓடும் மார்கெட் உண்டு. அதிலும் பிரபல ஹீரோக்கள் புராண படங்களில் நடிப்பதும், அது மாபெரும் ஹிட்டாவதும் வழக்கமான ஒன்று. சில சமயம் பெரிய ஹீரோக்களின் மார்கெட்டையே மீண்டும் நிலை நிறுத்திய படங்கள் எல்லாம் இம்மாதிரியான புராண படங்கள் தாம் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். அவ்வரிசையில் அடித்து துவைத்து காயப்போடப்பட்டிருக்கும் பாலகிருஷ்ணாவின் மார்கெட்டை இந்த புராணப் படம் நிலை நிறுத்துமா? பிரபல பழம் பெரும் இயக்குனர் பாப்பு இயக்கி வெளிவந்துள்ள இப்படம் ரசிகரக்ளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இசையெனும் “ராஜ” வெள்ளம்.-7

Image
ராஜா ஒரு பாஸ்டென்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம்.. இல்லை என்றும் தான் ஒரு பியூச்சர் டென்ஸ் என்று பதிலளித்திருக்கும் படம் தான் நந்தலாலா. படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இளையராஜாவின் பின்னணியிசைதான் என்பதை உலகில் உள்ள அத்துனை ரசிகர்களும் ஆமோதித்துக் கொண்டிருப்பதே அதற்கு சாட்சி.. இசையருவி நிகழ்ச்சியில் ராஜாவுடனான பேட்டியையும் நந்தலாலா படத்தின் பின்னணியிசை கோர்வையை உங்களுக்கு அளிப்பதில் சந்தோஷப்படுகிறேன். இப்போது கேட்டாலும் தாலாட்டு பாட நானும் பாடலை கேட்டால் குபுக்கென கண்ணீர் வழிந்தோடுகிறது. பின்னணியிசை மொத்தமும் தரவிறக்கம் செய்ய.. http://www.backgroundscore.com/2010/11/nandhalala-score.html கேபிள் சங்கர்

இசையெனும் “ராஜ’ வெள்ளம் - 6

இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படித்தான் கமல். இளையராஜாவின் பரம விசிறி. முக்கியமாய் கமல் படத்தில் வரும் ராஜாவின் பாடல்களுக்கு ஒருவிதமான முக்கியத்துவம் இருக்கவே செய்யும். கமலின் ஆரம்பகால படங்களிலிருந்து, ஹேராம் வரை இருவருக்குமான பிணைப்பு அவர்கள் இணைந்து உருவாக்கும் படைப்பில் தெரியும் அதில் முக்கியமானது கமலின் ராஜ பார்வை. கண் தெரியாத ஒரு இசைக் கலைஞனின் காதலை சொல்லும் படம். முழுக்க, முழுக்க இசையோடு பயணித்த படம். வழக்கமாகவே ராஜாவின் இசை கோர்வையில் வயலினும், புளூட்டும் பின்னி பெடலெடுக்கும். வயலின் கலைஞர் பற்றிய படம் பின்பு கேட்கவா வேண்டும். இப்படத்தில் முக்கியமாய் ஒரு ஆரம்பக் காட்சியில் பார்வையற்றோர் பள்ளியில் கமல் வயலின் வாசிப்பதை போல ஒரு காட்சி ஆரம்பிப்பதாய் ஞாபகம். அதில் ஒரு பெரிய பி.ஜிஎம். ஸ்கோர் செய்திருப்பார் இளையராஜா. அதே ஸ்கோரை படத்தின் பின்னணியிசையிலும் பயன்படுத்தியிருப்பார். படத்தில் வரும் முக்கிய பாடலையே பின்னணியிசை கோர்வையாய் பயன்படுத்துவதை தமிழில் அறிமுகப்படுத்தியவர் ராஜா தான் என்று ஞாபகம். ராஜபார்வையில் பாடல்களிலாகட்டும், பின்னணியிசையிலாகட்டும...

இசையெனும் “ராஜ” வெள்ளம்-2

Image
இளையராஜாவின் பிண்ணனி இசை பற்றிய ஒரு கட்டுரையை ஆரம்பித்ததும், அவரது இசையை போலவே வழக்கம் போலவே மிக அருமையாய் களை கட்டிவிட்டது பின்னூட்டங்கள். மேலும் தொடரச் சொல்லி உற்சாக ஊக்குவிப்பு. வேறு.. அந்த உற்சாகத்தில் மேலும் தொடர்கின்றேன். சென்ற கட்டுரையில் இளையராஜாவின் பிண்ணனி இசையில் பாரதிராஜா- ராஜாவின் கூட்டணியில் வெளிவந்த சில படஙக்ளை பற்றி சொன்னேன். இந்த முறை மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் வெளிவ்ந்த படங்களை பார்ப்போம். பல்லவி- அனுபல்லவி மணிரத்னத்தின் முதல் படம், கன்னட படம், லஷ்மி, அனில் கபூர், நடித்து வெளிவந்த படம். இந்த படத்தில் டைட்டில் கார்டுக்கு ஒரு பிண்ணனி இசை ராஜா போட்டிருப்பார் வய்லினை அடிப்டையாய் வைத்து, புல்லாங்குழல், கிடார் என்று எல்லாம் சங்கமிக்க  ஒரு மினி  இசை ராஜாஙகமே அமைத்திருப்பார். அந்த இசையை இன்று வரை மறுபடி, மறுபடி உபயோகபடுத்தி வருகிறார்கள்.  சிவா மனசுல சக்கி திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் யுவன் அதை உபயோகபடுத்தியிருப்பார். ஐடியா செல்லூலரின் விளம்பர பிண்ணனி இசைக்கு அதை உபயோகபடுத்தியிருப்பார்கள்.  அதே இசையை ராஜாவே “மெல்ல.. மெல்ல என...

இசையெனும் ”ராஜ” வெள்ளம்

Image
நேற்று ஒரு படம் பார்த்து கொண்டிருந்தேன். மிக முக்கியமான கட்டம் க்ளைமாக்ஸ், பிண்ணனி இசையினாலேயே நம்மை அள்ளி இழுத்து கொள்ள வேண்டிய இடம்,  அங்கே தன் ஆளுமையை காட்டவில்லை அந்த படத்தின்  இசையமைப்பாளர், அதே போல் காமராஜர் படத்தின் டபுள் பாஸிடிவ் பார்க்க சென்றிருந்தேன். அப்போது படத்தில் இயக்குனர் சில புட்டேஜுகளை விட்டிருந்தார்.  அவர் ஏன் விட்டிருந்தார் என்று எனக்கு புரிந்தது. அது பிண்ணனி இசை கோர்வைக்காக விடப்பட்டிருந்தது. இசை கோர்ப்பு முடிந்ததும் அது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும் ஏனென்றால் அந்த படத்தின் இசையமைப்பாளர் “இசைஞானி’ இளையராஜா. எத்தனையோ இசையமைப்பாள்ர்கள் கோலோச்சியுள்ள தமிழ் சினிமாவில், ஆர்.ஆர்னா அது ராஜா தான் என்று இன்றளவும் பேசப்படும் ஒரு மாபெரும் கலைஞன் இளையராஜா மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவரது பிண்ணனி இசை படத்தில் இயக்குனர் சொல்லாமல் விட்ட விஷயங்களை கூட சொல்லிவிடும், இவரது பிண்ணனி இசையால் சாதாரணமான க்ளைமாக்ஸ் காட்சிகள், படம் பார்க்கும் பார்வையாளனின் உணர்வுகளை தூண்டப்பட்டு மிக சிறந்த க்ளைமாக்ஸாக மாறிய படங்கள் எத்தனையோ. இன்றளவில் என்னுடய...