Posts

Showing posts with the label மருத்துவமனை.

தாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகளும்.

ஆமாம் இளம் தாய்மார்களை நாயாய் அலைய வைக்கிறது மாநகராட்சி மருத்துவமனைகள். அதற்கு  கொஞ்சமும் குறையாமல் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும். மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கபட்டு பிறக்கும் ஒவ்வொரு தாய்மாருக்கும் ரூ.12 ஆயிரம் அரசு உதவிப் பணமாய் தருகிறது. இது இந்த ஆட்சியில் உயர்த்தப்பட்ட தொகையாகும். ஆனால் இத்தொகையை வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப் பிடி என்று கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களை அலைய வைக்கிறார்கள்.