தேநீர் விடுதி
பூ, களவாணி போன்ற படங்களின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனின் இயக்குனர் அவதாரப் படம். முன் சொன்ன படங்களின் பாட்டைப் போல இப்படமும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பார்க்கப் போய் அது பலித்ததா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு இளைஞர்கள். அண்ணன் தம்பி. பந்தல் போடும் காண்ட்ரேக்ட் வேலை செய்கிறார்கள். பகலில் கூட குடிக்கிறார்கள். இரவிலும் குடிக்கிறார்கள். அவர்களின் அம்மா அதைவிட, தன் மூத்த பிள்ளைக்கு தன் அண்ணன் பெண் தர மாட்டேன் என்று சொன்னதால் செத்து போய்விட்டதாக நடிப்பவள். இப்படிப்பட்ட குடும்பத்தில் உள்ள ஒருவனை சப்ரிஜிஸ்ட்ராராக உள்ள நாச்சியப்பன் என்பவரின் செல்ல மகள். நீ வயசுக்கு வந்த பொண்ணு போல இல்லையே.. அதுக்கான அம்சம் இல்லையென்று சொன்னதால் ஹீரோவை காதலிக்க ஆரம்பிக்கிறார். அவர்கள் காதல் ஜெயித்ததா? இல்லையா? என்பதை நம் பொறுமையை சோதித்து நோகடித்து சொல்லியிருக்கிறார்கள்.