Posts

Showing posts with the label ஜெயலலிதா

ஜெ.ஜெயலலிதாவாகிய நான்.

ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்து அரசியலில் ஒர் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது.  திமுக தன் சரிசமமான எதிரியை இழந்திருக்கிறது. அரசு அதிகாரிகள் ஒர் பெரோஷியஸ் முதல்வரை இழந்திருக்கிறார்கள். மக்கள் தங்கள் தைரியத்தை இழந்திருக்கிறார்கள். பத்திரிக்கை மீடியா ஒர் வகையில் சுதந்திரம் அடைந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் சசிகலா குடும்பத்தை எந்தவிதத்திலும் விமர்சிக்காத பத்திரிக்கைகள் எல்லாம் ஜெ இறந்த  அடுத்த நாள் சசிகலா அண்ட் கோவை மன்னார்குடி மாஃபியா என்று எழுதுகிறார்கள் என்றால் வேறென்ன சொல்ல?. சிறுவயதிலேயே சினிமாவில் அடியெடித்து அதில் குறுகிய காலத்தில் புகழ் பெற்று தன்னுடய முப்பதுகளிலேயே அதிலிருந்து விலகி, அரசியலில் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவரின் அரசியல் வளர்ச்சி, அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. விடாக்கண்டன்களையும், உட்கட்சி கொடாக்கண்டன்களையும் சமாளித்து “யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாத தைரியசாலி” என்ற பிம்பத்தை, ஏற்படுத்தி, தன் கட்சியினரை மட்டுமில்லாமல் மக்களையும் நம்ப வைத்தவர். சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம், அதனால் அடைந்த வீழ்ச்சி, வளர்ப்பு மகன், திருமணம், வீழ்...

பத்து மணி நேர பவர் கட்

கேட்டால் கிடைக்கும் பதிவுகளுக்கு கிடைத்த வரவேற்பும், மற்ற சமூக பொறுப்போடு (என்று நினைத்து ) எழுதப்பட்ட பதிவுகளுக்கு கிடைத்த நல்ல மாற்றங்களையும் பார்த்துவிட்டு, நிறைய நண்பர்கள் அவர்களது ஏரியா ப்ரச்சனைகளை என் பதிவுகளில் எழுதச் சொல்லி போட்டோ முதற்கொண்டு எடுத்து மெயில் அனுப்புகிறார்கள். இன்னும் சிலர் கேட்டால் கிடைக்கும் என்கிற விஷயத்தில் நம்பிக்கை வைத்து அவர்கள் கேட்டு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.