Posts

Showing posts with the label அனுபவம்.

கும்பகோணம் டூ சென்னை

நேற்று மதியம் கும்பகோணம் டூ சென்னை மதிய பஸ். ரதி மீனாவின் ஸ்லீப்பர் கம் சீட் பஸ். 600 சொச்சம் டிக்கெட். மனசுக்கு கஷ்டமாய் தான் இருந்தது. பஸ்ஸுக்காக காத்திருந்த நேரத்தில் ஒரே கூட்டமாய் கல்லூரி பெண்கள் வர, அனைவரும் அதே பஸ்ஸுக்கு என்று தெரிந்த போது 600 சொச்சம் கஷ்டமாய் இல்லை. வண்டி ஏறி லோயர் பர்த்தில் செட்டிலாவதற்குள் “ஏய்.. நீ இங்க வாடி. நான் அங்க போறேன். அய்யோ.. ஆ.. எப்படி ஏறுறது? ம்ம்.. தனியா வா சொல்லித் தரேன்” என்று கூச்சலும் குழப்பமுமாய் களேபரமாய் இருந்தது. இன்னொரு மஞ்சள் சூடிதார் அணிந்திருந்த மித வயது பெண் இவர்களின் அத்தனை களேபரக் கூச்சல்களையும் பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தபடி இருந்தாள். பக்கத்து சீட்டில் ஒருவர் வண்டியேறி அடுத்த செகண்ட் தன் ஸ்லீப்பரில் ஏறி படுத்த மாத்திரத்தில் லேசான குரட்டை விட ஆரம்பித்தார். இந்த பெண்கள் கும்பலில் தன் தாயோடு வந்திருந்த பெண் மட்டும் மிக அடக்க ஒடுக்கமாய் அம்மா பக்கத்தில் உட்கார்ந்தபடி, திரும்பித் திரும்பி தோழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்லீக்காய் ஜீனும், கருப்பு டீ சர்டும் போட்ட இளம் பெண் மூக்கருகில் கர்சீப்பை வைத்தபடி இரு...

போலீஸ் ஸ்டோரி

65 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு  என் கோடிக்கணக்கான நன்றிகள் - கேபிள் சங்கர் பெரும்பாலும் நடு இரவில் வீடு திரும்புவது என் வழக்கம். பல சமயங்களில் நண்பர்களின் சந்திப்பே ஒன்பது மணிக்கு மேல் தான் ஆரம்பிக்கும். அதோடு ராத்திரியில் ஊர் சுற்றும் போது பல சுவாரஸ்ய விஷயங்கள் நடக்கும். அம்மாதிரியான சுவாரஸ்யங்களில் போலீஸ் செக்கிங்கும் ஒன்று. சமயங்களில் இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டுவிட்டு வரும் போது பெரும்பாலான நேரங்களில் பல நண்பர்களுக்கு எந்தெந்த இடங்களில் எல்லாம் போலீஸ் செக்கிங் இருக்குமென்று சரியாக லொக்கேட் செய்து கொடுப்பேன். போலீஸ் செக்கிங்கில் மாட்டுவது என்பது சாதாரண ஒன்று தான் என்றாலும் சரக்கடித்துவிட்டோ, அல்லது வண்டி பேப்பர் இல்லாமலோ நடு இரவில் நம்மை நிற்க வைத்து சத்தாய்ப்பது கடுப்படிக்கும். பன்னிரண்டு மணி வரை பாரை திறந்து வைக்க அனுமதித்து விட்டு, அந்த பாரின் மூக்குக்கடியில் செக்கிங் செய்வது என்பது அராஜகம். இவங்க கட்டிங் வாங்கிட்டு கடையும் நடத்த வுட்டுட்டு நம்ம கிட்டேயும் புடுங்குறாங்க என்று புலம்புகிறவர்க...

அடுக்குகளிலிருந்து - செத்துப் பிழைச்சவண்டா

சீரியல்களில் சாவுக் காட்சிகளில் நடிப்பது என்பது ஒவ்வொரு நடிகனுக்கும் மிக மோசமான ஒரு அனுபவம் ஆகும். செத்துப் போவது போல நடிப்பதால் அல்ல. அதன் பிறகு அந்த சீரியலில் போட்டோவாக மட்டுமே நாம் பயன்படப் போகிறோம் என்பதை நினைக்கும் போதும், தினமும் விழும் சம்பள மீட்டர் வராது என்பதாலும் தான். ஆனால் சில சமயங்களில் டி.ஆர்.பி விழும் நேரத்தில் செத்துப் போனவர்களையெல்லாம் உயிர்ப்பித்து ப்ளாஷ்பேக்கில் எல்லாம் கதை போகக்கூடும், சீரியல் தயாரிப்பாளரும், திரைக்கதையாசிரியர் தயவினால். நான் இங்கே சொல்லப் போவது அவர்களைப் பற்றியல்ல. ஒரு சாவுக் காட்சியில் நடித்ததைப் பற்றி.