Posts

Showing posts with the label தமிழ் இந்து

கோணங்கள் -19 -

Image
குறும்படக் கொத்து! இது சுப்புராஜின் கெத்து! செங்கல்பட்டில் சினிமா எடுக்க ஆசைப்படும் ராஜ்கிரண்கள் ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் ஊருக்கு ஊர் குறும்படங்கள் மூலமாய் சினிமாவின் கதவை நெட்டித் திறக்கலாம் என்கிற நம்பிக்கையில் வேலையை விட்டு, குறும்படம் எடுத்துத்தள்ளும் கூட்டம் பெருகிவிட்டது. முன்பு கவிதைத் தொகுப்புகளை வெளியிடுவதைப் போல, தற்போது குறும்பட வெளியீடு நடந்து கொண்டிருக்கிறது. ஊரும் உறவும் நண்பர்களும் கூடி, குறும்பட வெளியீட்டுவிழாவுக்குப் பெருந்தொகை செலவழித்தபின், அதை யூடியூபில் போட்டு நண்பர்கள் வட்டம் மூலமாய் பகிர்ந்து ஒரு பத்தாயிரம் ஹிட்ஸ் தேத்திவிட்டால், அடுத்தக் குறும்பட முயற்சிக்கு போக வேண்டியதுதான். இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது குறும்பட உலகம். ஆனால் செலவழித்த தொகையையாவது திரும்ப எடுக்க முயற்சிக்க வேண்டும் என்று யாரும் நினைப்பதே இல்லை. இவர்களது அடுத்த இலக்கு சினிமாவாக இருப்பதும் ஒரு பிரச்சினைதான். உலகமெங்கும் குறும்படம் மற்றும் ஆவணப் படங்களுக்கான சந்தை என்பது தனியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. குறும்படங்கள் மூலமாய் வருமானம் ஈட்டுவதும் புகழ் பெறுவது...

கோணங்கள் -31

Image
கோணங்கள் 31: வீச்சை உணரவைத்த நீச்சல்! சினிமா மீதான எனது ஈர்ப்பு பால்யத்திலேயே தொடங்கிவிட்டது. அதற்குக் காரணமானவர் என் அப்பா பாலசுப்ரமணியன். அவர் நாடக ஆசிரியர், இயக்குநர், நடிகர், நாடக சபா நடத்தியவர். அன்றைய முன்னணி நடிகர் மோகனை வைத்து ஒரு திரைப்படத்தைத் தயாரித்து இயக்க ஆரம்பித்தார். ஆனால் அதைத் தொடர முடியாமல் தன் அரசுப் பணிக்குத் திரும்பினார். அவரின் தோல்வி காரணமாக எங்கள் குடும்பத்திலிருந்து யாரும் சினிமா பக்கம் ஒதுங்க மாட்டார்கள் என்றே எண்ணியிருந்தார்கள். ஆனால் சினிமா என்பது விடாது கறுப்பு. ஒரு முறை தெரிந்தோ, தெரியாமலோ காலை வைத்தால் அது உங்களை இழுத்து ஒரு ஆட்டு ஆட்டாமல் விடாது. சிறு வயது முதலே சினிமாவைப் பற்றி அப்பாவுடன் விவாதித்தே வளர்ந்தவன் நான். அவர் விதைத்த விதை என்னுள் மரமாய் வளர்ந்திருந்தது.

கோணங்கள் -30

Image
90 லட்சம் ஹிட்ஸுகளை  அளித்து, தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் வாசகர்கள், நண்பர்களுக்கு என் நன்றிகள்- கேபிள் சங்கர் கோணங்கள் 30: பாம்பே வெல்வெட் ஏன் சறுக்கியது? இந்தித் திரையுலகத்தை யோசிக்க வைத்திருக்கிறது, கடந்த வாரம் வெளியான அனுராக் காஷ்யப்பின் ‘பாம்பே வெல்வெட்’ படத்தின் வணிகத் தோல்வி. பாக்ஸ் ஸ்டார், ரன்பீர், அனுஷ்கா ஷர்மா, திரிவேதியின் இசை, கரண் ஜோஹரின் நடிப்பு அறிமுகம் போன்ற அதிகபட்ச சுவாரஸ்யங்கள் இதில் இருந்தன. அனுராக்கின் முதல் கமர்ஷியல் படமான இதன் பட்ஜெட் சுமார் எண்பது கோடி என்கிறது பாலிவுட் வட்டாரம், அதுவும் திரையிடம் மற்றும் விளம்பரச் செலவு ஆகியவை தவிர்த்த தொகையே இது என்கிறது.

கோணங்கள் -28

Image
கோணங்கள் 28: வலையில் சிக்கவைத்த விலை பாரம்பரியத் திரையிடலுக்கு மாற்றாக வந்தது டிஜிட்டல் தொழில்நுட்பம். அதன் தரம், அதைப் பயன்படுத்தும் தன்மை ஆகியவற்றோடு பொருளாதாரச் செலவு மிகக் குறைவு என்று திரையரங்கை நடத்துகிறவர்களுக்குத் தெரியவந்தது. மெல்ல டிஜிட்டல் திரையிடல் பிரபலமானது. இண்டு விதமான ஒளிபரப்பும் கருவிகளைத் தவணை முறையில் தர, பிலிம் சுருள்களில் எடுக்கப்படும் படங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றி ஒளிபரப்பத் தொடங்கினார்கள்.

கோணங்கள் -27

Image
கோணங்கள் - 27: ஏகபோகம் ராஜயோகம் வெளியீட்டு தேதி முடிவாகிவிட்டால் பட வேலைகள் ஜெட் வேகத்தில் பறக்கும். பின்னணி இசை அமைக்கப்பட்டதும் பிறகு தணிக்கைச் சான்றுக்கு அனுப்பப்படும். அது கிடைத்தவுடன் பிரிண்ட்களுக்கான வேலைகள் ஆரம்பிக்கும். ஆளவந்தான் வெளியான சமயத்தில் அதுவரை இல்லாத வகையில் மொத்தம் 250 பிரிண்ட்கள் போடப்பட்டன. சென்னை, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் இயங்கிவந்த முன்னணி லேப்களிலும் பிரிண்ட்கள் இரவுபகலாகத் தயாராயின.

கோணங்கள் -25

Image
கோணங்கள் 25: பொறியில் சிக்கிய தயாரிப்பாளர்கள்! செயற்கைக்கோள் அலைவரிசைகளும் உள்ளூர் தொலைக் காட்சிகளும் எப்படி சினிமாவைப் பயன்படுத்திக்கொள்கின்றன என்று சென்ற வாரம் எழுதியதற்கு குட்டி சேனல்களிலிருந்து வந்த பல தொலைபேசி அழைப்புகள் என் தலையில் குட்டின!

கோணங்கள் -24

Image
கோணங்கள் 24- ஒரு ஏக்கமான கேள்வி! தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு போராட்டம் நடத்தினார்கள். அது கேபிள் டிவிக்கு எதிரான போராட்டம். கேபிள் டிவியைத் தடைசெய்ய வேண்டுமென்று கேட்டார்கள். அப்போது கமல்ஹாசன் “இது அறிவியல் வளர்ச்சி. அதை நமக்கான வியாபாரமாய் மாற்றிக்கொள்ளப் பழக வேண்டும்” என்று சொன்னார். உடனே ஊர்வலத்தில் “கருங்காலி” எனத் திட்டி பேனர் வைத்துக்கொண்டு நடந்தார்கள். ஆனால் நிஜம் என்னவாயிற்று!?

கோணங்கள்-23

Image
கோணங்கள் 23- இலவசமாகிவரும் சினிமா! “வாரத்துக்கு இத்தனை படம் வந்தா எப்படிப் பாப்பாங்க மக்கள்?” “அப்படியே நல்லாயிருக்குன்னு கேள்விப்பட்டுப் படம் பார்க்கலாம்னா… தியேட்டர்ல இருக்க மாட்டேங்குது”

கோணங்கள் -22

Image
கோணங்கள் 22- மதுபானக் கடை Vs காக்டெயில் மாடர்ன் தியேட்டர்ஸ் என்றாலே சேலம் ஞாபகத்துக்கு வரும். நான்கைந்து வருடங்களுக்கு முன் நியூ மாடர்ன் தியேட்டர்ஸ் என்கிற பெயரில் சேலத்தில் ஒரு புதிய பட நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்கள். அவர்களது படத்தின் இசை வெளியீட்டுக்கு என்னைச் சிறப்பு விருந்தினராய் அழைத் திருந்தார்கள். சந்தோஷமும் ஆர்வமும் மேலிட அவ்விழாவிற்குச் சென்றேன். சேலத்தின் புறநகர் பகுதியில் அவர்களது நிறுவனத்தை அமைத்திருந்தார்கள்.

கோணங்கள் -21

Image
கோணங்கள் 21 - கோடம்பாக்கத்துக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாதா? சார்.. நான் ஈரோட்லேர்ந்து பேசுறேன். நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கடுமையா உழைச்சு ஒரு நல்ல கதை தயார் செஞ்சோம். படத்தைத் தயாரிக்கிறேன்னு விருப்பமா ஒருத்தர் வந்தாரு. ஷூட்டிங் போலாங்கிறப்போ எஸ்ஸாயிட்டாரு. எங்க கதைய அநாதையா விட மனசில்ல. அதைப் படமாக்க ஒரு தயாரிப்பாளர் தேவை உதவ முடியுமா?” என்று கேட்டுத் தொலைபேசினார்கள்.

கோணங்கள் -17

Image
கோணங்கள் 17 - தினசரி கல்யாண விருந்து! சினிமா என்றதும் நடிகர்கள், வசூல், வெற்றி ஆகியவற்றைவிட, சுவாரசியமான விஷயம் சாப்பாடு. மென்பொருள் நிறுவனங்களில் நவீன கேண்டீன்களில் அது கிடைக்கும் என்றாலும், அதற்குரிய பணத்தை அவர்களின் சம்பளத்தில் பிடித்துக் கொண்டுதான் கொடுப்பார்கள். உலகிலேயே சாப்பாடும் போட்டு, சம்பளமும் கொடுக்கிற ஒரே இடம் சினிமாவாக மட்டுமே இருக்கும். பத்திரிகைகளில் ஆகட்டும், ஊடகமாகட்டும், எம்.ஜி.ஆர். தன்னுடன் நடிக்கும், வேலை பார்க்கும் அனைவருக்கும் தனக்குக் கிடைக்கும் சாப்பாடே கிடைக்க வேண்டும் என்று சொல்வாராம். அஜித் படப்பிடிப்பின்போது பிரியாணி செய்து போடுவார் என்பது சினிமா பக்கத்துக்கு எப்போதும் சூடான செய்தி.

கோணங்கள் -14

Image
எங்கே இருக்கிறது அந்த இணையதளம்? - கோணங்கள் 14 எப்போது தொழில்நுட்பம் வளர ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்தே பைரஸியும் ஆரம்பமாகி விட்டது. திரையரங்கு மூலம் கிடைக்கும் வருமானத்தைத் தாண்டி, சிறிய முதலீட்டில் படமெடுத்து, உலகப் பட விழாக்களில் திரையிட்டுக் கோடிகளில் வருமானம் சம்பாதிக்கும் இயக்குநர்கள் எப்படிப்பட்ட படத்தை இம்மாதிரியான விழாக்களில் பங்கெடுக்க வைக்கிறார்கள்?

கோணங்கள் -13 -எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற்சி?

Image
கோணங்கள்-13: எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற்சி? திரையரங்க வசூல் மட்டுமே சினிமாவில் போட்ட முதலை எடுப்பதற்கான வழி என்றிருந்த காலம் கடந்து போய்விட்டது. மொழிமாற்று உரிமை, மறுஆக்க உரிமை, ஆடியோ உரிமை என ஆரம்பித்து, வானொலியில் பாடல்களை ஒலிபரப்ப, ஒலிச்சித்திரம் ஒலிபரப்ப என்று வழிகள் கிளைத்தன. தூர்தர்ஷனில் பாடல்களையும், படத்தையும் போட வரிசையில் நின்று விற்றுக் காசாக்கும் காலம் வந்ததது.

கோணங்கள் -11

Image
கிரவுட் ஃபண்டிங் குட்டிக்கரணம்! காவிரி நீர் பிரச்சினையை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை இயக்க முன்வந்தார் சேரனின் உதவியாளரான சரச் சூர்யா. ‘பச்சை மனிதன்’என்று தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற படக் குழு விரும்பியது.ஆகவே படத்தின் நுழைவுச்சீட்டையும் திரைக்கதைப் புத்தகங்களையும் பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோரிடம் விற்றுத் திரட்டப்படும் பணத்தில் படத்தைத் தயாரிக்கப் போகிறோம் என அறிவித்தது படக்குழு. ஆனால் 13 லட்சத்துக்குமேல் பணம் வசூலாகவில்லை. இதனால் இரண்டு கட்டப் படப்பிடிப்பு நடத்தப்பட்டதோடு அந்தப் படத் திட்டம் கைவிடப்பட்டது.

கோணங்கள் -10

Image
கோணங்கள் 10 - முகமறியா முதலீடு... தேவை உஷார்! தமிழ் சினிமா உலகில் தற்போது அதிகம் அடிபடும் இரண்டு வார்த்தைகள் ‘கிரவுட் ஃபன்டிங்’. சினிமா என்பதே ரசிகர்கள் கூட்டமாகத் திரையரங்கிற்கு வந்து கொட்டிக் கொடுக்கும் விஷயம்தானே, இதில் என்ன ஸ்பெஷல் எனக் கேட்கும் வெள்ளந்திகளை விட்டு விடுங்கள். இது பற்றி அக்கறையுடன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான கட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம்.

கோணங்கள் -9

Image
கோணங்கள் - 9: கற்பனையை எதில் கலக்கலாம்? திட்டமிட்ட பட்ஜெட்டைவிடத் தாறுமாறான செலவு எப்படி அதிகரித்தது என்று தயாரிப்பாளருக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு இயக்குநருக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது. இங்கே ஒரு இயக்குநர் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்துவிட்டால் அது தயாரிப்பாளருக்குப் பெரிய வரம். படத்தின் பட்ஜெட்டில், அது எடுத்து முடிக்கப்பட்ட பிறகு அதை மக்களிடம் கொண்டுசெல்லும் விளம்பர பட்ஜெட்டும் கண்டிப்பாகச் சேர்க்கப்பட வேண்டும். மொத்த பட்ஜெட்டுக்குமான முழுமையான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொண்ட பின்னரே, படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டும். ஆனால் திரைக்கதையில் கலக்கும் கற்பனையை ஒரு இயக்குநர் பட்ஜெட்டில் கலக்கும்போதுதான் தயாரிப்பாளர் நடுத்தெருவில் நிற்க வேண்டிவருகிறது.

கோணங்கள் - 8

Image
கோணங்கள் - 8: ஆஹா + ஓஹோ = ஸ்வாகா! அனுபவங்கள் மட்டுமே கசப்பான பாடங்களைக் கற்றுத் தருகின்றன. ஏற்கனவே அனுபவப்பட்டவர்கள் கண் முன்னால் இருக்கும்போது அவர்களது முன்மாதிரிகளை ஏற்றுக்கொள்ளத் திரையுலகில் தடையாக இருப்பது எனக்கு எல்லாம் தெரியும் என்ற ஈகோ. ஃபைனான்சியர்கள் எல்லோரும் தயாரிப்பாளர்கள் அல்ல என்று சொன்னதால் பலரின் கவனத்தையும் பெற்றேன். படம் தயாரித்துத் தோற்ற ஒரு ஃபைனான்சியர், “நான் தோற்றதற்கான காரணம் இப்போது புரிஞ்சிருச்சு, அதனால்தான் பைனான்ஸ் மட்டும் பண்றேன்” என்றார். சினிமாவுக்கு ஃபைனான்ஸ் பண்ணியவர்களின் நிலையே இப்படியென்றால் இன்று புதிது புதிதாய் வரும் சாப்ட்வேர், மற்றும் ரியல் எஸ்டேட் பின்னணி கொண்ட தயாரிப்பாளர்களின் கதை?