Thottal Thodarum

Dec 12, 2019

Gantumoote - காதலெனும் சுமை.


எத்தனை சினிமா பார்த்துவிட்டு அசைப்போட்டுக் கொண்டே இருந்திருக்கிறோம்?. என்று யோசித்தோமானால் கொண்ட்டாட்ட சினிமாக்கள் மிக சிலதைத் தவிர மனதுக்கு நெருக்கமான கதைகளை கொண்ட படங்களையே. எல்லா படங்களும் எல்லாருக்கும் பிடித்துவிடுவதில்லை. ஆனால் காதல் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் காதல் கதைகள் பெரும்பாலும் ஆண்களின் பார்வையிலேயே சொல்லப்பட்டு பழக்கமாகி விட்டதினால்  ஈஸ்ட்ரோஜோன் குறைவாய் போன பெண் போல ஆகிவிடும். எமோஷனல் வேல்யூ குறைந்து போய். 

இந்த கண்டுமூட்டே ஒன்றும் இது வரை யாரும் சொல்லாத காதல் கதையில்லை. ஆனால் பெரும்பாலும் சொல்லப்படாத பெண்ணின் பாயிண்ட்டாப் வியூவில் சொல்லப்பட்டிருக்கும் கதை. அத்தனை க்யூட். மீரா தேஷ்பாண்டே எனும் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் பெண்ணுக்கும் அவளின் க்ளாஸில் படிக்கும் மதுசூதனுக்கும் இடையே வரும் முதல் காதலைப் பற்றியதுதான். 

சில பள்ளி ஜோடிகளைப் பார்கையில் இந்த பொண்ணு எல்லாம் எப்படி இவனோட சுத்துது என்ற கேள்வி தோன்றாமல் இருக்காது. நாம் அந்த வயதில் சுற்றும் போது அப்படித்தான் அந்நாளைய பெருசுகள் நினைத்திருக்கும். ஹம் ஆப் கே ஹே கோன் இந்தி படத்தை பார்த்தது முதல் சல்மான் கானின் ரசிகையாய் போன மீரா, அவனை போலவே ஹேர்ஸ்டைல் வைத்திருக்கும் மதுவின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த ஈர்ப்பு காதலாய் மாறுகிறது. அந்த ட்ராஸ்பர்மேஷனை ஆணாய் எப்படி உணர்வீர்கள் என்று புரியாமல் இத்தனை நாள் இருந்திருக்கலாம். இப்படத்தில் மீராவின் ட்ரான்ஸ்பர்மேஷன் அத்தனை விஷயங்களை மிக அழகாய் சொல்லியிருக்கிறது. மேபி.. இது மீரா போன்ற பெண்ணுக்கு மட்டுமே சாத்தியமானது என்று பெண்கள் நாங்க வேற என்று நினைத்தால் இட்ஸ் ஓக்கே. 

முதல் ஸ்மூச், முதல் அணைப்பு, அது தரும் எக்ஸைட்மெண்ட். என விரிவாய் மிக மெதுவாய், கன்வர்ட் ஆகும் கணங்கள் அட்டகாசம். அதிலும் அந்த முதல் முத்தம். அந்த முத்தம் கொடுத்த சந்தோசத்தை ஆணின் எமோஷனில்லாத வெற்றி பீற்றலால் மீரா “தேவடியாவாக” விளிக்கப்பட்டு அவமானபடுவதை விட, எனக்கும் உனக்கும் மட்டுமேயானா இந்த இண்டிமேட்டான தருணத்தை எப்படி நீ இப்படி பீற்றிக் கொள்வாய் என்று கோபப்படும் இடம் அதுவும் வாய்ஸ் ஓவராய் வரும் போது.. வாய்ஸ் ஓவர் எத்தனை அழகானது என்று புரியும் படம் நெடுக, ஆங்காங்கே வாய்ஸ் ஓவர் மிக அழகாய் நம்மை அடுத்த கட்டத்திற்கு கடத்துகிறது.  

பள்ளிக் காதல், இடை வரும் காதலர்கள், அவமானம், ஸ்கூல் டூர். மனதுக்கு பிடித்த ஆணின் முதல் அரை நிர்வாணம் எத்தனை எக்ஸைட்மெண்டைத் தரும்? திருட்டுத்தனம். இவர்களின் காதலை கண்டு பிடித்த ஆசிரியனின் கேரக்டர். அவரின் அட்வைஸ் எல்லாம் க்ளாஸ்.

முதல் ப்ரேமிலிருந்து இரண்டே பேர் படத்தை தங்கள் தோள்களில் ஏற்றி சுமந்து கொண்டு திரிகிறார்கள். சுமையாய் இல்லாமல் மிக சந்தோஷமாய். அது மீரா தேஷ்பாண்டேவாய் நடித்த தேஜு பெலவாடியும், இயக்குனர் ரூபா ராவும்.

குட்டிக் குட்டி ரியாக்‌ஷன்கள். எத்தனை வெட்கம். அந்த உதட்டை அழுந்த வைத்துக் கொள்வதில் மூலமே பல ரியாக்‌ஷன்களை காட்டியிருக்கிறார். குறிப்பாய் க்ளைமேக்ஸில் அவரது நடிப்பு க்ளாஸ். 

இயக்குனர் ரூபா ராவ். இவரது முந்தைய முயற்சி வெப் சிரீஸான The Other love story. யூட்யூபில் இருக்கிறது தேடிப் பாருங்கள்.அதைப் பற்றிக் கூட நான் கொத்து பரோட்டாவிலும், குமுததிலும் எழுதியிருக்கிறேன். இக்கதை போலவே 90களில் இரண்டு இளம்பெண்களின் லெஸ்பியன் காதலைப் பற்றிய மிக நுணுக்கமாய் அவர்களின் உறவை வெளிப்படுத்தியிருப்பார். அதே போல இக்கதையில் டீன் ஏஜ் பெண்ணின் அத்தனை உணர்வுகளையும் மிக அழகாய், நுணுக்கமாய் மீண்டும் வெளிபடுத்தியிருக்கிறார். குறிப்பாய் மன உணர்வுகளை காட்சிகளாய் வெளிப்படுத்தும் விஷயம். போன் பேசும் காட்சிகள் எல்லாம் கவிதை. அந்த முதல் முத்தத்தின் முதலெடுப்பு, குறுகுறுப்பு, காத்திருத்தல்... வாவ்.. வாவ்.. அட்டகாசம். நான் இங்கே எது சொன்னாலும் கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்வது போல தோன்றும். பட்.. படம் பார்த்த பின் உங்களுக்கும் அந்த உணர்வை தவறாமல் கொடுக்கும். நிச்சயம் கமர்ஷியல் கொண்டாட்டங்கள் விரும்புகிறவர்களுக்கு இல்லை.

படத்தின் தலைப்புக்கு அர்த்தம் சுமை. முதல் காதல் தரும் அனுபவங்கள் எல்லாமே சுமை தான். அது எப்படி இருந்தாலும். அந்த சுமையை அழகான தனிமையான இடத்தில் அசை போடுவதுதான் எத்தனை வலியும், இம்சையும் கொடுக்கும்?. வாழ்த்துக்கள் ரூபா ராவ். 


Dec 7, 2019

சாப்பாட்டுக்கடை - ஹோட்டல் திருச்செந்தூர் மணி அய்யர்

 ரொம்ப வருடங்களுக்கு முன் திருச்செந்தூரில் மணி அய்யர் கடையில் டிபன் சாப்பிட்டிருக்கிறேன். மணி அய்யர் ஓட்டலை நினைத்தவுடன் சட்டென நாக்கில் சாம்பார் நியாபகம் வந்துவிடும் எனக்கு. சென்னையில் பத்து நாட்களுக்கு முன் ஆரம்பித்திருக்கிறார்கள். அசோக்நகரில்.  ஆர்வமாய் போன வாரம் போன போது க்ளோஸ் ஆயிருச்சு என்றார்கள். நேற்றைக்கு நண்பருடன் போனேன். 10.30 மணிக்கு நல்ல கூட்டம். சாம்பாரின் வாசம் மூக்கை துளைத்தது.  நானும் நண்பரும் போய் உட்கார்ந்தோம். எதில ஸ்டார்ட் பண்ணலாம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் “பொங்கல் இருக்கா? “ என்றேன். “இல்லீங்க ஒன்பது மணிக்கெல்லாம் முடிஞ்சிரும்” என்றார்கள். ”சரி ஆளுக்கு ரெண்டு இட்லி கொடுங்க” என்று ஆர்டரை ஆரம்பித்தோம்.

இட்லி ரொம்பவும் மிருதுவாக இல்லாமல் இருந்தது கொஞ்சம் குறைதான். பட் சூடான சாம்பார். மூன்று சட்டினிகள், கூடவே பூண்டு போட்ட, மிளகாய்பொடி. அதற்கு தனியாய் பணம் எல்லாம் இல்லை. எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு போட்டுக் கொள்ளலாம். சாம்பாரையும், பூண்டு மிளகாய் பொடியும் ஆசம்.

அடுத்ததாய் நல்ல மொறு மொறு ரவா தோசை. நிஜமாகவே ராவா தோசை என்று சொன்னால் மிகச் சிறிய வயதில் திருவல்லிக்கேணி முரளிகபே தான் நியாபகத்துக்கு வரும். அதன் பிறகு நல்ல முறுகலாய் சாப்பிட்ட நினைவு இல்லை. நேற்றைக்கு அது தீர்ந்தது.  அதற்கும் அதே சாம்பார், மூன்று சட்டினிகள் அத்துடன் மொளகாய்பொடி. ஆகாகா

பக்கத்து டேபிளின் மேல் ஒருவர் சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருக்க, குருமாவை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போனது. சந்தேகத்துக்கு ஆளுக்கு ஒரு பரோட்டா சாப்பிடுவோமா? என்றேன். நண்பரும் சளைக்காமல் ம்ம் என்றார். பரோட்டாவும் குருமாவும் வந்தது. “வாவ்..நிஜமாகவே டிவைன். நன்கு அரைத்துவிடப்பட்ட, முந்திரியெல்லாம் போட்ட குருமா. இதை எழுதும் வரை என் நாக்கில் அந்த சுவை இன்னமும் இருக்கிறது. வேற என்ன நடக்கும். இன்னொரு பரோட்டவையும் ஆர்டர் செய்து சாப்பிட்டு கிளம்பினோம்.

கிளம்பும் போது ஓனர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். திருச்செந்தூர் பெரியப்பாவின் நேரிடை கடை தானாம். பழனியில் ஒரு ப்ராஞ்ச ஆரம்பித்து சிறப்பாக நடை பெறுகிறது என்றார். மதிய லஞ்சுக்கு அவர்கள் வைத்திருக்கும் லிஸ்ட் பார்த்த போதே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. முக்கியமாய் வாரத்தில் ஒரு நாள் திருநெல்வேலி சொதி, அரைத்துவிட்ட சாம்பார். என பெரிய லிஸ்ட் ஒரு வாரம் போய் சாப்பிடணும். நிச்சயம் நல்ல வெஜ் பிரியர்களுக்கு நியாயமான விலையில் திருச்செந்தூர் மணி அய்யர் ஓட்டல். இரண்டு பேருக்கும் சேர்த்து பில் சுமார் 360 ரூபாய்.

Hotel Thiruchendur Mani Iyer
31/69, 7th Ave,
Sarvamangala Colony, 
Indira Colony,
 Ashok Nagar,
 Chennai,
 Tamil Nadu 600083