Thottal Thodarum

Nov 30, 2010

கனிமொழி

kanimozhi-movie-still-tamildigitalcinema-1-200x300 படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்தவர்கள் எல்லாரும் ஆளாளுக்கு பயமுறுத்தி விட்டிருந்தார்கள். படு மொக்கை, உட்கார முடியவில்லை என்றெல்லாம். அவனா நீ படத்தையே பார்த்த வீரனாகிய எனக்கு இதெல்லாம் சும்மா.. என்று தைரியமாய் படம் பார்க்க போய்விட்டேன்.
kanimozhi-movie-still-tamildigitalcinema-16-300x199  சில பேர் நல்ல நாட் வைத்திருப்பார்கள் ஆனால் அதை சரியாய் சொல்ல முடியாமல் சொதப்பியிருப்பார்கள். சில பேருக்கு மொக்கையான ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாய் சொல்ல தெரிந்திருப்பார்கள். இப்படத்தின் இயக்குனர் முதல் வகையில் மாட்டிக் கொண்டார்.  இரண்டு இளைஞர்கள் ஒருவன் ஜெய், இன்னொருவர் வசந்த. ஜெய் ஒரு இண்ட்ரோவர்ட், வசந்த ஒரு எக்ஸ்ட்ரோவர்ட், ஜெய் தன்னுள் எழும்பிய காதலை அந்த பெண்ணிடம் சொல்ல தயங்கி அவனுள்ளே ஒரு கற்பனை கதையை வடித்துக் கொண்டிருப்பவன். அடுத்த நிலைக்கு கொண்டு போக முடியாமல், இழுத்தடித்துக் கொண்டிருப்பவன். அதே நேரத்தில் வசந்த எல்லா விஷயங்களிலும் தடாலடி. வீட்டிலாகட்டும், காதலாகட்டும் தாட் பூட் தஞ்சாவூர்தான்.  கல்யாணம் வரைக்கும் வந்து வாழ்க்கையில் வெற்றி பெருகிறான். இரண்டு காண்ட்ராஸ்டான கேரக்டர்கள். மிக அருமையாய் செய்திருக்க வேண்டிய படம்.. சவ சவ ஜெய் கேரக்டர் போல படமும் சவசவத்து போய்விடுவதுதான் கொடுமை.
kanimozhi-movie-still-tamildigitalcinema-300x200 ஒரு சூப்பர் பிகரோடு ஒரு சுமார் பையன்.. ஏன் மொக்கை பையன் ஜோடி போட்டுக் கொண்டு போகும்போது நமக்கு தோன்றும் எப்படி இவனையெல்லாம் லவ் பண்றாளோன்னு..? இம்மாதிரி பெருமூச்சுவிட்டுக் கொண்டு அலையும் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் தான் அதிகம். அப்படிப்பட்ட கேரக்டர் தான் ஜெய்யின் கேரக்டர். இடைவேளை வரை கொஞ்சம் கூட சுவாரஸ்யமில்லாமல் இயல்பான காட்சிகள் என்று பீல் செய்து இவர்கள் வைத்திருக்கும் காட்சிகள் படு ஸ்லோ அண்ட் சொதப்பல். இவ்வளவு இளைஞர்கள் இருக்கிறார்களே கொஞ்சமாவது இளமை துள்ளல் இல்லாமலா போகும்?. அவ்வளவு டிரை.. அதை விட கதாநாயகி விளம்பரத்தில் வருவது போல ஆங்காங்கே.. நடந்து கொண்டேயிருக்கிறார். மற்றபடி ஒன்றும் பெரிதாய் இல்லை. இமமாதிரியான கதைகளுக்கு அட்லீஸ்ட் ஹீரோயின் கேரக்டரையாவது சரியாக செய்திருக்க வேண்டும். அதிலும் மிஸ்ஸிங்.
kanimozhi-movie-still-tamildigitalcinema-4-300x200 டெக்னிகலாக படம், ஒளிப்பதிவு, பின்னணியிசை என்று எல்லாமே ஓக்கேவாக இருந்தாலும் கண்டெண்டில் கோட்டை விட்டதால் சுவாரஸ்யமில்லாமல் தியேட்டரில் பல பேர்களை புலம்ப வைத்துவிட்டார்கள். Better Luck Next Time sripathi..
கனிமொழி- படத்திற்கும் டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்.
கேபிள் சங்கர்

Nov 29, 2010

கொத்து பரோட்டா-29/11/10

மீண்டும் 50,000 ஹிட்ஸுகளை வாரி வழங்கி பதினேழு லட்சம் ஹிட்ஸுகளை கொடுத்த சக பதிவர்கள், வாசக நண்பர்களுக்கு நன்றி..நன்றி.. நன்றி..கேபிள் சங்கர்
சமீபத்தில் ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் அடுத்த முதல்வர் யார் என்று ஒரு சர்வே எடுத்திருந்தார்கள். அதில் கட்சி ரீதியாக பார்க்கும் போது திமுக கூட்டணிக்கு முதல் ஆதரவு இருந்தது. ஆனால் முதலமைச்சராக ஜெயலலிதாவை விரும்பியிருக்கிறார்கள் என்று சர்வே சொல்வது எப்படி?. தமிழ் பத்திரிக்கை உலகில் தற்போது விகடன் குழுமம் அதிமுக பக்கமும், குமுதம் திமுக பக்கமுமாய் தான் பிராபகண்டா செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி சார்பில்லாமல் இருக்கும் பத்திரிக்கைகள் மிகவும் குறைவு. அப்பத்திரிக்கைகள் யாருக்கும் தெரிவதில்லை. எனக்கென்னவோ.. கலைஞரா. ஜெயலலிதாவா? என்று கேள்வி கேட்பதற்கு பதிலாய் ஸ்டாலினா? ஜெயலலிதாவா? என்று கேள்வி கேட்டுப் பாருங்கள் நிறைய வித்யாசங்களுடன் ரிசல்ட் வரும்.
###################################################################
நேற்று மாலை ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவருடய நண்பி அங்கே வர.. அவர் என்னை அறிமுகப்படுத்தினார். அவள் கண் விரிய எக்ஸைட் ஆகி ‘உய்ய்” என்றாள். கொஞ்ச நேரம் கழித்து அவளுடன் போட்டொவெல்லாம் எடுத்துக் கொண்டாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கணும் சங்கர்? என்றாள்.. என்ன என்பது போல பார்த்தேன். உங்க மீண்டும் ஒரு காதல் கதை ஷ்ரத்தா நிஜமா? என்று கண் விரிய கேட்டாள். இதே கேள்வியை அந்தக் கதையை படித்தவர்கள் எல்லாருமே என்னை சந்திக்கும் போது கேட்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் என் பதில் 50-50 என்பதுதான். ஆனால் இவளுக்கு  இதோ என்றேன்.. என் ஷ்ரத்தா.. அப்படியே.. அந்த சுருள் முடியும், காதில் பெரிய வளையத்தோடும்.. பரபரக்கும் கண்களுடன், ஷ்ரத்தா.. எதிரே என்னிடமே கேட்டுக் கொண்டிருக்கிறாள். படமா எடுக்கப் போறேன் நடிப்பாயா என்றேன்? பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தவள். “அதெல்லாம் வேணாம் சங்கர்.. சில சமயம் வாழ்கை கற்பனையில் போவது சிறந்த்து என்றாள். அடுத்த மாசம் அவளுக்கு கல்யாணமாம். ம்ஹும்.. ஷ்ரத்தா.. இதையும் நீ படிப்பாய் அல்லவா..?
################################################################### 
இந்த வார ப்ளாஷ்பேக்
இந்த பாடலை ஒரு முறை கேட்டவர்கள் முணுமுணுக்காத ஆளேயிருக்காது. இன்று இது ரீமிக்ஸ் ஆகி ஒரு சுற்று வரத்தான் செய்தது. அக்காலத்தில இந்திய செக்ஸ் சிம்பலான ஜீனத் அமன் நடித்திருக்கும் படம். கேளுங்கள் சூராலியா..
##################################################################
மைனா படம் சிறு முதலீட்டு படங்களுக்கு ஒரு புத்துணர்வை கொடுத்திருக்கிறதா? என்று சர்வே செய்ததற்கு 74 சதவிகித பேர் ஆம் என்றும், இல்லை என்று 9 சதவிகித பேரும், அப்படியும் இருக்கலாம் என்று உத்தேசமாய்  41 சதவிகித பேரும், அதெல்லாம் இல்லை என்று  34 சதவிகித பேர்களும் கருத்து சொல்லியிருக்காங்க.. மைனா கடந்த இருபது நாட்களில் கலெக்ட் செய்த்து சுமார் 15 கோடியிருக்கும் என்கிறார்கள். வாழ்க சினிமா..
##########################################################################
இந்த வார எஸ்.எம்.எஸ்
வழக்கமா விஜய் நடிச்ச படம் தான் ஒடாது. ஆனா விஜய் படத்தோட பேரு வச்ச நடிச்ச படம் கூட ஓட மாட்டேங்குது. அதான்ங்க.. குவாட்டர் கட்டிங் படத்தைத்தான் சொல்றோம்.
##################################################################
இந்த வார தத்துவம்
என்னாதான் கில்லாடியா இருந்தாலும்.. டாஸ்மாக் போனா தள்ளாடித்தான் ஆகணும்

லைப்புல மிஸ் பண்ணக்கூடாத மூணு கிப்ட்டு 1) காதல் (கடவுள் கொடுத்த பரிசு) 2) மனைவி (பரிசா வந்த கடவுள்.. சில பேருக்கு..) 3) மச்சினிச்சி (கடவுளுக்கே தெரியாம வந்த பரிசு) கண்ணா.. மூணு லட்டும் தின்ன ஆசையா.. ???
###################################################################
என்னை ஒருத்தர் புத்திசாலின்னு நினைச்சிட்டு ஒரு CAT எக்ஸாமுக்கு கேக்குற கேள்விய கேட்டுப்புட்டாரு.. நமக்கு தெரியல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க..
3+18=7
7+14=3
6+18=4
8+112=115
9+135=? இதுக்கு ஆன்சர் சொல்லுங்கப்பா..
###################################################################
நந்தலாலா படம் வெளியான நாளை விட சென்னை போன்ற மெயின் செண்டர்களில் நல்ல முன்னேற்றம் என்று தகவல். சுமார் 80 திரையரங்குகளில் தான் வெளியாகியிருக்கிறது என்று சொல்கிறார்கள். அதுவும் வெளியூர்களில் மிகவும் சுமாரான தியேட்டர்களில் வெளியிட்டிருப்பதாகவும். விளம்பரமே இல்லை என்றும் சொல்கிறார்கள். இதன் மூலம் தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தயவு செய்து சென்னையை தவிர மற்ற ஊர்களில் போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களை தொடர்ந்து செய்யுங்கள். நிச்சயம் படம் நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். இப்படம் நிறைய விவாதங்களை கிளப்பி விட்டிருக்கிறது.. இதோ அதற்கான லிங்க்.. http://pichaikaaran.blogspot.com/2010/11/blog-post_3648.html
#################################################################################
இந்த வார குறும்படம்
ரொம்ப வித்யாசமான படமெல்லாம் இல்லை. ஆனால் ஒரு சின்ன சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது இப்படத்தில்.. படத்தை பார்கும் போதுதான் தெரிந்தது அந்த கதாநாயகி எனக்கு தெரிந்த பெண்.
###################################################################
இந்த வார விளம்பரம்
###################################################################
அடல்ட் கார்னர்
1. Cover your stump before you hump
2. Before you attack her, wrap your whacker
3. Don't be silly, protect your willy
4. When in doubt, shroud your spout
5. Don't be a loner, cover your boner
6. You can't go wrong if you shield your dong
7. If you're not going to sack it, go home and whack it
8. If you think she's spunky, cover your monkey
9. If you slip between her thighs, be sure to condomize
10. It will be sweeter if you wrap your peter
11. She won't get sick if you wrap your dick
12. If you go into heat, package your meat
13. While you're undressing venus, dress up your penis
14. When you take off her pants and blouse, slip up your trouser mouse
15. Especially in December, gift wrap your member
16. Never, never deck her with an unwrapped pecker
17. Don't be a fool, vulcanize your tool
18. The right selection will protect your erection
19. Wrap it in foil before checking her oil
20. A crank with armor will never harm her
21. No glove, no love!
இதெல்லாம் எதற்கான  ஸ்லோகன்கள் என்று புரியுமென்று நினைக்கிறேன்...  இதெல்லாம் பழசுன்னு சொல்றவங்களுக்கு.. அடுத்த வாரம் ஏதாவது புதுசா தேடுறேன்.. பை..பை..
###################################################################
நந்தலாலா படத்தின் தயாரிப்பாளர் நேற்றைய டிவி பேட்டியின் போது சொன்னார். பெரிய படங்கள் எடுத்து மிகப்பெரிய அடியை சந்தித்ததாகவும். இம்மாதிரியான படங்கள் அவர்களுக்கும் சந்தோஷம் தந்திருப்பதாகவும் என்று. சேரன் அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் புதிய இயக்குனர்களுக்கு இம்மாதிரியான சின்ன பட்ஜெட் படங்களுக்கு அவர்கள் கம்பெனி ஆதரவளிக்க வேண்டும் என்று.. நிச்சயம் செய்வதாகவும் சொன்னார். மிக்க நன்றி சேரன் சார்.. அப்படியே நானும் ஒரு விண்ணப்பத்தை வச்சிக்கிறேன் அருண் பாண்டியன் சார்..  ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கொடுப்பீங்களா?
#########################################################################
கேபிள் சங்கர்

Nov 26, 2010

நந்தலாலா

Nandalala
சிறு வயதில் தன்னை விட்டு பிரிந்து போன தாயை ஒரு முறை பார்த்து, கட்டி அணைத்து முத்தமிடவேண்டுமென்று ஸ்கூல் எஸ்கர்ஷனை கட் செய்துவிட்டு சிறுவன் அகி கிளம்புகிறான். இன்னொரு பக்கம் மனநல மருத்துவ மனையில் தன்னை இப்படி விட்டு விட்டு போன தாயை போய் பார்த்து அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட வேண்டும் மனநல மருத்துவமனையிலிருந்து தப்பிக்கிறான் ஒருவன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து உள்ள ஊர்களுக்கே போக வேண்டியிருப்பதால் ஒன்றாக பயணப்படுகிறார்கள். அவரவர் அம்மாக்களை சந்தித்தார்களா? என்பதே கதை.

nandalala_movie_pictures_02
ரோடு சைட் டிராவல் படங்கள் பல இருந்தாலும் இவ்வளவு நெகிழ்ச்சியூட்டும் படம் வந்திருக்கிறதா என்று யோசித்து பார்த்தால் சட்டென ஞாபகம் வரவில்லை. சல சலத்தோடும் நீரோடு இழுத்துக் கொண்டு அலையும் இலை தழையோடு நம் மனதையும் ஒளிப்பதிவாளர் இழுத்துக் கொள்கிறார் என்றால் அது மிகையல்ல.. குறிப்பாக பல வைட் ஷாட்டுகளிலும், லோ ஆங்கிள் ஷாட்களிலும், கால்களுக்கு மட்டுமே முக்யத்துவம் கொடுத்து அலையும் ஷாட்களிலும், கேமராவாய் தெரியாமல் கதையோடு நம்மை பயணிக்கிறது ஒளிப்பதிவு. அந்த பச்சை பசேல் சுற்றுப்புறமும், நேர் கோடு சாலைகளும் பல இடங்களில் இவர் நின்றால் நாமும் நிற்கிறோம். இவர் ஓடினால் நாமும் ஓடுகிறோம். கூடவே பயணிக்க வைத்த மகேஷ் முத்துசாமியின் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் எல்லோருமே ஷாலினி முதல்.. நேற்றைய மைனாவில் வரும் சிறுவன் வரை வயதுக்கு மீறிய பேச்சும், நடவடிக்கையுமாய் பார்த்து பார்த்து சலித்து போன கண்களுக்கு இப்படத்தில் வரும் சிறுவன் அஸ்வத் வெல்லக்கட்டி. முதல் காட்சியில் தலை குனிந்து த்ன் வெறுமையை வெளிகாட்டும் காட்சியாகட்டும், தனித்து பாட்டியுடன் வாழும் நிலையில் உள்ள அவனின் மெச்சூரிட்டியும், படித்த பையனுக்கே உரிய புத்திசாலித்தனமுமாய் சேர்ந்து மிளிர்கிறான். க்ளைமாக்ஸ் காட்சியில் அவன் பேசும் வசனம் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் ரியாலிட்டிக்கு மேலே.. மற்றபடி.. ரியலி வெரி குட் பர்பாமென்ஸ்.

nandalala_movie_pictures_04
இவருடனே தன் தாயை தேடி போகும் மெண்டல் கேரக்டருக்கு மிக சரியாய் பொருந்துகிறார் மிஷ்கின். ச்ச்சிலீர் என்று ரோடியோ பெட்டியை ஒடைத்துவிட்டு எதுவுமே தெரியாதது போல, இடது கை ஆள்காட்டி விரலை சுவற்றில் தேய்த்தபடியே அறிமுகமாகுமிடத்திலிருந்து மெல்ல, மெல்ல நம் மனதில் இறங்கி உட்கார ஆரம்பித்துவிடுகிறார். அவர் பைத்தியம் என்பதாலே பிதாமகன் போல மிகவும் அரகண்டாக ஆளாய் காட்டாமல் மிதமாக கொஞ்சம் அக்ரஸிவாகவும், இன்னும் சில இடங்களில் கையாலாகாமல் அடிவாங்குபவராகவும், மிக சரியான மாடுலேஷனில் சில இடங்களில் பேசி கைத்தட்டல் பெறுகிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும் இவர் மன நலம் குன்றியவரில்லையோ என்று சந்தேகிக்க வைக்கும்படியான காட்சி வருகிறது.

nandalala-wallpapers01
படம் நெடுக சிறு சிறு கேரக்டர்கள் வந்து கொண்டேயிருக்கிறது. அடிக்கடி அகியிடம் பணம் கேட்கும் வேலைக்காரி, அந்த வழிப்பறி செய்யும் வேலையற்றவன்,  காலில் அடிப்பட்டதும் தொடர்ந்து பாவாடையை மிஷ்கின் தூக்க அடித்துக் கொண்டேயிருக்கும் அந்த ஸ்கூல் பெண்ணிடம், வலிக்குதா எச்சி வச்சிக்க ஜில்லுனு இருக்கும் என்றதும் ஆச்சர்யமாக பார்த்து நெருங்குவதும், கிளம்புகையில் ஓடிப்போய் அவள் கையில் நான்கு கூழாங்கற்களை கொடுப்பதும், சிறுவனுக்கு முத்தமும், மிஷ்கினுக்கு ஒரு  தயக்கத்துடனான ஒரு தோள் சாய்தலுடன் திரும்பி பார்க்காமல் ட்ராக்டரை கிளப்பிக் கொண்டு போகையில் நம் மனதில் நிற்கிறாள். அவள் திரும்பி ஃப்ரெமிலிருந்து வெளியேறும் வரை ஷாட் எக்ஸ்டண்ட் ஆவதும் அட்டகாசம். அந்த முகமே தெரியாத பஸ் கண்டக்டர், போலீஸ் இன்ஸ்பெக்டர், லாரி டிரைவர், ஒரே ஒரு ஷாட்டில் மட்டும் வரும் நாசர், ரோட்டோர விபச்சாரி ஸ்னிகிதா, நொண்டி ஆள், ஜாதி கலவர கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்,  கடோத்கஜன்களான ட்ராவலர்கள், ஸ்னிகிதாவை கடத்த முயற்சிக்கும் வயதான ”போய்” கட்டு கிழவன், அந்த சிகப்பு டெம்போ, புது மண தம்பதிகள்,  ஓப்பன் கார் பீர் இளைஞர்கள், அகியின் அம்மா, அந்த கண் தெரியாத கிழவி, மிஷ்கினின் குடும்பம் என்று படம் முழுக்க ஒவ்வொரு கேரக்டரும் மனதில் நிற்கும் வண்ணமாய் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். மிக குறைந்த அளவான டயலாக்குளை மட்டுமே வைத்து பல உணர்வுகளை பல கேரக்டர்கள் மூலம் உணர்த்துகிறார். கொஞ்சம் அந்நியமான கேரக்டர்கள் என்றால் அந்த மோட்டார் பைக் மொட்டை தடியன்கள் தான். ஆனால் அடிக்கடி ட்ராவல் செய்யும் ஆட்களிடம் கேட்டால் இது மாதிரி வித்யாசமானவர்களை அவர்கள் சந்தித்திருப்பதை சொல்வார்கள். நான் கூட சென்னையில் ஒரு பெரியவரை பார்ப்பேன். பூணூல் தரித்த மேல் சட்டை போடாமல் நீண்ட தாடியுடைய பெரியவர், பழைய கைனடிக் ஹோண்டாவில் தலை முழுக்க முண்டாஸுடன், விபூதி, சந்தனம், குங்குமமிட்டு, வண்டியின் பின் பக்கம் பூராவும் ஒரு பெரிய பெட்டியில் ஏதோ ஒரு விளம்பரத்தையும் அந்த ப்ராடெக்டையும் ஒரு ரோடியோ பெட்டியை ஸ்பீக்கருடன் கட்டிக் கொண்டு அலைவார்.

nandalala_movie_pictures_05
இப்படத்திற்கு மணி மகுடமென்றால் அது இளையராஜாவை தவிர வேறு யாரையும் சொல்ல முடியாது. மொட்டை கலக்கியிருக்கிறார். ஆரம்ப காட்சியில் சலசலக்கும் நீரின் ஓசையோடு ஆரம்பிக்கும் இவரது ராஜ்ஜியம் படத்தின் கடைசி காட்சி வரை அதுவும் ரோலிங் டைட்டில் முடியும் வரை கலங்கிய கண்களோடு தியேட்டரில் நிற்கும் ரசிகர்களே அதற்கு சாட்சி.  பின்னணியிசை என்றால் என்ன என்பதை இன்றளவில் உயர் நிலையில் இருக்கும் இசையமைப்பாளர்களும் சரி, புதியவர்களுக்கும் சரி பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாய் எங்கு இசை ஒலிக்கக்கூடாது என்பது சரியாக புரிந்து மெளனத்தையே இசையாய் கொண்டு வந்திருக்கும் ராஜா க்டைசி இருப்து நிமிடங்கள் இசை ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். என்னால் அந்த கடைசி நிமிடங்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை. படத்தின் காட்சி ஏற்படுத்திய பாதிப்பை விட அதை இசையால் சந்தோஷமோ, துக்கமோ, எல்லா உணர்வுகளையும் மெல்ல மெல்ல ஸ்லோ பாய்சன் போல நம்முள் ஏற்றி.. போதையாய், உருக்கமாய், உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார். முக்கியமாய் அகியின் அம்மா மிஷ்கினிடம் பேசும்  வசனமேயில்லாத சிங்கிள் டாப் ஆங்கில் ஷாட்டில் ஒரு கதையை தன் இசையாலேயே சொல்லி கலங்கடித்திருக்கும்  மொட்டை என் மொட்டை..

படத்தை பற்றிய ஒரு குற்றச்சாட்டு இது ஒரு ஜப்பானிய படமான கிகிஜிரோவின் காப்பி என்று,  கிகிஜிரோவின் கான்செப்ட்தான் ஆனால் காப்பியில்லை. அதைஉள்வாங்கி மிஷ்கின் தந்திருக்கும் வர்ஷன் வேறு. சரி விடுங்க அப்படித்தான் என்று சொல்பவர்களுக்கு கிகிஜிரோ தராத ஒரு உணர்வை இப்படம் எனக்கு தந்திருக்கும் பட்சத்தில் இப்படம் நிச்சயம் நல்ல படமே. படத்தை பற்றி யோசிக்கையில் இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் படம் பார்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய இம்பாக்ட படித்துவிட்டு பார்த்தால் கிடைக்காது என்பதால் சொல்லவில்லை.
nandalala-ja12-2009 குறைகளே இல்லையா என்று கேட்பவர்களுக்கு.. ஒரிரு காட்சிகள்,முக்கியமாய் ஷாட் ப்யூட்டிக்காகவே ரொம்ப நேரம் நின்று கொண்டேயிருப்பது, லெந்தியான ஸ்டாண்ட் ஸ்டில் காட்சிகள். ஆனால் அது உணர்த்தும் விஷயங்கள் நிறைய.  சில க்ளிஷே காட்சிகள், க்ளைமாக்ஸ் முடிந்து வரும் காட்சி போன்றவைகளை சொல்லலாம்.

ஐங்கரன் சுடச் சுட வெளியிட்ட படமெல்லாம் வந்த சூட்டிலேயே பெட்டிக்குள் போய் விட, வெளியிட முடியாமல் இழுத்தடித்த படமெல்லாம் நின்று விளையாடுகிற காலம் போலருக்கு.. பேராண்மை, அங்காடித்தெரு, இப்போது  நந்தலாலா அதில் ஒன்று.. 150 கோடி செலவில்  எந்திரனை  தயாரிக்க முடியவில்லையே என்று ஐங்கரன் வருத்தப் பட தேவையில்லை.. அதை விட 150 முறை  சிறந்த படத்தை வழங்கியதற்காக காலமெல்லாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
நந்தலாலா – வாழ்க்கையின் பயணம்  A MUST SEE FILM
கேபிள் சங்கர்
டிஸ்கி: ஒரே நாளில் இரண்டாவது முறையாய் படத்தை பார்த்துவிட்டு வருகிறேன். பாதிப்பு குறையவேயில்லை...

என்னடி மீனாட்சி...

ரொம்ப நாளுக்கு அப்புறம் சாந்தி மீனாட்சிய பார்த்தேன்.. அவளை பார்த்ததும் ரொம்ப வருஷமா நான் அவளை திரும்ப பார்த்தா கேட்கணும்னு நினைச்சிட்டிருந்த கேள்விய இன்னைக்கு கேட்டே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். பின்ன ஒருத்தன் எதுக்காக அடி வாங்குனான்னு தெரியாமயே அடி வாங்குறது எவ்வளவு கஷ்டம்னு அடிவாங்குனவனுக்குதான் தெரியும்.

நானும் ஆனந்த ராஜூம ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ் ஓவ்வொரு திங்கட்கிழமையும்.. ஆமா ஓவ்வொரு திங்கட்கிழமைமட்டும்தான் மத்த நாளெல்லாம் சாதா ஃப்ரெண்ட்ஸ்.. ஏன்னா அன்னைக்குத்தான் அவன் எல்லா ஞாயித்துகிழமையும் படம் பார்த்துட்டு, அடுத்த நாள் வந்து கதை சொல்வான்..அதனால் நானும் அவனும் திங்கட்கிழமை மட்டும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்..

அவன் கதை சொல்லும் போதே ஓரு முழு படத்தை பார்த்தா மாதிரி இருக்கும்.. காலையில முதல் ப்ரீயட் போதே ஏதாவது சாக்கு சொல்லி நானும் அவனும் கடைசி ரோவில் போய் உட்கார்ந்திருவோம்.. அப்புறம் எங்க வேலையை ஆரம்பிச்சுடுவோம்..சத்தமே இல்லாம..(அதெப்படி சத்தமே இல்லாமன்னு..) தியேட்டர்ல போட்ட அட்வர்டைசிங் முதக் கொண்டு ஓண்ணு விடாம ரீரிக்கார்டிங் மியூசிக்கோட வாச்சிக்கிட்டே கதை  சொல்லுவான்.. அப்படி அவன் அந்த வாரம் சொன்ன படம் சூப்பர் படம் ..அந்த படத்தோட பாட்டுவேற சும்மா சூப்பர் டூப்பர் ஹிட்.. தமிழ்நாடே பத்திக்கிட்டு எறிஞ்சுது..

அவன் சொல்ல, சொல்ல, எப்படியாவது அந்த படத்த பாக்கணும்னு முடிவெடுத்துட்டேன்..அவன் கதைசொன்ன இம்பாக்டுல அன்னைக்கு பூரா எனக்குள்ள அந்த பாட்டுதான்.

க்ளாஸ் முடிஞ்சி வெளியே போகும்போதும் அதே பாட்டுதான், அந்த பாட்டு என்னையும், என் திங்கட்கிழமை நண்பனுக்கும் ரொம்ப பிடிச்சதினாலே.. தெருவெல்லாம் “ஷோலே” பட “ஏ..தோஸுதி’” வருமே அது போல தோளில் மேல் இருவரும் கைபோட்டுக் கொண்டு, பாடிக் கொண்டே போனோம்.. அதை ,அந்த நிமிஷத்தை எப்படி சொல்றதுன்னே தெரியல. ஒரே சந்தோசமா இருந்திச்சு

அடுத்த நாள் காலையில க்ளாஸூக்கு போனவுடனே..வழக்கபடி நாங்க ரெண்டுபேரும் அவங்க, அவங்க சீட்ல போய் உட்காந்திக்கிட்டோம்.. க்ளாஸ் எடுக்க வந்த அமுதவல்லி மேடம்.. எதையும் பத்தியும் பேசாம..எடுத்த்வுடனேயே என்னையும் என் திங்ககிழமை நண்பன் ஆனந்த ராஜையும் கூப்பிட..என்ன ஏதுன்னு புரியாம.. இரண்டு பேரும் எழுந்து நின்னோம்..

“இங்க வாங்கடா”  மேடம் கூப்ப்டாங்க..

எதுக்கா இருக்கும்ன்னு யோசிச்சிக்கிட்டே.. மெல்ல அவங்க பக்கத்தில போக,, மேடமுக்கு என்ன ஆச்சோ தெரியல.. எங்க தெருமுனையில குறி சொல்ற முனியம்மா மாதிரி கண்ணையெல்லாம் பெரிசா விரிச்சு வச்சிகிட்டு, பெருசு, பெருசா மூச்சை விட்டுகிட்டு ஒரு மாதிரி ரியாக்‌ஷன் கொடுத்திகிட்டு அங்கே இருந்த ஓரு நீட்டு குச்சிய எடுத்து சும்மா.. கையிலயும், முதுகிலெயும்.. ரெண்டு பேரையும் பின்னி எடுத்துட்டாங்க.. ஓவ்வொரு முறை அடிக்கும் போதும்..

“முளைச்சு மூணு இலைவிடல அதுக்குள்ள.. அதுக்குள்ள..”ன்னு சொல்லிகிட்டே அடிச்சாங்க..

எங்களுக்கு என்னனு புரியவே இல்ல.. நான் மட்டும் வீரனா “எங்கள எதுக்கா மேடம் அடிக்கீறீங்கன்னு கேட்டதுக்கு எக்ஸ்ட்ராவா ரெண்டு எனக்கு கிடைச்சுது.. இதையேல்லாம் பார்த்த என் க்ளாஸ் மேட்களுக்கு ரொம்ப வருத்தமாயி.. என் கேர்ள் ப்ரண்ட்.. ஆண்டாள் என்னிடம் மட்டும் தனியாக வந்து “எல்லாத்துக்கு காரணம் அவதான்னு “சொன்னா.. அவதான் மேடத்துக்கிட்ட என்னவோ காலையிலேயே சொன்னான்னு சொன்னதும் நான் மீனாட்சிய பார்த்தேன்.. அவ எனக்கு ப்ரெண்டே இல்ல.. குண்டா புசுக், புசுக்க்னு இருப்பா, ஆண்டாளுக்கு அவளை பிடிக்காது அதனால எனக்கும் அவளை பிடிக்காது. நான்  மீனாட்சி  பாக்கும் போது  என்னவோ தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமில்லங்கற கணக்கா.. என்னைப் பார்த்ததும் மூஞ்சிய திரும்பிக்கிட்டா.. 

என்ன சொன்னேன்னு அப்ப கேட்கிற தைரியம் அப்ப எனக்கு இல்ல.. ஆனா இப்ப இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் மீனாட்சிய பார்த்ததும் கேட்கணும்னு தோணிச்சு.. அப்ப பாத்தா மாதிரி குண்டு பூசணிக்கா கணக்காதான் இருந்தா, கொஞ்ச நேரம் சகஜமா பேசினதுக்கு அப்புறம் மீனாட்சியிடம் “ஆமா.. அன்னைக்கு எதுக்காக மேடத்துக்கிட்ட அடிவாங்க வச்சே..?”
actress-swathi-stills-71
மீனாட்சி ஆச்சர்யத்துடன் விழுந்து விழுந்து சிரித்தபடியே.. “அத இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா..?” கேட்டா.. எப்படி மறக்க முடியும்ன்னு அடி வாங்குனவன் நானில்லேன்னு மனசுகுள்ளே நினைச்சுகிட்டே.. அசட்டு சிரிப்பு சிரித்தபடியே  அவளை பார்க்க..

“அது ஓண்ணுமில்ல அன்னைக்கு நீயும் ஆனந்த ராஜூம்.. என் பின்னாடி வந்துகிட்டே.. என்னை பத்தி பாட்டு பாடி கிண்டல் பண்ணீங்களா..அதத்தான் மேடத்துக்கிட்ட சொன்னேன்.. அதுக்குதான் அடிச்சாங்க...ன்னு சொல்லிட்டு வெட்கப்பட்டு சிரிச்சிகிட்டே போயிட்டா..

”என்ன கொடுமை சார் இது? நாலாம் க்ளாஸ் படிக்கும் போது, “என்னடி மீனாட்சீ.. சொன்னது என்னாச்சுன்னு”  எங்களுக்கு முன்னால் போன சாந்தி மீனாட்சிய பார்த்துகிண்டல் பண்ணி பாடற வயசா சார் அது.. ? ஆனந்தராஜூ எங்கடா இருக்கே..?


Nov 25, 2010

சினிமா வியாபாரம்- பாகம்-2- பகுதி-2

பகுதி-2
மூன்று நாட்கள் மட்டுமே ஓடிய அந்த படத்தின் மூலமாய் என் நண்பர் பெரிய லாபம் ஏதும் சம்பாதிக்கவில்லை என்றாலும் நல்ல அனுபவத்தை கிடைக்கப் பெற்றார். அந்த அனுபவம் அவருள் இன்னும் இறங்கி எப்படியாவது ஒரு தியேட்டர் நடத்தணும் என்று முடிவெடுக்க முக்கிய காரணமாய் இருந்தது.

இதற்கு நடுவில் “சேது”வில் ஆசைப்பட்டு, உயிரிலே கலந்தது படத்தில் செட்டிலாகி அதை வெளியிட்டு முழு நேர விநியோகஸ்தராக ஆகிய கதை சினிமா வியாபாரம் புத்தகத்தில் பார்த்திருப்பீர்கள். படிக்காதவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்(விளம்பரம்).

பின்பு சென்னையில் ஒரு பிரபல பழைய தியேட்டர் ஒன்று லீஸுக்கு வருகிறது என்று கேள்விப்பட.. எங்கள் காட்பாதருக்கு தெரிந்த நண்பர் தான் அந்த தியேட்டர் ஓனர் என்பதால் உடனடியாய் பேச்சு வார்த்தை ஆரம்பித்து வெற்றிகரமாக முடித்தார். தியேட்டர் தொடங்குவது என்று முடிவாகி அட்வான்ஸ் எல்லாம் பேசி.. மாத வாடகைக்கு தியேட்டரை லீஸுக்கு எடுத்தாயிற்று.

தியேட்டரை நாமே கட்டி பார்ப்பது என்பது ஒரு வகை. ஆனால் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டரை அதன் அதன் நிலையில் இருக்கும் தியேட்டரை எடுக்கும் போது சில பல பிரச்சனைகள் இருக்கிறது. ஏன் தியேட்டரை ஒரிஜினல் ஓனரே நடத்தாமல் வாடகைக்கு விடுகிறார்?. அவராலேயே நடத்த முடியாத ஒரு தியேட்டரை எப்படி வேறொருவர் எடுத்து வெற்றிகரமாக நடத்த முடியும்? என்று கேட்கிறீர்களா? அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

ஒரு தியேட்டரை வெற்றிகரமாக நிர்வகிப்பது சாதாரண வேலையில்லை. மிகவும் கஷ்டமான வேலை. பணம் போட்டு பணம் எடுக்க வேண்டிய வேலை. அப்படி போட்ட பணம் திரும்பாமல் நொடித்து போன பல தியேட்டர் அதிபர்கள் தியேட்டரையே கல்யாண மண்டபமாகவோ, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாகவோ, இல்லை இடத்தையே விற்று விட்டு போன கதை நிறைய உண்டு.

இம்மாதிரி லீஸுக்கு வரும் தியேட்டர்கள் ஏற்கனவே மிக மோசமான நிலையில் தான் இருக்கும். முக்கியமாய் உட்காரும் வசதி, மற்றும், கழிவறைகள் போன்றவை படு மட்டமாய் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் அந்த தியேட்டர்களில் “பிட்டு” படங்கள் எனப்படும் செக்ஸ் படங்களை வெளியிட்டு அந்த தியேட்டருக்கே ஒரு அழுக்கு இமேஜ் மார்க்கெட்டில் இருக்கும் நேரத்தில் அம்மாதிரியான தியேட்டரை கையில் எடுத்து மீண்டும் அதை பழைய நிலைக்கு கொண்டு வர நிறைய உழைக்க வேண்டும்.

தியேட்டர் எங்கள் கையில் வந்ததும், முதல் வேலையாய் படம் திரையிடப்படுவதை நிறுத்திவிட்டு சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பித்தோம். மிகவும் மோசமாய் இருந்தது கழிவறையும், சுற்று புறமும், உட்காரும் சீட்டுகளும் தான். உடனடியாய் அதை சரி செய்ய ஆட்களை பிடித்து வேலையை ஆரம்பித்து, புதியதாய் கழிவறை ஒன்றை கட்டி, சீட்டுகளை ரிப்பேர் செய்து, புதியதாய் வெள்ளை அடித்து, சீட்டுகளுக்கு நம்பர் எல்லாம் போட்டு, அழுக்கேறியிருந்த திரைக்கு புதியதாய் சில்வர் கோட்டிங் அடித்து பள பளவென ஆக்கி, புதுப் பெண்ணப் போல நிறுத்தி வைக்க சில லட்சங்கள் ஆனது. சரி தியேட்டரை புதுப்பித்தாகி விட்டது. முதல் படமாய் நல்ல பெரிய படத்தை போட வேண்டும். அதன் மூலம் மீண்டும் மக்கள் இந்த திரையரங்குக்கு வர வைக்க வேண்டும் என்று முயன்ற போதுதான் அது எவ்வளவு பெரிய விஷயம் என்று தெரிந்தது.
கேபிள் சங்கர்

Nov 24, 2010

சேர்ந்து வாழ்வது

Together_by_Carcin09 சமீப காலமாய் பதிவுலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயம்  லிவிங் டு கெதர் என்பதுதான். அதை ஏன் நாம் அப்படி சொல்ல வேண்டும். சேர்ந்து வாழ்வது என்று சொல்லிப் பாருங்கள் ஆங்கிலத்தில் தெரியும் விகார அர்த்தம் குறைந்திருக்கும். ஆம் விகாரம் தான். லிவிங் டு கெதர் என்றாலே செக்ஸ் என்று மட்டுமே நினைத்துக் கொண்டு திரும்ப, திருமப, குடும்பம், கலாச்சாரம், குழந்தை, பெண்களுக்கு வேசி பட்டம் என்று தலைக்கு தலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கிறது திருமணம் என்கிற சொசைட்டியின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு விருப்பமில்லை. அப்படியிருக்கும் போது அவர்கள் இருவரும் மனமொத்து சேர்ந்து வாழ பிரியப்படுகிறாகள். பதினைந்து வருடங்களாய் சேர்ந்து வாழும் தம்பதிகள் இருவரை எனக்கு தெரியும். அதில் ஒரு ஜோடி தங்களுக்குள் எந்தவிதமான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இருக்கக் கூடாது என்று குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை. இன்னொரு ஜோடிக்கு ஒரு பையன் இருக்கிறான். இப்போது காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறான். என்னைப் பொறுத்த வரை அவர்கள் ஆதர்ச தம்பதிகள். பருவ வயதில் இம்முடிவெடுத்து இப்போது நடுத்தர வயதிலிருக்கும் அவர்களிடத்து செக்ஸ் மட்டுமே தான் வாழ்க்கையாக இருக்குமா..?

அவர்களது வாழ்க்கையை பற்றிய தெளிந்த பார்வை அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். அவரவர்கள் வாழ்க்கைக்கு அவரவர்கள் எடுக்கும் முடிவே நல்லது. எத்தனை கல்யாணங்கள் திருப்திகரமாய் இருந்திருக்கிறது?. திருமணமாகி மூன்று மாதத்திற்கெல்லாம் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டு படியேறும் தம்பதிகளை என்னவென்று பார்க்கும் இந்த சமூகம்?.  செக்ஸ் தான் பிரச்சனை என்றால்? டைவர்ஸ் செய்யும் பெண்களையும் கற்பு கெட்டுப் போனப் பெண் என்றுதான் சொல்வீர்களா? திருமணம் ஆகி ஒரு வருடத்தில் கர்பமாகி, அதற்கு பிறகு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு, டைவர்ஸ் வாங்கிய என் உறவினர் பெண்ணையும் எனக்கு தெரியும். அந்த குழந்தைக்கு வேண்டுமானால் இனிஷியல் இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?. ஜீவனாம்சம் கூட வேண்டாம் என்று தன் காலில் சுயமாய் என் குழந்தையை வளர்கிறேன் என்று நிற்கும் பெண்ணுக்கு தோள் கொடுப்பதுதான் என் கடமையாய் தெரிகிறதே தவிர, அவள் கன்னிப் பெண்ணல்ல, செகண்ட் ஹாண்ட் என்றெல்லாம் தோன்றவில்லை. அவள் செகண்ட் ஹாண்ட் என்றால் அந்த ஆணும் செகண்ட் ஹாண்ட்தான். ஆம்பளைக்கு ஆயிரம் கல்யாணம் என்பதெல்லாம் அந்தக்காலம் நல்ல சம்பாதித்து நல்ல நிலையில் இருக்கும் நிறைய பேருக்கு இன்றளவில் வயதேறிக் கொண்டிருக்கிறதே தவிர திருமணம் நடந்த பாடில்லை. டைவர்சியான ஆணுக்கும் மீண்டும் திருமணம் எனும் போது பல பிரச்சனைகளை கடந்துதான் திருமணமாகிறது. அப்படியெல்லாம் இல்லை என்று சொல்பவர்களுக்கு நான் ஏதும் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் நிஜத்தில் நடக்கும் விஷயங்களை அறிய, தெரிய மறுப்பவர்களுக்கு நான் சொல்லி மட்டும் தெரிந்து விடவா போகிறது.

இன்னொரு விஷயம் இப்படி லிவிங் டு கெதரில் வாழ்ந்து பிரிந்து போன ஜோடிகளுக்கு பிறக்கும் குழந்தைகளால் தான் அமெரிக்காவில் வன்முறை தலைவிரித்தாடுகிறது என்று ஒரு சாரார் சொல்லியிருக்கிறார்கள். தினசரி பேப்பரை திறந்தால் கள்ளக்காதலினால் மனைவி கொலை, மனைவி கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்றாள். குழந்தைகளோடு விஷம் குடித்து சாவு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது. இவர்கள் எல்லாம் நம் கலாச்சார வழக்கப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் தான். இப்படிப்பட்ட செயல்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனநலம் குன்றி, பின்னாளில் ஒரு ரவுடியாகவோ, அல்லது வக்கிரம்பிடித்தவனாகவோ, வன்முறையை கையாளுபவனாகக்கூட இருக்கக்கூடும்.  என் நண்பருடய குடும்பத்தில் தினம் ஒரு பிரச்சனை, கணவர் மீது சந்தேகம், அதனால் மனைவி கொடுக்கும் டார்சர் தாங்க முடியவில்லை இதனால் நிதம் சண்டை இந்த சண்டையை பார்த்த அவரது மகன் மன அழுத்தம் தாங்காமல் ஒரு நாள் கை நரம்பை அறுத்து கொண்டான் அவர்களின் சண்டையை நிறுத்துவதற்காக, அவனை காப்பாற்றுவதற்குள் பெரும் பாடு பட்டு விட்டார்கள். ஆனால் மீண்டும் பிரச்சனை என்னவென்றால் இதற்கெல்லாம் காரணம் நீதான்? என்று ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள். இவ்வளவு பிரச்சனையுடன் இவர்களும் கலாச்சாரப்படி சேர்ந்துதான் வாழ்கிறார்கள். ஏன்?

குடும்பம்னா ஆயிரம் இருக்கும் என்று சால்ஜாப்பு சொல்பவர்களுக்கு ஒன்று. ஆயிரம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த ஆயிரத்தில் பல நல்ல விஷயங்கள் இருந்தால் நல்லது. பொழுதன்னைக்கு பிரச்ச்னைதான் வாழ்க்கைன்னா சரிவராதவங்க பிரிஞ்சு போயிடறது நல்லதுதானே. அப்படி விவாகரத்துன்னு வர்றவங்களுக்கு ஜீவனாம்சம் அது இதுன்னு ஆயிரம் பார்மாலிட்டி இருக்கு, அந்த கஷ்டம் எல்லாம் டைவர்ஸ் பண்ணி பார்த்தவனுகும், கூட அலைஞ்சவனுக்கும் தான் தெரியும். டைவர்ஸுக்கு பிறகு நல்ல வாழ்க்கை செட்டான ஆண், பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதையெல்லாம் சொல்லி நான் லிவிங் டுகெதருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதிலும் பல பிரச்சனைகல் இருக்கத்தான் செய்கிறது. முதலில் வயதில் ஏற்படும் காதல் , காமம் வகையராக்களை தாண்டி வருவதற்குள் இவர்களிடமும் பிரச்சனை ஏற்படத்தான் செய்கிறது. என்ன கொஞ்சம் பொறுத்துப் பார்த்து பின்பு ஒரு முடிவுக்கு வந்து பிரிந்துவிடுகிறார்கள். கோர்ட்டு, வழக்கு, மற்றும் பல பிரச்சனைகள் கிடையாது. இதில் இன்னும் சில பேர் சொத்துகள் வாங்கி அதை ரிஜிஸ்டர் செய்யும் போது அக்ரிமெண்ட் கூட போட்டுக் கொள்கிறார்கள்.  அதே போல குழ்ந்தை பிறந்து ரெண்டு வருடம் கழித்து பிரிந்த ஒரு ஜோடி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று ப்ளான் செய்யும் நேரத்திலேயே அக்குழந்தைக்கான சேப்டி விஷயங்கள் அனைத்தையும் செய்துவிட்டுதான் குழந்தையே பெற்றுக் கொண்டார்கள். அக்குழந்தைக்கான எதிர்காலம், அவனுக்கான இனிஷியல் உள்பட. இன்று அந்த பெண் இன்னொரு திருமணம் செய்து கொண்டு நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவனும் தான்.

இந்த சமூகம் பல விஷயங்களை தனக்கேற்றார் போல மாற்றிக் கொண்டுதான் வருகிறது. ஒரு காலத்தில் என் தாத்தாவுக்கு மூணு பொண்டாட்டி என்று சொன்னதையெல்லாம் இப்போது சொல்ல முடிவதில்லை.. ஏனென்றால் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிசு என்றாகிவிட்டதும் ஒரு காரணம். இன்றைய காலகட்டத்தில் வாழ்வதே பிரச்சனையாய் நினைக்கும் மக்கள் இருக்குமிடத்தில் இம்மாதிரியான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இல்லாமல் வாழ ஆசைப்படும், பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கும் ஆண் பெண் நிறைய பேர். தங்கள் வாழ்க்கையில் தங்கள் பெற்றோர்கள், தங்கை, அக்கா, அண்ணண் என்று அவர்கள் வாழும் வாழ்கையை பார்த்து இப்படியெல்லாம் சகித்துக் கொண்டு அவனோடோ, அவளோடோ வாழ்ந்துதான் ஆக வேண்டுமா என்று பயந்து போனவர்கள் நிறைய பேர்.

தன்னுடய் அக்காள்கள் எவரும் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழவில்லை. அவரவர்களுக்கு வாழ வேண்டிய கட்டாயம் இருப்பதால் சேர்ந்திருக்கிறார்கள் எனறு என் தோழி திருமணமே வேண்டாமென்று ஒற்றைக்காலில் நின்றாள்.  கடைசியில் வீட்டில் இருப்பவர்க்ள் எல்லோரும் ஒரு வ்ழியாய் சம்மதிக்க வைத்தார்கள். ஆனால் அவள் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு தற்கொலை செய்து கொண்டாள். ஊரில் எல்லோரும் அவளூக்கு காதல் தோல்வி என்றார்கள். எனக்கு மட்டும் தான் தெரியும் அவளுக்கு வாழ்க்கையே தோல்வியென்று.. என்னை பொறுத்த வரை அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ஒத்து வாழூம் எல்லாருடய வாழ்கையும் நல் வாழ்கையே.. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எட்டி பார்த்து மூக்கை நுழைக்காதவரை..
Technorati Tags: ,,
கேபிள் சங்கர்

Nov 23, 2010

நகரம்

Nagaram_thumb சுந்தர் சி ரொம்ப வருடங்களுக்கு பின் பேக் டு பெவிலியன் நடிப்போடு. சுந்தர் சியை நடிகராக ஏற்றுக் கொண்ட தலைநகரம் படத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த நகரம். தலைநகரம் படத்தில் நான்கைந்து ராம் கோபால் வர்மா படம், இரண்டு மூன்று ஆங்கில படம், என்று கலந்து கட்டி அடித்திருந்த படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை எடுபட்டுவிட எல்லாம் சுபம். ஆனால் அதே பார்முலா இங்கே வேலைக்காகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

nagaram-Anuya-66
சிறு வயது நணபர்கள் சுந்தர் சியும் போஸ் வெங்கட்டும், ஒருவர் ரவுடியாகிறார், மற்றொருவர் போலீஸ் ஆகிறார். போஸ் கெட்ட போலீஸ். சுந்தர் சி ஒரு பெரிய கள்ளக்கடத்தல் தாதாவிடம் வேலைப் பார்க்கும் போது மாட்டிக் கொண்டுவிட, அவரை கை காட்டாமல் ஜெயிலுக்கு போகிறார். சுந்தர்சியை போஸ் வெங்கட் வெளியே எடுத்து தன்னுடய இரண்டாம் படை வேளைக்கெல்லாம் உபயோகப்படுத்தி சம்பாதிக்கிறார். நடுவில் சுந்தர் சிக்கும், எதிர் வீட்டு அனயாவுக்கும் காதல் மலர்கிறது. இதற்கிடையில் நண்பனுக்கு பிரச்சனை என்றதும் அவரை காப்பாற்ற மீண்டும் ரவுடித்தனத்தை எடுக்க, அதை பார்த்த அனயா சுந்தரிடமிருந்து விலகுகிறார். தன்னை பற்றி விளக்கி மீண்டும் தனக்கொரு சான்ஸ் கொடுக்கும் படி கேட்கிறார். அனயாவும் கொடுக்கிறார். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.


சமீபத்திய சூப்பர் ஹிட்டான கமீனேவை அப்படியே உல்டா அடித்திருக்கிறார்கள். கமினே போன்ற படங்களை உல்டா செய்யும் போது அதன் மேக்கிங்கையும் கேரக்டரைஷேஷன்களை கொஞ்சமே, கொஞ்சம் கவனித்திருந்தார்களானால் எடுத்திருக்க மாட்டார்கள். பாவம் படு சொதப்பலாய் போய்விட்டது. இயக்குனர் சுந்தர் கே.விஐயன் கூட நடித்திருக்கிறார். இவர்கள் மிகவும் நம்பியது வடிவேலின் காமெடிதான். போஸ்டரில் இருக்கும் வடிவேலின் காமெடி கெட்டப்பை நம்பி போபவர்கள் ஏமாந்துதான் போவார்கள். புன்னகைக்ககூட முடியவில்லை. அதிலும் ஆரம்ப காட்சியில் அவர் செய்யும் அல்டாப்புகள் எல்லாம் தலைநகரத்திலேயே சலிக்க சலிக்க பார்த்து விட்டதால் முடியலை..
Nagaram_thumb1 தமனின் இசையை பற்றி பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. வழக்கம்போல டெக்னோ மியூசிக்காக ஏற்றி,ஏற்றி பாடுகிறார்கள். விரைவில் தமன் இதிலிருந்து வருவாராக.. ஒளிப்பதிவு, நன்றாகவே இருக்கிறது.
nagaram-50 கடைசி அரை மணி நேரப் படம் கொஞ்ச விறுவிறுப்பாக போவதால் வெளி வரும் போது எரிச்சல் குறைந்த நிலையில் வருகிறோம். இல்லாவிட்டால்.. முடியாது. சுந்தர் சியின் மிகப்பெரிய அசெட் நகைச்சுவை கலந்த திரைக்கதை. அவர் அதை மீண்டும் கையிலெடுத்து தான் நடிக்காமல் இருந்தால் இன்னும் விஷேஷம்.. அனயா மாதிரியான பெண்ணுடன் இவர் நடக்கும் போது  மாமா மாதிரி இருக்கிறார். சாகும் போது கூட பெரிதாய் ரியாக்‌ஷன் இல்லாமல் வழக்கமான டோனிலேயே பேசுவது.. எரிச்சல்..
நகரம்- கொஞ்சம் நரகம்.
கேபிள் சங்கர்

Nov 22, 2010

கொத்து பரோட்டா-21/11/10

சிங்கை பதிவர்கள் எல்லாரும் சேர்ந்து சென்ற வருடம் மணற்கேணி என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி கருத்தாய்வு போட்டி வைத்து அதில் வெற்றி பெற்ற மூன்று பதிவர்களுக்கு சிங்கப்பூர் வரை ஒரு வாரம் சுற்றுலா ஏற்பாடு செய்து, முதல் மலரை வெளியிட்டார்கள். சாதாரணமகவே சிங்கை பதிவர்களின் அன்பைச் சொல்லி மாளாது. அவ்வளவு விருந்தோம்பல் இருக்கும். அவர்கள் இந்த வருடமும் மணற்கேணி2010 என்று கட்டுரை போட்டி  நடத்துகிறார்கள். போட்டியின் விதிமுறைகளை பற்றி அறிந்து கொள்ள http://www.sgtamilbloggers.com/ இணைய தளத்தை பாருங்கள். போன வருடம் நான் கலந்து கொள்ளலாம் என்று அவர்களின் தளத்தை பார்வையிட்ட பிறகு மிகவும் தமிழில் இருந்த்ததால் எஸ்கேப்பாகிவிட்டேன். இம்முறை கொஞ்சம் பரவாயில்லை.. ஹி..ஹி..சும்மா காமெடிக்குத்தான் நண்பர்களே.. சிறந்த முறையில் நடத்தப்படும் ஒரு கருத்தாய்வு போட்டி இது. கலந்து கொள்வோம். சிங்கை செல்வோம்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மிழ் சினிமாவில் தற்போதைய பிரச்சனையே தியேட்டர் கிடைக்காமல் அலையும் தயாரிப்பாளர்களின் நிலைதான். பெரிய படங்கள் தவிர, பெரிய நிறுவனங்களின் கிழ் இயங்கும் திரையரங்குகங்கள், அவர்களின் படங்களுக்காகவே காத்திருந்து படங்கள் போடுவதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்க மாட்டேனென்கிறது என்கிறார்கள். அப்படியே கிடைத்தாலும் அவர்களுடய படங்களுக்கான இடைவெளி காலத்தின் வரையில் தான் போடுகிறார்கள். ஒரு வேளை படம் பிக்கப் ஆகிவிட்டாலும் ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தால் படத்தை கட்டாயமாய் எடுக்க வேண்டியதாகிவிடுகிறது என்று புலம்புகிறார்கள். இது என்னவோ உண்மைதான். இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் இம்மாதிரி  சின்ன படங்களுக்கு டேட் கொடுத்து நஷ்டப்படும் தியேட்டர்காரர்களும் அதிகமிருப்பதால் தான் அவர்கள் பெரிய படங்களுக்காக காத்திருக்கிறார்கள். அவ்ர்கள் கஷ்டம் அவர்களுக்கு. அதற்காகத்தான் சினிமா வியாபாரம் –2 எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஊரெல்லாம் ராசாவின் 2ஜி,ஸ்பெக்ட்ரம் பற்றித்தான் பேச்சாய் இருக்கிறது. இதன் நடுவில் நீரா ராடியாவின் பேச்சு வேறு பரபரப்பாய் ஒலி வடிவில் வந்து காணாமல் போய்விட்டது. அதை கேட்டவர்கள், படிப்பவர்கள் அனைவருக்கும் ஒரே குடும்பத்தினுள் பதவிக்காக எவ்வளவு டகால்டி வேலைகளை செய்கிறார்கள் என்றறியும் போது கொஞ்சம் கஷ்டமாய் இருக்கத்தான் செய்கிறது. பாவம் தலைவன் நிலைமை. சரி விடுங்க அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த் வார கிசுகிசு
சமீப காலமாய் வெற்றி  பறவை பட நிறுவனம் விஜய் டிவி நிறுவனத்துக்கு முக்யத்துவம் கொடுக்கிறதென்று பேசிக் கொள்கிறார்கள். வழக்கமாய் இவர்கள் வாங்கும் படங்களையெல்லாம் கலைஞர் டிவிதான் வாங்கிக் கொள்ளும். ஆனால் தற்போதைய ஹிட்டான பறவை படம் விஜய்யின் வசம்தான். சரி அதை முன்னமே விற்று விட்டார்கள் என்று சொன்னாலும். இவர்களின் அடுத்த வெளியீடான முக்கிய நடிகர் படத்தின் பாடல் வெளியீடு விஜய்யில் தான் ஒளிபரப்பாகப் போகிறதாம். யாருக்கோ செய்தி ரெடியாகிக் கொண்டிருக்கிறதோ..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார வருத்தம்
நேற்றிரவு ராசாவின் மனசிலே படம் கேடிவியில் ஓடியது.  குயில் பாட்டு பாட்டை கேட்டதும் களுக்கென கண்ணில் நீர் வந்துவிட்டது. படத்தை பார்த்து இல்லை. சுவர்ணலதாவின் குரலை கேட்டு. என்னா குரல்டா.. சே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார சந்தோஷம்
சில மாதங்களுக்கு முன் நம் பதிவுலக நண்பர்கள் செய்த உதவியால் காதொலி கேட்ட சிறுவனின் அம்மா போன் செய்தார்கள். அவன் நார்மல் ஸ்கூலில் சேர்ந்து நன்றாக படிப்பதாகவும், பேச ஆரம்பித்துவிட்டதாகவும், முதல் ராங்க வாங்கியிருப்பதாகவும் சொன்னார்கள். கேட்க சந்தோஷமாய் இருந்தது. அவனுக்காக உதவியவர்களுக்கும் சந்தோஷமாய் இருக்குமென்றுதான் இச்செய்தி.. நன்றி நண்பர்களே.
.
எந்திரன் படம் வெளிவந்த நாட்களில் என்னிடம் நிறைய பத்திரிக்கை நண்பர்கள் பேட்டியெடுத்தார்கள். சில பத்திரிக்கைகள் வெளி மாநில பத்திரிக்கைகள். அதில் ஒன்று டெக்கான் ஹெரால்ட்.. அந்த பேட்டியின் லிங்க்.. http://www.deccanherald.com/content/103530/decoding-rajinikanth.html  நானும் என் பங்குக்கு ரஜினியை பற்றி கருத்து சொல்லியிருக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
சென்ற வாரம் என்னவோ தெரியவில்லை இரண்டு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகளுக்கு அடுத்தடுத்த நாள் கலந்து கொள்ள நேர்ந்தது. ஒன்று எஸ்.ஏ.சி ராம்கி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “நானும் என் காதலும்” இன்னொன்று சசிக்குமாரின் “ஈசன்”.   முதல் படத்தின் பட்ஜெட் போலவே சின்ன இடத்தில் விழா நிறைவாக நடந்தது. மூன்று பாடல்கள் திரையிட்டார்கள். அதில் ஒரஞ்சாரமா உக்காந்து பேசலாமா” என்று பாடல் நிச்சய ஹிட் வகை. படத்துக்கு இசை மரியா மனோகர். கேட்டுப் பாருங்கள்.

ஈசன் சத்யமில். கிராண்ட்கேலாவாக நடந்தது. மூன்று பாடல்களை நா. முத்துக்குமார் எழுதியிருக்கிறார். ஒரு பப் ஒன்றில் பாடும் பாடலை போட்டார்கள். “இந்த இரவுதான் போகுதே போகுதே.. இழுத்துக் கட்ட கயிறு கொண்டு வா நண்பனே” கவிஞர் அசத்தியிருக்கிறார் பாடல் வரிகளில். இன்னொரு பாராட்டப்பட வேண்டிய  விஷயம் அப்படத்தில் வேறொரு பாடலாசிரியர் மோகன்ராம்  எழுதிய ”ஜில்லாவிட்டு” என்ற பாடலை மிகவும் சிலாகித்து அவர் பாராட்டியது. நிச்சய ஹிட் லிஸ்டில் இந்த இரு படப் பாடல்களும்  இருக்கிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார டிட்பிட்ஸ்
சன் படவிழாவுக்கு, சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்கள், அனுராக் காஷ்யப், முங்காரு மலே கன்னட இயக்குனர் பட், மலையாள பட இயக்குனர் ரஞ்சித், பாலா, அமீர், இராம நாராயணன். வாரமல் மிஸ்ஸானவர் தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் மட்டும்தான். சசி தேசிய விருது பெற்றதை பற்றி சொலல்வில்லை என்று பத்ரிக்கைக்களில் சொல்லியிருந்த அமிரூக்கு, சரி பதிலளித்தார். எப்போது விருது வாங்கியவுடன் வடநாட்டு பத்திரிக்கைகளுக்கு என் வெற்றி என் குருநாதருக்கு தான் போய் சேரும் என்று சொன்னேனோ.. அப்போதே நான் அவருக்கு விஷயத்தை சொல்லிவிட்டதாகத்தான் அர்த்தம் என்று சொன்னதற்கு பின் நிறைய அர்த்தம் இருக்கிறது என்று தெரிகிறது.அனுராக் கஷ்யப்பின் அடுத்த படத்தின் இன்ஸ்பிரேஷன் சுப்ரமணியபுரமாம்..  ஈசன் திரைப்படத்தில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இயக்குனரெல்லாம் நடிகராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் காஜா மைதீன், ஞானவேல், ஏ.எல்.அழகப்பன் போன்ற தயாரிப்பாளர்கள் நடிகராகியிருப்பதுதான்.

களவாணி திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் எனக்கு தெரிந்த நண்பர்தான். இப்போது இரண்டு படங்களில் வில்லனாகவும், ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறாராம். சந்தோஷமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வாரம் படித்தது
என் புதுலிப்ஸ்டிக் என்ன பிராண்ட்? பார்க்காமல் சொல் என்றாள். நான் அவள் இதழ்களை சுவைத்துச் சொன்னேன். பேஸ்புக்கில் நண்பர் செல்வகுமார்

சமீபத்தில் ஒரு கட்டுரை தொடரை படித்துவிட்டு அப்துல்லாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவரை பாக்கணும்ணே என்றார். அந்த கட்டுரை தொடர் ஆரம்பத்திலிருந்து நானும் படித்து வருகிறேன். அதன் பிறகு அந்த பதிவரை சந்தித்த போது பாராட்டித்தள்ளிவிட்டார். அவர் நண்பர் கே.ஆர்.பி.செந்தில் அவர்களின் பணம் எனும் கட்டுரை தொடர்தான். படித்துப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார ட்வீட்
விர்சுவல் நண்பர்கள் ஆயிரத்தை தாண்டியுள்ளது. ரியலில் இருந்த பத்து சொச்ச நண்பர்களைத்தான் காணவில்லை

ஐநாக்ஸில் மோமோ என்ற ஒரு ஐயிட்டம் விற்றார்கள். நம்ம ஊர் பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டைதான் பேர் தான் சைனீஸ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்
நல்ல மேக்கிங்குடனான குறும்படம். முடிவு ஏற்கனவே தெரிந்துவிட்டாலும்.. சுவாரஸ்யமாக சொன்னது நன்றாகவே இருக்கிறது. கதாநாயகி ஐஷூவாக நடிக்கும் பெண் எக்ஸ்பிரஷனில் ஒரு குட்டி ஜோதிகாகவே இருக்கிறார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார வீடியோ
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார ப்ளாஷ்பேக்
நம்ம ஊர் லஷ்மி நடித்த இந்திபடம். கிஷோரின் மயக்கும் குரல் இப்பாடலுக்கு பெரிய அஸெட். இதே பாடல் மீண்டும் ரீமிக்ஸில் வந்து சக்கைபோடு போட்டது நான்கைந்து வருடங்களுக்கு முன். இப்போது கேட்டாலும் தெவிட்டாத மெலடி.
சிட்டி ஆயிஹே.. பங்கஜ் உதாஸ் கஜல் உலகின் கிங். அவரின் கேரியரில் உச்சத்தில் இருந்த போது, வெளியான சினிமா கஜல் இது.. இன்றளவில் இவ்வளவு உருக்கும் கஜலை சினிமாவில் பார்க்கவில்லை, கேட்கவில்லை. அருமையான அர்த்தமுள்ள பாடல்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
பாருங்க.. பாருங்க.. பார்த்துட்டு சொல்லுங்க….
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜோக்
படிக்காத அப்பாவும் படித்த மகனும் ட்ரெக்கிங் போனார்கள். இரவு தங்க நேர்ந்துவிட்ட்தால் டெண்ட் அடித்து தூங்க ஆரம்பித்தார்கள். சில மணி நேரங்களுக்கு பிறகு எழுந்த அப்பா மகனை எழுப்பி, “வானத்தை பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது? என்று கேட்க, மகன் “லட்சக்கணக்கான நட்சந்திரங்கள், காலக்ஸியின் ஆச்சர்யங்கள் என்று விளக்க ஆரம்பிக்க, அப்பா கடுப்பாகி…”என்னத்த படிச்சவனோ.. நம்ம டெண்ட எவனோ தூக்கிட்டு போயிட்டான் அதவிட்டுட்டு.. நட்சத்திரம், கேலக்ஸின்றான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Three friends decided to bet each other $100 on who could make their wives scream more from sex.
They all go home to have sex with their wives and make them scream.
The next day the meet. The first friend says, "I made love to my wife for 2 hours and she was screaming for at least 1 1/2 hours."
The second friend says, "That's nothing, I start licking my wife for two hours and she was screaming the whole time and half hour after that."
The third friend says, " That's nothing, I made love to my wife for ten minutes, I came a couple times I wiped my Dick in the curtain and she still screaming."
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்

Nov 20, 2010

மந்திர புன்னகை

mp
இயக்குனர்கள் நடித்து மூன்று படங்கள் வெளி வந்திருக்கிற வாரமிது. மந்திரபுன்னகையில் கரு.பழனியப்பன், நகரத்தில் சுந்தர்.சி, மகிழ்ச்சியில் வ.கெளதமனும், சீமான் ஆகியோர் நடித்து இந்தவாரம் வெளிவந்திருக்கிறது. இதில் வ. கெளதமனும், கரு.பழனியப்பனும் முதல் முறை.
mp1 வழக்கமாய் கரு.பழனியப்பன் எடுத்தாளும் குடும்ப கதை களன் இல்லாமல் ஒரு வித்யாசமான களனை எடுத்தாண்டிருக்கிறார். பேசும் பேச்சினால் மற்றவர்களின் நெஞ்சை சாட்டையால் அடித்து காயப்படுத்தும் அரகண்ட் கேரக்டர் பழனியப்பனுக்கு. எந்த ஒரு வரைமுறைக்கும் ஆட்படாத ஒரு கேரக்டராய் ஒரு பெரிய கம்பெனியில் ஆர்கிடெக்காய் வலம் வரும் ஸ்திரிலோலன், குடிகாரன், எப்ப்பப்பார் புகைப்பவன் தன்னருகே யாரையும் நெருங்க விடாதவன் என எல்லா விதமாக நெகட்டிவ் விஷயங்களும் உள்ளவனுக்கும், மிகவும் போல்டான, சுதந்திரமான, தன்னம்பிக்கையான, சுய சிந்தனையுள்ள மீனாட்சியுடனான நட்பு காதலாகி கனியும் நேரத்தில் ஒரு ட்விஸ்ட்.  பின்பு அந்த ட்விஸ்டை வைத்து க்ளைமாக்ஸ் வரைக்கும் கொண்டு போயிருக்கிறார்கள்.
mp2 படத்திற்கு மிக முக்கியமான, பலமான  ஒரு விஷயம் வசனங்கள். பாஸ்கர்சக்தியின் பெயரையும் போடுகிறார்கள். வழக்கமாக கரு.பழனியப்பனின் வசனங்களே ஷார்பாக இருக்கும். அதிலும் ஷார்ப் நாக்கு கேரக்டர் என்றவுடன்  கேட்கவா வேண்டும் பல காட்சிகள் ரசிக்கத்தக்கதாய் அமைவதற்கு காரணமே அவரது வசனங்கள் தான்.

“உடம்ப கெடுக்கிற குவாட்டரை சத்தம் போட்டு கேட்குறோம். உடம்புக்கு பாதுகாப்பான காண்டமை ஏன் சத்தம் போட்டு வாங்க கூடாது?”

“காதல்னு ஒண்ணு இல்லவேயில்லை.. அரிக்குது சொரிஞ்சிக்கிறோம். அதுக்கு பேர் காதலா?”

“என் புள்ள மக்கா போயிட்டான்னா.. பேசாம சினிமாவுல ஹீரோவாக்கிக்கிறேன்.”

“பார்த்தசாரதி.. இனிமே கதிர் என்னை கூப்பிட்டான்னா அவனுக்கு என்னை அனுப்பாதே.. ஒரு நிமிஷம் நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா மாதிரி நினைச்சிட்டேன். அது எனக்கும் நல்லதில்லை.. அவனுக்கும் நல்லதில்லை”

“அவன் என்னை எங்க பார்த்து பேசினான்னு எனக்கு தெரியும்.. அதனால என் கற்பு ஒண்ணூம் கெட்டுப் போயிறாது”

“மொத்த புத்திசாலித்தனத்தையும் நாக்கில விஷம் மாதிரி வச்சிருக்கியே?”
இப்படி படம் முழுவதும் நறுக் நறுக் வசனங்களால் நிரம்பியிருக்கிறது.
mp3 இப்படிபட்ட படங்களின் மிகப் பெரிய பலம் திரைக்கதை வசனமும், நடிப்பும் தான். முதல் பாதி வரை கூட கேரக்டர்களை அறிமுகப்படுத்தி செட்டிலாவதற்கு லேட்டானாலும், இரண்டாம் பாதி வந்ததும், திரும்ப, திரும்ப ஒரே மாதிரி காட்சிகள் வந்து ஏதோ அவசரமாக முடித்துவிட்ட பீல் இருக்கத்தான் செய்கிறது.

கரு.பழனியப்பனுக்கு முதல் படம் என்பதை காட்சிக்கு காட்சி தெரிவு படுத்துகிறார். நிச்சயமாய் இக்கேரக்டருக்கு அவரின் இருண்ட தாடிமுகம் செட்டாயிருக்கலாம் ஆனால் சுத்தமாக பாடி லேங்குவேஜ் இல்லை.. ஒரு வித கான்ஷியஸோடுதான் படம் முழுவதும் வளைய வருகிறார். முக்கியமாய் அருமையான டயலாக்குகள் எல்லாவற்றையும் மாடுலேஷன், பாடி லேங்குவேஜ் இல்லாமல் ஒருவித மனப்பாடத் தன்மையோடு இருப்பது கேரக்டரோடு ஒன்றவிடாமல் செய்கிறது.

ஒரு அல்ட்ரா மார்டன் பெண்ணாக மீனாட்சி. ஆரம்ப காட்சிகளில் தெரியும் அந்நியத்தனம் போக, போக மறைந்து நந்தினியாகவே மாறிவிடுகிறார். ஆனால் பாவம் மிக ஸ்ட்ராங்கான கேரக்டராய் கொண்டு வந்து, இரண்டாம்பாதிக்கு பிறகு ஹீரோ செண்ட்ரிக்காக மாறிவிடுவதால், அவரது கேரக்டர் பொத்தென விழுந்துவிடுகிறது என்பதை மறுக்க முடியாது. அவள் தன்னை வெறுக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே தான் அப்படி பேசுகிறான் என்று உணர்ந்தும் மீனாட்சி ஒவ்வொரு கட்டத்திலும் டாக்டரிடம் போய் பேசுவது கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. படம் முழுவதும் ஒரு மாதிரி அப்பிய மேக்கப் நெருடுகிறது.
mp4 சந்தானமும், தற்போதைய ஹாட் ஆர்டிஸ்டான தம்பி ராமையாவும் வருகிறார்கள். பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. ஆங்காங்கே சிற்சில இடங்களில் உதடு பிரிக்காமல் புன்னகைக்க வைக்கிறார்கள்.


வித்யாசாகரின் இசை ஆர்ப்பாட்டமாய் இல்லாவிட்டாலும், படத்திற்கு ஏற்றதாய் இருக்கிறது. அதில் ஒரு பாடலில் அறிவுமதியின் வரிகள் அருமை. ‘இந்த காதல் கொள்ள எத்தனை காமம் கடந்து வந்தேன்”.

முக்கியமாய் அந்த ப்ளாஷ்பேக் காட்சி நிதர்சனம். அதில் நடித்திருக்கும் மனோஜ்கிருஷ்ணா, இயக்குனர் நகுலன் பொன்னுசாமி ஆகியோரின் நடிப்பு மிக யதார்த்தம். அநாவசிய ட்ராமாவை டோட்டலாக தவிர்த்தற்காக இயக்குனரை பாராட்ட வேண்டும். மெல்ல  கதை அன்போல்ட் ஆனாலும் இரண்டாவது பாதியில் டாப் கியரில் போயிருக்க வேண்டிய படம். க்ரைம், மனநலம் என்றலைந்து டீவியேட் ஆகிவிடுவது சோகமே.. கதிர், நந்தினிக்குமிடையே ஆன விஷயங்களில், அவர்களுக்குண்டான உணர்வு போராட்டங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். ரிஷி என்கிற கேரக்டரை அறிமுகப்படுத்திவிட்டு உபயோகிக்காமல் விட்டது.  அவ்வளவு ட்ரீட்மெண்ட், மருந்து என்று எடுத்துக் கொள்ளும் கதிர் கேரக்டர் நந்தினி பேசும் பேச்சை கேட்டு சரியாவது எப்படி? எனபது போன்ற பல கேள்விகள் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. ஒரு அருமையான சைக்கலாஜிகல் காதல் கதையாய் வந்திருக்க வேண்டியது..
மந்திரபுன்னகை- :)
கேபிள் சங்கர்

Nov 19, 2010

சினிமா வியாபாரம்-2

பகுதி-1
சினிமா தியேட்டரை வெளியிலிருந்து பார்க்கும் போது எப்போதும் பிரம்மிப்பாகத்தான் இருக்கும். ஜே..ஜே என கூட்டமிருக்கும் இடமாகவும், ஸ்டாலில் விற்கும் பண்டங்களின் விலையை பார்த்து, தீபாவளி அன்று சாப்பிட்டுவிட்டு தியேட்டருக்கு போனாலும், இடைவேளையில் பாப்கார்ன் சாப்பிடவில்லையென்றால் கலாச்சாரக் கேடு என்பது போன்ற எண்ணத்தில் அவர்கள் கொடுக்கும் டகால்டி கூம்பில் போலியாய் வழியும் கார்ன்களை திட்டிக் கொண்டே சாப்பிட்டுவிட்டு, அள்ளுறான்யா.. தலைவர் படம் போட்டு வசூலேயும் அள்ளுறான். ஸ்டாலேயும் ஒரு அள்ளு என்று எல்லோரும் நினைப்பார்கள்.

ஆனால் அந்த கூட்டம், நெருக்கடி எல்லாம் முதல் மூன்று நாட்களுக்கு மட்டும்தான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நிச்சயம் நம்ப மாட்டீர்கள். ஏன் நானே தியேட்டர் நடத்தும் குழுமத்தில் ஒருவனாக போகும் வரையில் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஒரு வெற்றிகரமான திரைப்படத்தை கொடுப்பதற்கு என்ன கஷ்டங்கள் இருக்கிறதோ.. அதற்கு ஈடான கஷ்டம் ஒரு நல்ல திரையரங்கை நிர்வகிப்பதில் இருக்கிறது.

ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்கள் தான் தமிழகத்தில் ஏன் இந்தியாவெங்கும் அப்படித்தான் இருந்தது. ஒவ்வொரு முறையும்.. டீவி, வீடியோ, டிவிடி, கேபிள், சாட்டிலைட் சேனல்கள், டிடிஎச், ஐபிடிவி, ரிசஷன் என்று ஒவ்வொரு விஷயமும் வந்து ஆதிக்கம் செலுத்தும் போது. சினிமா அவ்வளவுதான் இனிமே என்ன செய்ய போகிறது? என்கிற நிலை வரும் போது அது தன்னை தானே புதுப்பித்துக் கொண்டு ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் விஸ்வரூபமெடுத்து நின்றுதானிருக்கிறது.

நாங்கள் திரையரங்கை எடுத்து நடத்தலாம் என்ற எண்ணம் வரக் காரணமே எங்களுக்கெல்லாம் காட் பாதர் போன்ற ஒரு நண்பர்.. நடத்திய டூரிங் டாக்கீஸ் தான். அவர் ஒரு விநியோகஸ்தர் என்றால் ஏதோ பெரிய படங்களை விநியோகம் செய்பவர் என்று நினைக்காதீர்கள். ஆனால் அவர் பெரிய படங்களின் விநியோகஸ்தரும் கூட.. விநியோகஸ்தரான அவர் ஒரு ஸ்கூல் வாத்தியாரும் கூட. பார்ட்டைமாக விநியோகஸ்தராக இருப்பது போல் தெரிந்தாலும், மனதளவில் முழு நேர விநியோகஸ்தர், தியேட்டர் அதிபர்.. ஆம் தியேட்டர் அதிபர் தான். செங்கல்பட்டு ஏரியாவில் ஒரு டூரிங் டாக்கீஸின் லீஸ் ஓனர். டூரிங் கொட்டாயானாலும் அதிபர் அதிபர்தானே..

எங்களை விட பெரியவரான அவருடய நெருக்கம் நட்பாய் மாறியது சினிமாவின் மேல் எங்களுக்கு உள்ள ஒரு ஆர்வத்தினால்தான். படங்களை வாங்கி விநியோகம் செய்யலாம் என்று நாங்கள் முடிவு செய்து அதை பற்றி யாரிடம் கேட்கலாம் என்று தேடிய போது வேறொரு நண்பர் மூலமாய் அவர் அறிமுகம் கிடைத்தது. கையில் ஒரு கல்யாண கேரி பேக், தமிழனினின் நிறமாய், வழுக்கைத்தலையுடன், சிரித்த முகத்துடன் ஒரு உயரம் குறைந்த காமராஜ் போன்ற முகத்துடன் அவர் அறிமுகமானார். மிக பொறுமையாய் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வார். விநியோகம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அது போல தியேட்டர் நடத்துவது மிக கஷ்டமான விஷயம். என்றெல்லாம் சொல்லும் போது எங்களுக்கு அவர் பெரியதாய் பில்டப் செய்கிறார் என்று தோன்றும்.

ஒரு டூரிங் கொட்டாயில் இத்துப் போன படம் போட்டு கல்லா கட்டுவதை ஒரு பெரிய வேலை என்று சொல்கிறாரே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் என் நண்பனுக்கு ஒரு ஆசை வந்தது. அவருடய டூரிங் கொட்டாயில் ஒரு சினிமாவை Hireக்கு (அப்படியென்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள சினிமா வியாபாரம் புத்தகம் படியுங்கள்- விளம்பரம்) எடுத்து முதல் முதலாய் தன் காலை சினிமாவில் வைக்க முடிவு செய்தார்.

ஒரு வருடத்துக்கு முன் ஹிட் படமான ஒரு ரஜினி படத்தை படப் பெட்டிக்கு மூவாயிரம், போஸ்டர் மற்றும் இத்யாதிகளுக்கு ஒரு ஐநூறு என்று செலவு செய்து, விநியோகஸ்தராக முடிவு செய்தார். அந்த படம் அவருடய டூரிங் டாக்கீஸில் மூன்று நாள் ஓடியது.

Nov 18, 2010

சினிமா வியாபாரம்-பாகம் 2

மீண்டுமொரு முறை குறுகிய காலத்தில் ஐம்பதாயிரம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய வாசகர்கள்.. பதிவுல நண்பர்களுக்கு நன்றி..நன்றி..நன்றி..கேபிள் சங்கர்.
cinima_hall1 எந்திரன் படம் வெளிவரப் போகிறது என்பதற்காக அவசரப்பட்டு தங்கள் படங்களை ரிலீஸ் செய்த படத் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.. இப்படத்துடன் நாம் மோதினால் தாக்கு பிடிக்க முடியாது என்று தங்கள் ரிலீஸை தள்ளிப் போட்ட தயாரிப்பாளர்களும் உண்டு. எது வந்தால் என்ன நல்ல படம் ஓடும். நம்ம படம் சூப்பர் படம் நிச்சயம் ஓடும் ஆனா தியேட்டர் தான் கிடைக்க மாட்டேனென்கிறது. என்று புலம்பித்தள்ளிய தயாரிப்பாளர்களின் புலம்பல் தான் பெரிய பிரச்சனையாய் தமிழ் சினிமாவில் உருவெடுத்திருக்கிறது.

அதான் ஊர்பட்ட தியேட்டர்கள் இருக்கிறதே? புதிது புதிதாய் மல்ட்டிப்ளெக்ஸுகள் திறக்கப்படுகிறதே? ஒவ்வொன்றிலும் ஐந்து, பத்தென தியேட்டர்கள் ஆரம்பிக்கப்படுகின்றதே? பின்பு எப்படி தியேட்டர் கிடைக்க மாட்டேனென்கிறார்கள்? என்று ஒரு பக்கம் சில பேர் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இப்படி ஒரு பக்கம் மல்ட்டிப்ளெக்ஸுகளால் புதிய திரையரங்குகள் திறக்கபப்ட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில் தனித் திரையரங்குகளாய் இயங்கும் பல திரையரங்குகள் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருப்பதும் நிஜம்

அதெல்லாம் ஒண்ணுமில்லை.. எல்லாத் தியேட்டரையும் பெரிய இடத்து ”நிதி” ஆளுங்க கண்ட்ரோல்ல வச்சிட்டு, தமிழ் சினிமாவையே தங்கள் கைப் பிடியில் வைத்திருப்பதாய் சொல்கிறார்கள். முக்கியமாய் சின்ன பட்ஜெட் பட்ங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாய் உருவெடுத்திருக்கிறது.

அப்படியென்றால் தியேட்டர்களை எல்லாம் அவர்கள் வாங்கி விட்டார்களா? அதெப்படி தமிழ் நாட்டில் இருக்கும் அத்துனை திரையரங்குகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்? அப்படி முடியும் என்றால் இவர்கள் தான் இம்முறையை கையாளுகிறார்களா? இல்லை இதற்கு முன் வேறு யாராவது இதே முறையை கையாண்டு அதில் வெற்றி பெற்ற வழியில் செல்கிறார்களா?. இப்படி இவர்கள் தியேட்டர்களை தங்கள் கைவசம் வைத்திருப்பதனால் என்ன லாபம்? ஓடுகிற படத்தைத்தானே அவர்களும் தியேட்டரில் ஓட்ட முடியும். ஓடாத படத்தை ஓட்டி அவர்களுக்கு என்ன லாபம்?.
cinima_hall2 மல்ட்டிபிள் தியேட்டர் ரிலீஸ் எந்த விதத்தில் தயாரிப்பாளருக்கு, விநியோகஸ்தருக்கு, தியேட்டர்காரர்களுக்கு உதவியா இருக்கிறது?. இல்லை இம்முறை சினிமாவை ஒட்டு மொத்தமாய் ஒழிக்கப் போகிறதா? தியேட்டர்களில் வைக்கப்படும் அதிக விலைக்கான காரணம் என்ன?

ஏற்கனவே சினிமா வியாபாரம் புத்தகத்தில் தமிழ் சினிமாவின் விநியோக முறைகள், வியாபாரங்கள் பற்றி தெரிந்திருப்போம். (தெரியவில்லையென்றால் சினிமா வியாபாரம் புத்தகத்தை வாங்கித் தெரிந்து கொள்ளூங்கள்). சினிமாவின் ரீடெயில் மார்க்கெட்டாக இருக்கும் தியேட்டர்களை பற்றியும், விநியோகஸ்தர்களுக்கும், இவர்களூக்குமான தொடர்புகள், மற்றும் வியாபார நிர்பந்தங்கள். வெற்றிகரமான தியேட்டராய் நடத்த எவ்வளவு போராட வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களை ஒரு குறுந்தொடராக பார்ப்போம்.
கேபிள் சங்கர்.

Nov 17, 2010

The Social Network

the-social-network-movie
மார்க் ஜூகர்பெர்க் 2003ல் ஹார்வேட் மாணவன் ஆறே வருடங்களில் கோடீஸ்வரன். எப்படி? இந்த கேள்விக்கான பதில் தான் இந்த திரைப்படம். கற்பனைகதையல்ல. நிஜத்தில் கண் முன்னே பார்த்து வளர்ந்து ஓங்கி நிற்கும் ஒருவனின் கதை. வழக்கமாய் நிஜ வாழ்க்கை கதைகள் அதிலும் சமகாலத்தில் வாழும் ஆட்களை பற்றிய கதைகளில் பெரிதாய் ஈர்பிருக்காது. அதிலும் வெறும் கம்ப்யூட்டர், வெப்சைட் என்று சுற்றி கொண்டிருக்கும் ஒருவனது கதையை சுவாரஸ்யமாக சொல்ல முடியுமா?என்று யோசிப்பவர்களும் முடியும் என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லில்யிருக்கிறார்கள் திரைக்கதையாசிரியரும், இயக்குனரும்.

the-social-network-20100927023625890_640w
கம்ப்யூட்டர் புலியான மார்க்கின் காதல் முறிவுக்கு பின் தான் படிக்கும் ஹாவர்ட்டின் லோக்கல் நெட்வொர்கை உடைத்து facemash.com என்றொரு இணையதளத்தை உருவாக்கி தங்கள் ஹாவர்டில் படிக்கும் மாணவிகளின் போட்டோக்கள் டேட்டாபேஸை திருடி மாணவர்களிடையே ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட, அதன் காரணமாக அவனை ஆறு மாதம் படிப்புக்கு தடை பெறுகிறான். ஒரு போதையான மது இரவில் ஹாவர்ட் ரோயிங் டீமிலிருக்கும் இரட்டையர்கள் தங்கள் சைட்டுக்கு வேலை செய்ய மார்க்கை அழைக்கிறார்கள்.

the-social-network-20100901014239966_640w
சிறிது நாட்கள் கழித்து மார்க்குக்கு பேஸ்புக் பற்றிய ஐடியா தோன்ற, அவனது நண்பன் எடுராடோவிடம் சொல்கிறான். அந்த இணைய தளம் மூலமாக ஹாவர்டிலிருக்கும் அத்துனை மாணவர்களையும் ஒன்றினைத்து அவர்களுக்குள்ளான தகவல்களை பரப்ப முடியும் என்று சொல்ல, எடுராடோ அவனுக்கு ஆயிரம் டாலர் கொடுத்து உதவுகிறான். சடுதியில் ஹாவர்டில் பிரபலமான பேஸ்புக்கின் வளர்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாய் பெரிய ஆலமரம் வளர ஆரம்பிக்க பிரச்சனையும் ஆரம்பிக்கிறது.
இரட்டையர்கள் சகோதர்களும், முதலாய் பணம் கொடுத்து உதவிய நண்பனும் மார்க் தங்களை ஒதுக்கிவிட்டு தங்கள் ஐடியாவையும் சுட்டு விட்டதாய் கேஸ் போட, அதில் எவ்வாறு மார்க் வென்றெடுக்கிறான் என்பதுதான் கதை. முழுக்க, முழுக்க, வசனங்களாலேயே நிரப்பப்பட்ட திரைக்கதை. அதிலும் மார்க் பேசும் சப்டைட்டிலில்லா ஸ்பீடுக்கு கூடவே ஓடி சில சமயம் நுரை தள்ளுகிறது.
the-social-network-20100901014236138_640w ஆனால் படத்தின் ஆரம்ப காட்சியில்  வரும்,  கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஷாட்டுகள் கொண்ட நீண்ட காட்சியை என்ன தான் சுவாரஸ்யமாய் டயலாக் நடிப்பு என்றிருந்தாலும் நம் இயக்குனர்கள் வைப்பார்களா? என்று தெரியவில்லை.. ஆனால் சரி சீன். இம்மாதிரியான நிஜ வாழ்க்கை கதைகளில் இருக்கும் சமகால காதல், பணம், துரோகம், செக்ஸ் போன்ற  சுவாரஸ்யங்களை வைத்து திறமையான திரைக்கதையமைத்த ஆரோன் சார்கின்னை பாராட்டத்தான் வேண்டும்.

The Social Network- Virtual
கேபிள் சங்கர்.

Nov 15, 2010

கொத்து பரோட்டா-15/11/10

தமிழ் சினிமாவில் உள்ள உதவி இயக்குனர்கள் எல்லாருமே கொதித்தெழுந்து போய் இருக்கிறார்கள். இயக்குனர் மிஷ்கின் மீதான கோபத்தோடு. போன வாரம் அவர் ஒரு பேட்டியில் இப்போதைய உதவி இயக்குனர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்க்மே கிடையாது. ஆயிரம் முறை சுயமைதுனம் அறிவு தானிருக்கிறது. அப்படிப்பட்டவனிடம் எப்படி ஒரு நல்ல சிறந்த படத்தை பெற முடியும்?. என்றும், தான் இதுவரை இயக்கிய இரண்டு படங்களும் குப்பை என்றும், நந்தலாலா போன்ற நல்ல படங்கள் வெளிவர மாட்டேனென்கிறது என்றும், சமீபத்தில் அவர் ஒன்னறை லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி வந்தேன் என்று எனக்கு தெரிந்து பக்கத்து வீட்டு நாய்க்குட்டியிடமிருந்து துண்டு பிரசுரம் வரை சொல்லி மாய்ந்துவிட்டார். உதவி இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அவர்களுக்கும் ஒரு மன்னிப்பு கடிதத்தை கொடுத்துவிட்டதாய் கேள்வி. அதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை என்றும் ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருக்கிறார். மிஷ்கின் புத்தகங்கள் படிப்பதை பற்றி சொன்ன விஷயம் சரியாக இருந்தாலும். அதை சொல்லிய விதம் தான் குடிக்கும் டீயில் தானே எச்சை துப்பி குடிப்பதற்கு சமம். சரி விடுங்க பாஸு.. அவரு இரண்டு ஹிட் கொடுத்திருக்காரு. அவ்வளவுதானே. நாம எவ்வளவு பேரை பாத்திருப்போம்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்று என் அப்பா இறந்த தினம். அதை குறித்து என் அப்பா பதிவை படித்து நேரிலும், போனிலும் எனக்கு ஆறுதல் சொல்லியும், உற்சாகபடுத்தியும், உத்வேகமெழுப்பிய நண்பர்களுக்கு மிக்க நன்றி..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார அரசியல் நேற்றைய பேப்பரில் ராமதாஸும், குட்டி ராமதாஸும் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்கள். இரண்டரை கோடியோ அல்லது லட்சமோ.. வ்ன்னியர்கள் இருந்தும் கூட ப.மா.க ஆட்சிக்கு வராதது ஜாதிக்காரர்கள் தவறு என்றும் தாங்களுடன் யார் கூட்டணி சேருகிறார்கள் என்று முக்கியமில்லை. தாங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணியென்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். இவர்கள் ஸ்டாராங்காக நினைக்கும் விழுப்புரத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பொன்முடி எந்த ஜாதி? என்று தெரியுமா? தாரமங்கலம் என்று நினைக்கிறேன்.. அங்கு வேலு என்றொருவர் இருக்கிறார். அவர் என்ன ஜாதி என்று தெரியுமா? ராமதாஸுக்கும்.. குட்டி ராமதாஸுக்கும்.. சரக்கடிகாமலயே ஒளறுகிறார்கள் என்று தோன்றுகிறது. அதனால் தானோ என்னவோ.. சரக்கு வாணாம்னு சொல்றாங்க போலருக்கு..

ராசாவின் ராஜினாமாவினால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் ப்ரச்சனை வரும் என்று ஜெ தரப்பு எதிர்பார்க்கிறது. அதை எதிர்பார்த்துதான் காங்கிரஸ் மேல் நிச்சயமாய் தவறு இருக்க வாய்ப்பில்லை என்பது போல அறிக்கைவிட்டிருக்கிறார். ராஜாவை தூக்க கலைஞர் அனுமதிக்க மாட்டார் என்ற ஜெவின் நினைப்பில் கலைஞர் மண்ணை போட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இனி அடுத்த ஜெவின் மூவ் என்ன என்பதை பார்ப்போம். தேர்தல் வர..வர.. செம இண்ட்ரஸ்டிங்தான்ங்க..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சோஷியல் நெட்வொர்க்கில் முடி சூடாத ராஜாவாக இருக்கும் பேஸ்புக் விரைவில் தங்களுடய நெட்வொர்கில் இமெயில் சர்வீஸ் ஆரம்பிக்க போகிறார்கள். ஏற்கனவே கூகுளின் ஜிமெயிலின் ஆர்குட்டுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக்கின் இமெயில் வரவால் ஜாம்பவான்களான கூகுள், ஹாட்மெயில், யாஹு போன்றவர்கள் கொஞ்சம் ஆடிப் போயிருப்பதாக சொல்லப்படுகிறது.. ஏனென்றால் பேஸ்புக்கிடம் இருக்கும் 500 மில்லியனுக்கு மேற்பட்ட டேட்டாபேஸ்தான் காரணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார செவிக்கினிமை
பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியாகியிருக்கும் “எங்கேயும் காதல்” பாடல்கள் கேட்டேன். மீண்டும் ஹாரிஸ் ஹிட்டடிப்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால் ஹாரிஸின் பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஏற்கனவே ஹிட்டான பாடல்களை, தமிழோ, ஆங்கிலமோ, எஸ்கிமோ பாஷையோ.. சரியான கலவையில் போட்டுவிடுகிறார். இதோ இப்படத்தில் நெஞ்சில் நெஞ்சில் என்று ஒரு பாட்டு கேட்டவுடன் பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது..  டெம்போ குறைந்த தில்சேரே.. நங்கை என்றொரு பாட்டு.. அப்படியே மைக்கேல் ஜாக்ஸன்.. கேட்டு பாருங்கள். நிச்சயம் ஹிட்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார டிட்பிட்ஸ்
பிரபுதேவாவின் எங்கேயும் காதல் இன்னும் வெளியாகவில்லை. அடுத்த படம் ஆரம்பித்துவிட்டார். விஷால் ஹீரோ, தெலுங்கில் கோபி சந்த நடித்து ஓடிய சவுரியம் என்கிற படத்தின் ரீமேக் என்கிறார்கள். பார்ப்போம்..

கரண் நடித்து விரைவில் வர இருக்கும் சூரன் படத்தில் ஒரு இண்ட்ரஸ்டிங்கான விஷயம என்னவென்றால் அவருக்கு காதல் உண்டு, ஆனால் டூயட் கிடையாதாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார ப்ளாஷ்பேக்
ரஹ்மான் வந்து தமிழ் சினிமாவை வைரமுத்துவுடன் கலக்கிக் கொண்டிருந்த நேரம். ரஹ்மானின் இசையில் வார்த்தைகள் புரியாமல் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு உச்சத்திலிருந்த காலத்தில் இப்பாடலின் வரிகளுக்காக மிகவும் ரசிக்கப்பட்டதாகும். ஸ்ரீனிவாசின் சுகந்த குரலில் அருமையான காம்போசிஷனினில் அமைந்த பாடல். பின்னர் இதே பாடலை ஹாரிஸ் சுட்டு தாம் தூம் படத்தில் போட்டது வேறு கதை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்
பாலாஜியின்
அழகான ஒரு குறும்படம்.. முக்கியமாய் சிறுவர்களை மையமாய் வைத்து எடுக்கப்பட்ட படம். அவர்களை பயன்படுத்திய விதமும், படமாக்கிய விதமும் நிச்சயம் ஒரு  நல்ல இயக்குனரை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை கொடுக்கும் ப்டம்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
எக்ஸலண்ட் விடியோ.. விளம்பரம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வாரம் பூராவும் தீபாவளி மகிழ்ச்சி செய்தியாக பேசிக் கொண்டாடியது.. கோவை சிறுவர்கள் கொலை குற்றவாளி என்கவுண்டரில் போடப்பட்ட்துதான். பெரும்பாலான மக்கள் வரவேற்று நிஜமாகவே தீபாவளியை கொண்டாடினார்கள். இன்னொரு பக்கம் அவன் குற்றவாளி என்று முடிவு செய்யாமல் அவனை ப்ளான் செய்து வேறு யாருடய கம்பெல்ஷனில் போட்டுவிட்டார்கள் என்று கும்பல். இப்படி தப்பு செய்தவன் எல்லாத்தையும் போடறதுன்னா இருக்கிற அத்துனை அரசியல் வாதிங்களை என்ன செய்யலாம் என்று ஒரு கும்பலும் பேசிக் கொண்டிருந்தாலும். வெகுஜன மக்களுக்கு தீர்ப்பு உடனே வந்தது பெரு மகிழ்ச்சியாகவே தெரிந்தது. அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். இது அரச தீர்ப்பு.. அவ்வளவுதான். அரச தீர்ப்புகு பின் ஆயிரம் தெய்வ தீர்ப்பு இருக்கலாம். அதையெல்லாம் ஆராயப்படாது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் மணம் இந்த வாரத்திலிருந்து டாப்20 பதிவுகளை வாராவாரம் தெரிந்தெடுத்து கொடுக்க போகிறது என்று ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் இந்த வாரம் என்னுடய பதிவு ஆறாவது இடத்தில் இருக்கிறது. சந்தோஷம். ஆனால் அவர்களின் தெரிவு செய்யும் முறையில்  கொஞ்சம் பிரச்சனையாகத்தான் இருக்கும் போலருக்கு.. ஏனென்றால் பின்னூட்டஙக்ளை வைத்தும், ஹிட்ஸுகளை வைத்தும், ஓட்டுக்களை வைத்தும் தான் லிஸ்ட் எடுக்கிறார்கள் என்கிற பட்சத்தில் எனக்கெல்லாம் தமிழ் மணத்தில் பத்து ஓட்டுக்களுக்கு மேல் விழுவதே இல்லை. அப்படியிருக்கு ஓட்டை வைத்து செலக்ட் செய்வதும், பின்னூட்டங்களை வைத்து தெரிவு செய்வதும் அவ்வளவு  சரியாக இருக்காது என்று என் எண்ணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வாரம் படித்தது
போட்டோகிராபி பற்றி தெளிவாய் தமிழில் ஒரு ஃபோரமில் படிக்க நேர்ந்தது. அதிலிருந்து தொடர்ந்து அந்த போரமில் இயங்கி வருகிறேன். புதுசாய் ஆரம்பித்திருக்கிறார்கள். இண்ட்ரஸ்டிங்.. http://udanz.com/photography/index.php?topic=11.0

இப்போதெல்லாம் இணையத்தில் தான் நல்ல சிறுகதைகள் படிக்க கிடைக்கிறது. அதில் சமீபத்தில் படித்த மூன்று கதைகள் உங்களுக்காக
இரா.முருகனின் ரங்கா சேட் http://www.eramurukan.in/tamil/magazines.php
பா.ராகவனின் தமிழ்பேப்பர் தீபாவளி மலர் சிறுகதை 108 வடைகள் http://www.tamilpaper.net/?cat=111 
பதிவர் விந்தை மனிதனின் அஸ்வதாமாக்கள் சாவதில்லை. மகாபாரதகதையின் இன்னொரு பார்வை http://vinthaimanithan.blogspot.com/2010/11/blog-post.html. இவ்மூன்று கதைகளுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படித்துவிட்டு அவர்களிடம் சொல்லுங்கள். அஹா.. தோ…பார்டா.. சூரியனுக்கே டார்ச்சா? என்கிற ரீதியில் எல்லா எளக்கியவாதிகளும் சேர்ந்து பஸ்ஸோ.. ட்ரைனோ விடுபவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். நல்லா ,,,,,,,,,,,….
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார ட்வீட் 
வெற்றியோ தோல்வியோ தலையில ஏத்திககதே.. பின் நாட்களில் அது ரெண்டும் இல்லாமயே தலை கனத்து போயிரும்
சில சமயங்களில் எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்வதை விட எப்படி செய்யக்கூடாது என்று கற்பது கட்டாயம் என்று தோன்றுகிறது.
என்னை ட்வீட்டுகளில் தொடர http://twitter.com/#!/sankara4
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார தத்துவம்
மற்றவர்கள் செய்யும் தவறிலிருந்து  உன் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்.  ஏனென்றால் உன்னால் எல்லா தவறையும் செய்து பார்த்து கற்றுக் கொள்ள முடியாது.- ஜான் கென்னடி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
பெண்களின் வாழ்க்கை மிகவும் கடுமையானது. காலையில் துணிகளை துவைக்கிறாள், மதியம் துணிகளை காய வைக்கிறாள். மாலையில் துணிகளை அயர்ன் செய்து வைக்கிறாள். இரவில் துணிகளை அவிழ்க்கிறாள். நடு இரவில் துணிகளை தேடுகிறாள்..ம்ஹும்..

ஒரு பெண்கள் விடுதியில் கரண்ட் கட் ஆகிவிட, வார்டன் உடனடியாக ஈ.பிக்கு போன் செய்தார் உடனடியாக கரண்ட் வர செய்யுங்கள் அல்லது உங்கள் ஆட்கள் ரெண்டு பேரை வரச்சொல்லுங்க.. இங்க இருக்கிற மெழுகுவர்த்தியெல்லாம் காணம்.

ஓரு பழைய ஜோக்.. குழந்தை தன் அப்பா அம்மாவின் தேனிலவு போட்டோவை காட்டி.. அப்ப நான் எங்க இருந்தேன்? என்று கேட்க.. அப்பா.. போகும்போது என்கிட்ட இருந்தே.. வரும்போது அம்மா கிட்ட இருந்தே என்று சொல்ல.. அம்மா ரகசியமாய்.. மகனிடம்..”அப்பா பொய் சொல்வாருடா.. செல்லம்.. நீ போகும் போதே அம்மாகிட்டதான் இருந்தே செல்லம்” என்றாளாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்.

Nov 13, 2010

உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ..?

30 1
பத்திரிக்கைத்துறை நண்பர் ஒருவர் அவரை சந்திக்க அழைத்திருந்தார். அவரை சந்திக்க டி.நகர் நோக்கி போய்க் கொண்டிருந்த போது போன் அடித்தது. நண்பர்தான்

“சார்.. எங்க இருக்கீங்க?”

“டி.நகர் பனகல் பார்க்கிட்ட இருக்கேன் நண்பரே”

”அப்ப 30 மினிட் வந்திருங்க..” என்றார் எனக்கு புரியவில்லை.. பனகல் பார்க்கிலிருந்து நடிகர் சங்கம் போவதற்கு எதற்கு அரை மணி நேரம்? என்று யோசித்தபடி, ‘நண்பா.. அதுக்கு எது அரை மணி நேரம்?” என்று கேட்டதும். 

‘சரி ஓகே நீங்க நடிகர் சங்கம் வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். நான் நடிகர் சங்கம் போனதும் அதற்கு நேர் எதிரே ஒரு பெரிய போர்ட் வைத்திருந்தார்கள். 30 MINUTES என்று. அதன் வாசலில் நண்பர், பத்திரிக்கையாளர் பாலா நின்றிருந்தார். இப்போது புரிந்துவிட்டது அவரை இதைத்தான் சொல்லியிருக்கிறார் என்று. என்ன இடம்ணே இது? என்று கேட்டபடி உள்ளே போனேன். அங்கே அழைத்துச் சென்று மேலாளரை அறிமுகப்படுத்தினார். அவர் சொன்ன கான்செப்ட் செம இண்ட்ரெஸ்டிங். அது மட்டுமில்லாமல் யுனிக்காகவும் இருந்தது.
30 3 பெரும்பாலான பகல் நேரங்களில் பிஸினெஸ் செய்யும் நண்பர்கள், மற்ற துறை நண்பர்கள் எங்காவது ஒரு பொது இடத்தை சொல்லி அங்கிருக்கும் டீக்கடை வாசலிலோ, அல்லது ஒரு ஹோட்டலில் காபி சாப்பிட்டுவிட்டு அதன் வாசலிலோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். பெரிய அளவில் பிஸினெஸ் செய்பவர்கள் கூட ஸ்டார் ஓட்டல் லவுஞ்சில் வந்திருந்து நண்பர்களுடன் காபியோ, டீயோ அருந்தியபடி மீட்டிங்கை முடித்துவிட்டு போவதை பார்த்திருப்பீர்கள். இந்த 30 மினிட்ஸ் ஒரு மத்யதர நண்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். 
 30 6  இங்கு அரை மணி நேரத்திற்கு உட்கார்ந்து பேச பத்து ரூபாய் தான் வாடகை. நல்ல அட்மாஸ்பியர், டீசண்ட்டான ஆட்களின் வருகை, அரை மணிக்கொரு காபி, டீ, அல்லது ஜூஸ். என்று அட்டகாசப் படுத்துகிறார்கள். உஙக்ளுக்கு இதை விட ப்ரைவஸி வேண்டுமென்றால் தனி கேபின்கள் கூட தருகிறார்கள். அதை தவிர மெம்பர்க்ளுக்கு மதிய சாப்பாடு வேண்டுமென்றால் ஐம்பது ரூபாய்க்கு சாப்பாடும், மற்ற விருந்தினர்களுக்கு அறுபது ரூபாய்க்கு தருகிறார்கள். இதில் என்ன ஒரு விஷேஷம் என்றால் நிறைய பார்க்குகளில் மார்கெட்டிங், சேல்ஸ் போன்றவற்றில் வேலை செய்யும் நண்பர்கள் பார்குகளில் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். இவர்கள் வெளியிலிருந்து கொண்டு வரும் உணவை கூட அனுமதிக்கிறார்கள்.
30 5 மஸாச், பேன்குவிட் ஹால், தனி கேபின்கள், கேட்டவுடன் கிடைக்கும் சர்வீஸ் ஆட்கள், உங்கள் பொருட்களை வைத்துக் கொள்ள வாலட், குளிப்பதற்கான சுத்தமான டாய்லெட், என்று அட்டகாச படுத்திருக்கிறார்கள். வாசலில் மிக அருமையான இரண்டு ரிஷப்ஷன் பெண்கள் கண்களுக்கு குளூமையாய்.

நிச்சயம் இதை விளம்பரம் செய்ய எழுதவில்லை. பல சமயங்களில் நண்பர்களை சந்தித்து ஒரு அரை மணி நேரம் பேசுவதற்கு பல இடங்களை யோசித்து, காபி டேவிலோ, அல்லது லோக்கல் டீக்கடையில் ஐம்பது ரூபாயிலிருந்து, இருநூறு ரூபாய் வரை செலவு செய்து சந்திப்பை நடத்திவிட்டு போகும் நண்பர்களுக்கும், அர்ஜெண்டாக ஒரு வேலைக்கு சென்னைக்கு வந்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு குளித்துவிட்டு போக வேண்டும் என்று இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாய் இருக்கும் என்று தோன்றியது. ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியுள்ளது. இப்போது ஒரு ஸ்பெஷலைஸ்டு மார்டன் சலூன் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. ஒரு முறை சென்று வாருங்கள். அப்புறம் சொல்வீர்கள். மிக குறைந்த விலையில் மெம்பர் ஷிப் கிடைக்கிறது. 
30MinutesFinal பத்து ரூபாய்க்கு அருமையான அரை மணி நேரம். இது விளம்பர பதிவல்ல, நான் போன போது உணர்ந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான். அங்கே இருந்த இரண்டு மணிநேரத்தில் சில பழைய நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் சொன்ன விஷயம் உட்லண்ஸ் டிரைவ் இன் போன பிறகு நிறைய பேர் செட்டில் ஆகியிருக்கும் இடம் என்றார். ஒரு குட்டி பதிவர் சந்திப்பை நடத்த சரியான இடம்..
http://www.passwordgroup.com/service.html

Nov 10, 2010

உத்தமபுத்திரன்

uthama-puthiran-2763 தனுஷ், ஜவஹர், விவேக், தமிழ் சினிமாவின் சிறந்த லூசுப் பெண் ஜெனிலியா மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமாவின் பிரபல், பிரபலமில்லாத நடிகர் நடிகைகள் என்று குழாமிட்டு வெளிவந்திருக்கும் படம். ஏற்கனவே தெலுங்கில் ஹிட்டானதால், ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல், சுடச்சுட வாங்கி ரீமேக்கியிருக்கிறார்கள். இம்மாதிரியான ரீமேக்குளை செய்யும் போது ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும், அங்கே அந்த படத்தை நடித்தது யார்? அங்கே அப்படம் ஹிட்டானதற்கான காரணம் என்ன? நேட்டிவிட்டி எந்த அளவிற்கு நமக்கு ஒத்து வரும் என்பதை எல்லாம் யோசித்திருந்தால் ஒரு பதினைந்து கோடி மிச்சமாயிருக்கும்.

பாக்ய்ராஜ் தலைமையில் உள்ள ஒரு பெரிய கூட்டு குடும்பத்தில் உள்ள தன் முறை பெண்ணுக்கு அவனுடய காதலனுடன் சேர்த்து வைத்ததால் வீட்டை விட்டு தனியே இருக்க வேண்டியதாகி போய்விடுகிறது தனுஷுக்கு. இதற்கு இன்னொரு பிரச்சனை தன் நண்பனின் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள் என்றதும் அப்பெண்ணை கடத்துகிறார்கள். ஆனால் கல்யாண மண்டபம் மாறியதால் மணப் பெண்ணும் மாறிவிட, செய்வதறியாது நிற்கும் நேரத்தில். மணப்பெண் தனக்கு அந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை என்று தான் புதுக்கோட்டையில் உள்ள தன் மாமா வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்ல, இதனிடையே இருவருக்கும் காதல் வர, ஜெனிலியாவை தன் வீட்டிலேயே தனுஷ் தங்க வைக்க, இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று குடும்பமே நினைக்கும் போது ஜெனிலியா கடத்தப்படுகிறார். காரணம் ஜெனிலியாவின் சொத்துக்காக இரண்டு மாமன்களுக்கிடையே லடாய். இரண்டு பேருக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆகாது. இருவரையும் சமாளித்து தனுஷ் எப்படி ஜெனிலியாவை அடைகிறார் என்பதை நீட்டி முழக்கி இரண்டேமுக்கால் மணி நேரம் சொல்லியிருக்கிறார்கள்.
uthama-puthiran-movie-stills-01 முதல் பாதி முழுவதும், தனுஷ், ஜெனிலியா, மற்றும் தனுஷ் குடும்பட்தினர் என்று ஒரே பாசக்காரக் குடும்பமாய் போவதால் ஒன்னும் பெரிசா சொல்றதுக்கில்லை. ஜெனிலியா வீட்டுக்காரங்களிடம் விவேக்குடன் தனுஷ் சேரும் போது தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டான மூச்சே வருகிறது. விவேக் வழக்கமான வசனக் காமெடியிலிருந்து மெல்ல ஆக்‌ஷன் காமெடிக்கு வந்திருக்கிறார். அதிலும் தனுஷ் செய்யும் உட்டாலக்கடி தில்லாலங்கடி வேலையை பார்த்து ஃபீல் செய்யும் போதெல்லாம் நெஞ்சம் மறப்பதில்லை மியூசிக் வரும்போது நிச்சயம் சிரிக்காமல் இருக்க முடியாது.

தனுஷ் குடும்பத்தில் ஒரு கும்பல் என்றால். இந்த பக்கம் ஜெனிலியா மாமன் குடும்பத்தில் ஒரு நடிகர் கும்பல். எல்லார் பெயரையும் சொல்லி முடிப்பதற்குள் தாவூ திர்ந்துவிடுமாதலால் முடிஞ்சா தியேட்டல படம் பார்க்கும் போது தெரிஞ்சிக்கோங்க.. இந்த குடும்பத்தை ஏதோ கவுண்டன் குடும்பம் என்று சொல்லி ஒரு மாதிரி நோகடிச்சிருக்காங்க.. உக்கார முடியல. டிவி சீரியல் கணக்கா லைனா ஆளாளுக்கு வரிசை கட்டி வந்து சீனுக்கு சீன் திருப்பம் தர்றோம்னு காமெடி செய்யற காமெடிய காண சகிக்க கண் கோடி வேண்டும்.
விஜய் ஆண்டனி நடிக்க போயிட்டதினால பாட்டு போடறதில சுரத்தில்லாம இருக்காரு போல.. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு பளிச்.. தனுஷுக்கு இந்த மாதிரி படங்கள் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

உத்தமபுத்திரன் - சோப்ளாங்கி
கேபிள் சங்கர்