காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று அவர்களுக்குள் வருவது. இன்னொன்று, காதலர்களுக்கு மற்றவர்களால் வருவது. இதில் ரெண்டுமே இருந்தால் எப்படியிருக்கும்? எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் சார் ஜெஸ்ஸிய காதலிச்சேன்? என்று சிம்பு படம் முழுவதும் கேட்கும் கேள்வி எல்லா இளைஞர்களும், இளைஞிகளும் அவர்களுக்குள்ளாகவோ, அலலது நெருங்கிய நண்பர்களிடமோ கேட்டிருப்பார்கள். காதலின் சுகத்தையும், குழப்பத்தையும், அதனால் ஏற்படும் வலியையும் மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். இஞினியரிங் படித்துவிட்டு சினிமா துறையில் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து ஒரு படைப்பாளியாக ஆசைப்படும் கார்த்திக். அவன் குடியேறும் வீட்டின் ஓனரின் மகள் ஜெஸ்ஸி. மலையாளி. polaris வேலை பார்ப்பவள். பார்த்தவுடன் கார்திக்கின் மனதில் ப்ப்பச்சக் என்று ஒட்டிவிட, வழக்கமாய் எல்லா இளைஞர்களும் செய்வதையே கார்த்திக்கும் செய்ய, ஒரு சமயம் இது எல்லாம் ஒத்து வராது. என்று சொல்லிவிட்டு, ப்ரெண்டாக மட்டுமாவது இருப்போம் என்று ஒப்பந்தம் போட்டு, ஒப்பந்தம் போடுவதே உடைப்பதற்காகத்தான் என்று காதல் வயப்பட்டு, வீட்டை நினைத்து பயந்து,குழம்பி, தானும் குழம்பி, கார்திகை...
Comments
‘போட்டோ’ கூட பேசறது.., ‘போன்’ கூட பேசறது... மாதிரி ‘சினிமா’தனமான சீன் இல்லாம... ஒரு 12-13 நிமிசத்துல முடிஞ்சி இருந்தா... இன்னும் effective-ஆ இருந்து இருக்கும்-ஙறது என்னோட அபிப்ராயம்.
17 நிமிச படத்துக்கு... ஏகப்பட்ட கோணங்கள்-ல shot வச்சி கலக்கி இருக்கீங்க...!!!
அதுக்காக... செந்தில்-க்கு ஒரு சபாஷ். ஹீரோ-வை சரியா வேலை வாங்காததுக்கு.. உங்களுக்கு ஒரு சின்ன குட்டு...!! :-))))
தலைக்கவசம் அணிவது, சுய குறிப்புகளை வைத்துக் கொள்வது போன்ற அதிமுக்கியம் வாய்ந்த தகவல்களையும் தருகிறது உங்கள் குறும்படம்.
ஆனால் உண்மையில் 4 நிமிடம் முடியும் முன்பே நான் கணித்து விட்டேன். ஏனெனில், அந்த போட்டோவில் இருக்கும் படத்தை காட்டவே இல்லை என்பதால் எனக்குள் அந்த முடிவு ஏற்பட்டது. ஆனால், நல்லா இருந்திச்சு.
மருத்துவமனையில் மருத்துவர் சிவாவிடம் அவரின் மனித நேயத்தை பற்றி சொல்லும் போது சிவா யாரோ யாரிடமோ எதையோ சொல்வது போல் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் அவருக்கு ஒரு குளோஸ்-அப் இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
புதுமனைவியாக நடித்தவர் ஆசை, காதல், தவிப்பை ஓரளவு நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் நினைக்கிறேன்.
கேட் வழியே சினிமா தியேட்டர்,'மீசையும் ஆளையும் பாரு' என்று கூறும் போது சட்டென்று வாய்க்கும் கண்களுக்கும் காட்சி மாறுவது என கோணங்கள் படம் பிடித்த இடம் எல்லாம் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துகள்..!