Thottal Thodarum

Jan 10, 2012

சென்னை பஸ், புகார், புத்தகக் கண்காட்சி

சென்னை அரசு பஸ்சுகளில் பயணம்  செய்து வெளிவருவது ஒருவிதமான தவம் என்று என் நண்பர் அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் பல. முக்கியமாய் கண்டக்டர்களின் எரிச்சலூட்டும் நடவடிக்கைகள். அவர்களின் நடவடிக்கைகளுக்கு கோபப்படாமல் அமைதி காத்து வந்தால்தான் ப்ரெஷர் இல்லாமல் வாழ முடியும் என்பார். 


சமீபத்தில் ரஞ்சனி பிரசன்னா என்கிற கல்லூரி மாணவி, நம் கேட்டால் கிடைக்கும் குழு உறுப்பினர். அவர் துரைப்பாக்கத்தில் வேலை செய்கிறார்.  தினமும் ஜெயின் காலேஜிலிருந்து கிளம்பி, டைடல்பார்க்கில் இறங்கி ரயிலைப் பிடிப்பாராம். கேளம்பாக்கத்திலிருந்து வரும்19பி, 21 H, மற்றும் பெரும்பாலான பஸ்கள் முன்பெல்லாம் டைடல் பார்க்கில் நிற்காதாம். அதனால் அவர் T51ல் பயணிப்பாராம். சமீப காலமாய் 19பியும் டைடல் பார்க்கில் நிற்க ஆரம்பித்ததாம்.

இரண்டொரு நாள் முன்பு 19பி பஸ்ஸை பிடித்து டைடல் பார்க்குக்கு டிக்கெட் கேட்டிருக்கிறார்.  அதற்கு அவர் அங்கெல்லாம் நிற்காது என்றும், வரும் சிக்னலிலோ, அல்லது டைடல் பார்க்குக்கு அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிக் கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார். அதற்கு ரஞசனி தான் தினமும் இந்த வண்டியில் பயணிப்பதாகவும், தினமும் டைடல் பார்க்கில் நிற்கும் வண்டி இன்று மட்டும் ஏன் நிற்காது என்று வாதாடியிருக்கிறார். கண்டக்டரும் விடாமல் நிறுத்த முடியாது என்று வாதிட, ரஞ்சனிக்கு அரசு போக்குவரத்து பற்றி புகார் செய்யும் நம்பர் நினைவுக்கு வந்திருக்கிறது. என்றோ ஒரு நாள் பார்த்த அந்த நம்பரை தன் செல்லில் சேமித்து வைத்திருக்க, உடன் அந்த எண்ணுக்கு தொலைபேசியில் கூப்பிட்டிருக்கிறார். எதிர் முனையில் பேசியவர் போனை கண்டக்டரிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரோ அதெல்லாம் பேச முடியாது என்று சொல்ல, எதிர்முனை ஆள் வண்டியின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரையும், வண்டி தற்போது பயணிக்கும் இடத்தையும் கேட்டிருக்கிறார். அப்போது பஸ் கந்தன்சாவடியில் பயணித்துக் கொண்டிருப்பதை சொல்லியிருக்கிறார். எதிர்முனை நபர் தான் இன்னும் சிறிது நேரத்தில் லைனில் வருவதாய் சொல்லி இணைப்பை துண்டித்திருக்கிறார். 

சிறிது நேரத்தில் வண்டியில் இருக்கும் ஜி.பி.எஸ் சிஸ்டத்திலிருந்து அந்த நபர் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். டிரைவருக்கு எதுவும் புரியவில்லையாம். அவருக்கு இது முதல் முறை அனுபவமாய் இருக்கும் போலிருக்கிறது. ஏன் வண்டியை டைடல் பார்க்கில் நிறுத்துவதில்லை என்றதும், அவர் இல்லையே சென்ற ட்ரிப்பில்கூட டைடல் பார்க்கில் நின்றுதானே வந்தோம். என்றதும், அப்படியானல் கண்டக்டர் ஏன் அப்படி சொன்னார் என்று கேட்டார். கண்டக்டரிடம் பேச்சே இல்லை. பேஸ்த் அடித்து போயிருந்தார். உடனே டிரைவர் கண்டக்டருக்கு சப்போர்ட்டாய், அவர் ரூட்டிற்கு புதுசு என்றும், அதனால் வந்த குழப்பம் தான் என்றும் சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கிறார். பின்பு புகார் கொடுத்த ரஞ்சனியை அழைத்து அவரும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.  பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் ரஞ்சனியையே பார்த்திருக்கிறார்கள். நிறைய பேர் அந்த புகார் எண்ணையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு சம்பந்தப்பட்ட விஷயமென்றால் எல்லாம் தாறுமாறாகத்தான் இருக்கும் என்ற ஒரு பொது புத்தி எல்லாருக்கும் உறுதியாகிக் கொண்டிருக்கும் வேளையில், அரசு இயந்திரம் சிறப்பாகவும் செயல்படுறது என்பதை சொல்ல வேண்டியது நம் கடமையாகிறது. அது மட்டுமில்லாமல் தானாக கிடைக்காவிட்டால் கேட்டால் கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வின் மூலம் நம்மால் உணர முடியும்.. ஸோ.. கேட்டால் கிடைக்கும்




சென்னை போக்குவரத்துக் கழகத்தின் புகார் எண்கள்

9884301013,9445030516,9383337639

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

புத்தகக் கண்காட்சி நாள் –5
Photo0450
 நேற்றைய கண்காட்சி காத்தாடியது. ஞாயிறன்று இருந்த கும்பலில் ஐந்து சதவிகிதம் கூட இருக்காது போலிருந்தது. வழக்கம் போல் கே.ஆர்.பி இந்த முறையும், கண்காட்சிக்கு முன் ப்ளாட்பாரத்தில் இருக்கும் புத்தகங்களை கலைத்துப் போட்டுக் கொண்டிருந்தார். லக்கியும், அதிஷாவும் வந்திருந்தனர். வேடியப்பனும் வியாபாரம் சுமார்தான் என்றார். பத்மா வந்திருந்தார். என் புத்தகத்தை வாங்கிக் கொண்டு மேலும் சில புத்தகங்களை பார்க்க கிளம்பினார். காலச்சுவட்டில் ரவுண்ட் அடிக்கும் போது ஜி. நாகராஜனின் மொத்த தொகுப்பையும் காட்டி, இதைப் படிங்க என்றார். ஏற்கனவே படித்துவிட்டேன் என்று சில பல புத்தகங்களை தேடினேன். நல்ல புத்தகங்களாய் இருந்தாலும் விலை அநியாயமாய் இருந்தது. இருநூற்றிச் சொச்ச பக்கங்கள் உள்ள புத்தகம் 250 ரூபாய் என்றிருந்தது. அதே போலத்தான் அசோகமித்ரனின் குறுநாவல்களை கிழக்கு பக்கத்திற்கு ஒரு ரூபாய் என்ற ரேஞ்சில் விலை வைத்திருந்தார்கள். சினிமா வியாபாரம் புத்தகம் பெரும்பாலும் எல்லாக் கடைகளிலும் விற்பனையாகிக் கொண்டிருந்தது கிழக்கின் மார்கெட்டிங் பலத்தையும், புத்தகத்தின் ரீச்சையும் காட்டியது சந்தோஷமாய் இருந்தது. ஒரு வழியாய் அங்கு டாய்லெட் இருக்கும் இடத்தை கண்டு பிடித்துவிட்டோம். பாப்கார்ன் விற்பதற்கு எல்லாம் ஐந்தாறு போர்ட் வைத்திருப்பவர்கள் இதற்கு இருளில் தனியாய் ரெண்டு போர்ட் வைத்திருப்பது அநியாயம். டாய்லெட்டில் சுத்தம் என்பது கேட்கக்கூடாத விஷயமாய்த்தான் இருந்தது. நேற்றிலிருந்துதான் என் பர்சேஸ் ஆரம்பித்திருக்கிறது.  மலையாள மனோரமாவை எதிர்த்து முன்நாள் நடந்த போராட்டத்தின் எதிரொலியாய் அவர்களது ஸ்டால் மூடப்பட்டிருந்தது.

இதுவரை வாங்கியுள்ளது

குற்றியலுலகம் - பா.ராகவன் -40 - மதி நிலையம்
மங்கலத்து தேவதைகள் - வா.மு.கோமு -260- உயிர்மை
எட்றா வண்டிய - வா.மு.கோமு-120- உயிர்மை.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

23 comments:

அசோகபுத்திரன் said...

பத்மா சொன்ன காகித ஓடத்த கண்டே புடிக்க முடியல சார்... உங்ககிட்ட இருந்தா லின்க் குடுங்களேன்.. பாலகுமாரனும் சுஜாதாவும் எங்க சீப்பா கிடைக்கும்னு சொன்னீங்கன்னா அடுத்த ரவுண்டு போகும்போது வசதியா இருக்கும்...ப்ளீஸ்
உங்ககிட்ட இவ்வளவு ஈஸியா பழகமுடியும்னு சத்தியமா நினைக்கல சார்...அடிக்கடி சந்திக்க வேண்டும்னு நினைக்க வைக்கும்படியா இருந்தது உங்கள் சந்திப்பு..

Cable சங்கர் said...

http://kakithaoodam.blogspot.com/ பத்மாவின் ப்ளாக்.

நன்றி.. நிச்சயம் சந்திப்போம் அசோகப்புத்திரன்.

Cable சங்கர் said...

பாலகுமாரன் சீப்பா கிடைக்க மாட்டார். சுஜாதா நிச்சயமா கிடைக்க மாட்டார். இதெல்லம பழைய ஸ்டாக். அதனால கிடைச்சாரு..

arul said...

nice post good message

goundamanifans said...

//ஒரு வழியாய் அங்கு டாய்லெட் இருக்கும் இடத்தை கண்டு பிடித்துவிட்டோம்.//

சபாசு!!

dsfs said...

Super.

ஆர்வா said...

கேட்டால் கிடைக்கும் என்ற அமைப்பு இவ்வளவு வீரியமாய் இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.. சங்கர்சார்... ரெஸ்டாரண்டிலும், தியேட்டரிலும் நீங்கள் உங்களுக்கான நியாயமான பிரச்சனைகளை எழுதும் போது ஆச்சர்யமாய் இருக்கும். மற்றவர்களால் கூட இதுபோல செய்ய முடியுமா என.. ஆனாலும் உங்கள் உறுப்பினர்களில் ஒருவரான ரஞ்சனி இப்படி ஒரு துணிச்சலான காரியத்தை செய்திருக்கும் போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நீங்கள் எதற்காக இந்த அமைப்பை துவக்கினீர்களோ அது வீண்போகவில்லை.. ஹாட்ஸ் ஆஃப்.. யாரவது ஒருவர் இதுபோல் துணிந்தால் கூட அது வெற்றிதான். அந்த வகையில் இது நிச்சய்ம் பெரிய சாதனைதான். வருங்காலத்தில் இந்த அமைப்பு இன்னும் பெரிய வகையில் போராடினால் மிகப்பெரிய சக்தியாய் உருவெடுக்கும் என்பதில் நிச்சயம் சந்தேகமே இல்லை. இந்த அமைப்புக்கு உதவ சில நியாயமான அதிகாரிகள் இருப்பார்களே ஆனால், இது மிகப்பெரிய இயக்கமாய் மாற வாய்ப்பு உண்டு.. அதற்கான முயற்சியை துவக்குங்கள் சார்.. வாழ்த்துக்கள்.. உடனடியாய் ஃபேஸ்புக்கில் இணைகிறேன்

Blackpearl Logics said...

அந்த அரசு போக்குவரத்து பற்றி புகார் செய்யும் நம்பர் யாரிடமாச்சும் இருந்தா கொடுங்க புண்ணியமா போகட்டும் .

D Govardan said...

Hi,

I somehow get a feeling that I have read this 'bus incident' somewhere.......quite sometime back.......

D Govardan

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

Thirumalai Kandasami said...

Sankar ji,,

This is very old post(almost 1.5 years old) and I'm not sure whether it's true or not.Probably she may cheated you, by of giving wrong information.

I request all ,ask is a good concept but don't try to spoil it for your advertisement.


Have a look at this link,,,same story in english,,Tue, March 23, 2010 7:42:32 AM

http://groups.yahoo.com/group/b4186/message/2129?o=1&d=-1

Muthuvel Sivaraman said...

மங்கலத்து தேவதைகள் !
Same pinch - (தமிழில் எப்படி சொல்வது)

சின்ன பொன்னு ஆப்பில்னு முதல் அத்தியாயமே ITEM சாங்கோட அதகளமா ஆரம்பிக்கிறார் வா.மு. கோமு.


BOOK MAPIA

பதி said...

இதே bus சம்பவம் ஆங்கில வடிவில் (இடம், பெயர் மட்டும் வேறு):

http://hrlink.in/topics/complaint-cell-for-mtc-bus-in-chennai

rajamelaiyur said...

நானும் வரணும்னு நினைக்கிறன் .. பார்ப்போம்

அத்திரி said...

அண்ணே மாநகரப்பேருந்து குறித்த புகார்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கொடுக்கிறாங்க அண்ணே

Anonymous said...

Cable,
Anadha bus mattera padichadhum romba sandhoshama irundhuchu.
Commentsa padichadhum andha sandhosham busssssssssnu poiduchu.
Ungalayum eamathittangale. :)

வவ்வால் said...

கேபிள்,

புத்தக சந்தையில் உங்க "சரக்கு" எல்லாம் நன்றாக விற்பனையாவதற்கு வாழ்த்துகள்!

அந்த பஸ் கதை எனக்கும் படிச்ச நினைவே, மத்தவங்களுக்கும் அதே ஃபீலிங் :-))

// பத்மா வந்திருந்தார். என் புத்தகத்தை வாங்கிக் கொண்டு மேலும் சில புத்தகங்களை பார்க்க கிளம்பினார். //

அவங்களை எல்லாம் தெரிஞ்சு வச்சு இருக்கீங்க ,உங்க ரீச் உண்மையிலே ரொம்ப அதிகம் தான் போல :-))

ranjjan said...

oh my god.. edhathaan nambaradhu

வவ்வால் said...

கேபிள்,

புத்தக சந்தையில் தங்கள் "சரக்கு" நன்கு விற்பனையாவதற்கு வாழ்த்துகள்.!

இந்த பஸ் கதை எங்கேயோ படிச்சாப்போல இருக்கேனு ஒரு ஃபீலிங்க், பரவாயில்லை என்ன போல இன்னும் பலருக்கும் அதே ஃபீல்ங் :-))

//பத்மா வந்திருந்தார். என் புத்தகத்தை வாங்கிக் கொண்டு மேலும் சில புத்தகங்களை பார்க்க கிளம்பினார். //

உங்க ரீச் உண்மையில் ரொம்ப பெருசு தான் போல பத்மா அவர்களை எல்லாம் தெரிஞ்சு வச்சு இருக்கிங்க :-))

ILA (a) இளா said...

உங்க ரீச் உண்மையில் ரொம்ப பெருசு தான் போல பத்மா அவர்களை எல்லாம் தெரிஞ்சு வச்சு இருக்கிங்க //

வவ்வால்,
யாருகிட்ட பேசிகிட்டு இருக்கீங்க தெரியுமா? அண்ணன் யாரு தெரியுமா?

வவ்வால் said...

இளா,

//வவ்வால்,
யாருகிட்ட பேசிகிட்டு இருக்கீங்க தெரியுமா? அண்ணன் யாரு தெரியுமா?//

ஹி..ஹி அண்ணன் தான் அவருனு எனக்கு தெரியும்ல :-))

மாத்தி சொல்லீட்டேன் போல... உங்க ரீச் ரொம்ப பெருசு போல பத்மாவுக்கு கூட உங்களை தெரிஞ்சு இருக்கு அப்படினு சொல்லி இருக்கணும்.(ஆமாம் பத்மா யாருங்கோ)(எனக்கு தெரியுமானு கேட்கப்படாது)

சில்க் சதிஷ் said...

கேட்டால் கிடைக்கும் அருமை!

வவ்வால் said...

கேபிள்,
//சமீபத்தில் ரஞ்சனி பிரசன்னா என்கிற கல்லூரி மாணவி, நம் கேட்டால் கிடைக்கும் குழு உறுப்பினர். அவர் துரைப்பாக்கத்தில் வேலை செய்கிறார். //

கல்லூரி மாணவி அல்லது வேலை செய்பவரா அல்லது படித்துக்கொண்டே வேலை செய்கிறாரா? எது சரி ஹி..ஹி... ஏன் இந்த குழப்பம்?