Thottal Thodarum

Jan 9, 2012

கொத்து பரோட்டா - 09/01/12

புத்தகக் கண்காட்சிக்காக சுடச்சுட புத்தகங்கள் வெளியாகிக் கொண்டிருக்க, ஈழவாணி அவரது ஈழத்து நாட்டார் கவிதை தொகுப்பு, மற்றும் பூவரசி இதழ் அறிமுக விழாவிலும் கலந்து கொள்ள அழைத்திருந்தார். கவிதைக்கும் எனக்குமான தூரம் பற்றி திரும்பத் திரும்ப சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். நண்பர் பாடலாசிரியர் முத்துகுமாரும், மீரா கதிரவனும் வந்திருந்தார்கள். இந்த கவிதை கும்மியில் என்னைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார் முத்துகுமார். விதி வலியது என்பதை விளக்கினேன். கவிதை புத்தகத்தை வாங்கவில்லை. பூவரசி படிப்பதற்கு கொஞ்சம் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் இதழாக இருக்குமோ என்ற சந்தேகம் மாலன் புத்தகத்தைப் பற்றி பேசிய போது ஏற்பட்டது.நேரம் ஆகிவிட்டது என்ற நினைப்பில்லாமல் சொல்ல வந்ததை சொல்லாமல் விடவில்லை அவர். ஆனால் படித்தபோது அப்படியில்லை. நல்ல வடிவமைப்பு, மிகுந்த உழைப்பு, ஆகியவை தெரிந்தது. படித்த வரையில் பாலுமகேந்திராவின் பேட்டி சுவாரஸ்யம். அவர் ஏன் இலங்கை தமிழர்களுக்காக தமிழில் படமெடுக்கவில்லை என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் இருந்த நேர்மை மிகவும் பிடித்தது. வாழ்த்துகள் ஈழவாணி.
################################


நக்கீரன் மீதான தாக்குதலைப் பற்றி ஆளாளுக்கு ஏதேதோ பேசினாலும், இதெல்லாம் நடக்கவில்லையென்றால்தான் ஆச்சர்யபட வேண்டும். ஆனாலும் இப்படிகேவலமாய் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்க வேண்டாம். இந்த தாக்குதல் மூலம் ரெண்டொரு ஜன்னல்களும், கார் கண்ணாடிகளும் உடைந்ததைத் தவிர பெரிய நஷ்டம் ஏதும் நக்கீரனுக்கு கிடையாது. இதே போல மற்ற ஆட்களைப்பற்றி தைரியமாய் போஸ்டர் அடித்து ஒட்ட முடியுமா? சொல்லப் போனால் லாபம் தான். ஜெய் ஜெயலலிதா.
################################
இந்த வார சந்தோஷம்மீண்டுமொரு சிறுகதை கல்கியில் இந்த வாரம் வெளி வந்துள்ளது. புத்தகக் கண்காட்சியில் கொத்து பரோட்டா சக்கைப் போடு போடுகிறது. கதை, கட்டுரை போன்றவற்றை படிக்காதவர்களில் பலர் புத்தகத்தை பிரித்து பார்த்தவுடன், லேசான புன்முறுவலுடன் புத்தகத்தை வாங்கிச் செல்வதாய் சொன்னார்கள். இதில் பெண்களும் அடக்கம். இந்த சந்தோஷச் செய்தியை  உங்களுடன் பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும். ஏனென்றால் நீங்கள் கொ.பரோட்டாவுக்கு கொடுக்கும் தொடர் ஆதரவுதான் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. இதை புத்தகமாய் போட்டால் நிச்சயம் விற்கும் என்று உறுதியாய் நின்று, அதை பதிப்பிட்ட “ழ” பதிப்பக ஓ.ஆர்.பி. ராஜாவின் நம்பிக்கையை பாராட்ட வேண்டும்.
########################################
சிகிச்சை பலனளிககாமல் மனைவி இறந்ததால் டாக்டரை கொலை செய்த கொடுரத்தை கண்டித்து,  டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். டாக்டர்களைப் பற்றியும், அவர்கள் அப்படி கொள்ளையடிக்கிறார்கள், இப்படி செய்கிறார்கள் என்று குற்றச்சாட்டு சொன்னாலும், அவர்களுக்கான பாதுக்காப்புக்காக போராடுவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. ரமணா டாக்டர்கள் போன்ற நிகழ்வுகள்தான் அதிகம் நடக்கிறது என்றாலும், மனிதாபமான அடிப்படையில் அவர்கள் கோரும் உரிமை தவறல்ல என்றே தோன்றுகிறது.
###############################
கேட்டால் கிடைக்கும் (Ask)
I went to "Pathankot restaurant" at spencer plaza today. I ordered veg biriyani and aloo paratha. When I was served my food, the waiter didnt bring water. he said I ve to buy water bottle. I said, "even in Pizza hut, Spencer plaza, they serve free water. Call ur manager." He said he wont bring. I said," if you dont bring water, I have to cpmplain to higher authorities." Then he brought water, free of cost. Thanks for the inspiration sir. -sriram 
இதைத்தான் எதிர்பார்த்தேன். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் உரிமைகளை கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக ஃபேஸ்புக்கில் என்னாலும்/ சுரேகாவினாலும் உருவாக்கப்பட்ட குழுவில் இருக்கும் 950 உறுப்பினர்களுக்கும் இது ஒரு பெரிய விஷயமே..  உங்கள் ஆதரவை எங்கள் குழுவிற்கு தர இங்கே க்ளிக்கவும்
#################################
புத்தகக் கண்காட்சி -நாள்-4
வழக்கத்தை விட கூட்டம் அதிகமாய் இருந்தது. ஃபேஸ்புக் நண்பர்கள் பலர் வந்திருந்தனர். இன்றும் “உ”பதிப்பக புத்தகங்கள் தான் டிஸ்கவரியில் டாப் செல்லிங் புத்தகங்கள். என்னுடய முந்தையை புத்தகங்களான லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும், மீண்டும் ஒரு காதல் கதை, சினிமா வியாபாரம், கொத்து பரோட்டா எல்லாம் புதிய புத்தகத்தோடு செட்டு சேர்ந்து விற்றதை காண சந்தோஷமாயிருந்தது. எங்கெங்கு காணினும் பிரபலங்கள், எழுத்தாளர்கள், சிறு சிறு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள் என்று கண்காட்சியே அல்லோலகல்லோலப் பட்டது. அண்ணன் அப்துல்லா முதல் முறையாய் கண்காட்சிக்கு வந்திருந்தார். கண்காட்சிக்கு எல்லா நாளும் வருகிறவர் இம்முறைதான் முதல் மூன்று நாட்களை மிஸ் செய்திருக்கிறார். டிஸ்கவரியில் தேனம்மை லட்சுமணனின் “சாதனை அரசிகள்” புத்தகம் வெளியானது. பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. திருதிரு துறு துறு இயக்குனர் நந்தினி தன் கைக்குழந்தையுடன் வந்திருந்து வாழ்த்தினார். நிறைய வாசகர்கள் போன் செய்து இருக்கச் சொல்லி சந்தித்து சென்றனர். அச்சமில்லை அச்சமில்லை இயக்குனர் அருண் வைத்யநாதன் வந்து என் தொகுப்புகள் அனைத்தையும் வாங்கிச் சென்றார். வழக்கப்படி காற்றில்லாததால் வேர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது.  அதுவே மிகவும் சோர்வைக் கொடுத்தது. விஸ்வநாதன் மட்டுமில்லாமல் மேலும் சில நண்பர்கள் என்னை சந்திப்பதற்காக வந்திருந்ததும், நியூசிலாந்திலிருந்து ப்ளாக் பார்த்து நிச்சயம் இங்கு என்னை சந்திக்கலாம் என்று முடிவோடு வந்து வெளியே போகும் வழியில் என்னுடன் படமெடுத்துக் கொண்டவர், ஊஞ்சல் பத்திரிக்கை லே அவுட் ஆர்டிஸ்ட் கணேஷ், மற்றும் அவரது பதிப்பக நண்பர் என்று பல நட்புகள் என் மேல் காட்டிய அன்பு நெகிழ்ச்சியை தந்தது. இம்முறை ப்ளாகுகளை ஃபேஸ்புக்கில் படித்து விட்டு வரும் நண்பர்கள் அதிகமாகியிருக்கிறார்கள். வேடியப்பன் கடையின் டேபிளின் மேல் ஒரு அழகு நிபுணரின் புத்தகம் இருந்தது. அதை ஒர் பர்தா இளம்பெண் வாங்கிப் போனார். அவரின் கண்கள் மெல்லத் திறந்தது கதவு அமலாவை நினைவுப் படுத்தியது. நுழைவாயிலில் டிக்கெட் கிழிக்கும் நண்பர்கள் அனைவரும் சினிமாவில் ஜுனியர் ஆர்டிஸ்டாக பணிபுரிகிறவர்களை போட்டிருக்கிறார்கள். எல்லோருமே தெரிந்தவர்கள்.  வழக்கமாய் தொப்பிப் போட்டு கவிதை புத்தகம் போடும் நண்பர் ஒருவரின் ஸ்டாலை காண முடியவில்லை. முல்லைப் பெரியார் அணை விஷயத்தில் அவர்களுக்கு சாதகமாக எழுதிய மலையாள மனோரமா ஸ்டாலை மூட வேண்டும் என்று கோஷம் போட்டு போராட்டம் நடத்தினார்கள்.  இதை ஸ்டாலை கொடுப்பதற்கு முன்பே செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ழ பதிப்பக ஓ.ஆர்.பி தன் குடும்பத்துடன் அமெரிக்க பிரஜை போல முக்கால் பேண்ட் போட்டுக் கொண்டு ஸ்டைலாக புத்தகங்கள் வாங்கினார்.   டாக்டர் புருனோவுடன் சுரேகாவும் நானும் பெண் டாக்டர் கொலையைப் பற்றி பேசிப் பேசி மாய்ந்தோம். ஆண்மையை பெருக்குவது எப்படி? என்ற புத்தகத்தை பிரித்து வைத்துக் கொண்டு, அதிலிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மனைவி படித்துக்காட்டி கணவருக்கு விளக்கிக் கொண்டிருந்த காட்சி படு சுவாரஸ்யம்.
#################################
செவிக்கினிமை
சென்ற வாரம் “கிருஷ்ணவேணி பஞ்சாலை” படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு இயக்குனர் தனபால் அழைத்திருந்தார். இரண்டு பாடல்களை திரையிட்டார்கள். ரகுநந்தனின் இசையில் ஒரு ஷுயூர் ஷாட் மெலடியை கொடுத்திருக்கிறார்கள். பாடலை படமாக்கிய விதமும் சுவாரஸ்யமாய் இருந்தது. ஆலைக்காரி.. பஞ்சாலைக்காரி பாடலும், ஆத்தாடி என்கிற பாடலும், நல்ல மெலடி. இந்த ஆல்பத்தில் தாமரை எழுதிய பாடல் சார்ட் பஸ்டர் ஆகக்கூடிய அத்துனை அம்சங்களும் உள்
#################################
தமிழ் சீரியல்களை இணையத்தில் முன்பெல்லாம் யாராவது திருட்டுத்தனமாய் ரிக்கார்ட் செய்துதான் யூடியூபில் வெளியிட்டு வந்தார்கள். ஆனால் தற்போது விகடன் தன் சீரியல்களை அவர்களாகவே தங்கள் யூடியூப் சேனலில் வெளியிடுகிறார்கள். காரணம் யூட்யூபின் மூலமாய் கிடைக்கும் விளம்பரங்கள் மற்றும் கூகுள் விளம்பரங்கள் தான் காரணம். இன்றை நிலையில் அதில் வரும் பணம் என்பது மிக சொற்பமாக இருந்தாலும், இனி வரும் 3ஜி யுகத்தில் மொபைல் கண்டெண்டும், ஐபிடிவி, இணையம் மூலம் வரும் வருமானம் நிச்சயம் பெரியதாய் இருக்கும் என்பது உறுதி. எனவே எதற்கு பைரஸிக்காரர்களிடம் அந்த வருமானத்தையும் விடுவானேன் என்று கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
#################################### 
ப்ளாஷ்பேக்மன்சூர் கான். அமீர்கானின் மாமா. அவர் தான் அமீர்கானை கயாமத் ஸே கயாமத் தக் என்கிற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். கடைசியாய் ஷாருக்கை வைத்து ஜோஷ் என்கிற படத்தைக் கொடுத்துவிட்டு, சினிமாவிலிருந்து விலகி, குன்னூரில் காட்டேஜுகள் அமைத்து செட்டிலாகிவிட்டார். எனக்கு தெரிந்து இந்தி சினிமாவை கொஞ்சம் க்ஸான ஹாலிவுட் பாணிக்கு மாற்றியதில் இவரின் பங்கு முக்கியமானது என்று நினைக்கிறேன். இவரது படங்களில் வரும் பாடல்கள், நல்ல மெலடியாக இருக்கும். அதிலும் இந்த பாடலை எப்போது கேட்டாலும் ப்ரெஷ்ஷாக இருக்கும். முழுப் பாடலும் ஹைஸ்பீடில் படமாக்கப்பட்டிருக்கும். ஜதின் - லலிதின் இசையில், உதித்தின் குழந்தைத்தனமான குரலில் Another soothing melody.
####################################
வீடியோ கார்னர்
பாண்டியராஜின் மெரினா படத்துக்கான ப்ரோமோ விடியோ சாங்.. கொயட் இண்ட்ரஸ்டிங்
###############################
யுடான்ஸ் கார்னர்

யுடான்ஸ் + நேசம் அமைப்பினர் சேர்ந்து நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்படப் போட்டியில் கலந்து கொள்ள தயாராகிவிட்டீர்களா? உங்களது படைப்புக்களை உடன் அனுப்பி வையுங்கள். போட்டிப் பற்றிய விதிமுறைகளை பார்க்க
####################################
ட்வீட் கார்னர்
ஆண்களைப் போல தங்களுக்கு தேவையானதை கேட்டுப் பெறுவதில்லை பெண்கள்.
உன்னால் நேற்றைய, நாளைய விஷயங்களை தீர்மானிக்க முடிந்ததென்றால் இன்றைய நாளை சந்தோஷமாய் கழிக்கலாம்.
சில புத்தக தலைப்புகளைப் பார்த்தாலே முதுகு தண்டு ஜில்லிடுகிறது. ஆண்குறியின் மையத்தை நசுக்கும் என்று போகிறது. நான் விழாவுக்கு போகலை.
############################
அடல்ட் கார்னர்
ஒருவன் தன் காதலிக்கு கீழ்கண்ட கவிதையை SMS அனுப்பினான்..
'கண்ணே..நீ தூங்கி கொண்டிருந்தால், உன் கனவுகளை எனக்கு தருவாயா..?
நீ அழுது கொண்டிருந்தால் உன் கண்ணீரை எனக்கு தருவாயா..?
நீ சிரித்து கொண்டிருந்தால் உன் புன்னகையை எனக்கு தருவாயா..?
கண்ணே..நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? பதில் தருவாயா..?'
அதற்கு காதலி REPLY செய்தாள்.
'நான் இப்போ டாய்லேடில் இருக்கேன்...'
####################################

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

24 comments:

ஆர்வா said...

always rockzzzzzzzzzz thala

நாய் நக்ஸ் said...

Nice thala...

:)

Unknown said...

அடல்ட் கார்னர்:- சத்தியமா முடியல, வயிறு வலிக்குது... :D

Anonymous said...

//இதில் பெண்களும் அடக்கம்//

OK.OK.

சசிமோஹன்.. said...

thala intha vaaram kothu parootala Etho MISS aana madhiri Feel jeee

பால கணேஷ் said...

நண்பரே... பந்தா எதுவுமில்லாமல் அன்புடன் பேசி என்னை நெகிழச் செய்தீர்கள். மிகச் சந்தோஷமாய் உணர்ந்தேன். உங்களுக்கும் என் நட்பு மகிழ்ச்சி தந்ததை அறிந்து மகிழ்கிறேன். நன்றி. (கடைசில போட்டிருக்கற ஜோக்குக்கு சிரிச்சு மாளலை.) ’தேவதை’களை விரைவில் படிச்சுட்டு பேசறேன். -ஊஞ்சல் லேஅவுட் ஆர்ட்டிஸ்ட்.

Cable சங்கர் said...

sorry நண்பரே. நிறைய பேரை சந்தித்ததால் சட்டென பெயர் ஞாபகம் வரவில்லை. . இப்போ அப்டேட்டிவிட்டேன்.

rajamelaiyur said...

//மீண்டுமொரு சிறுகதை கல்கியில் இந்த வாரம் வெளி வந்துள்ளது. புத்தகக் கண்காட்சியில் கொத்து பரோட்டா சக்கைப் போடு போடுகிறது.
//

வாழ்த்துகள் நண்பா

rajamelaiyur said...

நண்பர்களே உங்களுக்காக ..

உங்கள் FILE மற்றும் FOLDER ஐ பூட்டி வைக்க உதவும் மென்பொருள் (FOLDER LOCK 7 - WITH REGISTER KEY)

rajamelaiyur said...

கடைசி ஜோக் .. கலக்கல்

sriram said...

thanks for posting it in ur blog sir. truly, kettaal kidaikum, ASK.

and am a doc. wen media is not supporting docs, its good to see u understand the prob reg docs' strike. we ask nothing, but safety for life. thanks.- sriram

vizzy said...

will you please write the name of the giant size history collection volumes and the publisher name which you have mentioned in your day 3 visit of book exhibition.thank you sir.vijayan

சுரேகா.. said...

கேட்டால் கிடைக்கும் எனும் எண்ணம் இதுபோல் எல்லோருக்கும் வரவேண்டும்.. ஒரு வைரஸ்போல் பரவினாலே போதும்..!! நிறைய ஊழல்கள் காணாமல் போய்விடும்..!!

உங்கள் தொடர் பகிர்தலுக்கு நன்றி தலைவரே!

Unknown said...

//ழ பதிப்பக ஓ.ஆர்.பி தன் குடும்பத்துடன் அமெரிக்க பிரஜை போல முக்கால் பேண்ட் போட்டுக் கொண்டு ஸ்டைலாக புத்தகங்கள் வாங்கினார்.//

உங்க யூத் பட்டம் சீக்கிரம் பறிபோயிடும்போல தெரியுது :)))

ழ - வின் கொத்து பரோட்டா நன்றாக விற்பதால் ஸ்டாக் தீர்ந்துவிட்டது என நண்பர் வேடியப்பன் சொன்னார். சந்தோசமாக இருந்தது.

கல்கி சிறுகதைக்கு வாழ்த்துகள்!

ஹாலிவுட்ரசிகன் said...

மெரீனா பாடல் நன்றாகவே இருக்கிறது. அடல்ட் கார்னர் வழக்கம் போல கலக்கல்.

இளம் பரிதி said...

sir jo malluri thana oru stalla patha mathiri irunthathu....unga book CV,TD RENDUM VANGINEN,,..KP no stock sir ...

ஒரு வாசகன் said...

//அச்சமில்லை அச்சமில்லை இயக்குனர் அருண் வைத்யநாதன்// தப்பு என நினைக்கின்றேன். அருண் வைத்யநாதன் இயக்கிய படம் “அச்சமுண்டு
அச்சமுண்டு” - அச்சமில்லை அச்சமில்லை பாலசந்தர் இயக்கிய படம்

Hari said...

ஒ. ஆர்.பீ ராஜா - அமெரிக்க பிரஜை போல் - அய்யோ அய்யோ ஓனர் உங்களை நெனைச்ச ஒரே காமெடியா இருக்கு. கல்கி சிறுகதை வந்திருச்சா வாழ்த்துக்கள் தலைவரே.

தமிழ் பையன் said...

இது அடல்ட் கார்னர் இல்லை வோய்.. இது உவ்வே கார்னர்.

கிளம்பிடோம்ல... said...

எனக்கும் உரிமைய கேட்டு வாங்கனும்னு ஆசைதான்..ஆனா Hotel’ல இந்த மாதிரி பண்ணினா குடுக்கற சாப்பாட்டுல / தண்ணீல எதாவது அசிங்கமா கலந்து கொடுதிடுவோங்களோனு பயமா இருக்கு...

விழித்துக்கொள் said...

a beautiful tamil birthday song
http://vidhyasagar.com/

Sudhar said...

Pehala Nasha - Song was the first song choreographed by Farah Khan.She was impressed by Mani ratnam's Geethanjai - AAthadi Ammadi full slow motion song and she wanted to do like that. Farah khan herself told about this.

Sudhar said...

Girija, Geethanjali fame, directed by Maniratnam was signed on to be in Jo Jeeta Wohi Sikander and also shot most of the movie when the director felt she was too stunted as an actress and replaced with Ayesha Jhulka and reshot. If you observe closely, there is one song in the movie with Girija dancing with Amir and the rest.

----

Pehla Nasha was shot over a period of a year because the cast changed completely and we had to reshoot the song and we were shooting it all over the place in Ooty and Kodaikanal and in Film City.

-----

Dhanapal Padmanabhan said...

நன்றி திரு. கேபிள் சங்கர்!