கடந்த ஒரு வாரமாய் ஏகப்பட்ட கால்கள். வழக்கமாய் ஒரு 30-50 போன்கால்கள் வரும். பிஸியான நேரங்களில் இன்னும் கொஞ்சம் கூட கூடும். ஆனால் என்னுடய இன்னொரு எண்ணுக்கு தொடர்ந்து கால்கள் வந்ததேயில்லை. மிகவும் சில நபர்களுக்கே அந்த நம்பர் தெரியும். கடந்த ஒரு வாரமாய் நூற்றுக்கும் மேற்பட்ட கால்கள். மிஸ்ட் கால்கள். வாட்ஸப்பில் “கந்தி” மெசேஜுகள் என குவிய ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் காரணம்? நம்ம காயாடு லோஹர் தான். எனக்கும் அவருக்கும் ஸ்நானப் ப்ராப்தி இது வரை கிடையாது. எதிர்காலத்தில் வர வாய்ப்பிருக்கிறது என்றாலும் வருகிற போன் கால்களில் எல்லாரும் கூப்பிடுவது பெரும்பாலும் வடக்கன்கள் “கயாடு லோஹர்?” என்று கேட்க, நான் என் கந்தர்வக்குரலில் ‘ஹலோ” என்றதும், டக்கென கட் செய்து விடுவார்கள். இன்னும் சில பேர் இருக்கிறார்கள். வெறும் “ஹலோ” மட்டுமே சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் அமைதியாய் இருப்பார்கள். நானும் பொழுது போகாத நேரங்களில் “மெளனமான நேரம்” விளையாட ஆரம்பித்துவிட்டேன். சமயங்களில் கயாடு லோஹர் குரலில் “ஹலோ” என்றெல்லாம் பேச ஆரம்பிக்க, செம்ம சுவாரஸ்யமாய் சமயங்கள் போகும். அலோ மேட்டர் எல்லாம் போய் கொஞ்சம் கொஞ்சமாய் கயாட...
தியேட்டர்ல ஓடவே இல்லை வ்ரோ!! அப்புறம் எப்படி லாபம் என பல படங்களுக்கு ரசிகர்கள் கேட்பதுண்டு. ஒரு தயாரிப்பாளராய், விநியோகஸ்தராய், இயக்குனராய் பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறவன் என்கிற முறையில் சொல்கிறேன். சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு ஹாரர் ப்ரான்ஸைஸ் படம். 13 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. அதை மொத்தமாய் எல்லா உரிமைகளையும் ஒரு நிறுவனம் 16 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அதை சுமார் 10 கோடிக்கு சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை விற்றது. தெலுங்கு மற்றும் ஹிந்திக்கு 3 கோடிக்கும், வெளிநாட்டு உரிமையில் சுமார் 1 கோடிக்கும் விற்றது. சோ படம் வெளியாவதற்கு முன்னமே வாங்கிய விலையில் 14 கோடி வசூல் ஆகிவிட்ட நிலையில். தியேட்டரில் வெளியாகி சுமார் 40+கோடிகள் கிராஸ் செய்தது அந்தத் திரைப்படம். அந்த நடிகரின் கேரியரில் முதல் பெரிய வசூல் என்றே சொல்ல வேண்டும். தியேட்டர் ஷேர் மட்டுமே பத்து கோடிக்கு மேல். என்னடா குழப்புறே? 40கோடி வசூல்னு சொல்லுறே அப்புறம் பத்து கோடிக்கு மேல் தான் கலெக்ஷனு சொல்லுறே? என்று கேட்பவர்களுக்கு கிராஸ் என்றால் என்ன?, நெட் என்றால் என்ன?. கட்டங்கடைசியாய் தயாரிப்பாளருக்கு கிடைக்க...
3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும் மணி வடைகடையில் வடை எப்போதுமே சூடாய் போடப் போட காலியாகிக் கொண்டேயிருக்கும். நானும் எனது நண்பர்களும் எப்போதும் அங்கே மாலை வேளையில் வடை சாப்பிட போய்விடுவோம். அப்படியான ஒரு மாலை வேளையில் வடை சாப்பிட்டுவிட்டு கிளம்பிய போது இரண்டு சிறுவர்கள் அல்லது பையன்கள் என்று கூட சொல்லலாம். கிட்டத்தட்ட ஆவிச்சி ஸ்கூல் திருப்பத்திலிருந்து ஓடி வந்தார்கள். எங்களைப் பார்த்ததும் என்ன தோன்றியதோ இரண்டு பையன்களும் நின்றுவிட்டு, அதில் சிகப்பாய் சேட்டுப் பையன் போல இருந்தவன் “சார்.. இவருக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறீங்களா?” என்று பக்கத்திலிருந்த டிபிக்கல் பிகாரி லுக்கில் இருந்த பையனை காட்டி நல்ல தமிழில் பேச ஆரம்பித்தான். “என்ன தம்பி என்ன பிரச்சனை?” “சார். ஆவீச்சி பஸ் ஸ்டாண்டுல இறங்குனேன் அப்ப இவரை சுத்தி ரெண்டு மூணு அரவாணிங்க நின்னுட்டு இருந்தாங்க. பேசிட்டி இருக்கும் போதே அவரோட பர்ஸுலேர்ந்து பத்தாயிரம் ரூபா எடுத்துட்டாங்க. நான் அதைப் பார்த்ததும் என்னான்னு கேக்கப் போனப்ப என்னோட செல்ல புடுங்க வந்தாங்க. இவரோட செல்லையும் புடுங்க பின்னாடி துறத்துனாங்க. அதான் ஓடி...
Comments
:)
6:10க்கு முடிவு செய்து....25 நிமிடம் பயணித்து 6:45 படம் போடுவதற்குள் அரங்குக்குள் நுழைந்தது ஒரு ரேஸ் தான்.
அய்யய்யோ . . .
http://www.facebook.com/photo.php?fbid=126798300800628&set=a.118289474984844.24483.114190752061383&type=1&theater