லவ் ஸ்டோரி -1

 ”நான் ஏன் அவனை லவ் பண்ணேன்னு எனக்கு தெரியலை”

“அழகா இருந்தானோ?”

“அழகுன்னா.. அப்படியும் சொல்ல முடியாது. ஆனா அழகாத்தான் இருந்தான்”

“சரி எப்ப உங்க லவ் ஸ்டார்ட் ஆச்சு?”

“அதையேன் சார் கேக்குறீங்க?”

“நான் அப்ப +1 படிச்சிட்டு இருந்தேன்.

“+1 ஆ”

“அவன் எதிர் வீட்டுல இருந்தான்.”

“ம்”

“நான் படிச்சிட்டு இருக்கும் போது தெனம் என்னை சைட் அடிச்சிட்டே போவான்”

“வயசுல எல்லாரும் பண்றதுதானே?”

“இல்லை சார் என்னை சைட் அடிக்குறதுக்காகவே ஒரு நாளைக்கு 100 முறையாட்டும் வந்து பார்ப்பான்”

“சரி”

“ஒரு நா திடீர்னு  சாயங்காலம் வெளிய உக்காந்து படிச்சிட்டு இருக்கேன். என்னாண்ட வந்தான்”

“லவ் பண்ணுறேன்னு ப்ரோப்போஸ் பண்ணாரா?

”இல்லைங்க”

“பின்ன?”

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டான்”

“உடனே சரின்னுண்டேன்”

“வாட்?”

“ஆமாங்க ஏன் சொன்னேன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியலை.+2 ல ஸ்கூல் பர்ஸ்ட். எவ்வளவோ சொன்னாங்க. மேல படின்னு கல்யாணம் கல்யாணம்னு அரிச்சிட்டே இருந்தான். நான் படிக்க வைக்குறேன்னான். வீட்டுல சண்டை போட்டு கல்யாணம் பண்ணேன். இந்த ஏழு வருஷத்துல ரெண்டை பெத்தது தான் நான் செஞ்ச சாதனை.”

“இன்னும் அந்த காதல் இருக்கா?”

“தெரியல. ஆனா இனி நான் என் சொந்தக்கால்ல நிக்கணும்னா படிக்கணும்னு தோணுது. அன்னைக்கு வந்து நின்னு என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்ட மாடுலேஷன் இப்ப இல்லை. கல்யாணத்துக்கு முன்னாடி யாராச்சும் என்னை பார்த்தாலோ ஃபாலோ செய்தாலோ, சைட் அடிச்சாலோ என்னை சுத்தி சுத்தியே வருவான். அவன் என்னை ப்ரொடெக்ட் பண்ணுறான்னு நினைச்சு கிளுகிளுப்பா இருக்கும் அப்ப.”

“ம்.”

“இப்பத்தான் தெரியுது அது அவனோட இன்செக்யூரிட்டினு”

“இப்பவும் அதே இன்செக்க்யூரிட்டிதான். படிக்கப் போறேன்னா இப்ப எதுக்கு உனக்கு படிப்புங்கிறான். சண்டைப் போட்டா உன்னை ஏன் வேலைக்கு அனுப்பி கஷ்டப்பட வைக்கணும் அதுனாலத்தான் வேணாங்குறேன். அப்படினு உருட்டுறான். அதையும் மீறி கம்ப்யூட்டர் க்ளாஸ் போய்ட்டிருக்கேன் படிக்கிற ஆர்வம் எனக்கு க்ளாஸை மிஸ் பண்ணாம போக வைக்குது.  ஒரு நாள் விடியற்காலையில என்னை எழுப்பி செஞ்சிட்டிருக்கும் போது திடீர்னு கம்ப்யூட்டர் க்ளாஸ்ல அம்பளை டீச்சரா பொம்பளை டீச்ச்ரா? அப்படியே அவனை தள்ளிவிட்டுட்டேன்.  6 வயசு பையனை அவனுக்கு உளவாளியா பழக்கி வைச்சிருக்கான். நைட்டி போட்டு வெளிய போனா அப்பனை மாதிரியே ஷால் போடும்மாங்குறான். ஆம்பளையா யார் வந்து என்கிட்ட பேசினாலும் அப்பன்கிட்ட இந்தமாதிரி ஒரு ஆள் வந்தாருனு எல்லாத்தையும் ஒப்பிக்கிறான்”

கொஞ்சம் நேரம் வேறேதும் பேசாமல் அமைதியாய் இருந்தாள். 

“இதான் லவ்வானு கேட்டீங்கன்னா இல்லைன்னு தெரியவே ஏழு வருஷம் போயிருச்சு. கஷ்டப்படுறான் போராடி சம்பாரிக்கிறான். சோறு போடுறான். ஆவூன்னா வீட்டை விட்டு போங்குறான். பாருங்களேன் எனக்காக செய்யுறான்னு ஃப்ல் பண்ணவே முடியலை.”

“அப்ப காதல் இல்லைங்கிறீங்களா?

‘இருக்குங்க. ஊரறிய போராடி கல்யாணம் பண்ணும் போது எல்லாத்தையும் ஜெயிச்சிட்டோம்னு தோணிச்சு. ஒரு புள்ளை உண்டானப்ப, பாருடா நானும் வாழ்ந்து காட்டுறோம்னு தோணிச்சு. இப்ப அது எல்லாம் நாங்க காதலிச்சிட்டோம்னு ஊருல சொன்னதுனால அவங்களுக்காக் வாழுற வாழ்க்கையா தோணுது. நாளைபின்ன எது நடந்தாலும் நீதானே தேடிட்டு ஓடுன? சொல்வாங்க இல்லை.”

“அதுனால?”

”சகிச்சிட்டு இருக்குறது தான் காதல்னு புரிஞ்சிருச்சு” என்றவளின் குரலில் திடமிருந்தது.

கேபிள் சங்கர்

Comments

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

Box Office உண்மைகள்

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்