சங்கர் உங்களோட படம் குறும்படம எனக்கு தெரியல. முதல்ல டைட்டில் கார்டு போடறப்ப ஏன் இவ்வளோ உளைச்சல் தரிங்க. கடைசி வரியில திருப்பம் தர ஒ ஹென்றி கத போல இருக்கு. நாயகி போன் பேசும் போது ஏன் செக்சியா காட்டுறிங்க.. இன்னும் நல்ல பண்ணியிருக்கலாம் எனபது ஏன் கருத்து.
நன்றி மெடிலியன் கோல்ட், படத்தை சின்ன திரையில் பார்பதால் டைட்டில் அப்படி டிஸ்ட்ர்ப் செய்திருக்க கூடும், கதாநாயகியை செக்ஸியாக காட்டவேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி எடுக்க வில்லை,பதட்டத்தில் யாருமில்லாத வீட்டில் கணவனை காணாது இருக்கும் பெண்ணிடம் உள்ள இயல்பை காட்ட நினைத்து படமாக்கபட்டது. உங்கள் கருத்துக்கு நன்றி
வணக்கம் சங்கர்... தங்களின் 'ஆக்ஸிடென்ட்' பார்த்தேன்.வாழ்த்துக்கள்.. நன்றாக, ஷார்ப்பாக உள்ளது..கதையின் திருப்பம் ஒரு ஆனந்தத்திகைப்பில் உள்ளாழ்த்தியது... வழக்கமாக சமூகப்பிரச்சாரப் பட வகைகளில் முடிவில் 'மெஸ்ஸேஜ்' கொடுத்து மொக்கையாக முடிப்பார்கள்.. இதில் வாழைப்பழ ஊசி போல் செய்தி சொல்லி உள்ளீர்கள்..அருமை... வழியில் யாருக்காவது அடிபட்டால், உடனடியாக உதவத்தூண்டுகிறது தங்கள் படம். பாத்திரத்தேர்வு,இசை(நாயகி தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசும் காட்சிகளில் ), ஒளிப்பதிவு, குறிப்பாக படத்தொகுப்பு அபாரம்... //கதாநாயகியை செக்ஸியாக காட்டவேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி எடுக்க வில்லை,பதட்டத்தில் யாருமில்லாத வீட்டில் கணவனை காணாது இருக்கும் பெண்ணிடம் உள்ள இயல்பை காட்ட நினைத்து படமாக்கபட்டது.// நல்ல கோணத்தில் சிந்தித்துள்ளீர்கள்...(மழைக்கட்சியில் கூட கலையாத மேக்கப் போடுவதுதான் நமது வழக்கம்..) ஆனால் தங்களின் இந்த முரண்தான் இயல்பை அழகாகக் காட்டுகிறது... சுருங்கக்கூறின் தங்களின் இக்குறும்படம் ஒரு குறள். விரைவில் ம்ற்ற படங்களையும் பார்த்து விட்டு வருகிறேன்...
Comments
வாழ்த்துக்கள்.. அருமையான படம்... நல்ல திருப்பம்.. எல்லோருமே நல்லா நடிச்சிருக்காங்க.. மனைவியா வர்றவங்க அந்த பதட்டத்தை அப்படியே பிரதிபலிச்சிட்டாங்க.. அவங்க பதட்டம் என்னையும் தொத்திக்கிச்சுன்னா பாத்துக்கங்களேன்..
நல்ல மெஸேஜ்..
நிறைய செய்யுங்க.. இது போல..
அன்புடன்,
சீமாச்சு...
வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்
வால்பையன்
படம் நல்ல செய்திகளைச் சொல்கிறது. இறுதித் திருப்பத்தை நான் எதிர்பார்க்கவில்லை.
வழக்கமாக சமூகப்பிரச்சாரப் பட வகைகளில் முடிவில் 'மெஸ்ஸேஜ்' கொடுத்து மொக்கையாக முடிப்பார்கள்.. இதில் வாழைப்பழ ஊசி போல் செய்தி சொல்லி உள்ளீர்கள்..அருமை...
வழியில் யாருக்காவது அடிபட்டால், உடனடியாக உதவத்தூண்டுகிறது தங்கள் படம். பாத்திரத்தேர்வு,இசை(நாயகி தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசும் காட்சிகளில் ), ஒளிப்பதிவு, குறிப்பாக படத்தொகுப்பு அபாரம்...
//கதாநாயகியை செக்ஸியாக காட்டவேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி எடுக்க வில்லை,பதட்டத்தில் யாருமில்லாத வீட்டில் கணவனை காணாது இருக்கும் பெண்ணிடம் உள்ள இயல்பை காட்ட நினைத்து படமாக்கபட்டது.//
நல்ல கோணத்தில் சிந்தித்துள்ளீர்கள்...(மழைக்கட்சியில் கூட கலையாத மேக்கப் போடுவதுதான் நமது வழக்கம்..)
ஆனால் தங்களின் இந்த முரண்தான் இயல்பை அழகாகக் காட்டுகிறது...
சுருங்கக்கூறின் தங்களின் இக்குறும்படம் ஒரு குறள்.
விரைவில் ம்ற்ற படங்களையும் பார்த்து விட்டு வருகிறேன்...
-gopi