காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று அவர்களுக்குள் வருவது. இன்னொன்று, காதலர்களுக்கு மற்றவர்களால் வருவது. இதில் ரெண்டுமே இருந்தால் எப்படியிருக்கும்? எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் சார் ஜெஸ்ஸிய காதலிச்சேன்? என்று சிம்பு படம் முழுவதும் கேட்கும் கேள்வி எல்லா இளைஞர்களும், இளைஞிகளும் அவர்களுக்குள்ளாகவோ, அலலது நெருங்கிய நண்பர்களிடமோ கேட்டிருப்பார்கள். காதலின் சுகத்தையும், குழப்பத்தையும், அதனால் ஏற்படும் வலியையும் மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். இஞினியரிங் படித்துவிட்டு சினிமா துறையில் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து ஒரு படைப்பாளியாக ஆசைப்படும் கார்த்திக். அவன் குடியேறும் வீட்டின் ஓனரின் மகள் ஜெஸ்ஸி. மலையாளி. polaris வேலை பார்ப்பவள். பார்த்தவுடன் கார்திக்கின் மனதில் ப்ப்பச்சக் என்று ஒட்டிவிட, வழக்கமாய் எல்லா இளைஞர்களும் செய்வதையே கார்த்திக்கும் செய்ய, ஒரு சமயம் இது எல்லாம் ஒத்து வராது. என்று சொல்லிவிட்டு, ப்ரெண்டாக மட்டுமாவது இருப்போம் என்று ஒப்பந்தம் போட்டு, ஒப்பந்தம் போடுவதே உடைப்பதற்காகத்தான் என்று காதல் வயப்பட்டு, வீட்டை நினைத்து பயந்து,குழம்பி, தானும் குழம்பி, கார்திகை...
Comments
வாழ்த்துக்கள்.. அருமையான படம்... நல்ல திருப்பம்.. எல்லோருமே நல்லா நடிச்சிருக்காங்க.. மனைவியா வர்றவங்க அந்த பதட்டத்தை அப்படியே பிரதிபலிச்சிட்டாங்க.. அவங்க பதட்டம் என்னையும் தொத்திக்கிச்சுன்னா பாத்துக்கங்களேன்..
நல்ல மெஸேஜ்..
நிறைய செய்யுங்க.. இது போல..
அன்புடன்,
சீமாச்சு...
வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்
வால்பையன்
படம் நல்ல செய்திகளைச் சொல்கிறது. இறுதித் திருப்பத்தை நான் எதிர்பார்க்கவில்லை.
வழக்கமாக சமூகப்பிரச்சாரப் பட வகைகளில் முடிவில் 'மெஸ்ஸேஜ்' கொடுத்து மொக்கையாக முடிப்பார்கள்.. இதில் வாழைப்பழ ஊசி போல் செய்தி சொல்லி உள்ளீர்கள்..அருமை...
வழியில் யாருக்காவது அடிபட்டால், உடனடியாக உதவத்தூண்டுகிறது தங்கள் படம். பாத்திரத்தேர்வு,இசை(நாயகி தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசும் காட்சிகளில் ), ஒளிப்பதிவு, குறிப்பாக படத்தொகுப்பு அபாரம்...
//கதாநாயகியை செக்ஸியாக காட்டவேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி எடுக்க வில்லை,பதட்டத்தில் யாருமில்லாத வீட்டில் கணவனை காணாது இருக்கும் பெண்ணிடம் உள்ள இயல்பை காட்ட நினைத்து படமாக்கபட்டது.//
நல்ல கோணத்தில் சிந்தித்துள்ளீர்கள்...(மழைக்கட்சியில் கூட கலையாத மேக்கப் போடுவதுதான் நமது வழக்கம்..)
ஆனால் தங்களின் இந்த முரண்தான் இயல்பை அழகாகக் காட்டுகிறது...
சுருங்கக்கூறின் தங்களின் இக்குறும்படம் ஒரு குறள்.
விரைவில் ம்ற்ற படங்களையும் பார்த்து விட்டு வருகிறேன்...
-gopi