Thottal Thodarum

Aug 4, 2011

சினிமா வியாபாரம் – கதை திருட்டு.

இன்றைய இணைய உலகம் முழுவதும் எல்லோராலும் விவாதிக்கப்பட்டு, வசைபாடப்பட்டு, கற்பனை வறட்சி, கருத்து திருட்டு, என்றெல்லாம் காரி உமிழ்ந்தும்.. அதனால் என்ன? நீங்கள் எல்லாம் ஒலக அறிவாளிகள். நாங்க லோக்கல் எங்களுக்குத்தான் இம்மாதிரியான விஷயங்கள். நல்லாருந்தா ஓகேன்னு ஒரு கோஷ்டியும், அவன் இதை திருடினான். இவன் இதை திருடினான்னு ஆளாளுக்கு புலம்பிட்டிருக்கிற நேரத்தில ஒலகத்தில எத்தன இடங்களில் இது பற்றி பேசப்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்று தெரியவில்லை? ஆனால் ஒரு வெற்றி அதன் ரிஷிமூலத்தை, நதிமூலத்தை ஆராய சொல்கிறது. இதே ஆராய்ச்சி செய்யும் ஆர்வத்தை ஒரு தோல்வி கொடுத்திருக்குமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படித்தான் இன்றைய தெய்வதிருமகள் பட விஷயமும்.


ரொம்ப வருஷங்களுக்கு முன் ஒரு மலையாள திரைப்படத்தை பார்த்துவிட்டு ஒரு திரையரங்கு உரிமையாள நண்பர் ஒருவர் அதை படமாக்க விரும்பினார்.  உடனே அப்படத்தைப் பற்றி ரஜினியை வைத்து பிரபல படமெடுத்த இயக்குனரிடம் போய் சொல்லி நீங்கள் தான் இதை டைரக்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அன்றைய பிரபல நடிகர்கள் வைக்க முடிவு செய்யப்பட்டு, அந்த திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க, மலையாள இயக்குனரை தொடர்ப்பு கொள்ளச் சொன்னார் அந்த இயக்குனர். மிகவும் தேடியலைந்து அவருடய தொடர்பு எண்ணை பிடித்து பேசியபோது, ஒரு வாரம் நேரம் கேட்டார். சரி என்று மீண்டும் ஒரு வாரம் கழித்து தொலைபேசிய போது இன்னும் ஒரு வாரம் நேரம் கேட்டார். எங்களுக்கு கொஞ்சம் எரிச்சலாய் இருந்தது. அந்த படமும் மலையாளத்தில் அவ்வளவு பெரிய ஹிட் இல்லை. பின்பு எதற்கு இவ்வளவு பில்டப்?  அடுத்த வாரம் போன் செய்த போது சுமார் இருபது லட்சங்கள் கேட்டார். அத மலையாள படத்தின் முழு தயாரிப்பு செலவே சுமார் அறுபது லட்சங்கள்தான். நாங்கள் உடனடியாய் தமிழில் நாங்கள் இந்த இயக்குனர், நடிகரை வைத்துத்தான் செய்யப் போகிறோம். எனவே இவர்களுக்கான மார்கெட் வேல்யூ இவ்வள்வுதான் என்று கூறி குறைத்து சொல்லுல்ங்க என்று பேரம் பேச ஆரம்பிக்க, அவர் கடைசி கடைசியாய் பத்து லட்சத்திற்கு குறைந்து ஒன்று செய்ய முடியாது என்று சொல்ல, நாங்கள் இயக்குனரிடம் பேசிவிட்டு வருகிறோம் என்று திரும்பி விட்டோம்.

இயக்குனரிடம் சொன்னவுடன் அதிர்ந்து போய்விட்டார். சரி விடுங்க ஒரு பத்து நாள் டைம் கொடுங்க.. நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன் என்றார். சரி என்று பத்து நாள் போன பிறகு அவரை சந்தித்தோம். எதுவும் பேசாமல் நேரடியாய் கதை சொல்ல ஆரம்பித்தார். கதை கேட்டு முடிந்ததும் நாங்கள் பார்த்த மலையாள பட சாயலில் தான் அந்த கதை இருந்தது.  என்ன சார் அந்த கதை மாதிரிதான் இருக்கு. ஆனால் வேற களம். வேறு காட்சிகள் என்றோம். அவர் சிரித்தார். “சார்.. நீங்க சொன்ன அதே மலையாள படத்தின் கதைதான். ஆனால் களமும், காட்சிகளையும் ஆர்டர் மாற்றியிருக்கிறேன். அவ்வளவுதான். ஒரு படத்தின் காட்சிகளின் ஆர்டர்படி ஏழு காட்சிகள் ஒரே மாதிரி அமையக் கூடாது . அப்படி அமையாமல் வேறு விதத்தில் கதை சொன்னால் நிச்சயம் அது வேறு கதை. லீகலாய் கூட ஒன்றும் செய்ய முடியாது. என்ன ஒரு காமெடி என்றால் இந்த கதை பழைய இந்தி படத்தில் வந்த ஒரு கதை தான். புதுசா ஏதும் பண்ண முடியாது சார். திரும்ப திரும்ப ஒரே கதை தான். சொல்றததை தான் தோசையை திருப்பி போட்டு சுடுறதா? இல்ல ஒரு சைடு வேக வைக்கிறதா? அப்படிங்கிறா மாதிரி என்றார். பின்னாளில் அந்தக் கதையை என் நண்பரின் வியாபார பிரச்சனைகள் காரணமாய் எடுக்க முடியாவிட்டாலும் அதே கதையை அந்த இயக்குனர் உயர்ந்த நடிகரை வைத்து மீண்டும் ஒரு ஹிட் கொடுத்து தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

தமிழ் சினிமாவின் பிதாமகன்களின் ஒருவரான ஸ்ரீதர் இயக்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்” படம் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில படமான “காஸாபிலாங்கா”வின்  இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் என்னை உதைக்க வருவார்கள். எவ்வளவு பெரிய இயக்குனர் அவர். அவரை பார்த்து எப்படி காப்பி அடித்தார் என்று சொல்வாய் என்று. ஆனால் நிஜம் அதுதான். எதோ ஒரு சந்தர்ப்பத்தில அவர் அந்த படத்தை பார்த்திருக்கலாம். அல்லது கதையை கேட்டிருக்கலாம். அதில் இன்ஸ்பயர் ஆகி தன் படத்துக்கான கதை களனை ரெடி செய்திருப்பார். காஸாபிளாங்கா.. நெஞ்சில் ஓர் ஆலயம் இரண்டையும் பார்த்தவர்கள் என்ன முட்டாள் தனமாய் சொல்கிறான் இவன் என்று தோன்றும். காஸாபிளாங்கா போர், அமெரிக்கா, ராணுவம் என்று அதன் பின்னணியில் இருக்கும் படம். ஆனால் நெஞ்சில் ஓர் ஆலயமோ ஹாஸ்பிடலில் நடக்கும் கதை இதைப் போய் எப்படி சொல்லப் போனாய் என்று கேட்பவர்கள் கொஞ்சம் யோசித்து பார்த்தால் தெரியும், இரண்டின் கதை ஒன்றே. காஸாபிளாங்காவில் தன் முன்னாள் காதலியின் கணவனை எப்படியாவது இராணுவத்திற்கு தெரியாமல் அனுப்பி வைப்பதாய் சொல்லி, தியாகம் செய்து காப்பாற்றுவதே கதை. நெஞ்சில் ஓர் ஆலயத்தில் தன் முன்னாள் காதலியின் கணவனின் உயிரை காப்பாற்ற முயற்சிப்பதும், தன் மீதுள்ள் காதலால் தன் கணவனை அவன் சரியாக காப்பாற்ற மாட்டானோ? என்று சந்தேகிக்கும் காதலி. இல்லை என்பதை நிருபிப்பதற்காக போராடி தன் உயிரை மாய்த்து அவளின் கணவனை காப்பாற்றுவான். இரண்டின் களம் தான் வேறே தவிர கதை ஒன்றுதான்.

பிரபல ஹிந்தி சூப்பர்ஹிட் படமான ஷோலே உருவான கதை என்று ஒரு கதை உண்டு. சிப்பி அவர்கள் வெளிநாட்டிற்கு சென்ற போது அங்கே அகிரா குரசேவாவின் ”மெக்னிபீஷியண்ட் செவன்” (1960) வந்த படத்தை பார்த்திருக்கிறார். அந்தப்படம் அகிராவின் ஒரிஜினல் ஜப்பானிய படமான “செவன் சமூராய்” படத்தின் அமெரிக்க வர்ஷன். எழுத்தாளர்கள் சலீம் – ஜாவித் இணைக்கு செரியோ லியோனியின் “ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் தெ வெஸ்ட்” என்கிற படம் இன்ஸ்பெயர் ஆகியிருக்க, இன்னொரு ஆங்கில படமான”Butch Cassidy and the Sundance Kid (1969)” என்கிற படமும் சேர்ந்து கொள்ள, இன்றளவில் இந்தியாவின் சிறந்த முதல் 50 திரைப்படங்களுக்குள் ஒன்றாகவும், கமர்ஷியல் ரீதியாய் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற ஒரு படங்களின் வரிசையில் ஒன்றாக இன்றளவிலும் விளங்குகிறது.

ஒருவரின் கற்பனையை திருடி அதை வைத்து பிழைப்பு நடத்துவது எல்லாம் ஒரு வேலையா? என்று கேட்பவர்கள் கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவின் பட்ஜெட் என்பது எவ்வளவோ உயர்ந்திருந்தாலும், ஒரு படத்தின் கதை உரிமையை வாங்கும் விலையில் ஒரு பெரிய பட்ஜெட் படம் எடுத்துவிடலாம். அதற்காக நான் அவர்களுக்கு சப்பைக்கட்டு கட்டுவதாய் நினைக்க வேண்டாம். இப்படித்தான் செரிண்டிபிட்டி என்றொரு படம். அதை பார்த்த பல சினிமாக்காரர்களுக்கு தூக்கம் போய்விட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிய மொழிக்காரர்கள் மட்டுமல்லாது, அகில இந்தியாவும் அப்படத்திலிருந்து இன்ஸ்பெரேஷன் ஆகி எடுக்க துடித்துக் கொண்டிருந்த நாளில் தெலுங்கு மோகன் பாபு அப்படத்தின் கதை உரிமையை வாங்கி படமெடுத்தார். அதே நேரத்தில் தமிழ்ல் மட்டும் இரண்டு படங்கள் பூஜை போடப்பட்டன. ரெண்டுமே பெரிய தயாரிப்பாளர்கள். பிரபல இயக்குனர் ஒருவர் அதை இயக்கினார். ஒருவர் ஆஸ்கர் ரவிசந்திரன், இயக்குனர் சரண், படம் ஜே.ஜே.. இன்னொரு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். இயக்குனர் அவரது மகன் ஜோதி கிருஷ்ணா. படம் உனக்கு இருபது எனக்கு பதினெட்டு. இதை தவிர தெலுங்கில் மோகன்பாபுவும், இந்தியில் ஒரு தயாரிப்பாளரும் அதே செரிண்டிப்பிட்டியை வைத்து உட்டாலக்கடி செய்திருந்தார்கள்.  பெரும்பாலான மற்ற படங்கள் செரிண்டிப்பிட்டியை அப்படியே ”இன்ஸ்பிரேஷனில்” எடுத்திருக்க, அக்கதையை தமிழ் திரைப்படத்திற்கு ஏற்றார் போல வடிவமைத்து, வெற்றி பெற்றவர் சரணின் ஜே..ஜே மட்டுமே.  எனவே இன்ஸ்பயர் ஆனால் மட்டும் போதாது. அதை நம் மக்களுக்கு ஏற்றார் போல புதிய கதை களனுடன், அதற்கான திரைக்கதை அமைத்தால் தான் வெற்றியடைய முடியும்.

அதே போல திரைச்சீலை புத்தகம் பற்றி என்னை பேச அழைத்திருந்தார்கள். அருமையான ரசனையான புத்தகம். அதையும் மீறி என்னை உறுத்திய சில அத்யாயங்களைப் பற்றி எழுத்தாளருடன் கலந்துரையாடல் செய்த போது அதில் உள்ள ஒரு குறையை சுட்டிக் காட்டினேன். அதாவது மலையாள கதையாசிரியர், நடிகர் சீனிவாசனைப் பற்றி வானளாவ புகழ்ந்திருந்தார். நிஜமாகவே மலையாள சினிமாவில் பொற்காலம் என்று சொன்னால் ப்ரியதர்ஷன், ஸ்ரீனிவாசன், மோகன்லால் இவர்களின் டீம் தொடர்ந்து கொடுத்த வெற்றிகளை கண்டால் பொறாமையாக இருக்கும் தொடர் வெற்றி. இவையனைத்துக்கும் முக்கிய காரணமாய் ஸ்ரீனிவாசனின் கதை, திரைக்கதை வசனம் என்று சொல்வார்கள். ஆனால் அந்த மூவர்கூட்டணியில் ஹிட்டான பெரும்பாலான படங்கள் பல ஆங்கில ஹாலிவுட், ப்ரெஞ்ச் படங்களின் இன்ஸ்பிரேஷன். ஏன் சமீபத்தில் ஸ்ரீனிவாசன், மோகன்லால் காம்பினேஷனில் வந்த ஹிட் படமான, உதயமானுதாரம் படம் ஹாலிவுட் படமான “ஃபவ் பிங்கர்” படத்தின் அப்பட்டமான இன்ஸ்பிரேஷன் தான். ஆனால் முதல் பாகத்தில் வரும் மோகன்லால், ஸ்ரீனிவாசனின் கேரக்டர்கள், மோகன்லாலின் காதல், கல்யாணம் என்பது போன்றவை நம்முடைய களனுக்கு மாற்றி, ஃபவ்பிங்கரின் க்ளைமாக்ஸுக்கான திரைகக்தையை அமைத்து ஹிட் கொடுத்தார்கள். அட்லீஸ்ட் நன்றியாவது போடக்கூடாதா? என்று கேட்பவர்களுக்கு அதிலும் ஒரு சின்ன ப்ரச்சனையிருக்கிறது. ஆனாலும் இம்மாதிரியான இன்ச்பிரேஷன்களை நான் ஆதரிக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.இல்லை என்று நான் சொல்வதற்கு சில படங்கள் உள்ளது.

(தொடரும்)

டிஸ்கி: திட்ட நினைப்பவர்கள் முழு தொடரையும் படித்துவிட்டு திட்டலாம். :)

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

37 comments:

பாலா said...

I've no idea, what you trying to say here Cable.

But ......

///ஒருவரின் கற்பனையை திருடி அதை வைத்து பிழைப்பு நடத்துவது எல்லாம் ஒரு வேலையா? என்று கேட்பவர்கள் கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவின் பட்ஜெட் என்பது எவ்வளவோ உயர்ந்திருந்தாலும், ஒரு படத்தின் கதை உரிமையை வாங்கும் விலையில் ஒரு பெரிய பட்ஜெட் படம் எடுத்துவிடலாம்//

I didn't expect this from you. :(

-Haa. Baa

Katz said...

கடைசியா என்ன சொல்ல வரீங்க?

Ravi said...

What is this open-ended article?

Copy adikallamma vennamma?

Ramesh said...

ஐயா, உங்க தர்க்கப்படி காபி அடிக்கர்து தப்பா இல்லாம இருக்கலாம். எல்லா கதையும் ஒண்ணுதான். கஷ்டப்பட்டு புதுசா யோசிக்கறவன் எல்லாம் மாக்கான் தான். ஆனா ஒரு மரியாதைக்கு அந்த இயக்குனருக்கோ, கதாசிரியருக்கோ ஒரு சின்ன credit கூட குடுக்காம "கழிவறையில் அமர்ந்திருக்கும்போது கன நேரத்தில் தோன்றிய சிந்தனை" மாதிரி பேசறதும், பேட்டி குடுக்கறதும் தான் பொறுக்க முடியல. எங்க நார்த் மெட்ராஸ்ல " ** நெக்குள் குடும்பத்துக்கு ஆவாது" ன்னுவாங்க. அதுதான் இருக்கு இவனுங்ககிட்ட.
What Rahman gets from Vangelis or "the wailers", for instance, is inspiraition. What GV Prakash or Harris Jeyaraj do (mostly) is cold-blooded plagiarism. Would you weigh them on the same scale? If by chance you happen to make a successful movie and if it gets copied by someone without crediting you, would you still say the same thing?

Cable சங்கர் said...

நெக்குள் குடும்பத்துக்கு ஆவாது. அட.. இது நல்லாருக்கு எங்காவது யூஸ் பண்ணனும்.. :))

Cable சங்கர் said...

//ஐயா, உங்க தர்க்கப்படி காபி அடிக்கர்து தப்பா இல்லாம இருக்கலாம். //

rameshu.. நான் எப்பய்யா அப்படி சொன்னேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வார்த்தைக்கு வார்த்தை உண்மை..
இதுதான் இன்றைய நடைமுறை..
தமிழ் படங்களிலிருந்தே தமிழ் படங்கள் கதை காபி அடிப்பதையும் நிறைய சொல்லமுடியும்.
நீங்கள் சொல்வது போல ஏழு காட்சிகள் மாற்றம் இருந்தால் போதும் .
சில வருடங்களுக்கு முன் ஒரு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பே இதைக் கூறியுள்ளதாகவும் நியாபகம்..
மேலு இத் தொடரை படிக்க ஆசை...எழுதுங்கள் ஷங்கர்

கேரளாக்காரன் said...

Malayalam la prem nazeer and jeyabharathy varra scene appadiye Tamilla dialogue utpada copy aagirukkuthu muthuraman and manjula

கேரளாக்காரன் said...

Koundamani vaalapala comedy black and white kaalathulaye malayaalathula irukku aana athukku munnadiye englishla irukkutham recenta than padichen enna solla

கேரளாக்காரன் said...

Oru padathula irunthu sutta thaane thappunnu 4 illa 5 padathularnthu sudaraanuga aadukalam(ameros peros ,city of god etc) ko state of play

கேரளாக்காரன் said...

Nalla entertainment kedacha copy adikkarathula thappilla yenna naama use panra opearating system larnthu ethukkume licence illa naama enna pannamudiyum. great article

Mohammed Arafath @ AAA said...

என்ன பாஸ்... இப்படி சொல்றீங்க..நீங்களும் படம் எடுக்கறேன் ன்னு சொல்லிட்டு இருக்கீங்க..நீங்க எதாவது படாத உல்டா பண்ணி கதை ரெடி பண்ணி இருக்கீங்களா?. என்ன சொன்னாலும் இது தப்பு தானே.சில டைரக்டர் copy அடிச்சு படம் எடுத்துட்டு பேசுற பேச்சு இருக்கே ... அப்பப்பா ... என்னமோ மூளைய கசக்கி இதுவர யாரும் இப்படி இல்ல..நாந்தான் எல்லாம் ன்னு சொல்றது கேக்கவே கொடுமைய இருக்கு.இதுல எழுத்து ... இயக்கம் ன்னு பேரு வேற...படத்துல சொல்லானாலும் பரவால .ஆனா அட்லீஸ்ட் பேட்டி எடுக்கும் போதாவது இந்த படத்தோட inpiration ன்னு சொல்லலாம் ல.( like வெற்றிமாறன் ).

shortfilmindia.com said...

vetri maran செயதது கிண்டல் என்று இன்று வரை யாருக்குமே புரியலை பாருங்க.. அங்க தான் நிக்கிறாரு இயக்குனர்..:)

krish said...

எல்லாம் சரி கேபிள்ஜி. என் கவலை தெய்வதிருமகள் வெற்றிபெற்றதை பற்றி அல்ல. நம் கலாச்சாரப்படி ஒரிஜினல் கதையான அழகர்சாமியின் குதிரை தோல்வி அடைந்ததுதான். நம் ஊரில் இல்லாத கதையா ? அடுத்து மைனா இயக்குனர் யானையை வைத்து கும்கி என்று ஒரு படம் எடுக்கிறார். அது வெற்றி பெற வேண்டுமென்று வேண்டுகிறேன். இல்லனா தெய்வதிருமகள் மாதிரி நெறைய இன்ஸ்பிரேஷன் வரும். அது அவ்வளவு நல்லதில்லை. நாம நம் ஒரிஜினல் கதைகளை தொலைத்து விடுவோம்.

Raju said...

நிறைய படங்கள் பார்க்கும் போது, நானும் இதை உணர்ந்திருக்கேன் தல.

சமீபத்துல கூட, தெலுங்குல ரவிதேஜா நடிச்ச, 'வீரா' படமும், ஹிந்தியில அமிதாப் நடிச்ச, புட்டா ஓகா தேரா பாப்பும் கூட ஒரே லைன்தான்! ஆனா களம் வேற.
:-)

shortfilmindia.com said...

krish
நம்முர் கலாச்சாரப்படி எடுக்கப்பட்ட அழகர்சாமியின் குதிரை தோல்விக்கு காரணம் கதையல்ல திரைக்கதை. சரியாக சொல்லாத எந்த படமும் இன்ஸ்பிரேஷன் ஆனாலும் வேலைக்காகாது.

இன்ஸ்பிரேஷன்கதைகளையே நம்மூர் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றினால் தான் ஒர்க் அவுட் ஆகும். ஐயாம் சாமை அப்படியே எடுத்திருந்தால் ரெண்டு நாள் கூட ஓடியிருக்காது.

பிரபல பதிவர் said...

ஜெயிக்கிற படத்த விமர்சிக்க சும்ம்மா கூட்டம் கூட்டமா கிளம்பிடுவாங்க.... ஆனா இவங்க மட்டும் மிஷ்கின் எடுத்த அட்ட காப்பி படத்த பாத்துட்டு அப்பிடியே ஷாக் ஆகி அப்பிடி இப்பிடின்னு சிலாகிப்பாங்க

என்னமோ போங்க....

D. Chandramouli said...

What about "Imsai Arasan" (including the songs)which looked like a copy of Sivaji's "Uthama Puthiran"?

sarav said...

cable ji

sholay padaathukku munnadiye Mera goan mera desh appadinnu oru padam idulla oru kaal illatha jameendar oru thirudana koottitu vanthu kollakottatha adakkuvar 1971la vanthathu hero adhe Hindi padaulaga he man Dharamendra villan Vinod khanna .. athula avar peru Jabbarsingh ! ! sholayla Gabbar singh ! ! ! aana Jabbar singh vida gabbar singh thaan indru varaikkum popular . Dharamendra ooda recommendationla 2nd herova nadichavar than Amitabh Bachan . Naanum Neraya padam pakkumpothu idhu tamil la intha hero pottu padam edutha nalla irukkum appadinnu nenaipen ...
Malayalam oru periodla holly wood movies appadiaye uttalakadi panni than padam eduppanga illana ethavathu oru novel ulta New delhi , Rajavinte magan (tamilala makkal en pakkam ) ellam novel pathu uruvanathu thaan
thiraikadal odiyum thiraviyam thedu appadin yaro sonnatha nybagam. Inspiration , adaptation ellam ok scene by scene copy adichitu naan than create pannen solrathu thaan comedy

கருந்தேள் கண்ணாயிரம் said...

/////ஒருவரின் கற்பனையை திருடி அதை வைத்து பிழைப்பு நடத்துவது எல்லாம் ஒரு வேலையா? என்று கேட்பவர்கள் கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவின் பட்ஜெட் என்பது எவ்வளவோ உயர்ந்திருந்தாலும், ஒரு படத்தின் கதை உரிமையை வாங்கும் விலையில் ஒரு பெரிய பட்ஜெட் படம் எடுத்துவிடலாம்///

அதுக்கேதான் சொந்தமா யோசிச்சி கதை, திரைக்கதை எழுதுங்கப்புன்னு சொல்றோம் :-) .. இருந்தாலும், நீங்க வெயிட் பண்ணிட்டு திட்டுங்கன்னு சொன்னதால, மீ த வெயிட்டிங் :-)

k amirtharaj said...

hi!naaum unga karuthula udanpadaren.(he..he..naanum fieldula iruken)aana 'manichithrathal'kathaiyai apadiye use pannitu kannadathula vera sambarichitu tamila rajiniyai vechu pannumbothu malayala writer poradithaney panam vaanga mudinchathu.appo p.vasu interview-la thannai yematri thoosi thatti kasu vangittatha sonnar.ithu gnayama?(ithula kodumai emnena malayalathulayum panam vanginathu fazil-than writerku paisa pgaley)

Good citizen said...

அது சரி,அப்படியே ஈ அடிச்சான் காப்பி அடித்துவிட்டு ஒரிஜினல் கதாரியருக்கு மனசாட்சிக்கு கூட நன்றி என்கிற வார்த்தையைப் போடாமல் இது என் சொந்தக் கற்பனை என்கிற பீலா கமினாட்டிகளை என்ன செய்வது???

அதுசரி நீங்களும் அதே குட்டையில் ஊறிய மட்டை தானே உங்களிடம் என்ன ஞாயத்தை எதிர்பார்க்க முடியும்

பின்னோக்கி said...

DeRailed படத்தின் முக்கியமான காட்சியை, ஒரு பழைய தமிழ் படத்தில் (ராதா, வினுசக்ரவர்த்தி, பிரபு) சிறிது நாட்களுக்குமுன் டிவியில் பார்க்க நேர்ந்தது.

வினோத் கெளதம் said...

இதுவே ஒரு கேவலமான மசாலா படத்தை எடுத்து காப்பி அடிச்சு கூட ஹிட் கொடுக்கலாம். ஆனா விஜய் அப்படி பண்ணலயே. நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ரிஸ்க்கான வேலை தான் படம் கண்டிப்பா ஹிட் ஆகும்னு சொல்ல முடியாது. இனிமே கிரெடிட் போட்டா நல்லா இருக்கும். ஆனா எத்தனையோ படங்கள் காப்பி அடித்து வரும்ப்பொழுது பிரபலங்களின் படம் மட்டுமே இவர்கள் கண்களை உறுத்துகிறது. அப்படியே சில நல்ல தமிழ்படங்கள் வந்தாலும் இவர்கள் பாராட்டுவதில்லை(கருந்தேள், கார்த்தி தவிர்த்து). தமிழ்ப்படங்களே பார்ப்பதில்லை என்று வாய் சவடால் வேறு.

Sivakumar said...

I expected this from you cable sir. But I totally dont agree with your opinion. Waiting for your next post. Then I will respond with my views.

krish said...

/*நம்முர் கலாச்சாரப்படி எடுக்கப்பட்ட அழகர்சாமியின் குதிரை தோல்விக்கு காரணம் கதையல்ல திரைக்கதை. சரியாக சொல்லாத எந்த படமும் இன்ஸ்பிரேஷன் ஆனாலும் வேலைக்காகாது.

இன்ஸ்பிரேஷன்கதைகளையே நம்மூர் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றினால் தான் ஒர்க் அவுட் ஆகும். ஐயாம் சாமை அப்படியே எடுத்திருந்தால் ரெண்டு நாள் கூட ஓடியிருக்காது.*/
உங்கள் அளவு எனக்கு அனுபவம் இல்லை. அழகர்சாமியின் குதிரையை நான் ரெண்டு தரம் தியேட்டரில் பார்த்தேன். என்ன குறை அந்த படத்தில் ? படம் ஓடலைன்னா திரைக்கதை சரியில்லையா ? அப்போ அன்பே சிவம் ? விருமாண்டி ? பூ ? இன்னும் நிறைய. இதிலையும் திரைக்கதை எல்லாம் சரியில்லையோ ? இல்லை இவையும் காப்பின்னு யாராவது சொல்ல போறீங்களா ? பயமா இருக்கு. நம் கலாச்சாரப்படி எடுக்கும் படங்கள் ஓடாததும், காப்பி படங்கள் ஓடுவதும் துரதிர்ஷ்டமே. நம்மாளுங்களுக்கு எப்பவுமே வெள்ளக்காரன் குசு மணக்கும். அப்படியே வளர்ந்துட்டோம். மாத்தமுடியாது.

Katz said...

//என்ன பாஸ்... இப்படி சொல்றீங்க..நீங்களும் படம் எடுக்கறேன் ன்னு சொல்லிட்டு இருக்கீங்க..நீங்க எதாவது படாத உல்டா பண்ணி கதை ரெடி பண்ணி இருக்கீங்களா?.//

enakkum lesa doubt irukku.

அமர பாரதி said...

நீங்க சொல்ற ஆங்கிளும் ஓ.கே. தான். அனால் காட்சிக்கு காட்சி சுட்டு விட்டு இந்த கதையை நாலு வருடமாக அடை காத்துக் கொண்டிருந்தேன் என்று புளுகுவது ரொம்ப ஓவர் இல்லையா?

DR.K.S.BALASUBRAMANIAN said...

பொதுவாக அனைத்து கதைகளும் எதாவது ஒரு கதை அல்லது ஒரு நிகழ்ச்சியின் இன்ஸ்பிரேஷனாகத்தான் இருக்கும்.
i agree with you
good post

rajesh said...

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை பெர்னாட் ஷாவின் டாக்டர்ஸ் டைலம்மா வின் இன்ஸ்பிரேஷன் எனறும் கூறுவார்கள். அதே போல் உதயனானு தாரம் திரைப்படம். ஃபைவ் ஃபிங்கர்ஸ் நான் கண்டதில்லை. ஆனால் ட்ராஃபெட்டின் day for night கண்ட போது உதயனானு தாரத்தின் களம் மட்டுமின்றி அதன் பல கதாபாத்திரங்கள், சம்பவங்கள் ஒத்திருந்தன - coincidence என்னும் அளவை தாண்டி.
ஒரு வேளை ஃபவ் ஃபிங்கர்ஸ்க்கும், day for night இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம். or vice versa.

Hemanth said...

Shankar Sir,

Magnificient Seven is not directed by Akira, Seven Samurai is.

Regards, Hemanth

செங்கோவி said...

அண்ணன் சொல்றதை முழுசாக் கேட்டுட்டு திட்டுங்கப்பா...

Vadivelan said...

Hi,

I read some where ( i think behindwoods.com) the avatar movie story is dido copy of prabhu's vietnam colony.......

so those who are complaining the indian movies, we should think other way. We have to compare how many hollywoods movies have the story from indian movies.....

CableJi, Why dont you write in this perspective.....

manian said...

Dear Cableji

In the film field it is very common, from the beginning to "inspire" from other sources. This is happening always.

Here below a latest one: Copied from English to Tamil, this Story has been again copied into ENGLISH.
What to say about this?


Name of the Film
Vigilante




Synopsis:

Luke Evans had everything...A highly successful & lucrative business, extravagant cars and houses, a lifestyle to die for and the girl of his dreams. But in one tragic night Luke lost everything.
Having been brutally attacked in a random act of animalistic violence, Luke wakes from a coma to discover that his fiance has been murdered and that he himself has been bashed within an inch of his own life.
After losing his beautiful fiance, Luke finds himself unable to deal with the seething, poisonous rage that runs through his veins. Fueled by a pure primal rage, and his disillusion in the police who are unable to find any leads in his case, Luke pledges to use every last financial resource he has to bankroll his lust for vengeance.

Due to his injuries sustained, Luke has very little recollection of who his attackers are or what they even look like.
Training in the deadliest of underground hand to hand combat skills, Luke embarks on aggressively cleaning up the streets one scumbag at a time. The only justice he can seem to find is with his fists. But this does nothing to heal his wounds and with rage consuming him, Luke finds himself in danger of becoming that which he is fighting against.
When the local Police and an underworld crime boss called Milo Devro separately decide to intensify their efforts in hunting him down, Luke must find a way to control his inner rage before its darkness destroys him.
As Luke descends further into darkness and obsession, he also soon learns that Pauline (a young detective he has not long started dating) has just been appointed to head the special police task force tracking him down.
After tirelessly searching for his attackers, Luke eventually discovers that it was Milo’s untouchable son Alex and his henchmen who were the perpetrators of his life destroying attack. Alex’s father’s power and position make Alex almost untouchable by both the law and the criminals.
After a heart stopping ride of murder and betrayal, Luke finally finds himself face to face with Alex in a fight to the death that can only leave one survivor.

Vigilante

Director: Aash Aaron
Producer: Robert Diaz
Writer: Aash Aaron
Principal Cast: Robert Diaz, Kazuya Wright, Lexie Symon, Margot Robbie
Genre: Action / Thriller
Running Time: 95 minutes
Language: English
Country of Origin: Australia

Production Year: 2008

Hemanth said...

cable Sir,

mannikkavum - muzhusaa padikaama comment yezhudhitten ..

Sengovi :: nandri , for pointing this out..

aotspr said...

"ஒருவரின் கற்பனையை திருடி அதை வைத்து பிழைப்பு நடத்துவது எல்லாம் ஒரு வேலையா"?

நல்ல வரிகள்.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com

Unknown said...

ஒரு படைப்பு ஏற்படுத்தும் தாக்கத்தினால், அதைப்போலவே ஒன்றைச் செய்து பார்க்க முயலுவதும், ஒரு படைப்பின் தழுவலாக மற்றொரு படைப்பு உருவாவதும் காலம் காலமாக எல்லா துறைகளிலும் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அப்படியான ஒரு முயற்சியாகவே இதை எடுத்துக்கொள்ளலாம். அப்படியான நகல் முயற்சிகள் ஏற்றுக் கொள்ளப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் அப்படைப்பின் தரத்தையும் முழுமையையும் பொருத்து அமைகிறது.